மோனிஷா நாவல்கள்
Solladi Sivasakthi - Episode 27

Quote from monisha on January 23, 2025, 7:48 PM27
யாரை வீழ்த்துவான்?
அந்த முழுச் சந்திரனின் ஒலி சூரியனின் அபரிமிதமான வெளிச்சத்தால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து போகச் சிவசக்தி மயக்கத்திலிருந்து விழித்தெழுந்தாள்.
அவள் கண்கள் காணும் திசையெல்லாம் முற்றிலும் புதிதாய்க் காட்சியளித்தது. அந்த அறையைப் பார்த்து குழம்பியபடி விழிகளை அலைபாயவிட்டவளின் கையை ஜெயா பற்றினாள்.
“சக்தி ஆர் யூ ஆல் ரைட்?” என்று ஜெயா கேட்கும் போது தலையைப் பிடித்துக் கொண்டு சக்தி எழுந்து அமர்ந்தாள்.
“என்ன சக்தி... என்ன பண்ணுது... ஹாஸ்ப்பெட்டில் போலாமா?” என ஜெயா வினவ சக்தி தலையைக் குனிந்தபடி வேண்டாம் எனத் தலையசைத்தாள்.
“என்னடி ஆச்சு?... சக்தியை பார்க்க வந்த... எப்படி மயங்கி விழுந்த?!” என்று ஜெயா கேட்க ராம் உடனே, “இரு ஜெயா... சக்தி ரிலாக்ஸாகட்டும்... தொல்லை பண்ணாதே” என்றான்.
சிவசக்தி நடந்ததை நினைவுபடுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள். நேற்று இரவு தான் சக்திசெல்வனைப் பார்த்தோம். ஆனால் இப்போது ஜெயா அருகில் இருக்கிறாள் எனில் தான் கண்டது கனவா என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
ஜெயா மீண்டும் சிவசக்தியின் தோள்களைப் பற்றி,
“போகட்டும் விடு சக்தி... ஏதோ நல்ல நேரம்... விஜய் உன்னைப் பார்த்ததினால எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணான்” என்றாள்.
விஜய் என்ற பெயரை கேட்ட போதும் சக்திக்கு அவனைத் தான் சந்தித்தது நினைவுக்கு வந்தது. பின் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தவை கண்முன்னே தோன்றக் கடைசியாய் தான் குடித்த பானம் அவளை நிலைதடுமாறச் செய்ததை உணர்ந்தாள். உடனே சக்தி தலையை நிமிர விஜயும் அங்கேதான் நின்று கொண்டிருந்தான்.
சிவசக்தி கோபத்தோடு உச்சத்தில் அவனை நெருங்கி பளாரென்று கன்னத்தில் அறைந்தாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத விஜய் அதிர்ந்து போக ஜெயாவும் ராமும் புரியாமல் விழித்தனர்.
விஜய் நடந்ததை உணரும் முன்னரே சக்தி அவன் சட்டையைப் பிடித்து,
“என்னடா கூல்டிரங்க்ஸ்ல கலந்து கொடுத்த?... என்ன எண்ணத்தோட அப்படி எல்லாம் செஞ்ச?” என்று சினத்தோடு வார்த்தைகளை வீசினாள்.
இப்போது விஜய் தெளிவுபெற்றனவாய் அவள் கையைத் தன் சட்டை மீதிருந்து உதறியபடி,
“ஸ்டாப் இட் சக்தி... நடந்ததுன்னு என்னன்னு தெரியுமா நீ பாட்டுக்குக் கத்தாதே... என் ப்ஃரண்ட்ஸ் அல்க்கஹால் கலந்து வைச்சிருந்த கூல்டிரிங்ஸஸை நீ குடிச்சிட்ட... நீ தடுமாறின போதுதான் எனக்கே விஷயம் தெரியும்... சரின்னு அந்த நிலமையில் உன்னை எப்படிக் கீதா வீட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னு இந்த ஹோட்டலில் ரூம் எடுத்து இங்கயே ஸ்டே பண்ண வைச்சிட்டு ஜெயாவை கான்டெக்ட் பண்ணி வரச் சொன்னேன்” என்று உரக்கக் கத்தி பொய்யிற்கு உண்மை முலாம் பூசிக் கொண்டிருந்தான்.
ஜெயா உடனே, “நீ இப்படின்னு சொல்லலியே விஜய்?” என்று சந்தேகமாய்க் கேட்டாள்.
“நீங்க டென்ஷனாக வேண்டாம்னு சொல்லல” என்று விஜய் சொல்ல சக்தி அவனை நம்பாமல்,
“நீ சத்தம் போட்டுச் சொன்னா பொய் உண்மையாகிடுமா... யார் காதுல பூ சுத்த பார்க்கிற... உனக்கு என் மேல இருக்கிற வஞ்சத்தைத் தீர்த்துக்க இப்படி எல்லாம் பண்ணிருக்க” என்றாள்.
ஜெயா பின்னோடு நின்றபடி,
“விஜய் மனசில தப்பான எண்ணம் இருந்தா... அவன் அந்தச் சூழ்நிலையைத் தப்பாதானே பயன்படுத்தி இருக்கனும்... உன்னைச் சேஃபா தங்க வைச்சிடட்டு... எங்களை அழைச்சிட்டு வர வேண்டிய அவசியம் என்ன... உன்னை அதே நிலைமையோடு கீதா வீட்டில கொண்டு வந்து விட்டிருந்தா எல்லொரும் உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?
உன் பேர் கெடிறதில்லாம கீதாவோடு ப்ஃரண்டு இப்படியான்னு நினைக்க மாட்டாங்களா... அது கீதாவுக்குமே சங்கடமா போயிருக்கும்... உண்மையிலேயே விஜய் சொல்ற மாதிரி ஏதோ தெரியாம நடந்திருக்கு... உனக்கு ஆரம்பத்திலிருந்தே விஜயை பிடிக்காது... அதனால நீ தெரியாம நடந்த தப்பிற்கு அவனைக் காரணம் காட்டிற” என்றாள்.
ஜெயா சொன்ன விஷயங்களைப் பொருத்தி பார்த்த போது சக்திக்கும் இதில் விஜயோட தவறு எதுவுமில்லை என்று தோன்றியது. தான் ஏதோ மனக்குழப்பத்தில் அந்தப் பானத்தை அருந்தி இருக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தன் அவசரத்தினால் விஜயை அறைந்ததை எண்ணி குற்றவுணர்வு அடைந்தாள்.
“சாரி விஜய்... ஐம் வெரி சாரி... ஏதோ குழப்பத்தில... தப்பா நினைச்சிக்காத” என்று உரைத்தாள்.
விஜயிற்கு அவள் மீண்டும் தன்னை அவமானப்படுத்திவிட்டால் என்ற எண்ணம் கோபமாய் ஊற்றெடுக்க சக்தி கண்கலங்கி மன்னிப்பு கோர அவன் மனம் அமைதிப்பெற்றது.
அவன் பதில் பேசாமல் நிற்க சக்தி மேலும்,
“நான் உன்னைத் தப்பான கண்ணோட்டத்திலேயே பார்த்துட்டேன்... ஆனா நீ என்னை ஒரு தோழியா பார்த்திருக்க... நான் அவமானப்படக் கூடாதுன்னு நீ எனக்காக யோசிச்சு பெரிய உதவி செஞ்சிருக்க... தேங்க்ஸ் அ லாட்”என்று சக்தி நன்றி சொல்லும் போது விஜயை குற்றவுணர்வு ஆட்டிப்படைத்தது.
“பரவாயில்ல சக்தி... இட்ஸ் ஒகே” என்று விஜய் உரைத்தான். ஆனால் அவன் தவறை ஏற்றுக்கொள்ள மனம் வராமல் அமைதிக் காத்தான்.
ஜெயா இப்போது மீண்டும் சக்தியிடம்,
“நீ சக்தி ப்ரோவை பார்த்தியா?” என்று கேள்வி எழுப்பினாள்.
இந்தக் கேள்வி மீண்டும் சிவசக்தியின் மனதைச் சலனப்படுத்த படுக்கையின் மீது அமர்ந்தபடி,
“அந்த ரிசப்ஷனிஸ்ட் சக்தி மீட்டிங்ல இருக்கிறாரு... பார்க்க முடியாதுன்னு சொன்னதால நான் கிளம்பிட்டேன்... அப்புறம்தான் விஜயை பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் நினைவுபடுத்தினாள்.
ஜெயா கோபமான குரலில், “அப்போ சக்தி ப்ரோ உன்னைப் பார்க்காம அவாயிட் பண்ணிட்டாரா... என்னடி ஆச்சு அவருக்கு... ஏன் இப்படி எல்லாம் பண்றாரு? முதல்ல சக்தி ப்ரோ நடந்துகிட்டதையும் இப்ப நடந்துக்கிறதையும் பார்த்தா என்னால நம்பவே முடியல... இந்த டிப்பிரெஷன்லதான் நீ என்ன ஏதுன்னு தெரியாம எதையோ குடிச்சிட்ட போல” என்றாள்.
விஜயிற்கு அவர்கள் பேசும் சக்தி என்ற நபர்தான் நேற்று சிவசக்திக்காகப் பரிந்து கொண்டு வந்தவனா என யோசித்துக் கொண்டிருக்க,
சிவசக்தி அவனை நெருங்கி,
“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... நான் குடிச்சிட்டு அப்நார்மலா நடந்துக்கிட்டேனா... அப்போ நான் யாரையாச்சும் மீட் பண்ணினேனா?” என்று சக்தி விஜயிடம் சந்தேகமாய்க் கேட்டாள்.
விஜயிடம் ஏற்கனவே சக்திசெல்வன் தன்னைப் பற்றி எதுவும் சொல்ல கூடாதென்று உரைத்திருக்க அவன் தயங்கியபடி,
“அப்படி எல்லாம் எதுவும் நடக்கல... நீ அன்கான்ஸியாகிட்ட... நான் ஜெயாவை கான்டெக்ட் பண்ணி இன்பாஃர்ம் பண்ணேன்... அவ்வளவுதான்... மத்தபடி வேற யாரையும் பார்க்கல” என்று சொல்ல சிவசக்திக்கு நடந்தவையின் உண்மை தெரியாமல் கலக்கம் உண்டானது.
“விடு சக்தி... நீ கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகு” என்று சொல்லி ஜெயா மற்றும் ராம், விஜய் மூவரும் அவளைத் தனியே விடுத்து அருகில் உள்ள அறைக்குச் சென்றனர்.
சிவசக்தியின் மனம் நிம்மதி அடையாமல் மேலும் மேலும் குழப்பமடைந்தது. அவளின் மன எண்ணங்களும் விஜய் உரைப்பதும் முற்றிலும் முரண்பட்டதாய் இருந்தது. விஜய் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள எதிலும் சக்திசெல்வன் வந்து சென்றதற்கான சுவடில்லை
. நடந்தவை எல்லாம் தெளிவற்ற நிலையில் அவளுக்குள் பதிந்திருந்தது. சக்திசெல்வனைத் தான் இரவில் பார்த்த விஷயத்தை ஜெயாவிடம் உரைத்தாள் அவன் இப்போது எங்கே என்ற கேள்வி கேட்பாள். போதாக் குறைக்குக் காதல் பைத்தியம் உனக்கு முற்றிவிட்டது என வேடிக்கை செய்வாள்.
இந்த எண்ணத்தால் ஜெயாவிடமும் நடந்ததை விவரிக்க முடியாமல் தவித்தாள். தன்னிடம் இருந்து ஒடி ஒளிய வேண்டிய அவசியம் சக்திக்கு என்ன வந்திருக்க முடியும்.
ஏற்கனவே அவன் கண்ணாமூச்சி விளையாடுவதில் கைதேர்ந்தவனாயிற்றே!
ஆனால் இப்போது அவன் மறைந்திருக்க வேண்டிய அவசியமென்ன. இப்படிப் பலநூறு கேள்விகள் அவளை அழுத்தத்திற்கு உள்ளாக்கின. இதற்கிடையில் அந்த அறையை விட்டுப் புறப்பட எண்ணிய போது படுக்கையின் மீது தட்டுப்பட்ட சட்டை பட்டனை உற்றுப் பார்த்தாள்.
“இது யாரோடது... சக்தியோட ஷர்ட் பட்டனா... சீ... நான் ஏன் இப்படி முட்டாள்தனமா யோசிச்சிட்டிருக்கேன்... எனக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடிச்சிருக்கு” என்று சொல்லி அந்தப் பட்டனை வீசியெறிந்தாள்.
கடைசியில் அவனைத் தான் கட்டியணைத்துக் கொண்டதாக எண்ணம் தோன்றியது. அவன் தந்த முத்தங்களின் தாக்கம் இன்னும் அவள் நினைவை விட்டு நீங்காமல் தடுமாறச் செய்தது.
சக்தி தனக்குத்தானே தெளிவுப்பெற்றபடி,
“நோ... சக்தி என்கிட்ட ஒருநாளும் அந்த மாதிரி அநாகரீகமா நடந்துக்க மாட்டாரு... இதெல்லாம் வெறும் கனவுதான்... அப்படி எல்லாம் நிச்சயமா நடந்திருக்காது” என்று தனக்குத்தானே சிவசக்தி அழுத்தமாய் எண்ணியபடி அந்தக் குழப்பத்திலிருந்து ஒருவாறு விடுபட்டாள்.
இப்போதைக்கு அவள் நிம்மதிப் பெற்றாலும் அந்த நினைவுகள் நிஜமாய் அரங்கேறியவை என்று தெரியவரும் போது அவள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகிறாளோ தெரியாது.
அன்று மாலையில் சக்தியும் ஜெயாவும் கீதாவிடம் கண்ணீரோடு விடைபெற்றுக் கொண்டு டெல்லி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டனர்.
சிவசக்தி தான் அவனைப் பார்க்க வேண்டி வந்து பார்க்காமலே செல்கிறோமே என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் வந்த எண்ணம் ஈடேறிவிட்டது என்பதை அவள் இன்னும் உணரவேயில்லை.
அந்த விமான நிலையம் சிவசக்திக்கு அவனின் முதல் சந்திப்பை நினைவுபடுத்த அன்று தான் செய்தது பெரிய தவறு என்று இன்று வேதனையுற்றாள்.
ஆனால் அவள் இன்னும் சில நிமிடங்களில் மீண்டும் அதே தவறை செய்யப் போகிறாள். அத்தகைய சூழ்நிலையும் உருவாகப் போகிறது.
சிவசக்தி மனதில் ஏமாற்றத்தைச் சுமந்து கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைய சக்திசெல்வனை அங்கே அவள் எதிர்பாராவிதமாய்ச் சந்திப்பாள் என்று எண்ணவேயில்லை.
பன்னாட்டு விமானங்களில் ஏறச் செல்லும் பயணிகளோடு சக்திசெல்வனும் செவியைக் கைப்பேசியால் மூடிய வண்ணம் நிமிர்ந்த நடையோடு சென்று கொண்டிருக்கச் சிவசக்தி அவனைக் கவனித்தாள். அவளோ அவனைப் பார்த்த வண்ணம் வியப்போடு நிற்க ஜெயாவும் ராமும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.
மீண்டும் சந்தேகத்தோடு உற்றுப் பார்த்த போது அவளின் சந்தேகம் தெளிவானது. அவன் நிச்சயம் சக்திதான். அவனைப் பார்த்து பேசிவிட வேண்டும் என்று எண்ணியபடி அவன் பயணித்த திசை நோக்கி விரைந்தாள். அத்தனை பேர் முன்னிலையில் அவனை அழைப்பது உசிதமில்லை என்று எண்ணிக் கொண்டே பின்தொடர்ந்தாள்.
இடர்பாடாய் நின்ற பெட்டிகளைச் சுமந்த வண்டிகளைக் கடந்து சக்திசெல்வன் தன் வேகத்தை லேசாய் குறைத்தபடி நடக்க வேறுவழியின்றிச் சிவசக்தி அவனைத் தடுக்க அவனின் வலது கரத்தை பற்ற வேண்டி நேரிட்டது. அந்தப் பிடியை உணர்ந்து திரும்பி நோக்கியவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
சிவசக்தியை பார்த்து சந்தோஷமடைய முடியாமல் அவள் தவிப்புற, சற்றுத் தொலைவில் நின்றிருந்த மீனாக்ஷியையும் மோகனையும் ஒரு பார்வைப் பார்த்தான். அவளைப் புறக்கணித்து விட்டுச் செல்வதா இல்லை தன் அம்மாவின் வார்த்தையைப் புறக்கணிப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலையில் நின்றான்.
சதுரங்கத்தில் சிவசக்தி வைத்த செக்கில் ராணிக்கும் ராஜாவிற்கும் இடையில் நின்ற குதிரைப் போல் அவன் நிலைமை இருந்தது. காதலிக்கும் அம்மாவுக்கும் இடையில் யாரை வீழ்த்திவிட்டு சக்திசெல்வன் முன்னேறிச் செல்லப் போகிறான்.
27
யாரை வீழ்த்துவான்?
அந்த முழுச் சந்திரனின் ஒலி சூரியனின் அபரிமிதமான வெளிச்சத்தால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து போகச் சிவசக்தி மயக்கத்திலிருந்து விழித்தெழுந்தாள்.
அவள் கண்கள் காணும் திசையெல்லாம் முற்றிலும் புதிதாய்க் காட்சியளித்தது. அந்த அறையைப் பார்த்து குழம்பியபடி விழிகளை அலைபாயவிட்டவளின் கையை ஜெயா பற்றினாள்.
“சக்தி ஆர் யூ ஆல் ரைட்?” என்று ஜெயா கேட்கும் போது தலையைப் பிடித்துக் கொண்டு சக்தி எழுந்து அமர்ந்தாள்.
“என்ன சக்தி... என்ன பண்ணுது... ஹாஸ்ப்பெட்டில் போலாமா?” என ஜெயா வினவ சக்தி தலையைக் குனிந்தபடி வேண்டாம் எனத் தலையசைத்தாள்.
“என்னடி ஆச்சு?... சக்தியை பார்க்க வந்த... எப்படி மயங்கி விழுந்த?!” என்று ஜெயா கேட்க ராம் உடனே, “இரு ஜெயா... சக்தி ரிலாக்ஸாகட்டும்... தொல்லை பண்ணாதே” என்றான்.
சிவசக்தி நடந்ததை நினைவுபடுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள். நேற்று இரவு தான் சக்திசெல்வனைப் பார்த்தோம். ஆனால் இப்போது ஜெயா அருகில் இருக்கிறாள் எனில் தான் கண்டது கனவா என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
ஜெயா மீண்டும் சிவசக்தியின் தோள்களைப் பற்றி,
“போகட்டும் விடு சக்தி... ஏதோ நல்ல நேரம்... விஜய் உன்னைப் பார்த்ததினால எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணான்” என்றாள்.
விஜய் என்ற பெயரை கேட்ட போதும் சக்திக்கு அவனைத் தான் சந்தித்தது நினைவுக்கு வந்தது. பின் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தவை கண்முன்னே தோன்றக் கடைசியாய் தான் குடித்த பானம் அவளை நிலைதடுமாறச் செய்ததை உணர்ந்தாள். உடனே சக்தி தலையை நிமிர விஜயும் அங்கேதான் நின்று கொண்டிருந்தான்.
சிவசக்தி கோபத்தோடு உச்சத்தில் அவனை நெருங்கி பளாரென்று கன்னத்தில் அறைந்தாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத விஜய் அதிர்ந்து போக ஜெயாவும் ராமும் புரியாமல் விழித்தனர்.
விஜய் நடந்ததை உணரும் முன்னரே சக்தி அவன் சட்டையைப் பிடித்து,
“என்னடா கூல்டிரங்க்ஸ்ல கலந்து கொடுத்த?... என்ன எண்ணத்தோட அப்படி எல்லாம் செஞ்ச?” என்று சினத்தோடு வார்த்தைகளை வீசினாள்.
இப்போது விஜய் தெளிவுபெற்றனவாய் அவள் கையைத் தன் சட்டை மீதிருந்து உதறியபடி,
“ஸ்டாப் இட் சக்தி... நடந்ததுன்னு என்னன்னு தெரியுமா நீ பாட்டுக்குக் கத்தாதே... என் ப்ஃரண்ட்ஸ் அல்க்கஹால் கலந்து வைச்சிருந்த கூல்டிரிங்ஸஸை நீ குடிச்சிட்ட... நீ தடுமாறின போதுதான் எனக்கே விஷயம் தெரியும்... சரின்னு அந்த நிலமையில் உன்னை எப்படிக் கீதா வீட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னு இந்த ஹோட்டலில் ரூம் எடுத்து இங்கயே ஸ்டே பண்ண வைச்சிட்டு ஜெயாவை கான்டெக்ட் பண்ணி வரச் சொன்னேன்” என்று உரக்கக் கத்தி பொய்யிற்கு உண்மை முலாம் பூசிக் கொண்டிருந்தான்.
ஜெயா உடனே, “நீ இப்படின்னு சொல்லலியே விஜய்?” என்று சந்தேகமாய்க் கேட்டாள்.
“நீங்க டென்ஷனாக வேண்டாம்னு சொல்லல” என்று விஜய் சொல்ல சக்தி அவனை நம்பாமல்,
“நீ சத்தம் போட்டுச் சொன்னா பொய் உண்மையாகிடுமா... யார் காதுல பூ சுத்த பார்க்கிற... உனக்கு என் மேல இருக்கிற வஞ்சத்தைத் தீர்த்துக்க இப்படி எல்லாம் பண்ணிருக்க” என்றாள்.
ஜெயா பின்னோடு நின்றபடி,
“விஜய் மனசில தப்பான எண்ணம் இருந்தா... அவன் அந்தச் சூழ்நிலையைத் தப்பாதானே பயன்படுத்தி இருக்கனும்... உன்னைச் சேஃபா தங்க வைச்சிடட்டு... எங்களை அழைச்சிட்டு வர வேண்டிய அவசியம் என்ன... உன்னை அதே நிலைமையோடு கீதா வீட்டில கொண்டு வந்து விட்டிருந்தா எல்லொரும் உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?
உன் பேர் கெடிறதில்லாம கீதாவோடு ப்ஃரண்டு இப்படியான்னு நினைக்க மாட்டாங்களா... அது கீதாவுக்குமே சங்கடமா போயிருக்கும்... உண்மையிலேயே விஜய் சொல்ற மாதிரி ஏதோ தெரியாம நடந்திருக்கு... உனக்கு ஆரம்பத்திலிருந்தே விஜயை பிடிக்காது... அதனால நீ தெரியாம நடந்த தப்பிற்கு அவனைக் காரணம் காட்டிற” என்றாள்.
ஜெயா சொன்ன விஷயங்களைப் பொருத்தி பார்த்த போது சக்திக்கும் இதில் விஜயோட தவறு எதுவுமில்லை என்று தோன்றியது. தான் ஏதோ மனக்குழப்பத்தில் அந்தப் பானத்தை அருந்தி இருக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தன் அவசரத்தினால் விஜயை அறைந்ததை எண்ணி குற்றவுணர்வு அடைந்தாள்.
“சாரி விஜய்... ஐம் வெரி சாரி... ஏதோ குழப்பத்தில... தப்பா நினைச்சிக்காத” என்று உரைத்தாள்.
விஜயிற்கு அவள் மீண்டும் தன்னை அவமானப்படுத்திவிட்டால் என்ற எண்ணம் கோபமாய் ஊற்றெடுக்க சக்தி கண்கலங்கி மன்னிப்பு கோர அவன் மனம் அமைதிப்பெற்றது.
அவன் பதில் பேசாமல் நிற்க சக்தி மேலும்,
“நான் உன்னைத் தப்பான கண்ணோட்டத்திலேயே பார்த்துட்டேன்... ஆனா நீ என்னை ஒரு தோழியா பார்த்திருக்க... நான் அவமானப்படக் கூடாதுன்னு நீ எனக்காக யோசிச்சு பெரிய உதவி செஞ்சிருக்க... தேங்க்ஸ் அ லாட்”என்று சக்தி நன்றி சொல்லும் போது விஜயை குற்றவுணர்வு ஆட்டிப்படைத்தது.
“பரவாயில்ல சக்தி... இட்ஸ் ஒகே” என்று விஜய் உரைத்தான். ஆனால் அவன் தவறை ஏற்றுக்கொள்ள மனம் வராமல் அமைதிக் காத்தான்.
ஜெயா இப்போது மீண்டும் சக்தியிடம்,
“நீ சக்தி ப்ரோவை பார்த்தியா?” என்று கேள்வி எழுப்பினாள்.
இந்தக் கேள்வி மீண்டும் சிவசக்தியின் மனதைச் சலனப்படுத்த படுக்கையின் மீது அமர்ந்தபடி,
“அந்த ரிசப்ஷனிஸ்ட் சக்தி மீட்டிங்ல இருக்கிறாரு... பார்க்க முடியாதுன்னு சொன்னதால நான் கிளம்பிட்டேன்... அப்புறம்தான் விஜயை பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் நினைவுபடுத்தினாள்.
ஜெயா கோபமான குரலில், “அப்போ சக்தி ப்ரோ உன்னைப் பார்க்காம அவாயிட் பண்ணிட்டாரா... என்னடி ஆச்சு அவருக்கு... ஏன் இப்படி எல்லாம் பண்றாரு? முதல்ல சக்தி ப்ரோ நடந்துகிட்டதையும் இப்ப நடந்துக்கிறதையும் பார்த்தா என்னால நம்பவே முடியல... இந்த டிப்பிரெஷன்லதான் நீ என்ன ஏதுன்னு தெரியாம எதையோ குடிச்சிட்ட போல” என்றாள்.
விஜயிற்கு அவர்கள் பேசும் சக்தி என்ற நபர்தான் நேற்று சிவசக்திக்காகப் பரிந்து கொண்டு வந்தவனா என யோசித்துக் கொண்டிருக்க,
சிவசக்தி அவனை நெருங்கி,
“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... நான் குடிச்சிட்டு அப்நார்மலா நடந்துக்கிட்டேனா... அப்போ நான் யாரையாச்சும் மீட் பண்ணினேனா?” என்று சக்தி விஜயிடம் சந்தேகமாய்க் கேட்டாள்.
விஜயிடம் ஏற்கனவே சக்திசெல்வன் தன்னைப் பற்றி எதுவும் சொல்ல கூடாதென்று உரைத்திருக்க அவன் தயங்கியபடி,
“அப்படி எல்லாம் எதுவும் நடக்கல... நீ அன்கான்ஸியாகிட்ட... நான் ஜெயாவை கான்டெக்ட் பண்ணி இன்பாஃர்ம் பண்ணேன்... அவ்வளவுதான்... மத்தபடி வேற யாரையும் பார்க்கல” என்று சொல்ல சிவசக்திக்கு நடந்தவையின் உண்மை தெரியாமல் கலக்கம் உண்டானது.
“விடு சக்தி... நீ கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகு” என்று சொல்லி ஜெயா மற்றும் ராம், விஜய் மூவரும் அவளைத் தனியே விடுத்து அருகில் உள்ள அறைக்குச் சென்றனர்.
சிவசக்தியின் மனம் நிம்மதி அடையாமல் மேலும் மேலும் குழப்பமடைந்தது. அவளின் மன எண்ணங்களும் விஜய் உரைப்பதும் முற்றிலும் முரண்பட்டதாய் இருந்தது. விஜய் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள எதிலும் சக்திசெல்வன் வந்து சென்றதற்கான சுவடில்லை
. நடந்தவை எல்லாம் தெளிவற்ற நிலையில் அவளுக்குள் பதிந்திருந்தது. சக்திசெல்வனைத் தான் இரவில் பார்த்த விஷயத்தை ஜெயாவிடம் உரைத்தாள் அவன் இப்போது எங்கே என்ற கேள்வி கேட்பாள். போதாக் குறைக்குக் காதல் பைத்தியம் உனக்கு முற்றிவிட்டது என வேடிக்கை செய்வாள்.
இந்த எண்ணத்தால் ஜெயாவிடமும் நடந்ததை விவரிக்க முடியாமல் தவித்தாள். தன்னிடம் இருந்து ஒடி ஒளிய வேண்டிய அவசியம் சக்திக்கு என்ன வந்திருக்க முடியும்.
ஏற்கனவே அவன் கண்ணாமூச்சி விளையாடுவதில் கைதேர்ந்தவனாயிற்றே!
ஆனால் இப்போது அவன் மறைந்திருக்க வேண்டிய அவசியமென்ன. இப்படிப் பலநூறு கேள்விகள் அவளை அழுத்தத்திற்கு உள்ளாக்கின. இதற்கிடையில் அந்த அறையை விட்டுப் புறப்பட எண்ணிய போது படுக்கையின் மீது தட்டுப்பட்ட சட்டை பட்டனை உற்றுப் பார்த்தாள்.
“இது யாரோடது... சக்தியோட ஷர்ட் பட்டனா... சீ... நான் ஏன் இப்படி முட்டாள்தனமா யோசிச்சிட்டிருக்கேன்... எனக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடிச்சிருக்கு” என்று சொல்லி அந்தப் பட்டனை வீசியெறிந்தாள்.
கடைசியில் அவனைத் தான் கட்டியணைத்துக் கொண்டதாக எண்ணம் தோன்றியது. அவன் தந்த முத்தங்களின் தாக்கம் இன்னும் அவள் நினைவை விட்டு நீங்காமல் தடுமாறச் செய்தது.
சக்தி தனக்குத்தானே தெளிவுப்பெற்றபடி,
“நோ... சக்தி என்கிட்ட ஒருநாளும் அந்த மாதிரி அநாகரீகமா நடந்துக்க மாட்டாரு... இதெல்லாம் வெறும் கனவுதான்... அப்படி எல்லாம் நிச்சயமா நடந்திருக்காது” என்று தனக்குத்தானே சிவசக்தி அழுத்தமாய் எண்ணியபடி அந்தக் குழப்பத்திலிருந்து ஒருவாறு விடுபட்டாள்.
இப்போதைக்கு அவள் நிம்மதிப் பெற்றாலும் அந்த நினைவுகள் நிஜமாய் அரங்கேறியவை என்று தெரியவரும் போது அவள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகிறாளோ தெரியாது.
அன்று மாலையில் சக்தியும் ஜெயாவும் கீதாவிடம் கண்ணீரோடு விடைபெற்றுக் கொண்டு டெல்லி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டனர்.
சிவசக்தி தான் அவனைப் பார்க்க வேண்டி வந்து பார்க்காமலே செல்கிறோமே என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் வந்த எண்ணம் ஈடேறிவிட்டது என்பதை அவள் இன்னும் உணரவேயில்லை.
அந்த விமான நிலையம் சிவசக்திக்கு அவனின் முதல் சந்திப்பை நினைவுபடுத்த அன்று தான் செய்தது பெரிய தவறு என்று இன்று வேதனையுற்றாள்.
ஆனால் அவள் இன்னும் சில நிமிடங்களில் மீண்டும் அதே தவறை செய்யப் போகிறாள். அத்தகைய சூழ்நிலையும் உருவாகப் போகிறது.
சிவசக்தி மனதில் ஏமாற்றத்தைச் சுமந்து கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைய சக்திசெல்வனை அங்கே அவள் எதிர்பாராவிதமாய்ச் சந்திப்பாள் என்று எண்ணவேயில்லை.
பன்னாட்டு விமானங்களில் ஏறச் செல்லும் பயணிகளோடு சக்திசெல்வனும் செவியைக் கைப்பேசியால் மூடிய வண்ணம் நிமிர்ந்த நடையோடு சென்று கொண்டிருக்கச் சிவசக்தி அவனைக் கவனித்தாள். அவளோ அவனைப் பார்த்த வண்ணம் வியப்போடு நிற்க ஜெயாவும் ராமும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.
மீண்டும் சந்தேகத்தோடு உற்றுப் பார்த்த போது அவளின் சந்தேகம் தெளிவானது. அவன் நிச்சயம் சக்திதான். அவனைப் பார்த்து பேசிவிட வேண்டும் என்று எண்ணியபடி அவன் பயணித்த திசை நோக்கி விரைந்தாள். அத்தனை பேர் முன்னிலையில் அவனை அழைப்பது உசிதமில்லை என்று எண்ணிக் கொண்டே பின்தொடர்ந்தாள்.
இடர்பாடாய் நின்ற பெட்டிகளைச் சுமந்த வண்டிகளைக் கடந்து சக்திசெல்வன் தன் வேகத்தை லேசாய் குறைத்தபடி நடக்க வேறுவழியின்றிச் சிவசக்தி அவனைத் தடுக்க அவனின் வலது கரத்தை பற்ற வேண்டி நேரிட்டது. அந்தப் பிடியை உணர்ந்து திரும்பி நோக்கியவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
சிவசக்தியை பார்த்து சந்தோஷமடைய முடியாமல் அவள் தவிப்புற, சற்றுத் தொலைவில் நின்றிருந்த மீனாக்ஷியையும் மோகனையும் ஒரு பார்வைப் பார்த்தான். அவளைப் புறக்கணித்து விட்டுச் செல்வதா இல்லை தன் அம்மாவின் வார்த்தையைப் புறக்கணிப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலையில் நின்றான்.
சதுரங்கத்தில் சிவசக்தி வைத்த செக்கில் ராணிக்கும் ராஜாவிற்கும் இடையில் நின்ற குதிரைப் போல் அவன் நிலைமை இருந்தது. காதலிக்கும் அம்மாவுக்கும் இடையில் யாரை வீழ்த்திவிட்டு சக்திசெல்வன் முன்னேறிச் செல்லப் போகிறான்.

Quote from Marli malkhan on February 16, 2025, 11:02 PMSuper ma
Super ma