மோனிஷா நாவல்கள்
AA - 9

Quote from monisha on March 31, 2021, 11:18 AMதிருமண விவாதம்
செல்லம்மா அன்று கருணாகரன் வீட்டிற்கு வந்திருந்தார். சாரதா, கருணாகரன், செல்லம்மா மூவரும் மும்முரமாக விஷ்வாவிடமும் ஆதியிடமும் திருமணம் விஷயமாக எப்படிப் பேசுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அதை விவாதம் என்று சொல்லிவிட முடியாது. மூவருமே யார் அவர்கள் இருவரிடம் அந்தப் பேச்சை ஆரம்பிப்பதெனப் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே விறுவிறுவென ஆதி உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்ததுமே அவர்கள் மூவரும் பேசுவதை நிறுத்தி விட்டு மௌனமாய் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்ள,
ஆதி அப்போது சாரதாவைப் பார்த்து, "ஆன்ட்டி காபி" என்றாள்.
சாரதா எழுந்து உள்ளே போக செல்லம்மா கருணாகரனைப் பார்த்துப் பேசச் சொல்லிக் கண்ணசைத்தார். அவரோ எப்படி ஆரம்பிப்பது எனப் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.
ஆதியோ அவர்களின் நிலைமை புரியாமல் கருணாகரனிடம்,
"அங்கிள்... நீங்க செய்றது ஒன்னும் சரியில்ல... இப்படி நீங்க ஆஃபிஸில் இருந்து சீக்கிரம் சீக்கிரம் கிளம்பி வந்துட்டா... மத்த ஸ்டாஃப்ஸ் எல்லாம் எப்படி ஒழுங்கா வேலை செய்வாங்க... போதாக்குறைக்கு என்னையையும் வேற சீக்கிரம் கிளம்பி வரசொல்லிட்டீங்க.. எதுக்கு?" என்றவள் கேள்வி எழுப்ப பதில் சொல்ல முடியாமல் கருணாகரன் தவித்துக் கொண்டிருக்க, செல்லம்மா மகளை அதட்டினார்.
"எப்ப பாரு வேலையை பத்திதான் பேச்சா உனக்கு?"
அவள் உடனே தன் அம்மாவின் புறம் திரும்பி, "சரி அது போகட்டும்... இந்த வார எபிசோட் எழுதினீங்களா.. இல்லையா?" என்று செல்லம்மாவையும் விட்டு வைக்காமல் கேட்க, அப்போது செல்லம்மா தலையிலடித்துக் கொண்டு,
"இவ நிறுத்தமாட்டா போல... நீங்க விஷயத்தை சொல்லுங்கண்ணா" என்றாள்.
"என்ன செல்லம்மா… என்னை மாட்டி விடுற" என்று கருணாகரன் பதற, சாரதா காபியோடு வந்து நிற்க, ஆதி காபியைப் பெற்றுக் கொண்டு,
"ஏதோ விஷயம் இருக்கு.. அது யார் சொல்றதுன்ணு டிஸ்கஷனா.. என்ன மேட்டர்... ஆன்ட்டி நீங்களாவது சொல்லுங்க" என்க,
சாரதா அவர்கள் இருவர் முகத்தைப் பார்த்தார்.
அப்போது கருணாகரன் அவரை பேச சொல்லிச் சமிக்ஞை செய்ய சாரதா தன் மனநிலையை தைரியப்படுத்திக் கொண்டு,
"அது ஒண்ணுமில்ல ஆதிமா... உன் கல்யாண விஷயமா?" என்றவர் ஆரம்பிக்க, காபிக் குடித்துக்கொண்டிருந்த ஆதிக்குப் புறையேறியது.
அதிர்ச்சியானவள், "இப்ப என்னமா கல்யாணத்துக்கு அவசரம்" என்றாள்.
"அவசரம் இல்ல அவசியம்" என்று செல்லம்மா திடமாக சொல்ல,
"நாட் நவ்.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்" என்று ஆதி நேரடியாய் மறுப்பு தெரிவித்தாள்.
"உனக்கு எப்போ என்ன பண்ணனும்னு எனக்கு தெரியாதா?" என்று செல்லம்மா சற்று மிரட்டல் தொனியில் பேசவும் ஆதி தன் அம்மாவை எதிர்த்துப் பேச மனமில்லாமல் சாரதாவிடம்,
"இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாமே" என்று பவ்வியமாய் சொல்லிப் பார்த்தாள்.
"போதும் போதும்... நீ இருக்கிற பிரச்சனையெல்லாம் இழுத்துட்டு வந்தது... உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சாதான் நீயும் அடக்க ஒடுக்கமா இருப்ப... நானும் நிம்மதியா இருக்க முடியும்" என்று செல்லம்மா தன் முடிவைச் சொல்ல, ஆதியின் முகம் களையிழந்து போனது.
அவள் மீண்டும் சாரதாவிடம், "என்ன ஆன்ட்டி ?... என்னை வீட்டை விட்டு துரத்தறதில் எல்லோருக்கும் அவ்வளவு சந்தோஷமா?" என்று பரிதாப அலையை எழுப்ப, செல்லம்மா அவற்றிற்கெல்லாம் அசைந்து கொடுப்பாரென்று தோன்றவில்லை.
அப்போது சாரதா, "உன்னைப் போய் வீட்டை விட்டு துரத்தனும்ன்னு நாங்க நினைப்போமா?" என்றவர் சொல்ல,
"பின்ன... கல்யாணம் ஆனா நான் வீட்டை விட்டு போய்தானே ஆகணும்... அப்புறம் என் சுதந்திரம் என் வேலை... எல்லாத்துக்கும் ஆப்புதான்" என்றவள் வருத்தமுற,
சாரதா முறுவலித்து, "அதெல்லாம் எதுவும் ஆகாது... நீ உன் இஷ்டம் போல வேலைக்குப் போகலாம்... சுதந்திரமா இருக்கலாம்" என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
இடைமறித்தவள், "அதெப்படி?" என்று கேட்க,
"முடியும் ஆதி... நீ நம்ம வீட்டு மருமகளா இங்கயே என் கூட இருந்துரு" என்க, உச்சபட்ச அதிர்ச்சியில் அவர்கள் மூவரையும் ஆதி மாறி மாறிப் பார்க்க அப்போது அந்த அறையே நிசப்தமானது. அந்த அமைதியைக் கலைத்தார் செல்லம்மா.
"நீ விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ உன் இஷ்டம் போல இருக்கலாம் ஆதி" என்றவர் பொறுமையாகவே எடுத்துரைக்க, அவள் தலையில் இடி இறங்கிய உணர்வுதான். அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டவள் அவர்கள் மூவரையும் பார்த்து,
"இப்படி ஷாக் மேல ஷாக்கா கொடுக்கிறீங்க... இதுக்குதான் ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வர சொன்னீங்களா... ஓ மை காட்... நான் விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்கிறதா... இம்பாஸிபிள்" என்று திட்டவட்டமாக மறுத்தாள் ஆதி.
"ஏன் அப்படி சொல்ற? விஷ்வாவுக்கு என்னவாம்... ஏதோ கொஞ்சம் கோபக்காரன்... மத்தபடி அவனை மாதிரி ஒரு பையனைப் பார்க்க முடியுமா?!" என்றார் செல்லம்மா.
"அப்போ இதுவும் உங்க பிளானா?" என்று ஆதி தன் அம்மாவை முறைக்க கருணாகரன் அப்போது, "ஆதி... நீ அம்மா சொல்றதை தட்டாம கேட்பதானே" என்று சொல்ல அவள் எரிச்சலோடு,
"எல்லோரும் சேர்ந்துக்கிட்டு என்னை கார்னர் பண்றீங்களா? நோ வே ... நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.. அட் எனி காஸ்ட்... தப்பா நினைச்சுக்காதீங்க அங்கிள்... உங்க பையனை என்னால ஒரு செகண்டு கூட சகிச்சிக்க முடியாது... ஹீ இஸ் இரிட்டேடிங்" என்று சொல்லும் போதே அவள் முகத்தில் கோபம் ஏறியிருந்தது.
செல்லம்மா தன் மகளிடம், "என்ன பேசற ஆதி? நீங்க இரண்டு பேரும் போடற குழந்தைத்தனமான சண்டை எல்லாம் ஒரு விஷயமா?" என்று உரைக்க
கருணாகரனும், "அதானே" என்று ஒத்து ஊதினார். இவர்களுக்கு ஏன் தான் சொல்வது புரிய மாட்டேங்கிறது என்றவள் மனதில் நினைத்தபடி சுவரில் சாய்ந்து ஓரமாய் நின்று கொள்ள, மூவரும் சேர்ந்து கொண்டு அவர்களின் முடிவை இவளின் மூளைக்குள் ஏற்ற முனைந்தனர்.
மூவருமே அவளின் ரொம்பவும் மதிப்புக்குரியவர்கள். அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியாமல் அதேநேரம் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இரண்டுகெட்டான் நிலையில் அவள் தவிக்க,
அந்தச்சமயத்தில் விஷ்வா வீட்டிற்குள் நுழைந்தான். அவன் உள்ளே வந்ததும் செல்லம்மாவைப் பார்த்து வியப்புற, "எப்ப வந்தீங்க ஆன்ட்டி? எப்படி இருக்கீங்க?" என்று அன்போடும் அக்கறையோடும் விசாரிக்க,
செல்லம்மாவிற்கோ உச்சி குளிர்ந்து போனது.
"நல்லா இருக்கேன் விஷ்வா... நீ எப்படி இருக்க?" என்றவர் கேட்க,
"நல்லா இருக்கேன் ஆன்ட்டி" என்றவன் அவரிடம் பவ்வியமாக பேசிவிட்டு,
"இதோ போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்" என்று சொல்லி உள்ளே செல்ல எத்தனித்தவன் ஓரமாய் நின்றிருந்த, ஆதியிடம் பார்வையாலேயே தன் மொத்த வெறுப்பைக் காட்டி விட்டு அகன்றான்.
அவளுக்கு உள்ளூர கோபம் பொங்கியது. அவனை வாழ்நாள் முழுக்க சகித்து கொள்வதைவிடக் கொடுமையான விஷயம் இந்த உலகத்தில் வேறெதுவுமில்லை என்று தீர்க்கமாய் தீர்மானித்தவள்,
இறுதியாய் அவர்கள் மூவர் முன்னிலையிலும் வந்து நின்று,
"ஃபைன்.. நீங்க எல்லோரும் ஒரு முடிவை எடுத்துட்டு என் மேல திணிக்க பார்க்கிறீங்க... ஓகே... உங்க ஆசையைக் கெடுப்பானேன்... நான் சம்மதம் சொல்றேன்... பட் அதுக்கு முதல்ல விஷ்வா சம்மதிக்கட்டும்" என்றவள் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்.
அவளுக்குத் தெரியும். விஷ்வா நிச்சயம் சம்மதம் சொல்லமாட்டான் என்று!
அவள் புத்திசாலித்தனமாய் இப்போது நகர்த்தி வைத்திருக்கும் காயில் வெட்டுபடப் போவது அவர்கள் மூவர்தான் என்று எண்ணியவள், கதவோரமாய் அமைதியாய் நின்று கொண்டாள்.
'அவனை எப்படிச் சம்மதிக்க வைக்கிறீங்கன்னு நானும் பார்க்கிறேன்' என்று எண்ணிக் கொண்டவள் அவர்கள் மூவரையும் எகத்தாளமாய் ஒரு பார்வைப் பார்த்திருக்க,
விஷ்வா டைனிங் டேபிளில் வந்து உட்கார சாரதா அவனுக்கு காபி எடுத்துவந்து வைத்ததார். மூவருமே அவனிடம் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதெனத் தயங்கினர்.
கருணாகரன் தன் மகனிடம் அத்தனை இயல்பாய் பேசியதில்லை. ஆதலால் அவர் தன் மனைவியைப் பார்க்க, அவர் மிரட்சியோடு முடியவே முடியாதென்று தலையசைக்க, இந்தக் காட்சியை ஆதி கையைக் கட்டி நின்றபடி முகத்தில் புன்னகையோடு ரசித்துக்கொண்டிருந்தாள்.
இறுதியாக விஷ்வாவிடம் பேசும் பொறுப்பு செல்லம்மாவிடம் வந்து சேர்ந்தது. செல்லம்மா சற்று தயக்கத்தோடு விஷ்வாவை அழைக்க,
"ஹ்ம்ம்... சொல்லுங்க ஆன்ட்டி" என்றான்.
"அது ஒண்ணுமில்ல... ஆதிக்கு கல்யாணம்" என்று ஆரம்பித்த நொடி ஆதி போலவே அவனுக்குமே பொறையேற, ஆதிக்கு சிரிப்பு தாங்கவில்லை. சிரமப்பட்டு அதனை கட்டுப்படுத்தி கொண்டாள் அவள்.
விஷ்வா உடனே அவர்கள் மூவரிடமும், "ஆதியை கல்யாணம் பண்ணிக்க ஒரு இளிச்சவாயன் சிக்கிட்டானா" என்று கேலியாய் கேட்க அந்த நொடியே ஆதிக்கு கோபம் தலைக்கேறியது. அப்போது கருணாகரன் விஷ்வாவை முறைத்துப் பார்க்க
'அப்பா இருக்காருன்னு தெரியாம உளறி தொலைச்சிட்டேன்' என்று சுதாரித்துக் கொண்டவன்,
"சாரி ஆன்ட்டி... சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்... ஆதிக்கு கல்யாணம்னா எனக்கு ரொம்ப சந்தோஷம்... மேடம் அப்புறமாவது திருந்தராங்களான்னு பார்ப்போம்" என்றவன் அவளைக் குத்தலாக ஒரு பார்வைப் பார்க்க, அவளின் கோபம் எல்லையை மீறிக் கொண்டிருந்தது.
இருந்தும் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் பொறுமையாய் நிற்க, அப்போது கருணாகரன் விஷ்வாவின் பக்கம் திரும்பி,
"என்ன சொல்றாங்கன்னு பொறுமையா கேட்டுட்டு பேசு விஷ்வா" என்றார்.
செல்லம்மா அதற்கு மேல் பேச முடியாமல் தவிப்போடு சாரதாவை நோக்க, அவர் தன் மகன் அருகாமையில் சென்று மெல்லப் பேச ஆரம்பித்தார்.
"இது பாரு விஷ்வா... நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு விஷயம் யோசிச்சிருக்கோம்... அதாவது..." என்றவர் தயங்க விஷ்வா அவர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "அதுவந்து விஷ்வா... உனக்கும் ஆதிக்கும் சின்ன சின்ன மனஸ்தாபம் இருக்குன்னு தெரியும். இருந்தாலும் இரண்டு பேரும் ஒண்ணாவே வளர்ந்தவங்க... ஒருத்தரைப் பத்தி ஒருத்தருக்கு நல்லா தெரியும்... அதனாலலலலல..." என்றவர் சொல்லாமல் நிறுத்த,
"அதனால" என்று முறைப்பாய் கேட்ட விஷ்வாவிற்கு விஷயம் லேசாய் பிடிபட்டுவிட்டது. சாரதா மேலும்,
"அதாவது நீங்க இரண்டு பேரும் உங்களுக்குள்ள இருக்கிற வேறுபாடை மறந்து ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்ன்ன்ன்னு" என்று விஷயத்தை அவர் ஒருவாறு சொல்லி முடிக்க, விஷ்வாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அந்த நொடி செல்லம்மாவைப் பார்த்தவன் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.
நிதானித்து அவர்கள் மூவரையும் பார்த்தவன் செல்லம்மாவிடம், "நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஆன்ட்டி... நான் ஆதியை எப்போதுமே அப்படியொரு தாட்ல யோசிச்சி பார்த்ததேயில்லை... அப்படி இருக்கும்போது... நான் எப்படி அவளை?
அதுவும் இல்லாம ஆதியோட அறிவு, அழகு, படிப்புக்கெல்லாம் என்னை விட சூப்பர் மாப்பிள்ளை கிடைப்பான்" என்று அவர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக விஷ்வா தன் முடிவைப் பொறுமையாக எடுத்துரைக்க,
மூவரும் என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தனர். ஆதி உடனடியாய் தன் பைக் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு செல்லம்மாவைப் பார்த்து, "கிளம்பலாமா" என்றாள்.
"கொஞ்ச நேரம் பொறுமையா இரு ஆதி" என்று சொல்லி செல்லம்மா மகளை முறைக்க,
"அதான் சார் தெள்ளத் தெளிவா சொல்லிட்டாரே... இப்பயாவது உங்க எல்லாருக்கும் நல்லா புரிஞ்சிருக்கும்... இதைப் பத்தி இனிமே பேசாதீங்க" என்று முடிவாய் சொன்னவள் செல்லம்மாவை வர சொல்லி அழைத்துவிட்டு வெளியே சென்றாள். அவளின் வார்த்தைகள் விஷ்வாவின் காதில் விழுந்தாலும் அவன் பொருட்படுத்தாமல் தன் அறைக்கு எழுந்து சென்றுவிட்டான்.
செல்லம்மா வேறுவழியின்றி அமைதியாகப் புறப்பட்டுவிட, ஆதி பைக்கின் மீது அமர்ந்து கிளம்ப தயாராக இருந்தாள்.
செல்லம்மா சீற்றத்தோடு, "ஏன் இப்படி பிடிவாதம் பிடிச்சி உசுரை எடுக்கிற" என்று கேட்க,
"நானா பிடிவாதம் பிடிக்கிறேன்... விஷ்வா சொன்னது உங்க காதில ஏறலியா" என்றாள் ஆதி.
"நாங்க அவன்கிட்ட பொறுமையா எடுத்துச் சொல்லி இருப்போம்"
"அவன் என்னை அவமானப்படுத்திக்கிட்டே இருப்பான்... நீங்க அவன்கிட்ட போய் கெஞ்சுவீங்களா?!"
"விஷ்வா நிதானமாதான் பேசினான்... நீதான் அவனைத் தப்பா புரிஞ்சிட்டிருக்க"
"அய்யோ... நான் எப்படி சொல்லுவேன்... அவன் உங்க எல்லார்க்கிட்டேயும் காட்டற முகம் வேற... என்கிட்ட காட்டற முகமே வேற... எனக்கு அவனைப் பிடிக்காது... அவனுக்கும் என்னை சுத்தமா பிடிக்காது.. நாங்க இரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறது எல்லாம் சாத்த்த்த்தியமே இல்லை... இப்ப நான் சொல்றதுதான் ம்மா கடைசி முடிவு... அதையும் மீறி என்னை நீங்க அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு யோசிச்சீங்க... அது என்னைக் கொல்லறதுக்கு சமானம்... சொல்லிட்டேன்" என்று ஆதி ஆவேசமாய் சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய,
செல்லம்மா அவளின் அந்தக் கடைசி சொல்லில் விதிர்விதிர்த்து போனார். அன்று தன் கணவனைக் காயப்படுத்த அவர் சொன்ன அதே சொல் சுவரில் அடித்த பந்துபோல தன் மகளின் மூலமாக அவருக்கே திரும்பி வந்தது.
பேச்சற்று போனவர் ஆதியுடன் அமைதியாய் புறப்பட்டார். ஆனால் விஷ்வாவின் வீடோ போர்க்கோலம் பூண்டது.
திருமண விவாதம்
செல்லம்மா அன்று கருணாகரன் வீட்டிற்கு வந்திருந்தார். சாரதா, கருணாகரன், செல்லம்மா மூவரும் மும்முரமாக விஷ்வாவிடமும் ஆதியிடமும் திருமணம் விஷயமாக எப்படிப் பேசுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அதை விவாதம் என்று சொல்லிவிட முடியாது. மூவருமே யார் அவர்கள் இருவரிடம் அந்தப் பேச்சை ஆரம்பிப்பதெனப் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே விறுவிறுவென ஆதி உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்ததுமே அவர்கள் மூவரும் பேசுவதை நிறுத்தி விட்டு மௌனமாய் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்ள,
ஆதி அப்போது சாரதாவைப் பார்த்து, "ஆன்ட்டி காபி" என்றாள்.
சாரதா எழுந்து உள்ளே போக செல்லம்மா கருணாகரனைப் பார்த்துப் பேசச் சொல்லிக் கண்ணசைத்தார். அவரோ எப்படி ஆரம்பிப்பது எனப் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.
ஆதியோ அவர்களின் நிலைமை புரியாமல் கருணாகரனிடம்,
"அங்கிள்... நீங்க செய்றது ஒன்னும் சரியில்ல... இப்படி நீங்க ஆஃபிஸில் இருந்து சீக்கிரம் சீக்கிரம் கிளம்பி வந்துட்டா... மத்த ஸ்டாஃப்ஸ் எல்லாம் எப்படி ஒழுங்கா வேலை செய்வாங்க... போதாக்குறைக்கு என்னையையும் வேற சீக்கிரம் கிளம்பி வரசொல்லிட்டீங்க.. எதுக்கு?" என்றவள் கேள்வி எழுப்ப பதில் சொல்ல முடியாமல் கருணாகரன் தவித்துக் கொண்டிருக்க, செல்லம்மா மகளை அதட்டினார்.
"எப்ப பாரு வேலையை பத்திதான் பேச்சா உனக்கு?"
அவள் உடனே தன் அம்மாவின் புறம் திரும்பி, "சரி அது போகட்டும்... இந்த வார எபிசோட் எழுதினீங்களா.. இல்லையா?" என்று செல்லம்மாவையும் விட்டு வைக்காமல் கேட்க, அப்போது செல்லம்மா தலையிலடித்துக் கொண்டு,
"இவ நிறுத்தமாட்டா போல... நீங்க விஷயத்தை சொல்லுங்கண்ணா" என்றாள்.
"என்ன செல்லம்மா… என்னை மாட்டி விடுற" என்று கருணாகரன் பதற, சாரதா காபியோடு வந்து நிற்க, ஆதி காபியைப் பெற்றுக் கொண்டு,
"ஏதோ விஷயம் இருக்கு.. அது யார் சொல்றதுன்ணு டிஸ்கஷனா.. என்ன மேட்டர்... ஆன்ட்டி நீங்களாவது சொல்லுங்க" என்க,
சாரதா அவர்கள் இருவர் முகத்தைப் பார்த்தார்.
அப்போது கருணாகரன் அவரை பேச சொல்லிச் சமிக்ஞை செய்ய சாரதா தன் மனநிலையை தைரியப்படுத்திக் கொண்டு,
"அது ஒண்ணுமில்ல ஆதிமா... உன் கல்யாண விஷயமா?" என்றவர் ஆரம்பிக்க, காபிக் குடித்துக்கொண்டிருந்த ஆதிக்குப் புறையேறியது.
அதிர்ச்சியானவள், "இப்ப என்னமா கல்யாணத்துக்கு அவசரம்" என்றாள்.
"அவசரம் இல்ல அவசியம்" என்று செல்லம்மா திடமாக சொல்ல,
"நாட் நவ்.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்" என்று ஆதி நேரடியாய் மறுப்பு தெரிவித்தாள்.
"உனக்கு எப்போ என்ன பண்ணனும்னு எனக்கு தெரியாதா?" என்று செல்லம்மா சற்று மிரட்டல் தொனியில் பேசவும் ஆதி தன் அம்மாவை எதிர்த்துப் பேச மனமில்லாமல் சாரதாவிடம்,
"இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாமே" என்று பவ்வியமாய் சொல்லிப் பார்த்தாள்.
"போதும் போதும்... நீ இருக்கிற பிரச்சனையெல்லாம் இழுத்துட்டு வந்தது... உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சாதான் நீயும் அடக்க ஒடுக்கமா இருப்ப... நானும் நிம்மதியா இருக்க முடியும்" என்று செல்லம்மா தன் முடிவைச் சொல்ல, ஆதியின் முகம் களையிழந்து போனது.
அவள் மீண்டும் சாரதாவிடம், "என்ன ஆன்ட்டி ?... என்னை வீட்டை விட்டு துரத்தறதில் எல்லோருக்கும் அவ்வளவு சந்தோஷமா?" என்று பரிதாப அலையை எழுப்ப, செல்லம்மா அவற்றிற்கெல்லாம் அசைந்து கொடுப்பாரென்று தோன்றவில்லை.
அப்போது சாரதா, "உன்னைப் போய் வீட்டை விட்டு துரத்தனும்ன்னு நாங்க நினைப்போமா?" என்றவர் சொல்ல,
"பின்ன... கல்யாணம் ஆனா நான் வீட்டை விட்டு போய்தானே ஆகணும்... அப்புறம் என் சுதந்திரம் என் வேலை... எல்லாத்துக்கும் ஆப்புதான்" என்றவள் வருத்தமுற,
சாரதா முறுவலித்து, "அதெல்லாம் எதுவும் ஆகாது... நீ உன் இஷ்டம் போல வேலைக்குப் போகலாம்... சுதந்திரமா இருக்கலாம்" என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
இடைமறித்தவள், "அதெப்படி?" என்று கேட்க,
"முடியும் ஆதி... நீ நம்ம வீட்டு மருமகளா இங்கயே என் கூட இருந்துரு" என்க, உச்சபட்ச அதிர்ச்சியில் அவர்கள் மூவரையும் ஆதி மாறி மாறிப் பார்க்க அப்போது அந்த அறையே நிசப்தமானது. அந்த அமைதியைக் கலைத்தார் செல்லம்மா.
"நீ விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ உன் இஷ்டம் போல இருக்கலாம் ஆதி" என்றவர் பொறுமையாகவே எடுத்துரைக்க, அவள் தலையில் இடி இறங்கிய உணர்வுதான். அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டவள் அவர்கள் மூவரையும் பார்த்து,
"இப்படி ஷாக் மேல ஷாக்கா கொடுக்கிறீங்க... இதுக்குதான் ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வர சொன்னீங்களா... ஓ மை காட்... நான் விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்கிறதா... இம்பாஸிபிள்" என்று திட்டவட்டமாக மறுத்தாள் ஆதி.
"ஏன் அப்படி சொல்ற? விஷ்வாவுக்கு என்னவாம்... ஏதோ கொஞ்சம் கோபக்காரன்... மத்தபடி அவனை மாதிரி ஒரு பையனைப் பார்க்க முடியுமா?!" என்றார் செல்லம்மா.
"அப்போ இதுவும் உங்க பிளானா?" என்று ஆதி தன் அம்மாவை முறைக்க கருணாகரன் அப்போது, "ஆதி... நீ அம்மா சொல்றதை தட்டாம கேட்பதானே" என்று சொல்ல அவள் எரிச்சலோடு,
"எல்லோரும் சேர்ந்துக்கிட்டு என்னை கார்னர் பண்றீங்களா? நோ வே ... நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.. அட் எனி காஸ்ட்... தப்பா நினைச்சுக்காதீங்க அங்கிள்... உங்க பையனை என்னால ஒரு செகண்டு கூட சகிச்சிக்க முடியாது... ஹீ இஸ் இரிட்டேடிங்" என்று சொல்லும் போதே அவள் முகத்தில் கோபம் ஏறியிருந்தது.
செல்லம்மா தன் மகளிடம், "என்ன பேசற ஆதி? நீங்க இரண்டு பேரும் போடற குழந்தைத்தனமான சண்டை எல்லாம் ஒரு விஷயமா?" என்று உரைக்க
கருணாகரனும், "அதானே" என்று ஒத்து ஊதினார். இவர்களுக்கு ஏன் தான் சொல்வது புரிய மாட்டேங்கிறது என்றவள் மனதில் நினைத்தபடி சுவரில் சாய்ந்து ஓரமாய் நின்று கொள்ள, மூவரும் சேர்ந்து கொண்டு அவர்களின் முடிவை இவளின் மூளைக்குள் ஏற்ற முனைந்தனர்.
மூவருமே அவளின் ரொம்பவும் மதிப்புக்குரியவர்கள். அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியாமல் அதேநேரம் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இரண்டுகெட்டான் நிலையில் அவள் தவிக்க,
அந்தச்சமயத்தில் விஷ்வா வீட்டிற்குள் நுழைந்தான். அவன் உள்ளே வந்ததும் செல்லம்மாவைப் பார்த்து வியப்புற, "எப்ப வந்தீங்க ஆன்ட்டி? எப்படி இருக்கீங்க?" என்று அன்போடும் அக்கறையோடும் விசாரிக்க,
செல்லம்மாவிற்கோ உச்சி குளிர்ந்து போனது.
"நல்லா இருக்கேன் விஷ்வா... நீ எப்படி இருக்க?" என்றவர் கேட்க,
"நல்லா இருக்கேன் ஆன்ட்டி" என்றவன் அவரிடம் பவ்வியமாக பேசிவிட்டு,
"இதோ போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்" என்று சொல்லி உள்ளே செல்ல எத்தனித்தவன் ஓரமாய் நின்றிருந்த, ஆதியிடம் பார்வையாலேயே தன் மொத்த வெறுப்பைக் காட்டி விட்டு அகன்றான்.
அவளுக்கு உள்ளூர கோபம் பொங்கியது. அவனை வாழ்நாள் முழுக்க சகித்து கொள்வதைவிடக் கொடுமையான விஷயம் இந்த உலகத்தில் வேறெதுவுமில்லை என்று தீர்க்கமாய் தீர்மானித்தவள்,
இறுதியாய் அவர்கள் மூவர் முன்னிலையிலும் வந்து நின்று,
"ஃபைன்.. நீங்க எல்லோரும் ஒரு முடிவை எடுத்துட்டு என் மேல திணிக்க பார்க்கிறீங்க... ஓகே... உங்க ஆசையைக் கெடுப்பானேன்... நான் சம்மதம் சொல்றேன்... பட் அதுக்கு முதல்ல விஷ்வா சம்மதிக்கட்டும்" என்றவள் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்.
அவளுக்குத் தெரியும். விஷ்வா நிச்சயம் சம்மதம் சொல்லமாட்டான் என்று!
அவள் புத்திசாலித்தனமாய் இப்போது நகர்த்தி வைத்திருக்கும் காயில் வெட்டுபடப் போவது அவர்கள் மூவர்தான் என்று எண்ணியவள், கதவோரமாய் அமைதியாய் நின்று கொண்டாள்.
'அவனை எப்படிச் சம்மதிக்க வைக்கிறீங்கன்னு நானும் பார்க்கிறேன்' என்று எண்ணிக் கொண்டவள் அவர்கள் மூவரையும் எகத்தாளமாய் ஒரு பார்வைப் பார்த்திருக்க,
விஷ்வா டைனிங் டேபிளில் வந்து உட்கார சாரதா அவனுக்கு காபி எடுத்துவந்து வைத்ததார். மூவருமே அவனிடம் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதெனத் தயங்கினர்.
கருணாகரன் தன் மகனிடம் அத்தனை இயல்பாய் பேசியதில்லை. ஆதலால் அவர் தன் மனைவியைப் பார்க்க, அவர் மிரட்சியோடு முடியவே முடியாதென்று தலையசைக்க, இந்தக் காட்சியை ஆதி கையைக் கட்டி நின்றபடி முகத்தில் புன்னகையோடு ரசித்துக்கொண்டிருந்தாள்.
இறுதியாக விஷ்வாவிடம் பேசும் பொறுப்பு செல்லம்மாவிடம் வந்து சேர்ந்தது. செல்லம்மா சற்று தயக்கத்தோடு விஷ்வாவை அழைக்க,
"ஹ்ம்ம்... சொல்லுங்க ஆன்ட்டி" என்றான்.
"அது ஒண்ணுமில்ல... ஆதிக்கு கல்யாணம்" என்று ஆரம்பித்த நொடி ஆதி போலவே அவனுக்குமே பொறையேற, ஆதிக்கு சிரிப்பு தாங்கவில்லை. சிரமப்பட்டு அதனை கட்டுப்படுத்தி கொண்டாள் அவள்.
விஷ்வா உடனே அவர்கள் மூவரிடமும், "ஆதியை கல்யாணம் பண்ணிக்க ஒரு இளிச்சவாயன் சிக்கிட்டானா" என்று கேலியாய் கேட்க அந்த நொடியே ஆதிக்கு கோபம் தலைக்கேறியது. அப்போது கருணாகரன் விஷ்வாவை முறைத்துப் பார்க்க
'அப்பா இருக்காருன்னு தெரியாம உளறி தொலைச்சிட்டேன்' என்று சுதாரித்துக் கொண்டவன்,
"சாரி ஆன்ட்டி... சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்... ஆதிக்கு கல்யாணம்னா எனக்கு ரொம்ப சந்தோஷம்... மேடம் அப்புறமாவது திருந்தராங்களான்னு பார்ப்போம்" என்றவன் அவளைக் குத்தலாக ஒரு பார்வைப் பார்க்க, அவளின் கோபம் எல்லையை மீறிக் கொண்டிருந்தது.
இருந்தும் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் பொறுமையாய் நிற்க, அப்போது கருணாகரன் விஷ்வாவின் பக்கம் திரும்பி,
"என்ன சொல்றாங்கன்னு பொறுமையா கேட்டுட்டு பேசு விஷ்வா" என்றார்.
செல்லம்மா அதற்கு மேல் பேச முடியாமல் தவிப்போடு சாரதாவை நோக்க, அவர் தன் மகன் அருகாமையில் சென்று மெல்லப் பேச ஆரம்பித்தார்.
"இது பாரு விஷ்வா... நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு விஷயம் யோசிச்சிருக்கோம்... அதாவது..." என்றவர் தயங்க விஷ்வா அவர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "அதுவந்து விஷ்வா... உனக்கும் ஆதிக்கும் சின்ன சின்ன மனஸ்தாபம் இருக்குன்னு தெரியும். இருந்தாலும் இரண்டு பேரும் ஒண்ணாவே வளர்ந்தவங்க... ஒருத்தரைப் பத்தி ஒருத்தருக்கு நல்லா தெரியும்... அதனாலலலலல..." என்றவர் சொல்லாமல் நிறுத்த,
"அதனால" என்று முறைப்பாய் கேட்ட விஷ்வாவிற்கு விஷயம் லேசாய் பிடிபட்டுவிட்டது. சாரதா மேலும்,
"அதாவது நீங்க இரண்டு பேரும் உங்களுக்குள்ள இருக்கிற வேறுபாடை மறந்து ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்ன்ன்ன்னு" என்று விஷயத்தை அவர் ஒருவாறு சொல்லி முடிக்க, விஷ்வாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அந்த நொடி செல்லம்மாவைப் பார்த்தவன் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.
நிதானித்து அவர்கள் மூவரையும் பார்த்தவன் செல்லம்மாவிடம், "நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஆன்ட்டி... நான் ஆதியை எப்போதுமே அப்படியொரு தாட்ல யோசிச்சி பார்த்ததேயில்லை... அப்படி இருக்கும்போது... நான் எப்படி அவளை?
அதுவும் இல்லாம ஆதியோட அறிவு, அழகு, படிப்புக்கெல்லாம் என்னை விட சூப்பர் மாப்பிள்ளை கிடைப்பான்" என்று அவர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக விஷ்வா தன் முடிவைப் பொறுமையாக எடுத்துரைக்க,
மூவரும் என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தனர். ஆதி உடனடியாய் தன் பைக் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு செல்லம்மாவைப் பார்த்து, "கிளம்பலாமா" என்றாள்.
"கொஞ்ச நேரம் பொறுமையா இரு ஆதி" என்று சொல்லி செல்லம்மா மகளை முறைக்க,
"அதான் சார் தெள்ளத் தெளிவா சொல்லிட்டாரே... இப்பயாவது உங்க எல்லாருக்கும் நல்லா புரிஞ்சிருக்கும்... இதைப் பத்தி இனிமே பேசாதீங்க" என்று முடிவாய் சொன்னவள் செல்லம்மாவை வர சொல்லி அழைத்துவிட்டு வெளியே சென்றாள். அவளின் வார்த்தைகள் விஷ்வாவின் காதில் விழுந்தாலும் அவன் பொருட்படுத்தாமல் தன் அறைக்கு எழுந்து சென்றுவிட்டான்.
செல்லம்மா வேறுவழியின்றி அமைதியாகப் புறப்பட்டுவிட, ஆதி பைக்கின் மீது அமர்ந்து கிளம்ப தயாராக இருந்தாள்.
செல்லம்மா சீற்றத்தோடு, "ஏன் இப்படி பிடிவாதம் பிடிச்சி உசுரை எடுக்கிற" என்று கேட்க,
"நானா பிடிவாதம் பிடிக்கிறேன்... விஷ்வா சொன்னது உங்க காதில ஏறலியா" என்றாள் ஆதி.
"நாங்க அவன்கிட்ட பொறுமையா எடுத்துச் சொல்லி இருப்போம்"
"அவன் என்னை அவமானப்படுத்திக்கிட்டே இருப்பான்... நீங்க அவன்கிட்ட போய் கெஞ்சுவீங்களா?!"
"விஷ்வா நிதானமாதான் பேசினான்... நீதான் அவனைத் தப்பா புரிஞ்சிட்டிருக்க"
"அய்யோ... நான் எப்படி சொல்லுவேன்... அவன் உங்க எல்லார்க்கிட்டேயும் காட்டற முகம் வேற... என்கிட்ட காட்டற முகமே வேற... எனக்கு அவனைப் பிடிக்காது... அவனுக்கும் என்னை சுத்தமா பிடிக்காது.. நாங்க இரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறது எல்லாம் சாத்த்த்த்தியமே இல்லை... இப்ப நான் சொல்றதுதான் ம்மா கடைசி முடிவு... அதையும் மீறி என்னை நீங்க அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு யோசிச்சீங்க... அது என்னைக் கொல்லறதுக்கு சமானம்... சொல்லிட்டேன்" என்று ஆதி ஆவேசமாய் சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய,
செல்லம்மா அவளின் அந்தக் கடைசி சொல்லில் விதிர்விதிர்த்து போனார். அன்று தன் கணவனைக் காயப்படுத்த அவர் சொன்ன அதே சொல் சுவரில் அடித்த பந்துபோல தன் மகளின் மூலமாக அவருக்கே திரும்பி வந்தது.
பேச்சற்று போனவர் ஆதியுடன் அமைதியாய் புறப்பட்டார். ஆனால் விஷ்வாவின் வீடோ போர்க்கோலம் பூண்டது.

Quote from Marli malkhan on May 30, 2024, 10:18 PMSuper ma
Super ma