மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 31

Quote from monisha on August 17, 2025, 10:55 AM31
கரைந்து போன காதல்
விந்தியா மாட்டிக்கொண்ட பதட்டத்தில் சிறு பிள்ளைத்தனமான முகத்தோடு அவன் முன்னே வந்து நின்றாள். வெகு நாட்கள் வறட்சிக்கு பிறகு பொழிந்த மழைத்துளி, மண்வாசத்தை வீசி புத்துணர்வை உண்டாக்குவது போல இருந்தது… ஆதித்தியாவிற்கு விந்தியாவைப் பார்த்த அந்த நொடி...
ஒவ்வொரு முறையும் அவளின் பார்வையின் முன்னே தோற்றுப் போகிறோமோ என்று ஆதி எண்ணமிட்டுக் கொண்டான். இம்முறை ஆதித்தியா தன் உணர்ச்சிகள் நிரம்பிய மனதை விடுத்து மூளையால் இயங்க வேண்டுமென்று நினைத்தான்.
விந்தியாவிற்கு அவன் முன்னிலையில் குற்றவாளியாய் நிற்பது அவமானமாய் தோன்றியது. அவன் முகத்தை நேரெதிரே பார்க்க தயங்கியவளை, கண்கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆதித்தியா.
அவளின் தயக்கத்தைப் பார்த்து ஆதியே பேசத் தொடங்கினான்.
“பெட்டி படுக்கையோட அம்மா வீட்டுக்கு போன... மேடம் இப்ப எதுக்கு வந்தீங்க? நீ இந்த அறைக்குள்ளே ஒளிஞ்சிட்டு இருக்கிறதை கூடவா கண்டுபிடிக்க மாட்டேன்? உன் வாசனையும்... உன் மெலிதான கொலுசு சத்தம். இதை எல்லாம் தாண்டி அந்த ஆஷ் டிரெ...
சண்முகம் நான் இல்லாத போது என் ரூமுக்குள்ளேயே வர மாட்டான்... அப்போ வேறு யாருனு யோசிச்சா உன்னோட முகம்தான் என் கண் முன்னாடி வந்தது” என்றான், அவள் மீதான பார்வையைக் கண நேரம் கூட அகற்றாமல்.
“தேவையில்லாதது எல்லாம் பேசாதீங்க... நான் மறந்துட்டு போன பொருளை எடுத்துட்டு போக வந்தேன். வெளியிலிருந்து நீங்க கோபமாய் வருவதைப் பார்த்த பிறகு உங்க கண் முன்னாடி வந்தா என்ன நடக்குமோனு பயந்து ஒளிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.
ஆதித்தியா லேசாகச் சிரித்துவிட்டு, “நீ பயந்துட்ட... அதுவும் என்னைப் பாத்து... நான் இதை நம்பணும்”
“நீங்க நம்புங்க நம்பாம போங்க... நான் எடுக்க வேண்டியதை எடுத்துட்டேன்... கிளம்புறேன்” என்று விந்தியா அறையின் வாசலை நெருங்க ஆதித்தியா சந்தேகம் கொண்டவனாய் அவளை வழிமறித்தான்.
“ஏதோ தப்பா இருக்கே... எப்பவும் அலட்சியமா இல்ல கோபமா பார்க்கிற கண்ணில ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே”
“போதும் ஆதி... நிறுத்துங்க... திருட்டுத்தனமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல முயற்சிக்க ஆதியின் நீண்ட கரங்கள் வழிவிடவில்லை.
“வாட்ஸ் யுவர் பிராப்ளம் ஆதி?” என்று கொஞ்சம் விந்தியா அதட்டலாய் கேட்க,
ஆதி ரொம்பவும் இயல்பாய், “திஸ் இஸ் மை பிராப்ளம்” என்று சொல்லி,
ஹேன்ட் பேக்கை அவன் எதிர்பாராமல் இழுத்து பிரித்துப் பார்க்க விந்தியா பதறிக் கொண்டு அவன் கையிலிருந்து பிடுங்கினாள். இந்தச் செயல் ஆதித்தியாவிற்கு மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.
“மேனர்ஸ் தெரியாதா? என்னோட அனுமதி இல்லாம என் ஹேன்ட் பேக்கை எப்படி நீங்க திறக்கலாம்?” என விந்தியா பொறிந்து தள்ளினாள்.
“நீ என்னோட ரூமுக்குள்ள என்னோட அனுமதி இல்லாம வந்தது மேனர்ஸா?”
“ஸ்டாப் இட் ஆதி... நான் என் திங்க்ஸைத்தான் எடுக்க வந்தேன்”
“சரி... அந்த பொருளை காட்டிட்டு போ” என்று சொல்ல விந்தியாவிற்குப் பதட்டம் அதிகரித்தது.
“என்னை நீங்க நம்பமாட்டீங்களா?” என்று விந்தியா கேள்வியால் மடக்க,
“நோ... உன்னை மட்டும் நம்பமாட்டேன்டி... அமுக்கமாய் கேத்ரீன் விஷயம் தெரிஞ்சதை மறைச்சு போலீஸ் அரெஸ்ட் பண்ற வரைக்கும் அமைதியா இருந்தியே” என்று சொல்லியபடியே பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான்.
விந்தியா அவனிடமிருந்து தப்பிக்க ஃபோனை எடுத்து டயல் செய்தாள். ஆதித்தியா அவள் போனை பிடுங்க அதில் சிவா என்ற பெயரை பார்த்ததும் கோபம் கொண்டவனாய் தூக்கி வீசி எறிந்தான்.
“ஹெலோ மிஸ்டர்... என்ன உரிமையில என்னோட ஃபோனை தூக்கி அடிச்சீங்க? “
“நான் உன் புருஷன்... உன்னை கேள்வி கேட்டா பதில் சொல்லு... அதை விட்டுட்டு எவனுக்கோ ஃபோன் போட்டா... டென்ஷன் ஆகாதா? அதான் தூக்கி அடிச்சேன்” என்றதும் விந்தியாவிற்கு உள்ளுக்குள் அவனின் செயலால் மனதிற்குள் பயம் உண்டானது.
அவளுடைய தைரியம் கரைந்து கொண்டே வர தப்பிக்கும் வழியை மட்டுமே அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஆதித்தியாவிற்கு அவளின் பதட்டம் குழப்பமாயிருந்தது. அந்த பேக்கில் என்ன இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க, மீண்டும் அவன் அந்த பேக்கை இழுத்த போது விந்தியாவின் பிடியும் அத்தனை லேசில் இல்லை.
“என்ன... அந்த சிவா உன்கிட்ட ஏதாவது ஆதாரத்தைத் தேடி அனுப்பினானா? மொத்தத்தில் என்னை உள்ள தள்ள இரண்டு பேரும் குறியா இருக்கீங்க”
ஆதித்தியா சொன்னது அப்பட்டமான உண்மை. ஆனால் இந்த ஆதாரம் அவனைக் காப்பாற்றுவதற்கு என்று சொன்னால் நம்புவானா?
இப்படி அவள் சிந்தித்துக் கொண்டிருக்க அவள் அசந்த நேரம் பார்த்து பேக்கை உருவிக்கொள்ள, விந்தியா விட்டுகொடுக்காமல் அந்த பேக் இருவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு தவித்தது.
இந்தப் போராட்டத்துக்கு இடையில் ஆதித்தியாவின் கையிலிருந்த சிகரெட் துண்டு விந்தியாவின் கைகளில் பட்டு விட, “அம்மா...” என்று அவள் கைகளை உதற…
ஆதித்தியா அவன் கையில் சிக்கி கொண்ட பேக்கை ஒரு பொருட்டாய் மதிக்காமல் தூக்கி வீசி விட்டு சிகரெட் துண்டை காலில் போட்டு மிதித்தான்.
“சாரி... சாரி... சாரி... தெரியாம நடந்து போச்சு” என்று அவள் கையில் சூடுபட்ட இடத்தைத் தடவியவன்,
“வெய்ட்... ஐஸ்... எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி தன் அறையினுள் இருந்த சின்னக் குளிர்சாதனப்பெட்டியை நாடிப் போனான்.
இதுதான் சமயம் என விந்தியா பேக்கை சத்தமின்றி எடுத்துக் கொண்டு கதவை நெருங்க, ஆதித்தியாவின் கண்கள் அவளைப் பார்த்த நொடியில் அவன் மூளையும் கை, கால்களும் அதிவேகமாய்ச் செயல்பட்டன.
சுவற்றில் மாட்டியிருந்த சாவியை எடுத்துக் கொண்டு பின்புறமாய் விந்தியாவை அணைத்து இழுத்தபடி பிடித்துக்கொண்டு மறு கையினால் கதவை அடைத்து பூட்டினான்.
அவனின் ஒரு கையை விலக்கி விடவே விந்தியாவிற்குக் கடினமாயிருந்தது. உண்மையிலேயே பார்க்கும் போது தெரியாத அவனின் கம்பீரம் அவன் பிடிக்குள் சிக்குண்ட போது மிரட்டியது.
பூட்டிய கணத்தில் அவன் கையின் இறுக்கம் விலக அத்தனை நேர தவிப்பினால் ஏற்பட்ட கோபம் அவள் அவன் மீது கை ஓங்கி கொண்டு அடிக்கப் போனாள். ஆதித்தியா அவளின் செயலை எதிர்பார்த்தவன் போல் நிற்க ஓங்கிய கைக்கு அடிக்க மனமில்லாமல் இறங்கிப் போனது.
“ஏன் நிறுத்திட்ட... அடிடீ என் கலியுக கண்ணகி” என்றான்.
விந்தியா அவனிடம் போராட சக்தியில்லாமல் தரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக் கொள்ள அவளின் இயலாமை அவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. ஆனால் அவளைப் போகட்டும் என்று அனுப்பவும் மனசு வரவில்லை. எத்தனை முறை அவனை வேதனையுற பார்த்திருப்பாள்.
இம்முறை அனுபவிக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டே மீண்டும் ஐஸ்ஸை எடுத்துக் கொண்டு வந்து அவளருகில் தரையிலேயே உட்கார்ந்தான்.
அவன் மீதுள்ள கோபத்தில் வேண்டாமென தள்ள ஆதித்தியா கோபமாய் பார்த்த பார்வையில் அவனிடம் காயம்பட்ட கையினைக் காண்பித்தாள்.
“உன்னைப் பார்த்ததுமே நீ திரும்பியும் என்னை பார்க்கத்தான் வந்திருக்கியோனு நினைச்சேன்... ஆனா என்னை ஏமாத்திறதுல உனக்கு அப்படி ஒரு சந்தோஷம் இல்ல?”
ஆதித்தியா அவளைப் பார்த்துக் கொண்டே காயத்தின் மீது ஐஸ் தடவ அது கரைந்து கொண்டே போனது. ஆனால் விந்தியாவின் மனம் துளி கூடக் கரையவில்லை.
“என்னைப் போக விடுவீங்களா, மாட்டீங்களா ஆதி?” என்று கண்களில் நிரம்பிய கோபத்தோடு அவனைப் பார்த்தாள்.
“சரி போ” என்று எழுந்து நின்று கொண்டு சாவியை நீட்ட அதை வாங்க அவள் எழுந்திருக்கும் போது மீண்டும் சாவியை மறைத்தான்.
“ஆதித்தியா... யூ ஆர் சீட்டிங் மீ”
“நீ கூடத்தான் ஏமாத்திட்டு ஓட பாத்த”
“ஓகே ஃபைன்... இந்த பேக்கில என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்? இந்தாங்க செக் பண்ணிக்கோங்க... இல்ல நீங்களே கூட வைச்சுக்கோங்க... என்னை வெளிய விடுங்க ஆதி” பேக்கை நீட்டினாள்.
ஆதித்தியா கலகலவென சிரித்து விட்டு அந்த பேக்கை விசிறி சோபாவின் மீது எறிந்தான்.
“அந்தப் பேக்குக்காகவா உன்கிட்ட இவ்வளவு நேரம் போராடிட்டிருக்கேன்?”
“தென் வாட் எல்ஸ்... என்கிட்ட வேற எதுவும் இல்ல”
“நீ இருக்கியே மை டார்லிங்”
“அப்படினா?”
“நீதான்டி வேணும்... நீ மட்டும்தான் வேணும்... ஒவ்வொரு முறை நீ எனக்கு ஏற்படுத்தின காயங்களுக்கு மருந்தா வேணும்”
“சந்தர்ப்பத்தை சாதகமா பயன்படுத்திக்கப் பார்க்கிறீங்களா? உங்க கண்ணியத்தை தான் நான் அதிகமா நேசிக்கிறேன்... அதைக் கலங்கப்படுத்தாதீங்க”
“நான் கண்ணியமானவனா? அப்படினு யார் சொன்னது? நான் ஒரு பொறுக்கி... ஒழுக்கம் இல்லாதவன்... கேத்ரீனை அடைய ஆசைப்பட்டு மாடியிலிருந்து விழ காரணமானவன்... காமப் பிசாசு... இன்னும் எத்தனையோ... இப்படித்தான் ஊரே சொல்லுது”
“அப்படி நான் சொல்லலியே... அதை எல்லாம் நான் நம்பவும் மாட்டேன்... எத்தனை ஆயிரம் பேர் பொய் சொன்னாலும், அதைத் தாண்டி ஒரு நாள் உண்மை தெரிய வரும் ஆதி”
“எப்போ... இந்த அவமானத்திற்கு எல்லாம் பிறகா?”
“ஜஸ்ட் லீவ் இட்... யார் நம்பினாலும் நம்பாட்டியும் நான் உங்கள நம்பிறேன் ஆதித்தியா “
“அதனாலதான் உன்னை நான் ரொம்ப நேசிக்கிறேன்... இந்த உறவு எனக்கு நிலைக்கணும்... டில் மை டெத். அதனால நீ எனக்கு வேணும்”
“நான் உங்கள நம்பினதுக்கு, இது எனக்கு நீங்க கொடுக்கிற தண்டனையா?”
“நம்புற... ஆனா புரிஞ்சிக்கவே மாட்டற... சின்னதாய் நடக்கிற சண்டைக்குக் கூட என்னை விட்டு நீ விலகி போயிடுறியா? என்னை நீ நேசிச்சதை விடக் காயப்படுத்தினதுதான்டி அதிகம்”
“ஒத்துக்கிறேன்... உங்களுக்கு வலிக்குமேனு யோசிக்காம நான் உங்கள ரொம்பக் காயப்படுத்திருக்கேன்... நான் இனிமே புரிஞ்சு நடந்துக்கிறேன்... கொஞ்ச நாள் பொறுமையா இருங்க ஆதி. இந்தப் பிரச்சனை எல்லாம் முடியட்டுமே”
“எனக்கு இந்தப் பிரச்சனை முடியும்னு தோணல விந்தியா. நாளைக்கு மரணமே ஆனாலும் இந்த மொமன்ட் நான் உன்னோட வாழணும்...”
“இந்தப் பிரச்சனை முடியாதுன்னு யார் சொன்னது? ஐம் தேர் வித் யூ. நான் இருக்கும் போது உங்களுக்கு எதுவும் வரவிடமாட்டேன்... என்னை நீங்க நம்புங்க ஆதி பிளீஸ்”
“நான் உன்னை நம்பபுறேன்டி... அதே நம்பிக்கையை நீ என் மேல வைக்கமாட்டியா?”
இதற்கு மேல் அவனிடம் என்ன சொல்வது? எப்படிப் புரிய வைப்பது?
“உன் திமிரும் கர்வமும் உன்னை இறங்கி வர விட மாட்டேங்குது... இல்ல?” என்றான் மெளனமாய் இருக்கும் விந்தியாவைப் பார்த்து.
“நான் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ஜடம் மாதிரி வாழ்ந்திட்டிருந்தேன். எனக்கு திரும்பியும் உணர்வுகளைக் கொடுத்ததே நீங்கதான். அதை நீங்களே பறிக்கப் பார்க்கிறீங்களே! வானத்தில் திடீர்னு ஏற்படுற வானவில் மாதிரி தோணணும் ஆதி... புயலுக்கும் மழைக்கும் இடையில் இன்ஸ்டன்ட் வொர்க் அவுட்... புரிஞ்சுக்கோங்க”
“நீ என்னைப் புரிஞ்சிக்கோ. மறுபடியும் மறுபடியும் உன்னைக் கெஞ்சிக்கிட்டு உன் திமிருக்கு முன்னாடி என்னால தலைவணங்கி போக முடியாது. ஆம்பளன்ற அந்த ஈகோவை நீ சீண்டி பார்க்கிற... இதான் பைஃனல்” என்று சொல்லிவிட்டு ஒரு பூமாலை தாங்குவது போல் தூக்கி கொண்டான்.
அவன் படுக்கையின் மீது அவளைப் படுக்க வைக்கும் போது விந்தியாவின் கண்களில் நீர் வழிந்தது.
“என்கிட்ட நீங்க சம்மதம் கேட்கல... உங்க விருப்பத்தை என் மேல திணிக்கிறீங்க”
“ஆமாம்... எனக்கு வேற வழி தெரியல. இப்ப கூட என்னைத் தடுக்கவும் உதறித் தள்ளவும் உன்னால முடியும்... உனக்கு அந்த கட்ஸூம் திமிரும் இருக்கு. ஆனா என்னை நீ தடுக்கல... இந்த லவ் போதும்... எவ்ரித்திங் வில் வொர்க் அவுட்”
அதற்கு மேல் அவர்களுக்கு இடையில் எந்த வித வாக்குவாதமும் நடக்கவில்லை. அதற்கான வாய்ப்பை ஆதித்தியா விந்தியாவிற்கு தரவும் இல்லை.
கடந்து போகும் ஒவ்வொரு கணமும் அவள் காதல் கரைந்து கொண்டே போனது. அவள் பார்த்து பார்த்து ரசித்த அவனின் கண்ணியம் கலங்கப்பட்டது. அவள் இத்தனை காலமாய் தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் ஒரே நாளில் மடையை உடைத்து பெருக்கெடுத்த வெள்ளமாய் வற்றிப் போனது.
உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் மீதான உரிமை என அவன் நினைத்தது... அந்த அழகான உறவையே சிதைக்கப் போகிறது.
வானிலிருந்து வீழ்ந்த மழைத்துளி சேற்றில் கலப்பது போல ஆதித்தியா விந்தியாவின் மனதில் தரம் தாழ்ந்து போனான்.
31
கரைந்து போன காதல்
விந்தியா மாட்டிக்கொண்ட பதட்டத்தில் சிறு பிள்ளைத்தனமான முகத்தோடு அவன் முன்னே வந்து நின்றாள். வெகு நாட்கள் வறட்சிக்கு பிறகு பொழிந்த மழைத்துளி, மண்வாசத்தை வீசி புத்துணர்வை உண்டாக்குவது போல இருந்தது… ஆதித்தியாவிற்கு விந்தியாவைப் பார்த்த அந்த நொடி...
ஒவ்வொரு முறையும் அவளின் பார்வையின் முன்னே தோற்றுப் போகிறோமோ என்று ஆதி எண்ணமிட்டுக் கொண்டான். இம்முறை ஆதித்தியா தன் உணர்ச்சிகள் நிரம்பிய மனதை விடுத்து மூளையால் இயங்க வேண்டுமென்று நினைத்தான்.
விந்தியாவிற்கு அவன் முன்னிலையில் குற்றவாளியாய் நிற்பது அவமானமாய் தோன்றியது. அவன் முகத்தை நேரெதிரே பார்க்க தயங்கியவளை, கண்கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆதித்தியா.
அவளின் தயக்கத்தைப் பார்த்து ஆதியே பேசத் தொடங்கினான்.
“பெட்டி படுக்கையோட அம்மா வீட்டுக்கு போன... மேடம் இப்ப எதுக்கு வந்தீங்க? நீ இந்த அறைக்குள்ளே ஒளிஞ்சிட்டு இருக்கிறதை கூடவா கண்டுபிடிக்க மாட்டேன்? உன் வாசனையும்... உன் மெலிதான கொலுசு சத்தம். இதை எல்லாம் தாண்டி அந்த ஆஷ் டிரெ...
சண்முகம் நான் இல்லாத போது என் ரூமுக்குள்ளேயே வர மாட்டான்... அப்போ வேறு யாருனு யோசிச்சா உன்னோட முகம்தான் என் கண் முன்னாடி வந்தது” என்றான், அவள் மீதான பார்வையைக் கண நேரம் கூட அகற்றாமல்.
“தேவையில்லாதது எல்லாம் பேசாதீங்க... நான் மறந்துட்டு போன பொருளை எடுத்துட்டு போக வந்தேன். வெளியிலிருந்து நீங்க கோபமாய் வருவதைப் பார்த்த பிறகு உங்க கண் முன்னாடி வந்தா என்ன நடக்குமோனு பயந்து ஒளிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.
ஆதித்தியா லேசாகச் சிரித்துவிட்டு, “நீ பயந்துட்ட... அதுவும் என்னைப் பாத்து... நான் இதை நம்பணும்”
“நீங்க நம்புங்க நம்பாம போங்க... நான் எடுக்க வேண்டியதை எடுத்துட்டேன்... கிளம்புறேன்” என்று விந்தியா அறையின் வாசலை நெருங்க ஆதித்தியா சந்தேகம் கொண்டவனாய் அவளை வழிமறித்தான்.
“ஏதோ தப்பா இருக்கே... எப்பவும் அலட்சியமா இல்ல கோபமா பார்க்கிற கண்ணில ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே”
“போதும் ஆதி... நிறுத்துங்க... திருட்டுத்தனமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல முயற்சிக்க ஆதியின் நீண்ட கரங்கள் வழிவிடவில்லை.
“வாட்ஸ் யுவர் பிராப்ளம் ஆதி?” என்று கொஞ்சம் விந்தியா அதட்டலாய் கேட்க,
ஆதி ரொம்பவும் இயல்பாய், “திஸ் இஸ் மை பிராப்ளம்” என்று சொல்லி,
ஹேன்ட் பேக்கை அவன் எதிர்பாராமல் இழுத்து பிரித்துப் பார்க்க விந்தியா பதறிக் கொண்டு அவன் கையிலிருந்து பிடுங்கினாள். இந்தச் செயல் ஆதித்தியாவிற்கு மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.
“மேனர்ஸ் தெரியாதா? என்னோட அனுமதி இல்லாம என் ஹேன்ட் பேக்கை எப்படி நீங்க திறக்கலாம்?” என விந்தியா பொறிந்து தள்ளினாள்.
“நீ என்னோட ரூமுக்குள்ள என்னோட அனுமதி இல்லாம வந்தது மேனர்ஸா?”
“ஸ்டாப் இட் ஆதி... நான் என் திங்க்ஸைத்தான் எடுக்க வந்தேன்”
“சரி... அந்த பொருளை காட்டிட்டு போ” என்று சொல்ல விந்தியாவிற்குப் பதட்டம் அதிகரித்தது.
“என்னை நீங்க நம்பமாட்டீங்களா?” என்று விந்தியா கேள்வியால் மடக்க,
“நோ... உன்னை மட்டும் நம்பமாட்டேன்டி... அமுக்கமாய் கேத்ரீன் விஷயம் தெரிஞ்சதை மறைச்சு போலீஸ் அரெஸ்ட் பண்ற வரைக்கும் அமைதியா இருந்தியே” என்று சொல்லியபடியே பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான்.
விந்தியா அவனிடமிருந்து தப்பிக்க ஃபோனை எடுத்து டயல் செய்தாள். ஆதித்தியா அவள் போனை பிடுங்க அதில் சிவா என்ற பெயரை பார்த்ததும் கோபம் கொண்டவனாய் தூக்கி வீசி எறிந்தான்.
“ஹெலோ மிஸ்டர்... என்ன உரிமையில என்னோட ஃபோனை தூக்கி அடிச்சீங்க? “
“நான் உன் புருஷன்... உன்னை கேள்வி கேட்டா பதில் சொல்லு... அதை விட்டுட்டு எவனுக்கோ ஃபோன் போட்டா... டென்ஷன் ஆகாதா? அதான் தூக்கி அடிச்சேன்” என்றதும் விந்தியாவிற்கு உள்ளுக்குள் அவனின் செயலால் மனதிற்குள் பயம் உண்டானது.
அவளுடைய தைரியம் கரைந்து கொண்டே வர தப்பிக்கும் வழியை மட்டுமே அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஆதித்தியாவிற்கு அவளின் பதட்டம் குழப்பமாயிருந்தது. அந்த பேக்கில் என்ன இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க, மீண்டும் அவன் அந்த பேக்கை இழுத்த போது விந்தியாவின் பிடியும் அத்தனை லேசில் இல்லை.
“என்ன... அந்த சிவா உன்கிட்ட ஏதாவது ஆதாரத்தைத் தேடி அனுப்பினானா? மொத்தத்தில் என்னை உள்ள தள்ள இரண்டு பேரும் குறியா இருக்கீங்க”
ஆதித்தியா சொன்னது அப்பட்டமான உண்மை. ஆனால் இந்த ஆதாரம் அவனைக் காப்பாற்றுவதற்கு என்று சொன்னால் நம்புவானா?
இப்படி அவள் சிந்தித்துக் கொண்டிருக்க அவள் அசந்த நேரம் பார்த்து பேக்கை உருவிக்கொள்ள, விந்தியா விட்டுகொடுக்காமல் அந்த பேக் இருவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு தவித்தது.
இந்தப் போராட்டத்துக்கு இடையில் ஆதித்தியாவின் கையிலிருந்த சிகரெட் துண்டு விந்தியாவின் கைகளில் பட்டு விட, “அம்மா...” என்று அவள் கைகளை உதற…
ஆதித்தியா அவன் கையில் சிக்கி கொண்ட பேக்கை ஒரு பொருட்டாய் மதிக்காமல் தூக்கி வீசி விட்டு சிகரெட் துண்டை காலில் போட்டு மிதித்தான்.
“சாரி... சாரி... சாரி... தெரியாம நடந்து போச்சு” என்று அவள் கையில் சூடுபட்ட இடத்தைத் தடவியவன்,
“வெய்ட்... ஐஸ்... எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி தன் அறையினுள் இருந்த சின்னக் குளிர்சாதனப்பெட்டியை நாடிப் போனான்.
இதுதான் சமயம் என விந்தியா பேக்கை சத்தமின்றி எடுத்துக் கொண்டு கதவை நெருங்க, ஆதித்தியாவின் கண்கள் அவளைப் பார்த்த நொடியில் அவன் மூளையும் கை, கால்களும் அதிவேகமாய்ச் செயல்பட்டன.
சுவற்றில் மாட்டியிருந்த சாவியை எடுத்துக் கொண்டு பின்புறமாய் விந்தியாவை அணைத்து இழுத்தபடி பிடித்துக்கொண்டு மறு கையினால் கதவை அடைத்து பூட்டினான்.
அவனின் ஒரு கையை விலக்கி விடவே விந்தியாவிற்குக் கடினமாயிருந்தது. உண்மையிலேயே பார்க்கும் போது தெரியாத அவனின் கம்பீரம் அவன் பிடிக்குள் சிக்குண்ட போது மிரட்டியது.
பூட்டிய கணத்தில் அவன் கையின் இறுக்கம் விலக அத்தனை நேர தவிப்பினால் ஏற்பட்ட கோபம் அவள் அவன் மீது கை ஓங்கி கொண்டு அடிக்கப் போனாள். ஆதித்தியா அவளின் செயலை எதிர்பார்த்தவன் போல் நிற்க ஓங்கிய கைக்கு அடிக்க மனமில்லாமல் இறங்கிப் போனது.
“ஏன் நிறுத்திட்ட... அடிடீ என் கலியுக கண்ணகி” என்றான்.
விந்தியா அவனிடம் போராட சக்தியில்லாமல் தரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக் கொள்ள அவளின் இயலாமை அவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. ஆனால் அவளைப் போகட்டும் என்று அனுப்பவும் மனசு வரவில்லை. எத்தனை முறை அவனை வேதனையுற பார்த்திருப்பாள்.
இம்முறை அனுபவிக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டே மீண்டும் ஐஸ்ஸை எடுத்துக் கொண்டு வந்து அவளருகில் தரையிலேயே உட்கார்ந்தான்.
அவன் மீதுள்ள கோபத்தில் வேண்டாமென தள்ள ஆதித்தியா கோபமாய் பார்த்த பார்வையில் அவனிடம் காயம்பட்ட கையினைக் காண்பித்தாள்.
“உன்னைப் பார்த்ததுமே நீ திரும்பியும் என்னை பார்க்கத்தான் வந்திருக்கியோனு நினைச்சேன்... ஆனா என்னை ஏமாத்திறதுல உனக்கு அப்படி ஒரு சந்தோஷம் இல்ல?”
ஆதித்தியா அவளைப் பார்த்துக் கொண்டே காயத்தின் மீது ஐஸ் தடவ அது கரைந்து கொண்டே போனது. ஆனால் விந்தியாவின் மனம் துளி கூடக் கரையவில்லை.
“என்னைப் போக விடுவீங்களா, மாட்டீங்களா ஆதி?” என்று கண்களில் நிரம்பிய கோபத்தோடு அவனைப் பார்த்தாள்.
“சரி போ” என்று எழுந்து நின்று கொண்டு சாவியை நீட்ட அதை வாங்க அவள் எழுந்திருக்கும் போது மீண்டும் சாவியை மறைத்தான்.
“ஆதித்தியா... யூ ஆர் சீட்டிங் மீ”
“நீ கூடத்தான் ஏமாத்திட்டு ஓட பாத்த”
“ஓகே ஃபைன்... இந்த பேக்கில என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்? இந்தாங்க செக் பண்ணிக்கோங்க... இல்ல நீங்களே கூட வைச்சுக்கோங்க... என்னை வெளிய விடுங்க ஆதி” பேக்கை நீட்டினாள்.
ஆதித்தியா கலகலவென சிரித்து விட்டு அந்த பேக்கை விசிறி சோபாவின் மீது எறிந்தான்.
“அந்தப் பேக்குக்காகவா உன்கிட்ட இவ்வளவு நேரம் போராடிட்டிருக்கேன்?”
“தென் வாட் எல்ஸ்... என்கிட்ட வேற எதுவும் இல்ல”
“நீ இருக்கியே மை டார்லிங்”
“அப்படினா?”
“நீதான்டி வேணும்... நீ மட்டும்தான் வேணும்... ஒவ்வொரு முறை நீ எனக்கு ஏற்படுத்தின காயங்களுக்கு மருந்தா வேணும்”
“சந்தர்ப்பத்தை சாதகமா பயன்படுத்திக்கப் பார்க்கிறீங்களா? உங்க கண்ணியத்தை தான் நான் அதிகமா நேசிக்கிறேன்... அதைக் கலங்கப்படுத்தாதீங்க”
“நான் கண்ணியமானவனா? அப்படினு யார் சொன்னது? நான் ஒரு பொறுக்கி... ஒழுக்கம் இல்லாதவன்... கேத்ரீனை அடைய ஆசைப்பட்டு மாடியிலிருந்து விழ காரணமானவன்... காமப் பிசாசு... இன்னும் எத்தனையோ... இப்படித்தான் ஊரே சொல்லுது”
“அப்படி நான் சொல்லலியே... அதை எல்லாம் நான் நம்பவும் மாட்டேன்... எத்தனை ஆயிரம் பேர் பொய் சொன்னாலும், அதைத் தாண்டி ஒரு நாள் உண்மை தெரிய வரும் ஆதி”
“எப்போ... இந்த அவமானத்திற்கு எல்லாம் பிறகா?”
“ஜஸ்ட் லீவ் இட்... யார் நம்பினாலும் நம்பாட்டியும் நான் உங்கள நம்பிறேன் ஆதித்தியா “
“அதனாலதான் உன்னை நான் ரொம்ப நேசிக்கிறேன்... இந்த உறவு எனக்கு நிலைக்கணும்... டில் மை டெத். அதனால நீ எனக்கு வேணும்”
“நான் உங்கள நம்பினதுக்கு, இது எனக்கு நீங்க கொடுக்கிற தண்டனையா?”
“நம்புற... ஆனா புரிஞ்சிக்கவே மாட்டற... சின்னதாய் நடக்கிற சண்டைக்குக் கூட என்னை விட்டு நீ விலகி போயிடுறியா? என்னை நீ நேசிச்சதை விடக் காயப்படுத்தினதுதான்டி அதிகம்”
“ஒத்துக்கிறேன்... உங்களுக்கு வலிக்குமேனு யோசிக்காம நான் உங்கள ரொம்பக் காயப்படுத்திருக்கேன்... நான் இனிமே புரிஞ்சு நடந்துக்கிறேன்... கொஞ்ச நாள் பொறுமையா இருங்க ஆதி. இந்தப் பிரச்சனை எல்லாம் முடியட்டுமே”
“எனக்கு இந்தப் பிரச்சனை முடியும்னு தோணல விந்தியா. நாளைக்கு மரணமே ஆனாலும் இந்த மொமன்ட் நான் உன்னோட வாழணும்...”
“இந்தப் பிரச்சனை முடியாதுன்னு யார் சொன்னது? ஐம் தேர் வித் யூ. நான் இருக்கும் போது உங்களுக்கு எதுவும் வரவிடமாட்டேன்... என்னை நீங்க நம்புங்க ஆதி பிளீஸ்”
“நான் உன்னை நம்பபுறேன்டி... அதே நம்பிக்கையை நீ என் மேல வைக்கமாட்டியா?”
இதற்கு மேல் அவனிடம் என்ன சொல்வது? எப்படிப் புரிய வைப்பது?
“உன் திமிரும் கர்வமும் உன்னை இறங்கி வர விட மாட்டேங்குது... இல்ல?” என்றான் மெளனமாய் இருக்கும் விந்தியாவைப் பார்த்து.
“நான் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ஜடம் மாதிரி வாழ்ந்திட்டிருந்தேன். எனக்கு திரும்பியும் உணர்வுகளைக் கொடுத்ததே நீங்கதான். அதை நீங்களே பறிக்கப் பார்க்கிறீங்களே! வானத்தில் திடீர்னு ஏற்படுற வானவில் மாதிரி தோணணும் ஆதி... புயலுக்கும் மழைக்கும் இடையில் இன்ஸ்டன்ட் வொர்க் அவுட்... புரிஞ்சுக்கோங்க”
“நீ என்னைப் புரிஞ்சிக்கோ. மறுபடியும் மறுபடியும் உன்னைக் கெஞ்சிக்கிட்டு உன் திமிருக்கு முன்னாடி என்னால தலைவணங்கி போக முடியாது. ஆம்பளன்ற அந்த ஈகோவை நீ சீண்டி பார்க்கிற... இதான் பைஃனல்” என்று சொல்லிவிட்டு ஒரு பூமாலை தாங்குவது போல் தூக்கி கொண்டான்.
அவன் படுக்கையின் மீது அவளைப் படுக்க வைக்கும் போது விந்தியாவின் கண்களில் நீர் வழிந்தது.
“என்கிட்ட நீங்க சம்மதம் கேட்கல... உங்க விருப்பத்தை என் மேல திணிக்கிறீங்க”
“ஆமாம்... எனக்கு வேற வழி தெரியல. இப்ப கூட என்னைத் தடுக்கவும் உதறித் தள்ளவும் உன்னால முடியும்... உனக்கு அந்த கட்ஸூம் திமிரும் இருக்கு. ஆனா என்னை நீ தடுக்கல... இந்த லவ் போதும்... எவ்ரித்திங் வில் வொர்க் அவுட்”
அதற்கு மேல் அவர்களுக்கு இடையில் எந்த வித வாக்குவாதமும் நடக்கவில்லை. அதற்கான வாய்ப்பை ஆதித்தியா விந்தியாவிற்கு தரவும் இல்லை.
கடந்து போகும் ஒவ்வொரு கணமும் அவள் காதல் கரைந்து கொண்டே போனது. அவள் பார்த்து பார்த்து ரசித்த அவனின் கண்ணியம் கலங்கப்பட்டது. அவள் இத்தனை காலமாய் தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் ஒரே நாளில் மடையை உடைத்து பெருக்கெடுத்த வெள்ளமாய் வற்றிப் போனது.
உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் மீதான உரிமை என அவன் நினைத்தது... அந்த அழகான உறவையே சிதைக்கப் போகிறது.
வானிலிருந்து வீழ்ந்த மழைத்துளி சேற்றில் கலப்பது போல ஆதித்தியா விந்தியாவின் மனதில் தரம் தாழ்ந்து போனான்.