மோனிஷா நாவல்கள்
Iru thruvangal - Episode 9

Quote from monisha on June 29, 2025, 6:34 PM9
பார்க்காமலே...
விந்தியாவின் தலையில் எண்ணெய்யை தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் மாதவி.
“தலைமுடியெல்லாம் மெலிஞ்சு போச்சு... இப்படியே போனால் அப்புறம் அவ்வளவுதான்” என்று மாதவி மகளை அக்கறையோடு கடிந்து கொண்டாள்.
“அம்மா வலிக்குது... என் பிடி உன் கையில மாட்டிக்கிச்சுனு ஒரு வழி பண்ணாதே” என்று வலியால் விந்தியா கத்தினாள்.
“உனக்கு ஒரு கல்யாணம் பண்ற வரைக்கும் உன்னோட பிடி என் கையிலதான்”
“இப்ப அதெல்லாம் முடியாது” என்று அழுத்தமாய் சொன்னாள் விந்தியா.
“இப்பவே இருபத்தியெட்டு வயசாச்சு... இப்ப கல்யாணம் செய்யாம கிழவி ஆனப் பிறகு செஞ்சிப்பியா?” என்றாள் மாதவி.
“போதும் நிறுத்தும்மா” என்று சொல்லிக் கொண்டே ஈர முடியை துணியில் கட்டினாள் விந்தியா.
அவள் தன் முகத்தைக் கண்ணாடியில் உற்றுப் பார்த்தாள்.
“அப்படியா வயசாகிட்ட மாதிரி தெரியுது? அப்படி ஒண்ணும் தெரியலயே... அம்மா ஏதாச்சும் சொல்லட்டும்... விந்துமா நீ அழுகுதான்!” என்று தன் முகத்தைத் தானே ரசித்துக் கொண்டாள் நம் கதை நாயகி.
விந்தியா உடையை மாற்றிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
சோபாவில் அமர்ந்தபடி வருண் தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“அம்மா... எனக்கும் தோசை“ என்று விந்தியா கத்தினாள்.
“நீயே செஞ்சுக்கோ... நான் வேலையா இருக்கேன்”
“லேட்டாகுதும்மா... எனக்கும் தோசைக்கும் ஏழாம் பொருத்தம்... உனக்குத் தெரியாதா?” என்றாள் விந்தியா.
“ஒன்னும் தெரியல... ஆனா வாய் மட்டும் பாரு” என்று திட்டியபடி தோசை எடுத்து வந்து வைத்தாள் மாதவி. விந்தியா வருணை அருகில் அழைத்து,
“உனக்குத் தோசை சுடத் தெரியுமா?” என்று கேட்க அவன் ‘இல்லை' என்பது போல் தோள்களைக் குலுக்கினான்.
“அப்புறம்... ஏன் நான் மட்டும்?” என்று விந்தியா அலுத்துக் கொண்டாள்.
“நீ பேசாம. வீட்டிலிருந்து வீட்டு வேலைகளைச் செய்யக் கத்துக்கோ” என்று சமையலறையில் இருந்தபடி மாதவியின் குரல் கேட்டது.
விந்தியா உடனே கோபத்தில், “நிச்சயமா முடியாதும்மா. ஐம் சாரி... உனக்கு முடியலன்னா வேலைக்கு ஆள் வைச்சுக்கோ... என்னைப் போட்டு படுத்தாதே” என்றாள்.
உடனே சமையலறையில் இருந்து கரண்டி பறந்து வந்தது. அலறியபடி எழுந்து கொண்டான் வருண்.
“யம்மா... அடிக்கிறதுன்னா குறிபார்த்து அடி” என்றான்.
“நல்லா வேணும்டா உனக்கு” என்று கலகவெனச் சிரித்து விட்டு விந்தியா, இதற்கு மேல் இங்கே இருந்தால் மாதவியின் கோபம் அதிகரிக்கும் என்பதால் அவசரமாகத் தன் பேகை எடுத்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
விந்தியா வெளியே கிளம்பியதை பார்த்த மாதவி வருணை அருகில் அழைத்தாள்.
“டே... அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கிற விஷயமா சொன்னனே... என்னாச்சு?” என்று கேட்டாள் மாதவி.
“அக்கா ஃபோட்டோ டீடைல்ஸ் எல்லாம் மேட்ரிமோனியில் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்”
இப்படி வருண் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவனும் வேலைக்குப் புறப்பட்டான். வாசலில் விந்தியா சுவற்றில் சாய்ந்தபடி வருணை முறைத்தபடி நின்றாள்.
“யாரை கேட்டு மேட்ரிமோனியில என் ஃபோட்டோ கொடுத்த?” என்று கோபமாய்க் கேட்டாள்.
“அம்மாதான் கா...” என்றான் வருண் திணறியபடி.
“அப்படியா! இருடா... இரு. உன்னோட லவ் ஸ்டோரிய அம்மாக்கிட்ட வத்தி வைக்கிறேன்” என்று மிரட்டினாள்.
“அக்கா ப்ளீஸ்...” என்று அவன் கெஞ்சுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் புறப்பட்டாள்.
விந்தியாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது அத்தனை சுலபமாக இல்லை.
விந்தியாவின் வயது, உயரம், படிப்பு என்று எல்லாமே கொஞ்சம் அதிகம்தான். இவை எல்லாம் தப்பித்தவறி பொருந்தி வந்தாலும் அம்மாவுக்கு ஜாதகம் வேறு பொருந்த வேண்டும்.
கடைசியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்தத் தேடலுக்குப் பலன் கிடைத்தது. ஆனால் பெண் பார்க்க வருவதாக விந்தியாவிடம் சொல்ல வருண் பயந்து நடுங்கி கொண்டிருந்தான்.
விந்தியா அன்று இரவு அவள் அறையில் இருந்த கிருஷ்ண குமார் என்பவனின் ஃபோட்டோவை பார்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா... மாப்பிள்ளை லண்டனில் டாக்டர்” என்றான் வருண்.
இதைக் கேட்டதும் விந்தியாவின் கோபம் பன்மடங்கானது.
“என்னை ஊரு விட்டு ஊரு இல்ல... கண்டம் விட்டு கண்டம் துரத்த பிளான் போட்டிருக்கியா?” என்று சொல்லி வருணை துவைத்தெடுத்தாள்.
“நாளைக்குப் பொண்ணு பாக்க வர்றாங்க... அதனால சீக்கிரம் வந்துரு”
“நாளைக்கு எனக்கு வேலை இருக்கும்மா”
“அப்படின்னா நீ பேசாம வேலையை விட்டிடு விந்து”
விந்தியா அதிர்ச்சியானாள்.
“என்னம்மா... இதுக்கெல்லாம் போய்?”
“அப்போ சீக்கிரம் வா...”
“சரி... ஓகே. நான் சீக்கிரம் வர முயற்சி செய்றேன்”
“சீக்கிரம் வந்தே ஆகணும் விந்து” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு மாதவி அமைதியானாள். விந்தியாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
ஹோட்டல் ஆதித்தியா.
எம். டி அறையில் சந்திரகாந்த் கேமராவில் தெரிந்த காட்சியைக் கவனித்துவிட்டு தரைதளத்தில் நடந்து கொண்டிருந்த கலவரத்தை பற்றி விசாரித்தார். ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்டிருந்த ஐம்பதாயிரம் மதிப்புள்ள பெல்ஜியம் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதும் சந்திரகாந்த அதிர்ச்சியானார்.
“என்ன ரமேஷ்... இவ்வளவு ஈஸி யா சொல்றீங்க... எப்படி?”
“கஸ்டமர் அந்த மிரர் பக்கத்தில் நின்னு செல்ஃபி எடுக்க ட்ரை பண்ணி மிரர் மேலயே சாய்ந்திட்டார். அப்படியே ஸ்க்ராட்ச் விழுந்துடுச்சு...”
“கேர்லெஸ்னஸ்...” என்று சொல்லியபடி மீண்டும் கேமராவின் காட்சியில் தெரிந்த முகத்தைக் கவனித்தார். ஏதோ ஞாபகம் வந்தவராய், “அவங்க எல்லாரையும் என்னோட ரூமுக்கு அழைச்சிட்டு வாங்க” என்று சந்திரகாந்த் சொன்னதும் ரமேஷ் ஒன்றும் புரியாமல் ரெஸ்டாரண்டுக்கு செய்தி அனுப்பினான்.
விந்தியா நண்பர்களோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். சந்திரகாந்த்தை பார்த்ததும் சட்டென்று அவரை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
“சார் நீங்களா... நான் உங்கள இங்க எதிர்பார்க்கவேயில்லை”
“நானும்தான் விந்தியா” என்றார்.
“கிட்டதட்ட நாம சந்திச்சு நாலு மாசம் இருக்குமே சார்... இருந்தும் என் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கே!” என்று கேட்டாள் ஆச்சரியமாக.
“மறக்கக் கூடிய உதவியா அது?”
இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மேனேஜர் ரமேஷும், விந்தியாவின் நண்பர்களும் அதிசயத்தபடி பார்த்து கொண்டிருந்தனர். ரவி மட்டும் ஏதோ புரிந்தவனாக விந்தியாவிடம் மெலிதாகக் கூறினான்.
“அவரை உனக்குத் தெரியும்னா... நம்ம பிரச்சனைய சொல்லி ஏதாச்சும் கன்ஸஷன் கேளும்மா”
விந்தியா உடனே அவனைத் திரும்பி ஒரு முறைமுறைத்தாள். இதைக் கவனித்த சந்திரகாந்த், “டோன்ட் ஒரி... நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ரமேஷிடம் திரும்பி, “எந்தவிதமான டேமேஜுக்கும் சார்ஜு செய்ய வேண்டாம்” என உரைத்தார்.
“நாங்க எல்லோரும் ஆபிஸிலிருந்து டீம் லஞ்சுக்கு வந்தோம். துரதிஷ்டவசமா இப்படி நடந்து போச்சு... சாரி உங்களுக்குத் தேவையில்லாத நஷ்டத்தை ஏற்படுத்திட்டோம்” என்று வருத்தமுற்றாள் விந்தியா.
“நோ பிராப்ளம்” என்றார் சந்திரகாந்த்.
கடைசியில் விந்தியாவும் அவள் நண்பர்களும் சந்திரகாந்திடம் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
“ரவி ... இனிமே நீ செல்ஃபி எடுத்த... அவ்வளவுதான்” என்றான் நண்பர்களில் ஒருவன்.
சந்திரகாந்த் ஏதோ நினைவு வந்தவராக விந்தியாவை மீண்டும் அழைத்து அவளின் கைகளில் ஒரு அழைப்பிதழை கொடுத்தார்.
“என் சன்னோட என்கேஜ்மென்ட்... நீயும் உன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் கண்டிப்பா வரணும்” என்றார்.
விந்தியா அதனைப் பெற்றுக்கொண்டு கண்டிப்பாக வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினாள். அவள் நண்பர்கள் எல்லோரும் கொஞ்ச தூரத்தில் நடந்து சென்று கொண்டிருக்க அவள் மட்டும் தனியே வந்தாள்.
அவளுடைய கைப்பேசியிலிருந்து வந்த அழைப்பில் வருண், மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதாகவும், ‘அம்மா நீ எப்போ வருவேன்னு கவலையாக இருப்பதாக’ சொல்லவும் விந்தியா பதட்டமடைந்தாள்.
‘மறந்திட்டேனே’ என்று எண்ணிக் கொண்டே நடந்தவள், எதிரே வந்த ஆடவனைக் கவனிக்காமல் அவன் மீது மோதினாள். அந்த ஆடவனும் ஏதோ ஒரு நினைப்பில் அவளைக் கவனிக்காமல் நடந்து வந்து வலது தோள்களில் இடிப்பட்டு சுதாரித்துக் கொண்டான்.
கீழே தவற விட்ட இன்விட்டேஷனை கைகளில் எடுத்துக் கொண்டு, அவனைப் பார்க்காமலே “சாரி” என்றாள் விந்தியா.
“இட்ஸ் ஓகே பேபி!” என்று சொல்லிவிட்டு அவளைக் கவனியாமல் மின்னலாய் மறைந்தான் அந்த ஆடவன்.
அவன் பதில் சொன்ன விதம் விந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அவன் வெகு தூரம் சென்றுவிட அவள் மீண்டும் பரபரப்போடு நடக்கத் தொடங்கினாள்.
மின்னலெனக் கடந்து சென்றவனை விந்தியா மட்டுமல்ல நம் வாசகர்களும் கண்டிருக்க முடியாது. ஆனால் அவன்தான் ஆதித்தியா என்று கணித்திருப்பீர்கள்.
நம் கதையின் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்க இம்முறை விந்தியாவை விட்டுவிட்டு நாம் ஆதித்தியாவை பின்தொடர்வோம்.
பார்க்காமலே நிகழ்ந்து விட்ட இந்தச் சந்திப்பை நாம் விதியிடமே விட்டு விடுவோம்.
9
பார்க்காமலே...
விந்தியாவின் தலையில் எண்ணெய்யை தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் மாதவி.
“தலைமுடியெல்லாம் மெலிஞ்சு போச்சு... இப்படியே போனால் அப்புறம் அவ்வளவுதான்” என்று மாதவி மகளை அக்கறையோடு கடிந்து கொண்டாள்.
“அம்மா வலிக்குது... என் பிடி உன் கையில மாட்டிக்கிச்சுனு ஒரு வழி பண்ணாதே” என்று வலியால் விந்தியா கத்தினாள்.
“உனக்கு ஒரு கல்யாணம் பண்ற வரைக்கும் உன்னோட பிடி என் கையிலதான்”
“இப்ப அதெல்லாம் முடியாது” என்று அழுத்தமாய் சொன்னாள் விந்தியா.
“இப்பவே இருபத்தியெட்டு வயசாச்சு... இப்ப கல்யாணம் செய்யாம கிழவி ஆனப் பிறகு செஞ்சிப்பியா?” என்றாள் மாதவி.
“போதும் நிறுத்தும்மா” என்று சொல்லிக் கொண்டே ஈர முடியை துணியில் கட்டினாள் விந்தியா.
அவள் தன் முகத்தைக் கண்ணாடியில் உற்றுப் பார்த்தாள்.
“அப்படியா வயசாகிட்ட மாதிரி தெரியுது? அப்படி ஒண்ணும் தெரியலயே... அம்மா ஏதாச்சும் சொல்லட்டும்... விந்துமா நீ அழுகுதான்!” என்று தன் முகத்தைத் தானே ரசித்துக் கொண்டாள் நம் கதை நாயகி.
விந்தியா உடையை மாற்றிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
சோபாவில் அமர்ந்தபடி வருண் தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“அம்மா... எனக்கும் தோசை“ என்று விந்தியா கத்தினாள்.
“நீயே செஞ்சுக்கோ... நான் வேலையா இருக்கேன்”
“லேட்டாகுதும்மா... எனக்கும் தோசைக்கும் ஏழாம் பொருத்தம்... உனக்குத் தெரியாதா?” என்றாள் விந்தியா.
“ஒன்னும் தெரியல... ஆனா வாய் மட்டும் பாரு” என்று திட்டியபடி தோசை எடுத்து வந்து வைத்தாள் மாதவி. விந்தியா வருணை அருகில் அழைத்து,
“உனக்குத் தோசை சுடத் தெரியுமா?” என்று கேட்க அவன் ‘இல்லை' என்பது போல் தோள்களைக் குலுக்கினான்.
“அப்புறம்... ஏன் நான் மட்டும்?” என்று விந்தியா அலுத்துக் கொண்டாள்.
“நீ பேசாம. வீட்டிலிருந்து வீட்டு வேலைகளைச் செய்யக் கத்துக்கோ” என்று சமையலறையில் இருந்தபடி மாதவியின் குரல் கேட்டது.
விந்தியா உடனே கோபத்தில், “நிச்சயமா முடியாதும்மா. ஐம் சாரி... உனக்கு முடியலன்னா வேலைக்கு ஆள் வைச்சுக்கோ... என்னைப் போட்டு படுத்தாதே” என்றாள்.
உடனே சமையலறையில் இருந்து கரண்டி பறந்து வந்தது. அலறியபடி எழுந்து கொண்டான் வருண்.
“யம்மா... அடிக்கிறதுன்னா குறிபார்த்து அடி” என்றான்.
“நல்லா வேணும்டா உனக்கு” என்று கலகவெனச் சிரித்து விட்டு விந்தியா, இதற்கு மேல் இங்கே இருந்தால் மாதவியின் கோபம் அதிகரிக்கும் என்பதால் அவசரமாகத் தன் பேகை எடுத்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
விந்தியா வெளியே கிளம்பியதை பார்த்த மாதவி வருணை அருகில் அழைத்தாள்.
“டே... அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கிற விஷயமா சொன்னனே... என்னாச்சு?” என்று கேட்டாள் மாதவி.
“அக்கா ஃபோட்டோ டீடைல்ஸ் எல்லாம் மேட்ரிமோனியில் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்”
இப்படி வருண் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவனும் வேலைக்குப் புறப்பட்டான். வாசலில் விந்தியா சுவற்றில் சாய்ந்தபடி வருணை முறைத்தபடி நின்றாள்.
“யாரை கேட்டு மேட்ரிமோனியில என் ஃபோட்டோ கொடுத்த?” என்று கோபமாய்க் கேட்டாள்.
“அம்மாதான் கா...” என்றான் வருண் திணறியபடி.
“அப்படியா! இருடா... இரு. உன்னோட லவ் ஸ்டோரிய அம்மாக்கிட்ட வத்தி வைக்கிறேன்” என்று மிரட்டினாள்.
“அக்கா ப்ளீஸ்...” என்று அவன் கெஞ்சுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் புறப்பட்டாள்.
விந்தியாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது அத்தனை சுலபமாக இல்லை.
விந்தியாவின் வயது, உயரம், படிப்பு என்று எல்லாமே கொஞ்சம் அதிகம்தான். இவை எல்லாம் தப்பித்தவறி பொருந்தி வந்தாலும் அம்மாவுக்கு ஜாதகம் வேறு பொருந்த வேண்டும்.
கடைசியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்தத் தேடலுக்குப் பலன் கிடைத்தது. ஆனால் பெண் பார்க்க வருவதாக விந்தியாவிடம் சொல்ல வருண் பயந்து நடுங்கி கொண்டிருந்தான்.
விந்தியா அன்று இரவு அவள் அறையில் இருந்த கிருஷ்ண குமார் என்பவனின் ஃபோட்டோவை பார்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா... மாப்பிள்ளை லண்டனில் டாக்டர்” என்றான் வருண்.
இதைக் கேட்டதும் விந்தியாவின் கோபம் பன்மடங்கானது.
“என்னை ஊரு விட்டு ஊரு இல்ல... கண்டம் விட்டு கண்டம் துரத்த பிளான் போட்டிருக்கியா?” என்று சொல்லி வருணை துவைத்தெடுத்தாள்.
“நாளைக்குப் பொண்ணு பாக்க வர்றாங்க... அதனால சீக்கிரம் வந்துரு”
“நாளைக்கு எனக்கு வேலை இருக்கும்மா”
“அப்படின்னா நீ பேசாம வேலையை விட்டிடு விந்து”
விந்தியா அதிர்ச்சியானாள்.
“என்னம்மா... இதுக்கெல்லாம் போய்?”
“அப்போ சீக்கிரம் வா...”
“சரி... ஓகே. நான் சீக்கிரம் வர முயற்சி செய்றேன்”
“சீக்கிரம் வந்தே ஆகணும் விந்து” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு மாதவி அமைதியானாள். விந்தியாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
ஹோட்டல் ஆதித்தியா.
எம். டி அறையில் சந்திரகாந்த் கேமராவில் தெரிந்த காட்சியைக் கவனித்துவிட்டு தரைதளத்தில் நடந்து கொண்டிருந்த கலவரத்தை பற்றி விசாரித்தார். ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்டிருந்த ஐம்பதாயிரம் மதிப்புள்ள பெல்ஜியம் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதும் சந்திரகாந்த அதிர்ச்சியானார்.
“என்ன ரமேஷ்... இவ்வளவு ஈஸி யா சொல்றீங்க... எப்படி?”
“கஸ்டமர் அந்த மிரர் பக்கத்தில் நின்னு செல்ஃபி எடுக்க ட்ரை பண்ணி மிரர் மேலயே சாய்ந்திட்டார். அப்படியே ஸ்க்ராட்ச் விழுந்துடுச்சு...”
“கேர்லெஸ்னஸ்...” என்று சொல்லியபடி மீண்டும் கேமராவின் காட்சியில் தெரிந்த முகத்தைக் கவனித்தார். ஏதோ ஞாபகம் வந்தவராய், “அவங்க எல்லாரையும் என்னோட ரூமுக்கு அழைச்சிட்டு வாங்க” என்று சந்திரகாந்த் சொன்னதும் ரமேஷ் ஒன்றும் புரியாமல் ரெஸ்டாரண்டுக்கு செய்தி அனுப்பினான்.
விந்தியா நண்பர்களோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். சந்திரகாந்த்தை பார்த்ததும் சட்டென்று அவரை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
“சார் நீங்களா... நான் உங்கள இங்க எதிர்பார்க்கவேயில்லை”
“நானும்தான் விந்தியா” என்றார்.
“கிட்டதட்ட நாம சந்திச்சு நாலு மாசம் இருக்குமே சார்... இருந்தும் என் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கே!” என்று கேட்டாள் ஆச்சரியமாக.
“மறக்கக் கூடிய உதவியா அது?”
இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மேனேஜர் ரமேஷும், விந்தியாவின் நண்பர்களும் அதிசயத்தபடி பார்த்து கொண்டிருந்தனர். ரவி மட்டும் ஏதோ புரிந்தவனாக விந்தியாவிடம் மெலிதாகக் கூறினான்.
“அவரை உனக்குத் தெரியும்னா... நம்ம பிரச்சனைய சொல்லி ஏதாச்சும் கன்ஸஷன் கேளும்மா”
விந்தியா உடனே அவனைத் திரும்பி ஒரு முறைமுறைத்தாள். இதைக் கவனித்த சந்திரகாந்த், “டோன்ட் ஒரி... நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ரமேஷிடம் திரும்பி, “எந்தவிதமான டேமேஜுக்கும் சார்ஜு செய்ய வேண்டாம்” என உரைத்தார்.
“நாங்க எல்லோரும் ஆபிஸிலிருந்து டீம் லஞ்சுக்கு வந்தோம். துரதிஷ்டவசமா இப்படி நடந்து போச்சு... சாரி உங்களுக்குத் தேவையில்லாத நஷ்டத்தை ஏற்படுத்திட்டோம்” என்று வருத்தமுற்றாள் விந்தியா.
“நோ பிராப்ளம்” என்றார் சந்திரகாந்த்.
கடைசியில் விந்தியாவும் அவள் நண்பர்களும் சந்திரகாந்திடம் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
“ரவி ... இனிமே நீ செல்ஃபி எடுத்த... அவ்வளவுதான்” என்றான் நண்பர்களில் ஒருவன்.
சந்திரகாந்த் ஏதோ நினைவு வந்தவராக விந்தியாவை மீண்டும் அழைத்து அவளின் கைகளில் ஒரு அழைப்பிதழை கொடுத்தார்.
“என் சன்னோட என்கேஜ்மென்ட்... நீயும் உன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் கண்டிப்பா வரணும்” என்றார்.
விந்தியா அதனைப் பெற்றுக்கொண்டு கண்டிப்பாக வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினாள். அவள் நண்பர்கள் எல்லோரும் கொஞ்ச தூரத்தில் நடந்து சென்று கொண்டிருக்க அவள் மட்டும் தனியே வந்தாள்.
அவளுடைய கைப்பேசியிலிருந்து வந்த அழைப்பில் வருண், மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதாகவும், ‘அம்மா நீ எப்போ வருவேன்னு கவலையாக இருப்பதாக’ சொல்லவும் விந்தியா பதட்டமடைந்தாள்.
‘மறந்திட்டேனே’ என்று எண்ணிக் கொண்டே நடந்தவள், எதிரே வந்த ஆடவனைக் கவனிக்காமல் அவன் மீது மோதினாள். அந்த ஆடவனும் ஏதோ ஒரு நினைப்பில் அவளைக் கவனிக்காமல் நடந்து வந்து வலது தோள்களில் இடிப்பட்டு சுதாரித்துக் கொண்டான்.
கீழே தவற விட்ட இன்விட்டேஷனை கைகளில் எடுத்துக் கொண்டு, அவனைப் பார்க்காமலே “சாரி” என்றாள் விந்தியா.
“இட்ஸ் ஓகே பேபி!” என்று சொல்லிவிட்டு அவளைக் கவனியாமல் மின்னலாய் மறைந்தான் அந்த ஆடவன்.
அவன் பதில் சொன்ன விதம் விந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அவன் வெகு தூரம் சென்றுவிட அவள் மீண்டும் பரபரப்போடு நடக்கத் தொடங்கினாள்.
மின்னலெனக் கடந்து சென்றவனை விந்தியா மட்டுமல்ல நம் வாசகர்களும் கண்டிருக்க முடியாது. ஆனால் அவன்தான் ஆதித்தியா என்று கணித்திருப்பீர்கள்.
நம் கதையின் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்க இம்முறை விந்தியாவை விட்டுவிட்டு நாம் ஆதித்தியாவை பின்தொடர்வோம்.
பார்க்காமலே நிகழ்ந்து விட்ட இந்தச் சந்திப்பை நாம் விதியிடமே விட்டு விடுவோம்.