மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Anbin VazhiyathuAnbin Vazhiyathu - Episode 12Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 12 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on October 23, 2024, 5:20 PM</div><h1 style="text-align: center"><strong>12</strong></h1> <p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>Destiny is no matter of chance. It is a matter of choice</strong></span></p> <p><img class="aligncenter" src="https://monishanovels.com/wp-content/uploads/2024/10/arivu7.jpeg" alt="" width="400" height="400" /></p> <p><strong>மதியழகிக்குத் தலையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து அன்று இரவு அவள் உடல் நெருப்பாகக் கொதித்தது. மஹா மருந்து கொடுத்தும் ஜுரம் குறையவே இல்லை.</strong></p> <p><strong>அடுத்த நாள் விடிந்தும் விடியாமலும் மதிக்குட்டியைத் தூக்கிக் கொண்டு நானும் மஹாவும் மருத்துவமனைக்கு ஓடினோம். மருத்துவர் அவள் உடலைச் சோதித்துப் பார்த்து, ‘பெரிதாக ஒன்றும் இல்லை... சாதாரண ஜுரம்தான்’ என்று மருந்து எழுதிக் கொடுத்தார்.</strong></p> <p><strong>ஆனால் அடுத்து வந்த இரண்டு நாட்களும் உடல் நிலை சரியில்லாமல் மதியழகி எங்களை ஒரு வழிச் செய்துவிட்டாள். அதுவும் மகளைத் தூங்க வைக்க, சாப்பிட வைக்க, மருந்து கொடுக்க என்று மஹாவின் பாடு பெரும் பாடுதான்.</strong></p> <p><strong>அதுவும் குழந்தையைப் பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்து கொண்டிருந்தவளைப் பார்க்கவே எனக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது.</strong></p> <p><strong>பகலெல்லாம் ஓயாமல் வேலை செய்தவள் இரவெல்லாம் மகளைத் தூக்கி வைத்துக் கொண்டு உறங்க வைக்கப் படாதபாடுப்பட்டுக் கொண்டிருந்தாள். இரவு கூட அவளுக்கு ஒரு பொட்டு உறக்கம் இல்லை.</strong></p> <p><strong>அவளுக்கு எந்த மாதிரி உதவுவது என்று எனக்கும் புரியவில்லை. தாய்மை என்பது இத்தனை கொடுமையானதாக இருக்கும் என்று அன்றுதான் நான் நேருக்கு நேராகப் பார்த்து தெரிந்து கொண்டேன்.</strong></p> <p><strong>படித்தப் புத்தகத்தில் எல்லாம் தாய்மையை ஏதோ தியாகம், பாசம், பொறுமை என்று விவரிக்கும் போது எனக்கு எரிச்சல் வரும். ஆனால் மஹா படும்பாட்டை நேரில் பார்க்க அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்று புரிந்தது.</strong></p> <p><strong>அதுவும் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டே மஹா இந்தப் பாடுப்படுகிறாள் என்றால் என் அம்மா இரட்டை குழந்தைகளை வளர்க்க என்ன பாடுப்பட்டு இருப்பார்.</strong></p> <p><strong>நிறைய விஷயங்களை அனுபவ ரீதியாக உணரும் போதுதான் அதன் வலி புரிகிறது. வளர வளர நம் கண்ணோட்டங்கள் முதிர்ச்சியாக மாறுவதன் காரணம் கூட இதுதான் போல. </strong></p> <p><strong>அருகே இருந்த கட்டிலில் மதிக்குட்டியும் மஹாவும் ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்தார்கள். இரவு இரண்டு மணி போலதான் மதிக்குட்டி உறங்கினாள். அதன் பின் மஹாவும் அயர்ந்து உறங்கிவிட்டாள்.</strong></p> <p><strong>எனக்கு அப்போதும் உறக்கம் வரவில்லை. வெகுநேரமாக ஏதேதோ யோசித்துக் கொண்டே படுக்கையில் உருண்டிருந்த நான், சொற்ப நேரம் மட்டுமே உறங்கி இருப்பேன்.</strong></p> <p><strong>அன்புவின் அலாரத்தை நான் அணைத்துவிட்ட போதும் ஆறு மணிக்கு எல்லாம் டானென்று என் மூளை என்னை விழிப்படைய செய்துவிடுகிறது.</strong></p> <p><strong>சத்தமில்லாமல் படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.</strong></p> <p><strong> வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது. மாடியில் வந்து அமைதியாக அந்த காலை நேர மெல்லிய குளுமையை அனுபவித்துக் கொண்டே சிகரட்டைப் புகைத்தேன்.</strong></p> <p><strong>மனதிற்குள் அன்றைய மாதச்செலவுகளைப் பற்றிய யோசனை வந்தது. என் செல்பேசியில் எடுத்து வங்கிக் கணக்கில் உள்ள கையிருப்புக்களைக் கணக்கிட்டேன்.</strong></p> <p><strong>அடுத்த மாதம் வரைக்கும் ஓட்டலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்வது? எழுதுவதன் மூலமாக இனி ஈட்ட முடியாது. அதுவும் அன்புவின் அடையாளத்தில் இருந்து கொண்டு எழுத முடியுமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான்.</strong></p> <p><strong>அன்புவின் வேலையும் இப்போது இல்லை. அவன் வேலையை விட்டுவிட்டதில் ஏதாவது செட்டில்மென்ட் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதோடு இரண்டு பைக்கில் ஒன்றை விற்றுவிடலாம்.</strong></p> <p><strong>இதை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு ஆறேழு மாதம் தாக்குப்பிடிக்கலாம். அதற்குள் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும். அதுவும் அன்புவின் படிப்பிற்கும் தகுதிக்கும் ஏற்றார் போல ஒரு வேலையைத் தேடிச் சேர வேண்டுமென்பது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று புரியவில்லை.</strong></p> <p><strong>தீர்ந்து போன சிகரெட் துண்டைத் தூர வீசிவிட்டு மற்றொன்றை எடுக்க முனைந்த போது பேக்கெட் காலியாகி இருந்தது.</strong></p> <p><strong>‘இதுவும் காலியா?’ என்று நான் தூக்கிப் போடவும்,</strong></p> <p><strong><em>‘இந்தப் பழக்கத்தை நிறுத்துடா... கேன்சர் வந்து ஸாகப் போற’</em> என்றபடி அன்பு இம்முறை நேரிலியே வந்து ஆஜராகி இருந்தான்.</strong></p> <p><strong>ஒரு நொடி திகலுற்ற நான் பிறகு சமாளித்துக் கொண்டு, “நினைச்சா இப்படி நேர்ல வந்து நிற்குற... இல்லனா வாய்ஸ் மட்டும் கொடுக்குற... என்னதான்டா பிரச்சனை உனக்கு?” என்று நான் கடுப்புடன் கேட்க,</strong></p> <p><strong><em>‘எல்லா நேரத்துலயும் நேர்ல வர முடியாது இல்ல... அதான் சம்டைம்ஸ் வாய்ஸ் மெஸஜ் மட்டும் அனுப்புறேன்’</em> என்றான் நக்கல் சிரிப்புடன்.</strong></p> <p><strong>“நீ வரவே வேண்டாம்... முக்கியமா இந்த வாய்ஸ் கொடுக்குறதை இதோட நிறுத்திக்கோ”</strong></p> <p><strong>‘முடியாது’ என்றவன் வஞ்ச புன்னகையுடன் மறுக்க,</strong></p> <p><strong>“என்னைச் சாவடிக்குறதுதான் உன்னோட எண்ணமா?” என்று நான் கடுகடுத்தேன்.</strong></p> <p><strong><em>‘ஏற்கனவே உன்னை நீ சாகடிச்சுட்ட... இதுல புதுசா நான் என்னடா உன்னைச் சாகடிக்குறது’</em> என்றவன் கேட்கவும் எனக்கு எரிச்சல் மூண்டது.</strong></p> <p><strong>இவனுடன் விதாண்டாவாதம் செய்யும் மனநிலையில் நான் இல்லை. மாடியிலிருந்து நான் கீழே இறங்கிச் செல்ல எத்தனிக்கவும்.</strong></p> <p><strong><em>‘நீ ஏன் ரொம்ப குழப்பிக்குற... பேசாம நம்ம வீட்டுக்குக் கிளம்பிப் போ’</em> என்றவன் பின்னிருந்து சொன்ன நொடி நான் அவன் புறம் திரும்பி,</strong></p> <p><strong>“என்னை அவமானப்படுத்தின அந்த வீட்டுக்கு நான் போகவா?” என்று சீற்றமாகக் கேட்டேன்.</strong></p> <p><strong><em>‘அவங்க அறிவைத்தான் அவமானப்படுத்துனாங்க... அன்பை இல்ல... இப்போ நீ அன்பு’</em> என்றவன் மேலும், <em>‘இந்த சான்ஸ நீ விடக் கூடாது’ </em>என்றான்.</strong></p> <p><strong>அவனை யோசனையாகப் பார்த்து, “இப்போ நீ சான்ஸ்னு எதைச் சொல்ல வர்ற?” என்று கேட்க, </strong></p> <p><strong>“நீலச்சாயத்துல விழுந்த நரி கதை ஞாபகம் இருக்கா?” என்று சூசகமாகக் கேட்டான். </strong></p> <p><strong>அவனை நான் குழப்பமாகப் பார்க்க, <em>‘காட்டுக்கே இராஜாவாக வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஏன் வேண்டாங்கணும்?’</em> என,</strong></p> <p><strong>“ஆமா ஏன் வேண்டாங்கனும்?” என்று நானுமே யோசித்தேன்.</strong></p> <p><strong><em>‘உன்னை அவமானப்படுத்தினவங்க எல்லோருக்கும் திருப்பிச் செய்ய இதை விட வேற நல்ல சான்ஸ் கிடைக்காது அறிவு’ </em>என்றவன் சொன்ன நொடி,</strong></p> <p><strong>“இதுல இப்படியொரு விஷயம் இருக்கா? நான் யோசிக்கவே இல்லையே” என்றபடி நிமிர்ந்த போது அவன் காற்றோடு கரைந்துவிட்டிருந்தான்.</strong></p> <p><strong>‘முதல் முதலா உருப்படியா ஒரு விஷயம் சொல்லிட்டுப் போயிருக்கான்டா’ என்று நினைத்துக் கொண்டு, குதுகலமாக நான் படிக்கட்டில் இறங்க மஹா வீட்டு வாயில் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றிருந்தாள்.</strong></p> <p><strong>“மாடில இருந்தீங்களா? நான் கீழே எல்லாம் உங்களைத் தேடிட்டு இருந்தேன்” என்றவள் சொல்ல,</strong></p> <p><strong>“சீக்கிரம் முழிப்பு வந்துடுச்சு... அதான் மேலே சும்மா நடந்துட்டு இருந்தேன்” என்று நான் சொல்லிக் கொண்டே கீழே வர,</strong></p> <p><strong>“இன்னைக்கும் நீங்க சரியா தூங்கலயா?” என்றவள் அக்கறையுடன் கேட்டாள்.</strong></p> <p><strong>“அதெல்லாம் ஒன்னும் இல்ல... தூங்கிட்டேனே” என்ற நான் அவளிடம் பதில் சொல்லும் போது அவள் என்னை ஆழமாகப் பார்த்துவிட்டு,</strong></p> <p><strong>“நீங்க சிகரெட் பிடிப்பீங்களா அன்பு?” என்று கேட்ட போது எனக்குத் தூக்கிவாரி போட்டது. வாசனையை முகர்ந்துவிட்டாள் போல. இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தேன்.</strong></p> <p><strong>அதற்குள் அவளாகவே, “எப்பயாச்சும் பிடிப்பீங்களோ?” என்று இலகுவாகக் கேட்கவும்தான் எனக்கு மூச்சே வந்தது.</strong></p> <p><strong>அன்புக்கு இந்தப் பழக்கம் இல்லையென்று அவள் உறுதியாக அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஒரு மாதிரி தைரியத்தைக் கொடுத்தது.</strong></p> <p><strong>“ஆமா மஹா... ரொம்ப ரேரா எப்பயாச்சும்தான்... அதுவும் ஸ்ட்ரெஸ்டா இருந்தா பிடிப்பேன்... அவ்வளவுதான்” என,</strong></p> <p><strong>“பார்த்துக்கோங்க அன்பு... அதுவே பழக்கமாயிட போகுது” என்றவள் கவலையுடன் என்னை ஏறிட,</strong></p> <p><strong>“இல்ல மஹா... அப்படி எல்லாம் ஆகாது” என்றதும் அவள் புன்னகைத்து,</strong></p> <p><strong>“சரி நீங்க போய் பிரஷ்ஷாகிட்டு வாங்க... நான் உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றுவிட்டாள்.</strong></p> <p><strong>‘எப்பா சாமி... தப்பிச்சேன்’ என்று பெருமூச்செறிய,</strong></p> <p><strong><em>‘நீ இன்னும் மாட்டவே இல்லடா... டேய்’</em> என்றது அன்புவின் குரல்.</strong></p> <p><strong>“இவன் வேற ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துட்டு இருக்கான்” என்று எரிச்சலான அதேநேரம் அவன் பேசியதைக் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் வந்து அன்புவின் செல்பேசியில் கிரி அங்கிளுக்கு அழைத்துப் பேசினேன்.</strong></p> <p><strong>“குட் மார்னிங் அன்பு... ஆமா என்ன இவ்வளவு காலையிலயே கூப்பிட்டு இருக்க?”</strong></p> <p><strong>நான் சுற்றி வளைக்காமல் வீட்டிற்கு வருவதாகவும் நம் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்பதாகவும் சொன்ன நொடி அவர் அதீத உற்சாகத்துடன், ‘நீ உனக்குத் தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வைச்சுக்கோ... நான் கார் அனுப்புறேன்’ என்றார்.</strong></p> <p><strong>“இன்னைக்கேவா?”</strong></p> <p><strong>“வர்றதுன்னு முடிவு பண்ண பிறகு இன்னைக்கா இருந்தா என்ன? நாளைக்கா இருந்தா என்ன?”</strong></p> <p><strong>“சரி நான் பேக் பண்ணி வைக்கிறேன்” என்று அவரிடம் பேசி முடித்து அழைப்பைத் துண்டித்துவிட்டு சமையலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த மஹாவிடம்,</strong></p> <p><strong>“இப்போ மதிக்குட்டி எப்படி இருக்கா? ஓகேவா?” என்று விசாரிக்க,</strong></p> <p><strong>“இப்போ ஓகேதான்... நல்லா தூங்கிட்டா... ஜுரமும் இல்ல” என்றவள் தேநீரைத் தயாரித்து இரண்டு கப்பில் ஊற்றி எனக்கொன்றைக் கொடுத்தாள்.</strong></p> <p><strong>“மஹா” என்று மெல்ல ஆரம்பித்த நான் அப்பா வீட்டுக்குப் போகும் விஷயத்தைப் பற்றிச் சொன்னேன். அவள் புருவங்கள் சுருங்க யோசித்துவிட்டு,</strong></p> <p><strong>“இப்பவே கிளம்புறோமா அன்பு?” என்று கேட்க,</strong></p> <p><strong>“ஆமா இப்பவேதான்... காலைல டிஃபன் மட்டும் பண்ணிடு... சாப்பிட்டு திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ண ஆரம்பிச்சுடலாம்” என்று நான் சொன்னதுதான் தாமதம். </strong></p> <p><strong>“ம்ம்ம் சரி சரி” என்றவள் அதன் பின் பரபரப்பாகத் தேநீரை அவசரமாக அருந்தி முடித்து கப்பை சிங்கில் போடவும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.</strong></p> <p><strong>“இப்போ எதுக்கு அவசரமா குடிச்ச... டீ குடிக்கிற அந்த சொற்ப நேரத்தை மிச்சம் பண்ணி என்ன பண்ண போற?”</strong></p> <p><strong>“சொல்லுவீங்க... சொல்லுவீங்க... அப்புறம் உங்க பொண்ணு எழுந்துட்டா... என்னை வேலை செய்ய விடுவாளாக்கும்” என்று பரபரப்பாக வேலையில் ஈடுப்பட்டு கொண்டே அவள் நொடித்துக் கொள்வதைக் பார்க்க அழகாக இருந்தது.</strong></p> <p><strong>அவளை அப்படியே பின்னிருந்து அணைத்துக் கொண்ட நான், “ஆமா ஆமா எழுந்தா என்னையும்தான் வேலை செய்ய விடமாட்டா” என்று அவள் பின்னங்கழுத்தில் உரசி முத்தமிட,</strong></p> <p><strong>“அன்பு வேலை இருக்கு?” என்று நெளிந்தாள்.</strong></p> <p><strong>“நீ வேலையை செய்... நான் உன்னைச் செய்றேன்” என்றதும்,</strong></p> <p><strong>அவள் உடலை வளைத்து நெளித்து, “காலங்காத்தால என்ன இது?” என்று பொய் கோபம் காட்டினாள்.</strong></p> <p><strong>அவளை மொத்தமாக என் புறம் திருப்பி, “காலங்கத்தாலயா... நைட்டு எங்கடி உன் பொண்ணு என்னை விட்டா?” என்று கடுப்புடன் கேட்டேன்.</strong></p> <p><strong>“அது ஒன்னும் என் தப்பு இல்லையே” அவள் கண்களில் குறும்புத்தனம் மின்னியது.</strong></p> <p><strong>அவள் இடையை நான் மீண்டும் வளைத்துக் கொள்ள, “அன்பு வேலை இருக்கு... விடுங்களேன்” என்று முரண்டிக் கொண்டே கெஞ்ச நான் அவளின் கெஞ்சலை இரசித்துக் கொண்டே, </strong></p> <p><strong>“சரி விட்டுடுறேன்... அன்னைக்கு மாதிரி ஒரே ஒரு கிஸ் பண்ணு... விட்டுடுறேன்” என்றேன் கிறக்கத்துடன். அவள் அதிர்ந்து என்னைப் பார்த்து,</strong></p> <p><strong>“எது... நான் பண்ணவா?” என்று கேட்டாள். </strong></p> <p><strong>“நீதானடி அன்னைக்குப் பண்ண?”</strong></p> <p><strong>அவள் முகத்தைச் சுருக்கிக் கொண்டு, “அன்னைக்கு ஏதோ மூட் அப்செட்ல இருந்தீங்க... பண்ணேன் அன்புஊஊஊஊ” என்று இழுக்க,</strong></p> <p><strong>“இப்போ நீ பண்ணலன்னா எனக்கு மூட் அப்செட் ஆகிடும் மஹாஆஆஆஆஆஆ” என்று நானும் அவளைப் போலவே இழுக்கவும் அவள் கண்கள் என்னை அவஸ்த்தையுடன் நோக்கியது.</strong></p> <p><strong>அவளின் அந்த அவஸ்த்தையான பார்வை இன்னும் என்னைப் போதை கொள்ளச் செய்ய, “மஹா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்று அவள் உதட்டை நெருங்கினேன்.</strong></p> <p><strong>“இப்ப வேணாமே அன்பு... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்று அவளும் சமார்த்தியமாகச் சமாளித்துக் கொண்டிருந்தாள். எனக்கு இந்த விளையாட்டுப் பிடித்திருந்தது. அவளை விடவே மனம் வரவில்லை.</strong></p> <p><strong>“சரி அப்போ நான் பண்றேன்” என்றபடி அவள் இதழ்களை நெருங்குகையில் மனதினோரத்தில் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.</strong></p> <p><strong> ‘அந்த விளங்காதவன் இப்போ எதுவும் வாயை வைச்சிர கூடாது’ என்று எண்ணிக் கொள்ள சமயம் பார்த்து மதியழகி வீலென்று அலறினாள்.</strong></p> <p><strong>“விடுங்க அன்பு... குட்டிமா அழுறா” என்று ஒரே தள்ளில் என்னைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.</strong></p> <p><strong>‘அடிப்பாவி! ஒரே தள்ளுத் தள்ளிட்டுப் போறா... இவ்வளவு நேரம் விடுங்க அன்பு... விடுங்க அன்புன்னு... கெஞ்சுனது எல்லாம் வெறும் சால்ஜாப்பா!’ என்று எனக்கு நானே புலம்பிவிட்டு,</strong></p> <p><strong>‘ஹம்... இன்னைக்கு எனக்கு வாச்சது அவ்வளவுதான்’ என்று பெருமூச்சுடன் அன்றைய எனது நாளைத் தொடங்கினேன்.</strong></p> <p><strong>காலை உணவு முடித்ததும் நானும் மஹாவும் தேவையான பொருட்களைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்க மதியழகி தன்னால் முடிந்தவரை எங்கள் வேலைக்குத் தொல்லை கொடுத்திருந்தாள்.</strong></p> <p><strong>மதிய உணவை வெளியே வாங்கி சாப்பிட்டுவிட்டு மாலை போல கிரி அங்கிளுக்கு அழைக்க, அவர் உடனடியாக எங்களை அழைத்துச் செல்வதற்காக கார் அனுப்பி இருந்தார்.</strong></p> <p><strong>ஜாகுவார். அப்பாவின் விருப்பமான கார். மதியழகி குதுகலமாக முன் இருக்கையில் என்னுடன் ஏறி அமர்ந்து கொண்டாள். பின்னே அமர்ந்த மஹாவின் முகத்தில் மெலிதாக ஒரு தவிப்பும் படபடப்பும் இருந்ததை உணர முடிந்தது. அன்பு எங்கள் குடும்பத்தைப் பற்றியும் அப்பாவைப் பற்றியும் பெரிதாக எதுவும் அவளிடம் சொல்லி இருக்க மாட்டான் என்றே தோன்றியது.</strong></p> <p><strong>எல்லாவற்றிற்கும் மேல் தான் அறியாத அனுபவமில்லாத இடத்திற்குப் போவதற்கும் பழக்கமில்லாத மனிதர்களை எதிர்கொள்வதற்கும் இயல்பில் எல்லோருக்கும் ஏற்படுகிற படபடப்பும் பயமும்தான் அவளுக்கும் இருக்கிறது. ஆனால் நான் பிறந்த வளர்ந்த வீட்டிற்குப் போவதற்கே எனக்குப் பயமும் படபடப்பும் உண்டாகிறது. மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு ஊற்றெடுக்கிறது.</strong></p></blockquote><br> Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா