மோனிஷா நாவல்கள்
Anbin Vazhiyathu - Episode 15

Quote from monisha on October 30, 2024, 6:25 PM15
Lust is wanting to sleep with someone, whereas Love wanting to wake up next to them in the morning
இரவு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். தேவிகா சிரித்த முகமாக இருந்தாலும் அவரின் அகத்தின் வெறுப்பை ஒரளவுக்கு மேல் அவரால் மறைக்க முடியவில்லை. ராஜேஷ் அப்படி சிரமப்பட்டு எல்லாம் தன் வெறுப்பை மறைக்க முயற்சி செய்யவில்லை. வெளிப்படையாகவே தன் முகத்தை உர்ரென்றுதான் வைத்துக் கொண்டிருந்தான்.
இஞ்சி தின்ற குரங்கு ஒரு வேளை இப்படிதான் இருக்குமோ? அவன் வாயில் கடிப்பட்டுக் கொண்டிருந்தது சப்பாத்தி துண்டுகள் மட்டும் இல்லை. நானும்தான். என்னையும் நினைத்துதான் அதனை அப்படி கர்ண கொடூரமாக மென்று கொண்டிருந்தான்.
ஆனால் இவர்களில் நிரஞ்சனா மட்டும் வித்தியாசமாக இருந்தாள். அவள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று முகத்தை வைத்துக் கொஞ்சம் கூட என்னால் கணிக்க முடியவில்லை.
சிரித்துப் பேசிக் கொண்டே எனக்கும் மஹாவிற்கும் அவளே வந்து உணவுப் பரிமாறினாள். மதிக்குட்டியை ஆசையாகத் தூக்கிக் கொஞ்சினாள். அவள் அப்படி சகஜமாகச் சிரித்துப் பேசுவதே எனக்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. நம்ப முடியவில்லை.
இவள் ஏதோ திட்டத்துடன்தான் இப்படி சாதாரணமாகப் பேசுகிறாள் என்ற எண்ணம் தோன்றியது.
இடையில் அப்பா மட்டும் உண்மையான சந்தோஷத்தில் இருக்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அவருடைய விருப்பத்திற்குரிய மகன் அருகே இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கை பொய் என்றதும் அவர் என்ன மாதிரி உணர்வார் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
அதிர்ச்சியாக... ஏமாற்றமாக... கோபமாக... எல்லாமுமாகவும் இருக்கும்.
நான் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை எடைப் போட்டுக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, “தோசை ஒன்னு வைச்சுக்கோ அன்பு” என்றாள் நிரஞ்சனா.
‘இவ போடுற சீன் தாங்க முடியலயே’ என்று எண்ணிவிட்டு,
“இல்ல போதும்” என்று நான் எழுந்து கை அலம்பிக் கொள்ள, அப்பாவும் சாப்பிட்டு முடித்து முக்கியமாகப் பேச வேண்டுமென்று என்னை அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“நாளைக்குக் காலையில ஒரு பத்து மணிக்கு ரெடியாகிட்டனா... கிரி நீ நான் எல்லாம் ஆஃபிஸ் போயிட்டு வந்துடலாம் அன்பு... நாளைக்கு நாளும் நல்லா இருக்கு... நீ சார்ஜ் எடுத்துக்கோ”
“சரி” என்றேன்.
“நாளைக்கு ஆஃபிஸ் வரும் போது... இந்த டிரஸ் போட்டுக்கோ அன்பு... உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்” என்று அந்த சூட்டை என்னிடம் தந்தார்.
“இது எதுக்கு... பார்மல்ஸ் போட்டுக்கிட்டா போதாதா?”
“போதாது அன்பு... இப்போ நீ ஜே ஜே புட் ப்ரோடெக்ட்ஸ் கம்பனியோட எம். எடி... நீ பார்க்கவும் அந்த மாதிரி கெத்தான லுக்லதான் இருக்கணும்” என்றவர் அதனுடன் ஒரு விலையுயர்ந்த வாட்சையும் எனக்குப் பரிசளித்தார்.
அதனை வாங்கிக் கொண்ட எனக்கு மனதில் பூரிப்பு சந்தோஷம் எதுவுமில்லை.
அவரின் அன்பு அன்புவிற்கானது. எனக்கானது இல்லை என்று யோசித்துக் கொண்டே அவர் தந்த உடையையும் கைக் கடிகாரத்தையும் பெற்றுக் கொண்டு, “தேங்க்ஸ் பா” என்றேன்.
அவர் என்னைத் தோளோடு அணைத்துக் கொள்ள, என் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் வெறுப்பெல்லாம் மீண்டும் பற்றிக் கொண்டது. பெற்ற பிள்ளைகளுக்கு இடையில் எத்தனை பாரபட்சம் காட்டுகிறார் இந்த மனிதர் என்று என் உள்ளம் கொதித்தது.
எனக்குள் இருந்த கொதிப்பை மறைத்துக் கொண்டு திரும்பிய நான் மீண்டும் அவர் புறம் திரும்பி, “ஏன் பா நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என,
“ம்ம்ம் சொல்லு அன்பு” என்று கேட்டார்.
“இல்ல... ஒரு வேளை நடந்த ஆக்ஸிடென்ட்ல நான் செத்துப் போயிருந்து அறிவு உயிரோட இருந்திருந்தாஅவனுக்கு இந்தப் பொறுப்பை கொடுத்திருப்பீங்களா?” என்றதும் அவர் முகத்தில் ஈயாடவில்லை.
திகைப்புடன் என்னைப் பார்த்தவர், “ஏன் அன்பு... இப்படி எல்லாம் கேட்குற?” என,
“சும்மாதான் கேட்டேன்... ஃபீரியா விடுங்க” என்று அந்தப் பேச்சை முடித்துவிட்டு என் அறைக்குத் திரும்பிய நான், அவர் கொடுத்த உடையையும் அந்தக் கடிகாரத்தையும் தூக்கி விசிறியடித்தேன்.
“என்னாச்சு அன்பு?” என்று மஹா என் செயலைப் பார்த்துப் பதற,
“ஒன்னும் இல்ல” என்றபடி சோஃபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தேன்.
மஹா என் அருகே வந்து அமர்ந்து, “அன்பு என்னாச்சு...? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா? யாராச்சு ஏதாச்சும் சொன்னாங்களா?” என்று கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் குடைந்து கொண்டிருந்தாள்.
எனக்கு எரிச்சலானது. “மஹா ப்ளீஸ்... என்னை டென்ஷன் படுத்தாதே போ” என்று கத்திவிட அவள் எழுந்து நின்று கொண்டு,
“விருப்பமே இல்லாம ஏன் அன்பு இந்த வீட்டுக்கு வந்தீங்க? எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு இந்த வீட்டுல இருக்க யார் மேலயும் எந்தப் பிடித்தமும் அன்பும் இல்ல... இல்லனா அவ்வளவு பிடிவாதமா இந்த ரூமைக் கேட்டு வாங்கி இருக்க மாட்டீங்க” என்றாள்.
“மஹா ஸ்டாப் இட்... இந்த ரூம் விஷயம் எப்பவோ முடிஞ்சு போயிடுச்சு... திரும்பியும் அதைப் பத்தி எதுக்குப் பேசுற நீ?”
மீண்டும் அவள் இந்த அறை விஷயத்தை ஆரம்பித்ததில் எனக்கு எரிச்சல் மூண்டது. அவள் தொடர்ந்து பேசினாள். அதுவும் வந்த இடத்தில் எல்லோரிடமும் நான் மன வருத்தத்தை உண்டாகிவிட்டதாக குறை கூறியவள், நான் அந்த அறையைப் பிடிவாதமாகக் கேட்டு வாங்கியது தப்பு என்று திரும்பத் திரும்ப குத்திக் காட்டுவது போல பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை.
அவள் யார் அதைச் சொல்வதற்கு? அவளுக்கு எங்கள் உறவைப் பற்றியும் நடந்த பிரச்சனைகளைப் பற்றியும் நான் பட்ட அவமானங்கள் பற்றியும் தெரியுமா?
நானும் அந்த நொடி எழுந்து நின்று, “தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ் மஹா... இது என் வீடு... இங்க எனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு... எல்லாத்துக்கும் மேல நம்ம உணர்வுகளையும் உரிமையையும் யாருக்காக இல்ல எதுக்காக நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும்”
”எல்லாத்துக்கும் மேல இங்க என் கூட பிறந்தவானோட நினைவுகள் இருக்கு... அத நான் எப்படி காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியும்?” என்று கோபமாகக் கத்திவிட மஹா வாயடைத்து நின்றுவிட்டாள்.
“இனிமே இந்த ரூம் விஷயத்தைப் பத்தி பேசுன... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று முடித்துவிட்டு திரும்பிய போது எங்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்தை மதியழகி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
சட்டென்று என் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “இன்னும் மதி தூங்கலையா?” என்று கேட்க, அப்போதே மஹாவும் மகளைத் திரும்பிப் பார்த்தாள்.
அதன் பின் அவளும் என்னிடம் எந்த வாக்குவாதமும் வைத்துக் கொள்ளாமல் மகளை மடியில் கிடத்தித் தூங்க வைக்க ஆரம்பித்தாள்.
நான் அந்தக் கணமே தூக்கி விசிறிய உடையையும் வாட்சையும் எடுத்து வாட்ரூபை திறந்து வைத்துவிட்டு சோஃபாவில் வந்து அமர்ந்துவிட்டேன்.
நாளை நான் தந்தையுடன் சென்று கம்பெனியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்படி நான் அந்தப் பொறுப்பைக் கையாளப் போகிறேன் என்று தெரியவில்லை. அதுவும் முற்றிலும் எனக்கும் என் படிப்பிற்கும் சம்பந்தமில்லாத ஒரு பொறுப்பு.
இப்போது வரையிலும் கூட அப்பாவின் வியாபாரத்திலும் நிறுவனத்திலும் எனக்கு துளியும் ஆர்வம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேல் அந்தப் பொறுப்புகளைக் கையாளும் அறிவும் திறமையும் எனக்கு இருக்கிறதா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.
ஏதோ போகிற போக்கில் நாவல்கள் எழுதி அதை ஒரு பெரிய திறமையாக என்னை நானே கொண்டாடிக் கொண்டு இருந்துவிட்டேன். கற்பனையிலும் கனவுலகத்திலும் சுலபமாக நாம் கதாநாயகன் அவதாரம் எடுத்துவிடலாம். ஆனால் இந்த வியாபார உலகத்தின் மிக மோசமான போட்டியில் அப்படியொரு அவதாரம் எடுப்பதும் நம்மை நிரூபித்துக் கொள்வதும் சுலபம் இல்லை. அதற்கு புத்திசாலித்தனம் தேடல் மற்றும் இலட்சியத்துடன் கூடிய உழைப்பு வேண்டும்.
இவ்விதமாக யோசித்துக் கொண்டே கண்களை மூடி நான் சாயவும் உறக்கம் சுழற்றிக் கொண்டு வந்தது.
மெல்ல நான் உறக்க நிலையில் ஆழ, “அன்பு அன்பு” என்று ஒரு கரம் என்னை உலுக்கிவிட, பதறி கண் விழித்துப் பார்த்தேன்.
மஹாதான் நின்று கொண்டிருந்தாள். “என்ன வேணும் உனக்கு?” என்று நான் கடுகடுக்க,
“ஏசி குளிருது... ரிமோட் எங்கன்னு தெரியல” என்றாள் தயங்கித் தயங்கி.
“நானா ரிமோட்டை வைச்சி இருக்கேன்... போய் எங்கயாவது தேடிப் பாரு... எனக்கே அதிசயமா தூக்கம் வந்துச்சு... அதையும் கெடுத்து விட்டா” என்று நான் கடுகடுக்க,
“சாரி அன்பு... நான் வேணும்டே பண்ணல... ரிமோட் எங்க தேடியும் கிடைக்கல” என்றாள்.
“என்கிட்ட இல்ல”
“இல்ல அன்பு... இங்கதான்”
“என்கிட்ட இல்லன்னு சொல்றேன் இல்ல... போய் பெட்ஷீட்டைப் போத்திட்டுப் படு” என்று நான் கத்தவும் அவள் அமைதியாகத் திரும்பிப் படுக்கைக்குச் சென்றுவிட்டாள்.
நான் மீண்டும் சாய்ந்து அமர்ந்த போதுதான் பின்னோடு ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று நான் எடுத்துப் பார்த்தேன். ஏசி ரிமோட்.
அவள் போர்வையை எடுத்து மூடிக் கொள்ளப் போகவும், “சாரி ரிமோர்ட் இங்கேதான் இருக்கு” என, அவள் திரும்பி என்னை முறைப்பாக பார்த்து வைத்தாள்.
“முறைக்காத... நான் இங்க இருந்ததைக் கவனிக்கல” என்றபடி குளிரூட்டியின் வெப்பளவை ஏற்றி வைக்கவும் கொஞ்சம் குளிர் மட்டுப்பட்டது.
மீண்டும் அமைதியாகப் படுத்துக் கொண்டவள், “நீங்க படுக்கலயா?” என்று கேட்டாள்.
“வந்த தூக்கத்துலதான் நீ கல்லைப் போட்டியே அப்புறம் என்ன?”
“நான் என்ன வேணும்டேவா செஞ்சேன்... குளிர் தாங்க முடியல... அதான்”
“இப்போ டெம்பரேச்சர் ஏத்தி வைச்சுட்டேன் இல்ல... நிம்மதியா தூங்கு” என்று சோஃபாவிலிருந்து எழுந்துச் சென்று பால்கனி கதவை நான் திறக்கப் போகவும்,
“இப்போ எதுக்கு வெளியே போறீங்க? ஸ்ட்ரஸ், டென்ஷன்னு சிகரெட் பிடிக்கவா?” என்று சொல்லிக் கொண்டே எழுந்து அமர்ந்து கொண்டு கேட்க, எனக்குக் கடுப்பானது.
“நான் இப்போ சிகரெட் பிடிக்கப் போறேன்னு உனக்குத் தெரியுமா? நானே விட்டாலும் நீயா ஏன் டி அதை ஞாபகப்படுத்தித் தொலைக்குற”
“இல்ல அதுக்குதான் போறீங்களோன்னு” என்றவள் இழுக்கவும்,
“மஹா... ப்ளீஸ் என்னை டென்ஷன் படுத்தாம ஒழுங்கா படுத்துத் தூங்கு... எனக்கு இப்போதைக்கு தூக்கம் வராது... நான் கொஞ்ச நேரம் வெளியே நிற்குறேன்” என்று சொல்ல,
“படுத்தா... தானா தூக்கம் வரும் அன்பு” என்றாள்.
“எனக்கு வராதுடி” என்று நான் கோபமாகத் திரும்பிக் கத்தவும் அவள் மிரண்டுவிட்டாள். மதியழகி சிணுங்க ஆரம்பிக்க, “ஒன்னும் இல்லடா” என்று குழந்தையைத் தட்டிக் கொடுத்தாள்.
நான் அவளைக் கண்டும் காணாமல் பால்கனி கதவைத் திறந்து வெளியே சென்று நிற்கவும் மஹா என் அருகில் வந்து நின்றாள்.
நான் அவளைச் சலிப்பாகப் பார்த்து, “உனக்கு என்னதான்டி வேணும்” என,
“நீங்க தூங்கணும் இப்போ... இப்படியே நீங்க ஒழுங்கா தூங்காம இருந்தா உடம்பு கெட்டுப் போயிடும்” என்று அறிவுரை வாசிக்க எனக்கு எரிச்சல் மூண்டது.
“சாவுறேன்... உனக்கு என்னடி வந்தது?” என்று மீண்டும் கத்திவிட, அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்து வெளியே ஊற்றியது.
அந்தக் கணமே, “சாரி மஹா... சாரி” என்று சமாதானம் கூற, அவள் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“மஹா...” என்று நான் நடுக்கத்துடன் அழைக்க,
“நீங்க தூங்காம நானும் தூங்கமாட்டேன்” என்றாள். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. நான் கோபம் காட்டினாலும் என்ன செய்தாலும் இந்தப் பெண் என்னிடம் ஏன் இத்தனை அன்பையும் காதலையும் கொட்டிக் கொடுக்கிறாள்.
சில நொடிகள் அவள் அணைப்பிலேயே இருந்தேன். இந்தப் பெண்ணிடம் என்னவோ இருக்கிறது. இவள் என்னை ஏதோ செய்கிறாள்.
சட்டென்று அணைத்தபடியே அவள் என் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “சாரி அன்பு” என,
“எதுக்கு?” என்றேன்.
“உங்ககிட்ட நான் அப்படி பேசி இருக்கக் கூடாது... இரத்தமும் சதையும் உங்க கூட கருவறையில இருந்து வந்த சொந்தத்தை நீங்க இழந்துட்டு நிற்குறீங்க.”
”இப்போ உங்களுக்குன்னு இருக்கிறது அவரோட ஞாபகம் மட்டும்தானே... அது இந்த ரூம்ல இருக்குன்னு நம்புறீங்கனா அதை நீங்க பிடிவாதமா கேட்டு வாங்குனதுல தப்பில்லைதான்” என்றாள்.
நான் சொல்ல நினைப்பதை எல்லாம் அவளாகச் சொல்லிவிடுகிறாள்.
“டக்குன்னு நான் உங்களைஒப் புரிஞ்சிக்காம பேசிட்டேன்... ஐம் சாரி” என்று மீண்டும் சொல்லிவிட்டு, “இனிமே அப்படி உங்களைப் புரிஞ்சிக்காம பேச மாட்டேன்” என்றாள்.
கள்ளங்கபடமில்லாத அவள் அன்பில் நான் தொலைந்து போகிறேன். அன்புவாகவும் இல்லாமல் அறிவாகவும் இல்லாமல் என்று அடையாளம் எல்லாம் மறந்து போகிறேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு என் கண்களில் கண்ணீர் நிறைந்து தளும்பியது. இந்தப் பெண் என்னை அழ வைக்கிறாள். அழ வைப்பதன் மூலமாகக் கனத்துப் போன என் உணர்வுகளை எல்லாம் கரைய வைக்கிறாள்.
“அழுறீங்களா?” என்றவள் கரம் என் கன்னத்தைத் தொடவும் அவள் கரம் பற்றி முத்தமிட்டேன். பின் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அணைத்துக் கொண்டேன்.
என்னை அணைத்தபடியே அவளும், “தூக்கம் வரலயா உங்களுக்கு?” என்று கேட்கவும்,
“இன்னைக்கு நாம தூங்கியே ஆகணுமா மஹா?” என்று நான் கேட்க அவள் என்னை நிமர்ந்து பார்க்கும் போது நான் அவள் இதழுடன் என் இதழ்களைப் பொருத்தினேன்.
அவள் நாணி தலை கவிழவும் அவளை நான் அணைத்தபடி அறைக்குள் அழைத்து வரவும், “குட்டிமா இருக்கா?” என்று தயங்கினாள்.
மதியை மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் சோஃபாவில் அணைப்பாக தலையணை வைத்துப் படுக்க வைத்துவிட்டு திரும்ப, “அவ எழுந்திருச்சு அழப் போறா அன்பு” என்றாள்.
“நல்ல தூங்குறா... எழுந்திருக்க மாட்டா” என்று சொல்லிய எனக்கு அதற்கு பிறகு கொஞ்சமும் பொறுமை இல்லை. அவளைப் படுக்கையில் தள்ளி முத்தமிட்டேன்.
நீண்ட நெடிய முத்தத்தை நான் கொடுத்து முடிக்கும் போது மஹா என்னிடம் கிறங்கி இருந்தாள். அந்தக் கிறக்கத்துடனேயே கொஞ்சம் கொஞ்சமாக அவள் தேகத்தை ஆக்கிரமித்துக் கொண்டேன்.
அவள் உடலின் மீதான போதை எனக்கு ஏறிக் கொண்டே போனது. என் வாழ்க்கையில் ஏங்கிய அன்பையும் பாசத்தையும் காதலையும் ஒருத்தி மொத்தமாக எனக்கு வாரி கொடுக்கிறாள். ஒரே உருவில் எனக்கான அத்தனை உறவாகவும் இருக்கும் போது உடலாலும் மனதாலும் முழுவதுமாக அவளை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற வெறியேறியது.
அந்த நொடி அன்புவின் காதலி என்று சிறு குற்றவுணர்வு கூட எனக்கு எழாதபடிக்கு என் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுதான் அவளுடன் கூடினேன்.
அவளுடன் கூடிய பின்பாக ஏற்பட்ட களைப்பிலும் அமைதியிலும் என்னை மறந்து நான் உறங்கிப் போக, அன்று விடிந்து வெகுநேரம் கழித்துதான் என் உறக்கம் களைந்தது.
ரொம்ப நாட்கள் கழித்து அப்படியொரு உறக்கத்தையும் அமைதியையும் நான் அனுபவித்தேன்.
எல்லாவற்றிற்கும் மஹாதான் காரணம் என்று தோன்றியது. நான் என் அருகே பார்க்க அவள் தன் மகளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.
அவளுடனான இணைவு மனதிற்குள் புது பரவசத்தைக் கொடுத்தது. சத்தமில்லாமல் அவள் அருகே சென்று மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எழுந்து கொண்ட நான் முகத்தைத் துடைத்துக் கொண்டு பால்கனி கதவைத் திறந்தேன். தோட்டத்தின் முழுக் காட்சியும் தெரிந்தது.
மிதமாக வருடிய காலை காற்றைச் சுவாசித்த உணர்வுடன் இரவு நடந்தவற்றை எல்லாம் என் நினைவுகளுக்குள் சுவாசித்தேன். வறண்ட பூமியில் பெய்த மண் வாசம் போல என் மனதை அவள் நிரப்பிவிட்டாள்.
இந்த யோசனைகளினூடே பயணித்த எனக்கு மஹா இன்னும் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா என்ற சந்தேகம் எட்டிப் பார்த்தது.
அன்று அனுஷுயா சொன்னவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கையில் மதியழகி மஹாவின் மகள் இல்லை போல. ஆனால் மஹா மதிக்கும் இடையில் என்ன உறவு இருந்தாலும் சரி. என்ன கதை இருந்தாலும் சரி. இனி அவர்கள்தான் என்னுடைய உறவுகள். அவர்கள் மட்டும்தான்.
15
Lust is wanting to sleep with someone, whereas Love wanting to wake up next to them in the morning
இரவு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். தேவிகா சிரித்த முகமாக இருந்தாலும் அவரின் அகத்தின் வெறுப்பை ஒரளவுக்கு மேல் அவரால் மறைக்க முடியவில்லை. ராஜேஷ் அப்படி சிரமப்பட்டு எல்லாம் தன் வெறுப்பை மறைக்க முயற்சி செய்யவில்லை. வெளிப்படையாகவே தன் முகத்தை உர்ரென்றுதான் வைத்துக் கொண்டிருந்தான்.
இஞ்சி தின்ற குரங்கு ஒரு வேளை இப்படிதான் இருக்குமோ? அவன் வாயில் கடிப்பட்டுக் கொண்டிருந்தது சப்பாத்தி துண்டுகள் மட்டும் இல்லை. நானும்தான். என்னையும் நினைத்துதான் அதனை அப்படி கர்ண கொடூரமாக மென்று கொண்டிருந்தான்.
ஆனால் இவர்களில் நிரஞ்சனா மட்டும் வித்தியாசமாக இருந்தாள். அவள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று முகத்தை வைத்துக் கொஞ்சம் கூட என்னால் கணிக்க முடியவில்லை.
சிரித்துப் பேசிக் கொண்டே எனக்கும் மஹாவிற்கும் அவளே வந்து உணவுப் பரிமாறினாள். மதிக்குட்டியை ஆசையாகத் தூக்கிக் கொஞ்சினாள். அவள் அப்படி சகஜமாகச் சிரித்துப் பேசுவதே எனக்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. நம்ப முடியவில்லை.
இவள் ஏதோ திட்டத்துடன்தான் இப்படி சாதாரணமாகப் பேசுகிறாள் என்ற எண்ணம் தோன்றியது.
இடையில் அப்பா மட்டும் உண்மையான சந்தோஷத்தில் இருக்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அவருடைய விருப்பத்திற்குரிய மகன் அருகே இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கை பொய் என்றதும் அவர் என்ன மாதிரி உணர்வார் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
அதிர்ச்சியாக... ஏமாற்றமாக... கோபமாக... எல்லாமுமாகவும் இருக்கும்.
நான் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை எடைப் போட்டுக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, “தோசை ஒன்னு வைச்சுக்கோ அன்பு” என்றாள் நிரஞ்சனா.
‘இவ போடுற சீன் தாங்க முடியலயே’ என்று எண்ணிவிட்டு,
“இல்ல போதும்” என்று நான் எழுந்து கை அலம்பிக் கொள்ள, அப்பாவும் சாப்பிட்டு முடித்து முக்கியமாகப் பேச வேண்டுமென்று என்னை அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“நாளைக்குக் காலையில ஒரு பத்து மணிக்கு ரெடியாகிட்டனா... கிரி நீ நான் எல்லாம் ஆஃபிஸ் போயிட்டு வந்துடலாம் அன்பு... நாளைக்கு நாளும் நல்லா இருக்கு... நீ சார்ஜ் எடுத்துக்கோ”
“சரி” என்றேன்.
“நாளைக்கு ஆஃபிஸ் வரும் போது... இந்த டிரஸ் போட்டுக்கோ அன்பு... உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்” என்று அந்த சூட்டை என்னிடம் தந்தார்.
“இது எதுக்கு... பார்மல்ஸ் போட்டுக்கிட்டா போதாதா?”
“போதாது அன்பு... இப்போ நீ ஜே ஜே புட் ப்ரோடெக்ட்ஸ் கம்பனியோட எம். எடி... நீ பார்க்கவும் அந்த மாதிரி கெத்தான லுக்லதான் இருக்கணும்” என்றவர் அதனுடன் ஒரு விலையுயர்ந்த வாட்சையும் எனக்குப் பரிசளித்தார்.
அதனை வாங்கிக் கொண்ட எனக்கு மனதில் பூரிப்பு சந்தோஷம் எதுவுமில்லை.
அவரின் அன்பு அன்புவிற்கானது. எனக்கானது இல்லை என்று யோசித்துக் கொண்டே அவர் தந்த உடையையும் கைக் கடிகாரத்தையும் பெற்றுக் கொண்டு, “தேங்க்ஸ் பா” என்றேன்.
அவர் என்னைத் தோளோடு அணைத்துக் கொள்ள, என் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் வெறுப்பெல்லாம் மீண்டும் பற்றிக் கொண்டது. பெற்ற பிள்ளைகளுக்கு இடையில் எத்தனை பாரபட்சம் காட்டுகிறார் இந்த மனிதர் என்று என் உள்ளம் கொதித்தது.
எனக்குள் இருந்த கொதிப்பை மறைத்துக் கொண்டு திரும்பிய நான் மீண்டும் அவர் புறம் திரும்பி, “ஏன் பா நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என,
“ம்ம்ம் சொல்லு அன்பு” என்று கேட்டார்.
“இல்ல... ஒரு வேளை நடந்த ஆக்ஸிடென்ட்ல நான் செத்துப் போயிருந்து அறிவு உயிரோட இருந்திருந்தாஅவனுக்கு இந்தப் பொறுப்பை கொடுத்திருப்பீங்களா?” என்றதும் அவர் முகத்தில் ஈயாடவில்லை.
திகைப்புடன் என்னைப் பார்த்தவர், “ஏன் அன்பு... இப்படி எல்லாம் கேட்குற?” என,
“சும்மாதான் கேட்டேன்... ஃபீரியா விடுங்க” என்று அந்தப் பேச்சை முடித்துவிட்டு என் அறைக்குத் திரும்பிய நான், அவர் கொடுத்த உடையையும் அந்தக் கடிகாரத்தையும் தூக்கி விசிறியடித்தேன்.
“என்னாச்சு அன்பு?” என்று மஹா என் செயலைப் பார்த்துப் பதற,
“ஒன்னும் இல்ல” என்றபடி சோஃபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தேன்.
மஹா என் அருகே வந்து அமர்ந்து, “அன்பு என்னாச்சு...? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா? யாராச்சு ஏதாச்சும் சொன்னாங்களா?” என்று கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் குடைந்து கொண்டிருந்தாள்.
எனக்கு எரிச்சலானது. “மஹா ப்ளீஸ்... என்னை டென்ஷன் படுத்தாதே போ” என்று கத்திவிட அவள் எழுந்து நின்று கொண்டு,
“விருப்பமே இல்லாம ஏன் அன்பு இந்த வீட்டுக்கு வந்தீங்க? எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு இந்த வீட்டுல இருக்க யார் மேலயும் எந்தப் பிடித்தமும் அன்பும் இல்ல... இல்லனா அவ்வளவு பிடிவாதமா இந்த ரூமைக் கேட்டு வாங்கி இருக்க மாட்டீங்க” என்றாள்.
“மஹா ஸ்டாப் இட்... இந்த ரூம் விஷயம் எப்பவோ முடிஞ்சு போயிடுச்சு... திரும்பியும் அதைப் பத்தி எதுக்குப் பேசுற நீ?”
மீண்டும் அவள் இந்த அறை விஷயத்தை ஆரம்பித்ததில் எனக்கு எரிச்சல் மூண்டது. அவள் தொடர்ந்து பேசினாள். அதுவும் வந்த இடத்தில் எல்லோரிடமும் நான் மன வருத்தத்தை உண்டாகிவிட்டதாக குறை கூறியவள், நான் அந்த அறையைப் பிடிவாதமாகக் கேட்டு வாங்கியது தப்பு என்று திரும்பத் திரும்ப குத்திக் காட்டுவது போல பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை.
அவள் யார் அதைச் சொல்வதற்கு? அவளுக்கு எங்கள் உறவைப் பற்றியும் நடந்த பிரச்சனைகளைப் பற்றியும் நான் பட்ட அவமானங்கள் பற்றியும் தெரியுமா?
நானும் அந்த நொடி எழுந்து நின்று, “தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ் மஹா... இது என் வீடு... இங்க எனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு... எல்லாத்துக்கும் மேல நம்ம உணர்வுகளையும் உரிமையையும் யாருக்காக இல்ல எதுக்காக நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும்”
”எல்லாத்துக்கும் மேல இங்க என் கூட பிறந்தவானோட நினைவுகள் இருக்கு... அத நான் எப்படி காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியும்?” என்று கோபமாகக் கத்திவிட மஹா வாயடைத்து நின்றுவிட்டாள்.
“இனிமே இந்த ரூம் விஷயத்தைப் பத்தி பேசுன... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று முடித்துவிட்டு திரும்பிய போது எங்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்தை மதியழகி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
சட்டென்று என் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “இன்னும் மதி தூங்கலையா?” என்று கேட்க, அப்போதே மஹாவும் மகளைத் திரும்பிப் பார்த்தாள்.
அதன் பின் அவளும் என்னிடம் எந்த வாக்குவாதமும் வைத்துக் கொள்ளாமல் மகளை மடியில் கிடத்தித் தூங்க வைக்க ஆரம்பித்தாள்.
நான் அந்தக் கணமே தூக்கி விசிறிய உடையையும் வாட்சையும் எடுத்து வாட்ரூபை திறந்து வைத்துவிட்டு சோஃபாவில் வந்து அமர்ந்துவிட்டேன்.
நாளை நான் தந்தையுடன் சென்று கம்பெனியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்படி நான் அந்தப் பொறுப்பைக் கையாளப் போகிறேன் என்று தெரியவில்லை. அதுவும் முற்றிலும் எனக்கும் என் படிப்பிற்கும் சம்பந்தமில்லாத ஒரு பொறுப்பு.
இப்போது வரையிலும் கூட அப்பாவின் வியாபாரத்திலும் நிறுவனத்திலும் எனக்கு துளியும் ஆர்வம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேல் அந்தப் பொறுப்புகளைக் கையாளும் அறிவும் திறமையும் எனக்கு இருக்கிறதா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.
ஏதோ போகிற போக்கில் நாவல்கள் எழுதி அதை ஒரு பெரிய திறமையாக என்னை நானே கொண்டாடிக் கொண்டு இருந்துவிட்டேன். கற்பனையிலும் கனவுலகத்திலும் சுலபமாக நாம் கதாநாயகன் அவதாரம் எடுத்துவிடலாம். ஆனால் இந்த வியாபார உலகத்தின் மிக மோசமான போட்டியில் அப்படியொரு அவதாரம் எடுப்பதும் நம்மை நிரூபித்துக் கொள்வதும் சுலபம் இல்லை. அதற்கு புத்திசாலித்தனம் தேடல் மற்றும் இலட்சியத்துடன் கூடிய உழைப்பு வேண்டும்.
இவ்விதமாக யோசித்துக் கொண்டே கண்களை மூடி நான் சாயவும் உறக்கம் சுழற்றிக் கொண்டு வந்தது.
மெல்ல நான் உறக்க நிலையில் ஆழ, “அன்பு அன்பு” என்று ஒரு கரம் என்னை உலுக்கிவிட, பதறி கண் விழித்துப் பார்த்தேன்.
மஹாதான் நின்று கொண்டிருந்தாள். “என்ன வேணும் உனக்கு?” என்று நான் கடுகடுக்க,
“ஏசி குளிருது... ரிமோட் எங்கன்னு தெரியல” என்றாள் தயங்கித் தயங்கி.
“நானா ரிமோட்டை வைச்சி இருக்கேன்... போய் எங்கயாவது தேடிப் பாரு... எனக்கே அதிசயமா தூக்கம் வந்துச்சு... அதையும் கெடுத்து விட்டா” என்று நான் கடுகடுக்க,
“சாரி அன்பு... நான் வேணும்டே பண்ணல... ரிமோட் எங்க தேடியும் கிடைக்கல” என்றாள்.
“என்கிட்ட இல்ல”
“இல்ல அன்பு... இங்கதான்”
“என்கிட்ட இல்லன்னு சொல்றேன் இல்ல... போய் பெட்ஷீட்டைப் போத்திட்டுப் படு” என்று நான் கத்தவும் அவள் அமைதியாகத் திரும்பிப் படுக்கைக்குச் சென்றுவிட்டாள்.
நான் மீண்டும் சாய்ந்து அமர்ந்த போதுதான் பின்னோடு ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று நான் எடுத்துப் பார்த்தேன். ஏசி ரிமோட்.
அவள் போர்வையை எடுத்து மூடிக் கொள்ளப் போகவும், “சாரி ரிமோர்ட் இங்கேதான் இருக்கு” என, அவள் திரும்பி என்னை முறைப்பாக பார்த்து வைத்தாள்.
“முறைக்காத... நான் இங்க இருந்ததைக் கவனிக்கல” என்றபடி குளிரூட்டியின் வெப்பளவை ஏற்றி வைக்கவும் கொஞ்சம் குளிர் மட்டுப்பட்டது.
மீண்டும் அமைதியாகப் படுத்துக் கொண்டவள், “நீங்க படுக்கலயா?” என்று கேட்டாள்.
“வந்த தூக்கத்துலதான் நீ கல்லைப் போட்டியே அப்புறம் என்ன?”
“நான் என்ன வேணும்டேவா செஞ்சேன்... குளிர் தாங்க முடியல... அதான்”
“இப்போ டெம்பரேச்சர் ஏத்தி வைச்சுட்டேன் இல்ல... நிம்மதியா தூங்கு” என்று சோஃபாவிலிருந்து எழுந்துச் சென்று பால்கனி கதவை நான் திறக்கப் போகவும்,
“இப்போ எதுக்கு வெளியே போறீங்க? ஸ்ட்ரஸ், டென்ஷன்னு சிகரெட் பிடிக்கவா?” என்று சொல்லிக் கொண்டே எழுந்து அமர்ந்து கொண்டு கேட்க, எனக்குக் கடுப்பானது.
“நான் இப்போ சிகரெட் பிடிக்கப் போறேன்னு உனக்குத் தெரியுமா? நானே விட்டாலும் நீயா ஏன் டி அதை ஞாபகப்படுத்தித் தொலைக்குற”
“இல்ல அதுக்குதான் போறீங்களோன்னு” என்றவள் இழுக்கவும்,
“மஹா... ப்ளீஸ் என்னை டென்ஷன் படுத்தாம ஒழுங்கா படுத்துத் தூங்கு... எனக்கு இப்போதைக்கு தூக்கம் வராது... நான் கொஞ்ச நேரம் வெளியே நிற்குறேன்” என்று சொல்ல,
“படுத்தா... தானா தூக்கம் வரும் அன்பு” என்றாள்.
“எனக்கு வராதுடி” என்று நான் கோபமாகத் திரும்பிக் கத்தவும் அவள் மிரண்டுவிட்டாள். மதியழகி சிணுங்க ஆரம்பிக்க, “ஒன்னும் இல்லடா” என்று குழந்தையைத் தட்டிக் கொடுத்தாள்.
நான் அவளைக் கண்டும் காணாமல் பால்கனி கதவைத் திறந்து வெளியே சென்று நிற்கவும் மஹா என் அருகில் வந்து நின்றாள்.
நான் அவளைச் சலிப்பாகப் பார்த்து, “உனக்கு என்னதான்டி வேணும்” என,
“நீங்க தூங்கணும் இப்போ... இப்படியே நீங்க ஒழுங்கா தூங்காம இருந்தா உடம்பு கெட்டுப் போயிடும்” என்று அறிவுரை வாசிக்க எனக்கு எரிச்சல் மூண்டது.
“சாவுறேன்... உனக்கு என்னடி வந்தது?” என்று மீண்டும் கத்திவிட, அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்து வெளியே ஊற்றியது.
அந்தக் கணமே, “சாரி மஹா... சாரி” என்று சமாதானம் கூற, அவள் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“மஹா...” என்று நான் நடுக்கத்துடன் அழைக்க,
“நீங்க தூங்காம நானும் தூங்கமாட்டேன்” என்றாள். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. நான் கோபம் காட்டினாலும் என்ன செய்தாலும் இந்தப் பெண் என்னிடம் ஏன் இத்தனை அன்பையும் காதலையும் கொட்டிக் கொடுக்கிறாள்.
சில நொடிகள் அவள் அணைப்பிலேயே இருந்தேன். இந்தப் பெண்ணிடம் என்னவோ இருக்கிறது. இவள் என்னை ஏதோ செய்கிறாள்.
சட்டென்று அணைத்தபடியே அவள் என் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “சாரி அன்பு” என,
“எதுக்கு?” என்றேன்.
“உங்ககிட்ட நான் அப்படி பேசி இருக்கக் கூடாது... இரத்தமும் சதையும் உங்க கூட கருவறையில இருந்து வந்த சொந்தத்தை நீங்க இழந்துட்டு நிற்குறீங்க.”
”இப்போ உங்களுக்குன்னு இருக்கிறது அவரோட ஞாபகம் மட்டும்தானே... அது இந்த ரூம்ல இருக்குன்னு நம்புறீங்கனா அதை நீங்க பிடிவாதமா கேட்டு வாங்குனதுல தப்பில்லைதான்” என்றாள்.
நான் சொல்ல நினைப்பதை எல்லாம் அவளாகச் சொல்லிவிடுகிறாள்.
“டக்குன்னு நான் உங்களைஒப் புரிஞ்சிக்காம பேசிட்டேன்... ஐம் சாரி” என்று மீண்டும் சொல்லிவிட்டு, “இனிமே அப்படி உங்களைப் புரிஞ்சிக்காம பேச மாட்டேன்” என்றாள்.
கள்ளங்கபடமில்லாத அவள் அன்பில் நான் தொலைந்து போகிறேன். அன்புவாகவும் இல்லாமல் அறிவாகவும் இல்லாமல் என்று அடையாளம் எல்லாம் மறந்து போகிறேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு என் கண்களில் கண்ணீர் நிறைந்து தளும்பியது. இந்தப் பெண் என்னை அழ வைக்கிறாள். அழ வைப்பதன் மூலமாகக் கனத்துப் போன என் உணர்வுகளை எல்லாம் கரைய வைக்கிறாள்.
“அழுறீங்களா?” என்றவள் கரம் என் கன்னத்தைத் தொடவும் அவள் கரம் பற்றி முத்தமிட்டேன். பின் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அணைத்துக் கொண்டேன்.
என்னை அணைத்தபடியே அவளும், “தூக்கம் வரலயா உங்களுக்கு?” என்று கேட்கவும்,
“இன்னைக்கு நாம தூங்கியே ஆகணுமா மஹா?” என்று நான் கேட்க அவள் என்னை நிமர்ந்து பார்க்கும் போது நான் அவள் இதழுடன் என் இதழ்களைப் பொருத்தினேன்.
அவள் நாணி தலை கவிழவும் அவளை நான் அணைத்தபடி அறைக்குள் அழைத்து வரவும், “குட்டிமா இருக்கா?” என்று தயங்கினாள்.
மதியை மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் சோஃபாவில் அணைப்பாக தலையணை வைத்துப் படுக்க வைத்துவிட்டு திரும்ப, “அவ எழுந்திருச்சு அழப் போறா அன்பு” என்றாள்.
“நல்ல தூங்குறா... எழுந்திருக்க மாட்டா” என்று சொல்லிய எனக்கு அதற்கு பிறகு கொஞ்சமும் பொறுமை இல்லை. அவளைப் படுக்கையில் தள்ளி முத்தமிட்டேன்.
நீண்ட நெடிய முத்தத்தை நான் கொடுத்து முடிக்கும் போது மஹா என்னிடம் கிறங்கி இருந்தாள். அந்தக் கிறக்கத்துடனேயே கொஞ்சம் கொஞ்சமாக அவள் தேகத்தை ஆக்கிரமித்துக் கொண்டேன்.
அவள் உடலின் மீதான போதை எனக்கு ஏறிக் கொண்டே போனது. என் வாழ்க்கையில் ஏங்கிய அன்பையும் பாசத்தையும் காதலையும் ஒருத்தி மொத்தமாக எனக்கு வாரி கொடுக்கிறாள். ஒரே உருவில் எனக்கான அத்தனை உறவாகவும் இருக்கும் போது உடலாலும் மனதாலும் முழுவதுமாக அவளை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற வெறியேறியது.
அந்த நொடி அன்புவின் காதலி என்று சிறு குற்றவுணர்வு கூட எனக்கு எழாதபடிக்கு என் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுதான் அவளுடன் கூடினேன்.
அவளுடன் கூடிய பின்பாக ஏற்பட்ட களைப்பிலும் அமைதியிலும் என்னை மறந்து நான் உறங்கிப் போக, அன்று விடிந்து வெகுநேரம் கழித்துதான் என் உறக்கம் களைந்தது.
ரொம்ப நாட்கள் கழித்து அப்படியொரு உறக்கத்தையும் அமைதியையும் நான் அனுபவித்தேன்.
எல்லாவற்றிற்கும் மஹாதான் காரணம் என்று தோன்றியது. நான் என் அருகே பார்க்க அவள் தன் மகளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.
அவளுடனான இணைவு மனதிற்குள் புது பரவசத்தைக் கொடுத்தது. சத்தமில்லாமல் அவள் அருகே சென்று மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எழுந்து கொண்ட நான் முகத்தைத் துடைத்துக் கொண்டு பால்கனி கதவைத் திறந்தேன். தோட்டத்தின் முழுக் காட்சியும் தெரிந்தது.
மிதமாக வருடிய காலை காற்றைச் சுவாசித்த உணர்வுடன் இரவு நடந்தவற்றை எல்லாம் என் நினைவுகளுக்குள் சுவாசித்தேன். வறண்ட பூமியில் பெய்த மண் வாசம் போல என் மனதை அவள் நிரப்பிவிட்டாள்.
இந்த யோசனைகளினூடே பயணித்த எனக்கு மஹா இன்னும் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா என்ற சந்தேகம் எட்டிப் பார்த்தது.
அன்று அனுஷுயா சொன்னவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கையில் மதியழகி மஹாவின் மகள் இல்லை போல. ஆனால் மஹா மதிக்கும் இடையில் என்ன உறவு இருந்தாலும் சரி. என்ன கதை இருந்தாலும் சரி. இனி அவர்கள்தான் என்னுடைய உறவுகள். அவர்கள் மட்டும்தான்.