மோனிஷா நாவல்கள்
Solladi sivasakthi - Episode 24

Quote from monisha on January 20, 2025, 5:28 PM24
எதிர்பாராத சந்திப்பு
அந்த நீண்ட நெடிய இரயில் பயணம் முடிவுற மூவரும் களைப்போடும் சோர்வோடும் இரயில் நிலைய நடை மேடையில் இறங்கினர். ராம் நம் இரு தோழிகளுக்கும் துணையாய் வந்ததுமில்லாமல் உடனே டாக்ஸி ஒன்றை வரவழைத்து அவர்களைப் பொறுப்போடு கீதாவின் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். ராம் உடன் வந்ததால் அவர்கள் சிரமும் தேடலுமின்றி விரைவாகச் சென்றடைந்தனர்.
கீதா ஆனந்தமாய் நம் இரு தோழிகளை வரவேற்றாள்.
கீதாவின் உடன் கல்லூரியில் இருந்த நெருங்கிய தோழிகள் கூட டெல்லி வரை திருமணத்திற்கு வரத் தயக்கம் காட்டினர். இந்நிலையில் எப்பவுமே முறைத்துக் கொண்டு நின்ற சக்தியும் ஜெயாவும் வந்தது, கீதாவை எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிவசக்தி வந்ததன் நோக்கம் வேறாய் இருந்தாலும் அந்தத் தோழிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாய் அது இருந்தது.
அங்கே தமிழும் ஹிந்தியும் மாறிமாறி ஒலிக்க ஒவ்வொருவரும் வெவ்வாறான பாணியில் வரவேற்றனர். இந்தியாவின் வடதுருவமும் தென்துருவத்தையும் ஒருசேரக் கண்டது போல் அந்தத் திருமண வீடு காட்சியளித்தது. அங்கே ஏற்கனவே கூட்டநெரிசல் அதிகமாய் இருக்க ராம் தனியே ஹோட்டலில் தங்கிக் கொள்வதாகச் சொல்லி விடைபெற்றான்.
ஜெயா கீதாவிடம், “நம்மூர் பையனை எல்லாம் விட்டுவிட்டு சேட்டுப் பையனை எப்படிப் பிடிச்ச?” என்று கேட்டாள்.
“ஆபிஸ் கொலிக்... அப்புறம் நட்பாகி... காதலா மாறிடுச்சு... வீட்டில சம்மதம் வாங்கிறதுக்குள்ள நொந்துட்டேன்... ஜாதி வேறயா இருந்தா கூடப் பரவாயில்லை... ஆனா மொழியும் கலாச்சரமும் வேற வேற இருந்தா ரொம்பச் சிரமம்...
சென்னையில கல்யாணம் வைக்கனும்னு வீட்டில பிடிவாதம் பிடிச்சாங்க... ஆனா அவர் வீட்டில சம்மதிக்க மாட்டேன்னு அடம்... எப்படியோ ஒத்துக்க வைச்சா... எங்க வீட்டு சடங்குக்கு அவர் வீட்டு சடங்குக்கும் நிறைய வித்தியாசம்...
எதைச் செய்றதுன்னு பிரச்சனை... கல்யாண்மனா சந்தோஷமான விஷயம்... ஆனா இங்க ஒவ்வொரு நிமிஷமும் கத்தி மேல நடக்கிற மாதிரி இருக்கு... அப்பப்பா... உங்க இரண்டு பேரையும் பாத்த பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு, ”என்று கீதா தன் நிலைமையைச் சொல்லி பெருமூச்சுவிட்டாள்.
சக்தி லேசான புன்னகையோடு, “காதலிச்சவரை கல்யாணம் செய்வது என்ன சாதாரண விஷயமா? இந்த மாதிரி போராட்டமெல்லாம் சந்திச்சுதான் ஆகனும்” என்றாள்.
“எனக்கு இந்த விஷயத்தில் அனுபவம் இல்லை” என்று ஜெயா உரைத்தாள்.
“அடிப்பாவி... கூடவே ஒருத்தரை கூட்டிட்டு வந்திருக்கிறாரே, அவர் யாருடி ?” என்று சக்தி கேட்க கீதா புரியாமல் பார்த்தாள்.
“அவர் எங்கப்பா பாத்த மாப்பிள்ளை... நான் யாரையும் காதலிக்கல”
“ஒ... காதல் இல்லாமதான் டெல்லி வரைக்கும் அவரை டார்ச்சர் பண்ணிக் கூடவே கூட்டிட்டு வந்தாளான்னு கேளு கீதா” என்று சக்தி உரைக்க,
“ஓ... கதை அப்படிப் போகுது” என்று கீதா சிரித்தாள்.
பிறகு ஜெயாவை அவர்கள் இருவரும் கேலி செய்தே கலங்கடித்தனர்.
பெண்களுக்குத் தோழமை என்பது ரொம்பவும் அழகான உணர்வு. ஆனால் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த பின் அது கனவாகவும் ஞாபகார்த்தமாகவுமே நின்று விடுவது வருத்தத்திற்குரிய விஷயமே.
இரவு வரவேற்பு நிகழ்ச்சி ஆடலும் பாடலுடன் களைக்கட்டியது. நட்சத்திரமாய் மின்னும் புடவை உடுத்தியபடி பெண்கள் அந்த இடத்திலேயே வான்வீதியாய் மாற்றிக் கொண்டிருந்தனர். வடநாட்டுக் கூட்டங்களில் நம்மவர்கள் கொஞ்சம் குறைவுதான். இருப்பினும் தமிழ் பெண்கள் அவர்களுக்கே உரியக் காஞ்சி பட்டில் கம்பீரத்தோடு காட்சியளித்தனர்.
கீதாவும் வடநாட்டு மணப் பெண் சாயலிலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தாள். மாப்பிள்ளைக்கு நிறமும் உயரமும் நிறைவாய் இருந்த போதும் ஆண்மகனுக்கே உரிய மீசை இல்லாமல் குறையாய் தோன்றியது.
இந்தக் கூட்டத்தில் சிவசக்திஅழகான நீல நிற சுடிதாரை உடுத்தியபடி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தாள். அவளின் வசீகர அழகு தனித்தன்மையோடு இருந்தது. அவளின் அழகை ரசிக்கக் கண் கோடி வேண்டும்.
ஆனால் அவள் எதிர்பார்த்த இரு கண்கள் மட்டும் அந்த அற்புத அழகை ரசிக்கவில்லையே என்ற ஏக்கம் சிவசக்தியின் முகத்தில் சோகமாய்ப் படர்ந்திருந்தது. ஜெயாவும் அழகான சிவப்பு வண்ண புடவையில் அம்சமாய் இருக்க ராம் அவள் அழகுக்குப் புகழாரம் சூட்டினான்.
எல்லா ஏற்பாடுகளும் நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருக்க ஜெயாவுக்கு மட்டும் ஒரே ஒரு குறை. அதைச் சிவசக்தியிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்.
“சாப்பாடு சகிக்கல” என்றாள் ஜெயா.
“நம்ம ஊரு சாப்பாடு மாறியே இருக்குமா என்ன? விடு ஜெயா” என்று சக்தி சமாளித்தாள்.
பின்னர்ச் சிவசக்தி ராமின் புறம் திரும்பி “சக்தி அப்பாயின்மென்ட் கொடுத்துட்டாரா?” என்று வினவும் போதே ஏக்கமும் காதலும் அவள் வார்த்தையில் வெளிப்பட்டது.
ஜெயாவும் ராமின் புறம் திரும்பி அவன் பதிலை எதிர்பார்த்தாள்.
“என்னோட நண்பர்... நரேன் எஸ். எஸ் டிரஸ்ட்ல ஒரு மெம்பர்... அவனுக்கு எஸ். எஸ்ஸை நல்லா தெரியுமாம்... நான் அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கான்... கண்டிப்பா அரேஞ்ச் பண்ணிடுவான்” என்றான்.
ஜெயா புன்னகையோடு, “சூப்பர்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ராமை நோக்கி, “நான் உங்ககிட்ட கேட்டது?” என்று வினவினாள்.
ராம் தன் இயல்பான சிரிப்போடு,
“நாளைக்குப் பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் நாம தாஜ் மஹாலை பார்க்கிறோம்... ஒ. கே வா” என்றதும் ஜெயா, “அய்” என்று குழந்தையாக மாறி களிப்படைந்தாள்.
இவர்களின் உரையாடல் தடைப்படும் விதமாய்ச் சிவசக்தியின் கண்களை யாரோ மூடினர். உடனே சக்தி, “யாரு?” என்று அந்தக் கையை விலக்க முயற்சி செய்தாள்.
“கண்டுபிடி சக்தி” என்ற ஒரு ஆணின் குரல் ஒலித்தது. சக்தி ரொம்பவும் தெரிந்த குரல் என்று உணர்ந்தாளே ஒழிய யாரெனக் கண்டறிய முடியாமல், “தெரியலியே ப்ளீஸ்... யாரு” என்று கேள்வி எழுப்பினாள்.
அவன் கையை விலக்கி கொள்ள முயற்சி செய்ய,
“நாம இரண்டு பேரும் சண்டை போட்டதில் நம்ம டிபார்ட்மண்டே ரணகளப்பட்டதே... பிரின்ஸ்ப்பால் மேடம் ரூம்ல போய்த் திட்டு வாங்கனியே... மறந்துட்டியா சக்தி” என்று அவன் உரைத்தவுடன் சக்தி, “விஜய்” என்றாள்.
அவன் கைகளை விலக்கியபடி அவள் முன்னே வந்து நின்றான். கல்லூரியில் பார்த்தது போலவே இருந்தாலும் கொஞ்சம் கம்பீரமும் மிடுக்கும் அவனிடம் கூடியிருந்தது. ஆனால் அவனின் உடையிலும் தோரணையிலும் அதீத ஆடம்பரத்தோடு திமிரும் வெளிப்பட்டது. போதாக் குறைக்கு அவன் குறும்புத்தனமான பார்வையோடு சக்தியை நோக்க, அந்தச் சந்திப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுக்கு அவனைக் கல்லூரியில் இருந்தே சுத்தமாகப் பிடிக்காது. பெண்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் என்பது அவளின் எண்ணம். என்றுமே இருவரும் முறைத்துக் கொண்டே நிற்க இன்று அவன் சம்பந்தமில்லாமல் நெருக்கமாய்ப் பேச, சக்திக்கு அவன் செயல் குழப்பத்தையும் எரிச்சலையும் தோற்றுவித்தது.
“என்ன சக்தி... எப்படி இருக்க?... உனக்கும் எங்க டிபார்ட்மென்டுக்கும்தான் செட்டாகாதே... அப்புறம் எப்படி நீ கீதா மேரேஜ்ல” என்று வினவினான்.
“நானும் கீதாவும் பிரண்ட்ஸாகி ரொம்ப நாளாச்சு... அதுவும் இல்லாம காலேஜ் டேஸ்ல நடந்த சண்டை எல்லாம் பெரிய விஷயமா என்ன?” என்று சக்தி பதிலுரைத்தாள்.
“கரெக்ட்தான்... அப்போ நம்ம பிரச்சனையையும் மறந்துட்டதானே” என்று விஜய் யோசித்தபடி கேட்க,
சக்தி தயங்கி கொண்டு, “ம்ம்ம்” என்று சொல்லி விருப்பமின்றி ஆமாம் எனத் தலையசைத்தாள்.
பின்னர் அவன் ஜெயாவின் புறம் திரும்பி விசாரித்து விட்டு ராமிடமும் அறிமுகமாகி கைக் குலுக்கினான்.
அவன் இயல்பாகவே பேசினாலும் சக்திக்கு ஏனோ அவனை இன்றும் பிடிக்கவில்லை.
“என்ன சக்தி... நீயும் ஜெயா மாதிரி கமிட்டெட்டா?” என்று கேட்க சக்தி அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள். மீண்டும் விஜயே ஏதோ எண்ணியபடி,
“அப்படி எவனாச்சும் கமிட்டாகி இருந்தாலும் உன் திமிரான ஆட்டிடியுட் பார்த்து தெறிச்சு ஓடி இருப்பானே” என்று வேடிக்கையாகச் சொன்னான். அந்த வார்த்தை சக்தியை காயப்படுத்த அவன் புறம் திரும்பி
“விஜய் போதும்... என் பெர்ஸலனை பத்தி கேள்வி கேட்கிறது... கமென்ட் பன்றதெல்லாம் வேண்டாம்” என்று அழுத்தமாக உரைக்க அவன் அவள் கோபத்தை இயல்பாய் எடுத்துக் கொண்டபடி, “ஓ கே” என்று சொல்லி தலையசைத்தான்.
இருந்தும் அவன் கேலியும் கிண்டலான பேச்சை நிறுத்தாமல் சக்தியினை ஏதாவது சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். அவன் சென்ற சில நிமிடத்தில் சக்தி ஜெயாவிடம்,
“போயும் போயும் இவனைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன்” என்று அலுத்துக் கொண்டாள்.
ஜெயா புரியாமல் “ஏன் சக்தி... அவன் ஜாலியாதானே பேசிறான்... நீ ஏன் அவனை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற ?” என்று கேட்டாள்.
“ஜாலியும் இல்ல... ஒரு மண்ணும் இல்ல... இவன் எல்லாம் திருந்தவே மாட்டான் ஜெயா... அவன் வந்து கண்ணை மூடினதும் விஜய்னு சொல்லிருக்கலாம்ல... இடியட்... அவன் பார்வையே சரியில்ல... அவனைக் கண்டாலே பிடிக்கல... இப்ப கூடப் பாரு... அவன் என்னைப் பத்திதான் ஏதோ தப்பா பேசிட்டிருக்கான்” என்று சக்தி சொல்லும் போதே தூரத்தில் நின்று விஜய் பேசிக் கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டினாள்.
“நீ பாட்டுக்கு ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதே... ரிலாக்ஸ்” என்று ஜெயா சொல்ல ஏனோ சக்தியால் அமைதியடைய முடியவில்லை. அவளின் கணிப்பு சரியாகவே இருந்தது.
விஜய் தன் நண்பர்களோடு சக்தியை பற்றிதான் பேசிக் கொண்டிருந்தான். பேசினான் என்று சொல்ல முடியாது. அவளைத் திட்டி கொண்டிருந்தான் என்றே சொல்லலாம்.
“அவளோட திமிரும் தெனாவட்டும் கொஞ்சங் கூடக் குறையல... பெரிய இவன்னு நினைப்பு... ரொம்பச் சீன் போடறா” என்று நண்பர்களிடம் தன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தான்.
அதோடு நிற்காமல் விஜய் மனதிற்குள்,
“அவ்வளவு சீக்கிரம் எப்படி நீ எனக்குச் செஞ்ச அவமானத்தை எல்லாம் மறந்துடுவேன்... எல்லாத்தையும் உனக்குத் திருப்பிக் கொடுக்கிறேன்...” என்று எண்ணிக் கொண்டான்.
இவர்கள் இருவருக்கிடையில் கல்லூரி நாட்களில் உருவான துவேஷமும் கோபமும் கொஞ்சம் கூடக் குறையவில்லை.
வரவேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்று அரங்கத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து கொண்டே வந்தது.
சக்தி தனியே அவள் தோழியை விட்டு யோசனையில் அமர்ந்திருக்க மீண்டும் விஜய் அவளை நெருங்கி வந்து, “சக்தி” என்றழைத்தான்.
“கிளம்பிட்டியா விஜய்... ஒகே பை” என்று அவனை வெட்டி விடுவது போலப் பேசினாள்.
“ஆமாம் கிளம்பிட்டேன்... அப்புறம்... நான் ஏதாச்சும் தப்பா பேசி இருந்தா சாரி” என்று விஜய் சொல்ல சக்தி அவனை நம்பாமல் சந்தேகமாய்ப் பார்த்தபடி,
“இட்ஸ் ஒகே விஜய்...” என்றாள்.
“அப்புறம் நாளைக்கு என்னோட பிறந்த நாள... பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் நீயும் வர்றியா ?” என்று கேட்டான்.
“ஸோ சாரி... எனக்கு நிறைய வொர்க் இருக்கு... எனி வே அட்வான்ஸ் ஹாப்பிப் பர்த்டே விஷ்ஷஸ்” என்று சொல்லிவிட்டு மேலே அவனைப் பேச விடாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
சக்தி அவனை அவ்வாறு தவிர்த்து விட்டுச் செல்ல விஜயின் கோபமும் பழி வாங்கும் எண்ணமும் ரொம்பவும் அதிகமாகவே தூண்டப்பட்டது.
ஹோட்டல் எஸ். எஸ். சக்திசெல்வன் தன்னுடைய அலுவலக அறையில் கம்பீரமாய் அமர்ந்தபடி வேலையில் மும்முரமாக இருந்தான். அவனுடைய செகரட்ரியிடம் சில வேலைகளைக் குறித்து வரிசையாய் பட்டியலிட்டான்.
பின்பு ஏதோ நினைவு வந்தவனாக,
“நரேன் அவரோட பிரண்ட் ராமசாமிங்கிறவருக்காக அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார்... அதை ஓகே பண்ணுங்க... நாளைக்கு நைட் செவனோ க்ளார்க் ஷார்ப் வரச் சொல்லுங்க... ரைட்” என்று சொல்லிவிட்டுத் தம் இருக்கையிலிருந்து எழுந்து புறப்பட்டான்.
நாளை இதே சமயம் இரு சக்திகளும் தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரும். அந்தத் தருணம் சக்தி செல்வனின் என்றென்றும் மறவாத இன்பகரமான பதிவாய் நிலைகொண்டுவிட, சிவசக்திக்கு அது ஏமாற்றத்தோடு கூடிய கனவாய் முடியப்போகிறது.
24
எதிர்பாராத சந்திப்பு
அந்த நீண்ட நெடிய இரயில் பயணம் முடிவுற மூவரும் களைப்போடும் சோர்வோடும் இரயில் நிலைய நடை மேடையில் இறங்கினர். ராம் நம் இரு தோழிகளுக்கும் துணையாய் வந்ததுமில்லாமல் உடனே டாக்ஸி ஒன்றை வரவழைத்து அவர்களைப் பொறுப்போடு கீதாவின் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். ராம் உடன் வந்ததால் அவர்கள் சிரமும் தேடலுமின்றி விரைவாகச் சென்றடைந்தனர்.
கீதா ஆனந்தமாய் நம் இரு தோழிகளை வரவேற்றாள்.
கீதாவின் உடன் கல்லூரியில் இருந்த நெருங்கிய தோழிகள் கூட டெல்லி வரை திருமணத்திற்கு வரத் தயக்கம் காட்டினர். இந்நிலையில் எப்பவுமே முறைத்துக் கொண்டு நின்ற சக்தியும் ஜெயாவும் வந்தது, கீதாவை எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிவசக்தி வந்ததன் நோக்கம் வேறாய் இருந்தாலும் அந்தத் தோழிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாய் அது இருந்தது.
அங்கே தமிழும் ஹிந்தியும் மாறிமாறி ஒலிக்க ஒவ்வொருவரும் வெவ்வாறான பாணியில் வரவேற்றனர். இந்தியாவின் வடதுருவமும் தென்துருவத்தையும் ஒருசேரக் கண்டது போல் அந்தத் திருமண வீடு காட்சியளித்தது. அங்கே ஏற்கனவே கூட்டநெரிசல் அதிகமாய் இருக்க ராம் தனியே ஹோட்டலில் தங்கிக் கொள்வதாகச் சொல்லி விடைபெற்றான்.
ஜெயா கீதாவிடம், “நம்மூர் பையனை எல்லாம் விட்டுவிட்டு சேட்டுப் பையனை எப்படிப் பிடிச்ச?” என்று கேட்டாள்.
“ஆபிஸ் கொலிக்... அப்புறம் நட்பாகி... காதலா மாறிடுச்சு... வீட்டில சம்மதம் வாங்கிறதுக்குள்ள நொந்துட்டேன்... ஜாதி வேறயா இருந்தா கூடப் பரவாயில்லை... ஆனா மொழியும் கலாச்சரமும் வேற வேற இருந்தா ரொம்பச் சிரமம்...
சென்னையில கல்யாணம் வைக்கனும்னு வீட்டில பிடிவாதம் பிடிச்சாங்க... ஆனா அவர் வீட்டில சம்மதிக்க மாட்டேன்னு அடம்... எப்படியோ ஒத்துக்க வைச்சா... எங்க வீட்டு சடங்குக்கு அவர் வீட்டு சடங்குக்கும் நிறைய வித்தியாசம்...
எதைச் செய்றதுன்னு பிரச்சனை... கல்யாண்மனா சந்தோஷமான விஷயம்... ஆனா இங்க ஒவ்வொரு நிமிஷமும் கத்தி மேல நடக்கிற மாதிரி இருக்கு... அப்பப்பா... உங்க இரண்டு பேரையும் பாத்த பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு, ”என்று கீதா தன் நிலைமையைச் சொல்லி பெருமூச்சுவிட்டாள்.
சக்தி லேசான புன்னகையோடு, “காதலிச்சவரை கல்யாணம் செய்வது என்ன சாதாரண விஷயமா? இந்த மாதிரி போராட்டமெல்லாம் சந்திச்சுதான் ஆகனும்” என்றாள்.
“எனக்கு இந்த விஷயத்தில் அனுபவம் இல்லை” என்று ஜெயா உரைத்தாள்.
“அடிப்பாவி... கூடவே ஒருத்தரை கூட்டிட்டு வந்திருக்கிறாரே, அவர் யாருடி ?” என்று சக்தி கேட்க கீதா புரியாமல் பார்த்தாள்.
“அவர் எங்கப்பா பாத்த மாப்பிள்ளை... நான் யாரையும் காதலிக்கல”
“ஒ... காதல் இல்லாமதான் டெல்லி வரைக்கும் அவரை டார்ச்சர் பண்ணிக் கூடவே கூட்டிட்டு வந்தாளான்னு கேளு கீதா” என்று சக்தி உரைக்க,
“ஓ... கதை அப்படிப் போகுது” என்று கீதா சிரித்தாள்.
பிறகு ஜெயாவை அவர்கள் இருவரும் கேலி செய்தே கலங்கடித்தனர்.
பெண்களுக்குத் தோழமை என்பது ரொம்பவும் அழகான உணர்வு. ஆனால் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த பின் அது கனவாகவும் ஞாபகார்த்தமாகவுமே நின்று விடுவது வருத்தத்திற்குரிய விஷயமே.
இரவு வரவேற்பு நிகழ்ச்சி ஆடலும் பாடலுடன் களைக்கட்டியது. நட்சத்திரமாய் மின்னும் புடவை உடுத்தியபடி பெண்கள் அந்த இடத்திலேயே வான்வீதியாய் மாற்றிக் கொண்டிருந்தனர். வடநாட்டுக் கூட்டங்களில் நம்மவர்கள் கொஞ்சம் குறைவுதான். இருப்பினும் தமிழ் பெண்கள் அவர்களுக்கே உரியக் காஞ்சி பட்டில் கம்பீரத்தோடு காட்சியளித்தனர்.
கீதாவும் வடநாட்டு மணப் பெண் சாயலிலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தாள். மாப்பிள்ளைக்கு நிறமும் உயரமும் நிறைவாய் இருந்த போதும் ஆண்மகனுக்கே உரிய மீசை இல்லாமல் குறையாய் தோன்றியது.
இந்தக் கூட்டத்தில் சிவசக்திஅழகான நீல நிற சுடிதாரை உடுத்தியபடி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தாள். அவளின் வசீகர அழகு தனித்தன்மையோடு இருந்தது. அவளின் அழகை ரசிக்கக் கண் கோடி வேண்டும்.
ஆனால் அவள் எதிர்பார்த்த இரு கண்கள் மட்டும் அந்த அற்புத அழகை ரசிக்கவில்லையே என்ற ஏக்கம் சிவசக்தியின் முகத்தில் சோகமாய்ப் படர்ந்திருந்தது. ஜெயாவும் அழகான சிவப்பு வண்ண புடவையில் அம்சமாய் இருக்க ராம் அவள் அழகுக்குப் புகழாரம் சூட்டினான்.
எல்லா ஏற்பாடுகளும் நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருக்க ஜெயாவுக்கு மட்டும் ஒரே ஒரு குறை. அதைச் சிவசக்தியிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்.
“சாப்பாடு சகிக்கல” என்றாள் ஜெயா.
“நம்ம ஊரு சாப்பாடு மாறியே இருக்குமா என்ன? விடு ஜெயா” என்று சக்தி சமாளித்தாள்.
பின்னர்ச் சிவசக்தி ராமின் புறம் திரும்பி “சக்தி அப்பாயின்மென்ட் கொடுத்துட்டாரா?” என்று வினவும் போதே ஏக்கமும் காதலும் அவள் வார்த்தையில் வெளிப்பட்டது.
ஜெயாவும் ராமின் புறம் திரும்பி அவன் பதிலை எதிர்பார்த்தாள்.
“என்னோட நண்பர்... நரேன் எஸ். எஸ் டிரஸ்ட்ல ஒரு மெம்பர்... அவனுக்கு எஸ். எஸ்ஸை நல்லா தெரியுமாம்... நான் அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கான்... கண்டிப்பா அரேஞ்ச் பண்ணிடுவான்” என்றான்.
ஜெயா புன்னகையோடு, “சூப்பர்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ராமை நோக்கி, “நான் உங்ககிட்ட கேட்டது?” என்று வினவினாள்.
ராம் தன் இயல்பான சிரிப்போடு,
“நாளைக்குப் பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் நாம தாஜ் மஹாலை பார்க்கிறோம்... ஒ. கே வா” என்றதும் ஜெயா, “அய்” என்று குழந்தையாக மாறி களிப்படைந்தாள்.
இவர்களின் உரையாடல் தடைப்படும் விதமாய்ச் சிவசக்தியின் கண்களை யாரோ மூடினர். உடனே சக்தி, “யாரு?” என்று அந்தக் கையை விலக்க முயற்சி செய்தாள்.
“கண்டுபிடி சக்தி” என்ற ஒரு ஆணின் குரல் ஒலித்தது. சக்தி ரொம்பவும் தெரிந்த குரல் என்று உணர்ந்தாளே ஒழிய யாரெனக் கண்டறிய முடியாமல், “தெரியலியே ப்ளீஸ்... யாரு” என்று கேள்வி எழுப்பினாள்.
அவன் கையை விலக்கி கொள்ள முயற்சி செய்ய,
“நாம இரண்டு பேரும் சண்டை போட்டதில் நம்ம டிபார்ட்மண்டே ரணகளப்பட்டதே... பிரின்ஸ்ப்பால் மேடம் ரூம்ல போய்த் திட்டு வாங்கனியே... மறந்துட்டியா சக்தி” என்று அவன் உரைத்தவுடன் சக்தி, “விஜய்” என்றாள்.
அவன் கைகளை விலக்கியபடி அவள் முன்னே வந்து நின்றான். கல்லூரியில் பார்த்தது போலவே இருந்தாலும் கொஞ்சம் கம்பீரமும் மிடுக்கும் அவனிடம் கூடியிருந்தது. ஆனால் அவனின் உடையிலும் தோரணையிலும் அதீத ஆடம்பரத்தோடு திமிரும் வெளிப்பட்டது. போதாக் குறைக்கு அவன் குறும்புத்தனமான பார்வையோடு சக்தியை நோக்க, அந்தச் சந்திப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுக்கு அவனைக் கல்லூரியில் இருந்தே சுத்தமாகப் பிடிக்காது. பெண்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் என்பது அவளின் எண்ணம். என்றுமே இருவரும் முறைத்துக் கொண்டே நிற்க இன்று அவன் சம்பந்தமில்லாமல் நெருக்கமாய்ப் பேச, சக்திக்கு அவன் செயல் குழப்பத்தையும் எரிச்சலையும் தோற்றுவித்தது.
“என்ன சக்தி... எப்படி இருக்க?... உனக்கும் எங்க டிபார்ட்மென்டுக்கும்தான் செட்டாகாதே... அப்புறம் எப்படி நீ கீதா மேரேஜ்ல” என்று வினவினான்.
“நானும் கீதாவும் பிரண்ட்ஸாகி ரொம்ப நாளாச்சு... அதுவும் இல்லாம காலேஜ் டேஸ்ல நடந்த சண்டை எல்லாம் பெரிய விஷயமா என்ன?” என்று சக்தி பதிலுரைத்தாள்.
“கரெக்ட்தான்... அப்போ நம்ம பிரச்சனையையும் மறந்துட்டதானே” என்று விஜய் யோசித்தபடி கேட்க,
சக்தி தயங்கி கொண்டு, “ம்ம்ம்” என்று சொல்லி விருப்பமின்றி ஆமாம் எனத் தலையசைத்தாள்.
பின்னர் அவன் ஜெயாவின் புறம் திரும்பி விசாரித்து விட்டு ராமிடமும் அறிமுகமாகி கைக் குலுக்கினான்.
அவன் இயல்பாகவே பேசினாலும் சக்திக்கு ஏனோ அவனை இன்றும் பிடிக்கவில்லை.
“என்ன சக்தி... நீயும் ஜெயா மாதிரி கமிட்டெட்டா?” என்று கேட்க சக்தி அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள். மீண்டும் விஜயே ஏதோ எண்ணியபடி,
“அப்படி எவனாச்சும் கமிட்டாகி இருந்தாலும் உன் திமிரான ஆட்டிடியுட் பார்த்து தெறிச்சு ஓடி இருப்பானே” என்று வேடிக்கையாகச் சொன்னான். அந்த வார்த்தை சக்தியை காயப்படுத்த அவன் புறம் திரும்பி
“விஜய் போதும்... என் பெர்ஸலனை பத்தி கேள்வி கேட்கிறது... கமென்ட் பன்றதெல்லாம் வேண்டாம்” என்று அழுத்தமாக உரைக்க அவன் அவள் கோபத்தை இயல்பாய் எடுத்துக் கொண்டபடி, “ஓ கே” என்று சொல்லி தலையசைத்தான்.
இருந்தும் அவன் கேலியும் கிண்டலான பேச்சை நிறுத்தாமல் சக்தியினை ஏதாவது சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். அவன் சென்ற சில நிமிடத்தில் சக்தி ஜெயாவிடம்,
“போயும் போயும் இவனைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன்” என்று அலுத்துக் கொண்டாள்.
ஜெயா புரியாமல் “ஏன் சக்தி... அவன் ஜாலியாதானே பேசிறான்... நீ ஏன் அவனை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற ?” என்று கேட்டாள்.
“ஜாலியும் இல்ல... ஒரு மண்ணும் இல்ல... இவன் எல்லாம் திருந்தவே மாட்டான் ஜெயா... அவன் வந்து கண்ணை மூடினதும் விஜய்னு சொல்லிருக்கலாம்ல... இடியட்... அவன் பார்வையே சரியில்ல... அவனைக் கண்டாலே பிடிக்கல... இப்ப கூடப் பாரு... அவன் என்னைப் பத்திதான் ஏதோ தப்பா பேசிட்டிருக்கான்” என்று சக்தி சொல்லும் போதே தூரத்தில் நின்று விஜய் பேசிக் கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டினாள்.
“நீ பாட்டுக்கு ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதே... ரிலாக்ஸ்” என்று ஜெயா சொல்ல ஏனோ சக்தியால் அமைதியடைய முடியவில்லை. அவளின் கணிப்பு சரியாகவே இருந்தது.
விஜய் தன் நண்பர்களோடு சக்தியை பற்றிதான் பேசிக் கொண்டிருந்தான். பேசினான் என்று சொல்ல முடியாது. அவளைத் திட்டி கொண்டிருந்தான் என்றே சொல்லலாம்.
“அவளோட திமிரும் தெனாவட்டும் கொஞ்சங் கூடக் குறையல... பெரிய இவன்னு நினைப்பு... ரொம்பச் சீன் போடறா” என்று நண்பர்களிடம் தன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தான்.
அதோடு நிற்காமல் விஜய் மனதிற்குள்,
“அவ்வளவு சீக்கிரம் எப்படி நீ எனக்குச் செஞ்ச அவமானத்தை எல்லாம் மறந்துடுவேன்... எல்லாத்தையும் உனக்குத் திருப்பிக் கொடுக்கிறேன்...” என்று எண்ணிக் கொண்டான்.
இவர்கள் இருவருக்கிடையில் கல்லூரி நாட்களில் உருவான துவேஷமும் கோபமும் கொஞ்சம் கூடக் குறையவில்லை.
வரவேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்று அரங்கத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து கொண்டே வந்தது.
சக்தி தனியே அவள் தோழியை விட்டு யோசனையில் அமர்ந்திருக்க மீண்டும் விஜய் அவளை நெருங்கி வந்து, “சக்தி” என்றழைத்தான்.
“கிளம்பிட்டியா விஜய்... ஒகே பை” என்று அவனை வெட்டி விடுவது போலப் பேசினாள்.
“ஆமாம் கிளம்பிட்டேன்... அப்புறம்... நான் ஏதாச்சும் தப்பா பேசி இருந்தா சாரி” என்று விஜய் சொல்ல சக்தி அவனை நம்பாமல் சந்தேகமாய்ப் பார்த்தபடி,
“இட்ஸ் ஒகே விஜய்...” என்றாள்.
“அப்புறம் நாளைக்கு என்னோட பிறந்த நாள... பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் நீயும் வர்றியா ?” என்று கேட்டான்.
“ஸோ சாரி... எனக்கு நிறைய வொர்க் இருக்கு... எனி வே அட்வான்ஸ் ஹாப்பிப் பர்த்டே விஷ்ஷஸ்” என்று சொல்லிவிட்டு மேலே அவனைப் பேச விடாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
சக்தி அவனை அவ்வாறு தவிர்த்து விட்டுச் செல்ல விஜயின் கோபமும் பழி வாங்கும் எண்ணமும் ரொம்பவும் அதிகமாகவே தூண்டப்பட்டது.
ஹோட்டல் எஸ். எஸ். சக்திசெல்வன் தன்னுடைய அலுவலக அறையில் கம்பீரமாய் அமர்ந்தபடி வேலையில் மும்முரமாக இருந்தான். அவனுடைய செகரட்ரியிடம் சில வேலைகளைக் குறித்து வரிசையாய் பட்டியலிட்டான்.
பின்பு ஏதோ நினைவு வந்தவனாக,
“நரேன் அவரோட பிரண்ட் ராமசாமிங்கிறவருக்காக அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார்... அதை ஓகே பண்ணுங்க... நாளைக்கு நைட் செவனோ க்ளார்க் ஷார்ப் வரச் சொல்லுங்க... ரைட்” என்று சொல்லிவிட்டுத் தம் இருக்கையிலிருந்து எழுந்து புறப்பட்டான்.
நாளை இதே சமயம் இரு சக்திகளும் தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரும். அந்தத் தருணம் சக்தி செல்வனின் என்றென்றும் மறவாத இன்பகரமான பதிவாய் நிலைகொண்டுவிட, சிவசக்திக்கு அது ஏமாற்றத்தோடு கூடிய கனவாய் முடியப்போகிறது.

Quote from Marli malkhan on February 16, 2025, 10:46 PMSuper ma
Super ma