மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 21

Quote from monisha on July 23, 2025, 7:07 PM21
கோவா
வழி நெடுக தென்னை மரங்கள். ஒயாமல் கேட்கும் அலையின் ஒசை. பரந்து விரிந்த கடல்களில் மிதக்கும் கப்பல்கள். தடையில்லாமல் எங்கும் விற்பனையாகும் மதுபானங்கள். வடநாட்டவர்கள், அயல் நாட்டவர்கள் எங்கும் சூழ்ந்திருக்கத் தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தனர்.
கோவாவில் உள்ள அகோண்டா கடற்கரை கற்பாறையின் மீது வேணு மகாதேவன் கம்பீரமாய் அமர்ந்திருந்தான். சிவா சிலை போல கால்கள் மணலில் புதைய நின்றிருந்தான்.
“இந்தக் கேஸில் சின்ன க்ளூ கூடக் கிடைக்க மாட்டேங்குது சிவா... ஏதாவது மோட்டிவிற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியல... ரொம்பவும் குழப்பமா இருக்கு. சம்டைம்ஸ் இது நாம கொலையென்று தேவையில்லாம சந்தேகம் படுகிறோமோனு தோணுது... வாட் டு யு திங்க்?” என்று வேணு மகாதேவன் சொல்ல சிவா அதைக் கவனிக்காமல் வேறு ஏதோ ஆழமான யோசனையில் இருந்தான்.
“சிவா” என்று மீண்டும் வேணு உரக்க அழைக்க அவன் சிந்தனை தடைபட்டன.
“சொல்லுங்க சார்”
“என்ன டீப் திங்கிங்?”
“எம். வி. டி பாஃக்டரி... அங்க நடப்பது எதுவும் எனக்குச் சரியாப்படல. அமரேஷ் லிக்கர் பாஃக்டரிக்கு போட்டியான கம்பெனி என்பதற்காக மட்டும் சொல்லவில்லை.
நம்முடைய விசாரணையை எதிர்பார்த்தது போலவே எம். டி அவினாஷோட பதில்கள் இருந்தது. இவை எல்லாம் தாண்டி அங்கே நடப்பதையெல்லாம் பார்த்தால்... சம்திங் ஃபிஷ்ஷி “ என்றான்.
“கம்மான் சிவா... அந்தக் கம்பெனி பெரிய அரசியல்வாதியுடையது. அவினாஷ் அவற்றிற்கு உரிமையானவன் அல்ல... அவன் வெறும் பினாமி.
அங்கே நடப்பவற்றை நாம் கேள்வி கேட்க முடியாது... அது நம்ம அதிகாரத்தை மீறியது. மோர் ஓவர் அமரேஷ் ஃபாக்டரியை அவங்க போட்டியாக நினைப்பதாகத் தெரியவில்லை.
தேர் இஸ் நோ மோட்டிவ்... என்னோட தாட் எல்லாம் கேத்ரீனின் டாக்டர் ஷீலா சொன்னதுதான். அவளுக்கு டிரிங்க்ஸ் அலர்ஜினும், குடித்தால் போதை தலைக்கேறி எல்லைகளை மீறி நடந்து கொள்வாள் என்று சொன்னாங்களே…”
“எஸ்... அதுவும் பெரிய குழப்பம்தான்... அலர்ஜினு தெரிந்து தன்னோட லிமிட் மீறாதவள், அன்று ஏன் அளவை மீறி டிரிங்க்ஸ் சாப்பிடணும்?” என்றான் சிவா
“அவளுக்கு அஃபைர் யாராவது இருந்திருக்கலாம்... ஆனால் அதுவும் புதிராகவே இருக்கு சிவா”
“கேத்ரீனோட வீட்டைத் தேடி பார்த்தால் ஏதாவது க்ளூ கிடைக்கலாம் “ என்றான் சிவா.
இப்படி இவர்கள் தங்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டிருக்க அவர்களின் பின்னோடு வந்த ஒருவன் “காடி ரெடி சாப்(வண்டி ரெடி சார்)” என்றான் ஹிந்தியில்.
தன் புதையுண்ட கால்களை உதறியபடி சிவா செல்ல, பின்னோடு வேணு எதையோ யோசித்தபடி நடந்து வந்தான்.
விந்தியா இரவு வெகுநேரம் கழித்து வீட்டை அடைந்தாள். அவள் ரொம்பவும் சோர்வாய் காணப்பட்டாள். சண்முகம் அவளைப் பார்த்தவுடன், “சாப்பிட வாங்கம்மா”என்றான்.
“வேண்டாண்ணா... சூடா காபி மட்டும் ரூமுக்கு கொண்டு வாங்க... தலைவலியா இருக்கு”
“ஐயா வரலியாம்மா?”
“இல்லண்ணா... மாமா ஆடிட்டிங் வேலையை முடிச்சுட்டு வர்றேன் சொன்னாரு. என்னால முடியல... நான் புறப்பட்டு வந்துட்டேன். மாமாவுக்குச் சாப்பாடு எல்லாம் எடுத்து வைக்க வேண்டாம்... அவர் வர லேட்டாகும்.”
“ஆதித்தியா வந்தாச்சா?” என்றாள் விந்தியா.
“வந்துட்டாரு... வந்ததிலிருந்து உங்களப் பத்திதான் விசாரிச்சாரும்மா”
விந்தியா தலையாட்டிவிட்டு படியேறி மேலே நடந்தாள். எதிர்பாராமல் கால்கள் பின்ன அவள் மேலும் செல்ல முடியாமல் வலியுடன் படிக்கட்டின் மீது அமர்ந்து கொண்டாள்.
அவள் வேதனையோடு படிக்கெட்டின் மீது அமர்ந்திருக்க அதைப் பார்த்த சண்முகம் என்ன செய்வதென்று புரியாமல் வேகமாகச் சென்று ஆதித்தியாவின் அறைக்கதவை தட்டினான். ஆதித்தியா வெளியே வந்து விந்தியா வலியினால் வேதனைப்படுவதைக் கவனித்தான்.
“தலையைத் தூக்கியே நடந்தா... கொஞ்சமாவது தரையைப் பாத்து நடக்கணும்” என்று ஆதி கேலியாகச் சொன்னான்.
“எதுக்கு இவரைக் கூட்டிட்டு வந்தீங்க... இவரு என்ன டாக்டரா... நீங்க டாக்டருக்கு ஃபோன் பண்ணுங்கண்ணா” என்று சண்முகத்தைப் பார்த்து உரைத்தாள்.
“இந்த நேரத்தில் எந்த டாக்டர் வருவாங்க மேடம்? அதுவுமில்லாம என்கிட்ட ஆயின்மென்ட் இருக்கு... அதை அப்ளை பண்ணா காலையில நார்மலாயிடும்”
“தட்ஸ் பெட்டர்... இப்பவே போய் ஆயின்மென்ட்டை எடுத்துட்டு வாங்க” என்றாள் வலி பொறுக்கமுடியாமல்.
“இங்கயேவா? கம்மான்… ட்ரை பண்ணி எழுந்திரி... ரூமுக்குப் போகலாம்... நான் பிடிச்சிக்கிறேன்”
“இதான் சேன்ஸுனு என்னை டார்ச்சர் பண்ண பார்க்காதீங்க... என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”
ஆதித்தியா எவ்வளவு முயற்சி செய்தும் விந்தியா ஒரூ அடி கூட எடுத்து வைக்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள். ஆதித்தியா யோசித்து விட்டு சண்முகத்தைப் பார்த்தான்.
“சண்முகம்... நீங்க போய்க் கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் எடுத்துட்டு வாங்க” என்றான்.
விந்தியா அவன் என்ன செய்யப் போகிறான் என்று யூகிப்பதற்கு முன்பாகவே விந்தியாவைக் கைகளில் தூக்கிக் கொண்டான்.
“ஆதி... நோ... விடுங்க பிளீஸ்” என்று கதறினாள். அவள் பேசுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளை அறைக்குள் தூக்கிச் சென்றான். அவள் தன்னுடைய இயலாமையால், அவனை எதுவும் செய்ய முடியாமல் அமைதியானாள்.
அவளை படுக்கையின் மீது லாவகமாய்ப் படுக்க வைத்துவிட்டு, கால்களில் சண்முகம் எடுத்துட்டு வந்த ஐஸ் க்யூப்ஸால் ஒத்தடம் வைத்தான். விந்தியா வேண்டாமென்று கத்திக்கொண்டிருக்க அவன் காதில் வாங்கிக் கொள்ளவதாக தெரியவில்லை. அவள் கால்களில் மருந்தும் தேய்த்துவிட்டு வலியை மறக்க மாத்திரையும் கொடுத்தான்.
விந்தியா அமைதி அடையாமல் சோபாவில் படுத்துக் கொள்கிறேன் என்று எழுந்தவள், “அம்மா” என்று அலறிக்கொண்டு தலையணையில் சாய்ந்து விட்டாள்.
“இதென்ன மேஜிக்கா? மருந்து தடவினதும் குணமாக. அமைதியா படு. நான் உன் பக்கத்தில் படுக்கக் கூடாது... அவ்வளவுதானே. நான் சோபாவில் படுத்துக்கிறன்”என்று சொல்லிவிட்டு தலையணையை எடுத்து சோபாவின் மீது போட்டு படுத்துக் கொண்டான்.
ஆதித்தியாவின் கண்ணியம் விந்தியாவை வியக்கச் செய்தது. ‘சந்திரகாந்த் முதல் சிவா வரை எல்லோரும் ஆதியை பற்றிச் சொன்னவை உண்மை என்றால் இப்பொழுது தான் கண்ணெதிரே பார்ப்பது நடிப்பா? அப்படி இதுதான் ஆதியின் உண்மை முகம் என்றால் அப்பொழுது அவர்கள் சொன்னவை பொய்யா?’ என்று விந்தியா யோசிக்க அவளுக்குத் தலைசுற்றியது. சிலமணி நேரங்களுக்குப் பிறகு விந்தியா இந்தக் குழப்பத்தை மறந்தவளாய் உறங்கிப் போனாள்.
கோவாவில் பனாஜியில் இருந்த கேத்ரீனின் பிரமிக்க வைக்கும் வீட்டினுள் நம் இரு நண்பர்கள் சிவாவும் வேணுவும் அங்குள்ள ஏராளமான வேலையாட்களை விசாரித்தனர். கேத்ரீன் எல்லோரோடும் இயல்பாகப் பழகும் குணமுடையவள். இருப்பினும் சிறு தவறையும் மன்னிக்கும் மனப்பான்மை அற்றவள் என்பதும் நிதர்சனம் என்றனர்.
கேத்ரீனின் அறைக்குள் ஆறடிக்கு நிகராய் அவள் ஃபோட்டோ மாட்டி இருக்க இருவரும் அதைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தனர். அந்த அறை சுற்றிலும் புத்தகங்கள் நிரம்பி இருந்தன. அங்கே அவர்கள் சந்தேகப்படும்படியாய் எந்த பொருளும் இல்லை.
ஆனால் அங்கே மூடியிருந்த லாக்கர் சிவாவின் மனதிற்குள் ஏதோ ஓர் உறுத்தலை ஏற்படுத்தியது. அதை திறக்க அவன் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவின. அவர்கள் எங்கு தேடியும் கேத்ரீனின் பொருட்களில் சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியில் அந்த லாக்கரின் இன்னொரு சாவி கேத்ரீனின் லாயரிடம் இருப்பதாகத் தெரிய வர அவரையும் அங்கே சாவியுடன் வரவழைத்தனர்.
லாயர் ஜான் அந்த லாக்கரை தான் திறந்ததில்லை என்றும் அந்தச் சாவி வெறும் பாதுகாப்புக்காகக் கேத்ரீன் கொடுத்ததாக உரைத்தான். இறுதியாகச் சாவி கிடைத்துவிட்ட திருப்தியில் சிவா அந்த லாக்கரை திறக்க அவனுக்கு ஏமாற்றமே மிச்சமாயிருந்தது. உள்ளே இருந்த இன்னொரு கதவில் ரகசிய எண் கேட்க அதன் சூட்சமம் தெரியாமல் எல்லோருமே விழித்தனர்.
21
கோவா
வழி நெடுக தென்னை மரங்கள். ஒயாமல் கேட்கும் அலையின் ஒசை. பரந்து விரிந்த கடல்களில் மிதக்கும் கப்பல்கள். தடையில்லாமல் எங்கும் விற்பனையாகும் மதுபானங்கள். வடநாட்டவர்கள், அயல் நாட்டவர்கள் எங்கும் சூழ்ந்திருக்கத் தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தனர்.
கோவாவில் உள்ள அகோண்டா கடற்கரை கற்பாறையின் மீது வேணு மகாதேவன் கம்பீரமாய் அமர்ந்திருந்தான். சிவா சிலை போல கால்கள் மணலில் புதைய நின்றிருந்தான்.
“இந்தக் கேஸில் சின்ன க்ளூ கூடக் கிடைக்க மாட்டேங்குது சிவா... ஏதாவது மோட்டிவிற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியல... ரொம்பவும் குழப்பமா இருக்கு. சம்டைம்ஸ் இது நாம கொலையென்று தேவையில்லாம சந்தேகம் படுகிறோமோனு தோணுது... வாட் டு யு திங்க்?” என்று வேணு மகாதேவன் சொல்ல சிவா அதைக் கவனிக்காமல் வேறு ஏதோ ஆழமான யோசனையில் இருந்தான்.
“சிவா” என்று மீண்டும் வேணு உரக்க அழைக்க அவன் சிந்தனை தடைபட்டன.
“சொல்லுங்க சார்”
“என்ன டீப் திங்கிங்?”
“எம். வி. டி பாஃக்டரி... அங்க நடப்பது எதுவும் எனக்குச் சரியாப்படல. அமரேஷ் லிக்கர் பாஃக்டரிக்கு போட்டியான கம்பெனி என்பதற்காக மட்டும் சொல்லவில்லை.
நம்முடைய விசாரணையை எதிர்பார்த்தது போலவே எம். டி அவினாஷோட பதில்கள் இருந்தது. இவை எல்லாம் தாண்டி அங்கே நடப்பதையெல்லாம் பார்த்தால்... சம்திங் ஃபிஷ்ஷி “ என்றான்.
“கம்மான் சிவா... அந்தக் கம்பெனி பெரிய அரசியல்வாதியுடையது. அவினாஷ் அவற்றிற்கு உரிமையானவன் அல்ல... அவன் வெறும் பினாமி.
அங்கே நடப்பவற்றை நாம் கேள்வி கேட்க முடியாது... அது நம்ம அதிகாரத்தை மீறியது. மோர் ஓவர் அமரேஷ் ஃபாக்டரியை அவங்க போட்டியாக நினைப்பதாகத் தெரியவில்லை.
தேர் இஸ் நோ மோட்டிவ்... என்னோட தாட் எல்லாம் கேத்ரீனின் டாக்டர் ஷீலா சொன்னதுதான். அவளுக்கு டிரிங்க்ஸ் அலர்ஜினும், குடித்தால் போதை தலைக்கேறி எல்லைகளை மீறி நடந்து கொள்வாள் என்று சொன்னாங்களே…”
“எஸ்... அதுவும் பெரிய குழப்பம்தான்... அலர்ஜினு தெரிந்து தன்னோட லிமிட் மீறாதவள், அன்று ஏன் அளவை மீறி டிரிங்க்ஸ் சாப்பிடணும்?” என்றான் சிவா
“அவளுக்கு அஃபைர் யாராவது இருந்திருக்கலாம்... ஆனால் அதுவும் புதிராகவே இருக்கு சிவா”
“கேத்ரீனோட வீட்டைத் தேடி பார்த்தால் ஏதாவது க்ளூ கிடைக்கலாம் “ என்றான் சிவா.
இப்படி இவர்கள் தங்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டிருக்க அவர்களின் பின்னோடு வந்த ஒருவன் “காடி ரெடி சாப்(வண்டி ரெடி சார்)” என்றான் ஹிந்தியில்.
தன் புதையுண்ட கால்களை உதறியபடி சிவா செல்ல, பின்னோடு வேணு எதையோ யோசித்தபடி நடந்து வந்தான்.
விந்தியா இரவு வெகுநேரம் கழித்து வீட்டை அடைந்தாள். அவள் ரொம்பவும் சோர்வாய் காணப்பட்டாள். சண்முகம் அவளைப் பார்த்தவுடன், “சாப்பிட வாங்கம்மா”என்றான்.
“வேண்டாண்ணா... சூடா காபி மட்டும் ரூமுக்கு கொண்டு வாங்க... தலைவலியா இருக்கு”
“ஐயா வரலியாம்மா?”
“இல்லண்ணா... மாமா ஆடிட்டிங் வேலையை முடிச்சுட்டு வர்றேன் சொன்னாரு. என்னால முடியல... நான் புறப்பட்டு வந்துட்டேன். மாமாவுக்குச் சாப்பாடு எல்லாம் எடுத்து வைக்க வேண்டாம்... அவர் வர லேட்டாகும்.”
“ஆதித்தியா வந்தாச்சா?” என்றாள் விந்தியா.
“வந்துட்டாரு... வந்ததிலிருந்து உங்களப் பத்திதான் விசாரிச்சாரும்மா”
விந்தியா தலையாட்டிவிட்டு படியேறி மேலே நடந்தாள். எதிர்பாராமல் கால்கள் பின்ன அவள் மேலும் செல்ல முடியாமல் வலியுடன் படிக்கட்டின் மீது அமர்ந்து கொண்டாள்.
அவள் வேதனையோடு படிக்கெட்டின் மீது அமர்ந்திருக்க அதைப் பார்த்த சண்முகம் என்ன செய்வதென்று புரியாமல் வேகமாகச் சென்று ஆதித்தியாவின் அறைக்கதவை தட்டினான். ஆதித்தியா வெளியே வந்து விந்தியா வலியினால் வேதனைப்படுவதைக் கவனித்தான்.
“தலையைத் தூக்கியே நடந்தா... கொஞ்சமாவது தரையைப் பாத்து நடக்கணும்” என்று ஆதி கேலியாகச் சொன்னான்.
“எதுக்கு இவரைக் கூட்டிட்டு வந்தீங்க... இவரு என்ன டாக்டரா... நீங்க டாக்டருக்கு ஃபோன் பண்ணுங்கண்ணா” என்று சண்முகத்தைப் பார்த்து உரைத்தாள்.
“இந்த நேரத்தில் எந்த டாக்டர் வருவாங்க மேடம்? அதுவுமில்லாம என்கிட்ட ஆயின்மென்ட் இருக்கு... அதை அப்ளை பண்ணா காலையில நார்மலாயிடும்”
“தட்ஸ் பெட்டர்... இப்பவே போய் ஆயின்மென்ட்டை எடுத்துட்டு வாங்க” என்றாள் வலி பொறுக்கமுடியாமல்.
“இங்கயேவா? கம்மான்… ட்ரை பண்ணி எழுந்திரி... ரூமுக்குப் போகலாம்... நான் பிடிச்சிக்கிறேன்”
“இதான் சேன்ஸுனு என்னை டார்ச்சர் பண்ண பார்க்காதீங்க... என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”
ஆதித்தியா எவ்வளவு முயற்சி செய்தும் விந்தியா ஒரூ அடி கூட எடுத்து வைக்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள். ஆதித்தியா யோசித்து விட்டு சண்முகத்தைப் பார்த்தான்.
“சண்முகம்... நீங்க போய்க் கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் எடுத்துட்டு வாங்க” என்றான்.
விந்தியா அவன் என்ன செய்யப் போகிறான் என்று யூகிப்பதற்கு முன்பாகவே விந்தியாவைக் கைகளில் தூக்கிக் கொண்டான்.
“ஆதி... நோ... விடுங்க பிளீஸ்” என்று கதறினாள். அவள் பேசுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளை அறைக்குள் தூக்கிச் சென்றான். அவள் தன்னுடைய இயலாமையால், அவனை எதுவும் செய்ய முடியாமல் அமைதியானாள்.
அவளை படுக்கையின் மீது லாவகமாய்ப் படுக்க வைத்துவிட்டு, கால்களில் சண்முகம் எடுத்துட்டு வந்த ஐஸ் க்யூப்ஸால் ஒத்தடம் வைத்தான். விந்தியா வேண்டாமென்று கத்திக்கொண்டிருக்க அவன் காதில் வாங்கிக் கொள்ளவதாக தெரியவில்லை. அவள் கால்களில் மருந்தும் தேய்த்துவிட்டு வலியை மறக்க மாத்திரையும் கொடுத்தான்.
விந்தியா அமைதி அடையாமல் சோபாவில் படுத்துக் கொள்கிறேன் என்று எழுந்தவள், “அம்மா” என்று அலறிக்கொண்டு தலையணையில் சாய்ந்து விட்டாள்.
“இதென்ன மேஜிக்கா? மருந்து தடவினதும் குணமாக. அமைதியா படு. நான் உன் பக்கத்தில் படுக்கக் கூடாது... அவ்வளவுதானே. நான் சோபாவில் படுத்துக்கிறன்”என்று சொல்லிவிட்டு தலையணையை எடுத்து சோபாவின் மீது போட்டு படுத்துக் கொண்டான்.
ஆதித்தியாவின் கண்ணியம் விந்தியாவை வியக்கச் செய்தது. ‘சந்திரகாந்த் முதல் சிவா வரை எல்லோரும் ஆதியை பற்றிச் சொன்னவை உண்மை என்றால் இப்பொழுது தான் கண்ணெதிரே பார்ப்பது நடிப்பா? அப்படி இதுதான் ஆதியின் உண்மை முகம் என்றால் அப்பொழுது அவர்கள் சொன்னவை பொய்யா?’ என்று விந்தியா யோசிக்க அவளுக்குத் தலைசுற்றியது. சிலமணி நேரங்களுக்குப் பிறகு விந்தியா இந்தக் குழப்பத்தை மறந்தவளாய் உறங்கிப் போனாள்.
கோவாவில் பனாஜியில் இருந்த கேத்ரீனின் பிரமிக்க வைக்கும் வீட்டினுள் நம் இரு நண்பர்கள் சிவாவும் வேணுவும் அங்குள்ள ஏராளமான வேலையாட்களை விசாரித்தனர். கேத்ரீன் எல்லோரோடும் இயல்பாகப் பழகும் குணமுடையவள். இருப்பினும் சிறு தவறையும் மன்னிக்கும் மனப்பான்மை அற்றவள் என்பதும் நிதர்சனம் என்றனர்.
கேத்ரீனின் அறைக்குள் ஆறடிக்கு நிகராய் அவள் ஃபோட்டோ மாட்டி இருக்க இருவரும் அதைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தனர். அந்த அறை சுற்றிலும் புத்தகங்கள் நிரம்பி இருந்தன. அங்கே அவர்கள் சந்தேகப்படும்படியாய் எந்த பொருளும் இல்லை.
ஆனால் அங்கே மூடியிருந்த லாக்கர் சிவாவின் மனதிற்குள் ஏதோ ஓர் உறுத்தலை ஏற்படுத்தியது. அதை திறக்க அவன் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவின. அவர்கள் எங்கு தேடியும் கேத்ரீனின் பொருட்களில் சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியில் அந்த லாக்கரின் இன்னொரு சாவி கேத்ரீனின் லாயரிடம் இருப்பதாகத் தெரிய வர அவரையும் அங்கே சாவியுடன் வரவழைத்தனர்.
லாயர் ஜான் அந்த லாக்கரை தான் திறந்ததில்லை என்றும் அந்தச் சாவி வெறும் பாதுகாப்புக்காகக் கேத்ரீன் கொடுத்ததாக உரைத்தான். இறுதியாகச் சாவி கிடைத்துவிட்ட திருப்தியில் சிவா அந்த லாக்கரை திறக்க அவனுக்கு ஏமாற்றமே மிச்சமாயிருந்தது. உள்ளே இருந்த இன்னொரு கதவில் ரகசிய எண் கேட்க அதன் சூட்சமம் தெரியாமல் எல்லோருமே விழித்தனர்.