மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Solladi SivasakthiSolladi Sivasakthi - Episode 1Post ReplyPost Reply: Solladi Sivasakthi - Episode 1 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on December 21, 2024, 5:19 PM</div><h1 style="text-align: center"><strong>சொல்லடி சிவசக்தி</strong></h1> <h1 style="text-align: center"><strong>1</strong></h1> <h1 style="text-align: center"><strong>பயணம்</strong></h1> <p><img class="aligncenter" src="https://monishanovels.com/wp-content/uploads/2024/12/ss.jpeg" width="400" height="400" /></p> <p><strong>இரவு நேரம்... சென்னை சென்ட்ரல்... கால நேரமின்றி மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் பையைகளைத் தாங்கிக் கொண்டும் பெட்டிகளை இழுத்தபடியும் நகர்ந்து கொண்டிருந்தனர்.</strong></p> <p><strong>இரயில்கள் வந்த வண்ணம் இருக்கப் பலரும் அங்கிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கியும், வந்து நின்ற இரயில்களில் இருந்து இறங்கியும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.</strong></p> <p><strong>ஆங்காங்கே பயணத்திற்கு ஆயத்தமாகும் இரயில்கள் பற்றிய அறிவிப்புகள் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்க ஒலிஎழுப்பியில் அவற்றின் அறிவிப்புகளும் அந்த இரயில்கள் நின்று கொண்டிருக்கும் நடைமேடைகளும் அறிவிக்கப்பட்டன.</strong></p> <p><strong>பெங்களூர் மையில் ஆறாம் நடைமேடையில் வந்து நிற்பதாக அறிவிப்பு ஒலித்தது. அந்த இரயிலில் ஏறுவதற்காக வேகமாகத் தன்னுடைய பையைக் கரத்தில் பிடித்தபடி வந்து கொண்டிருப்பவள்தான் நம் கதைநாயகி சிவசக்தி.</strong></p> <p><strong>அழகிய வெள்ளை நிற சுடிதார்... அடர்த்தியாய்ப் பின்னப்பட்ட கூந்தல்... சீரான புருவங்களுக்கு இடையிலான தங்க நிற பொட்டு... ஏற்கனவே உயரமாக இருந்தும் இன்னும் உயரத்தைக் கூட்டியபடி ஒரு காலணியோடு நடந்து வந்தவள், பெங்களூர் மெயிலின் இரயில் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த வரிசைப்பட்டியலை சரிபார்த்தாள்.</strong></p> <p><strong>அப்போது அவள் புருவங்கள் லேசாய் குழப்பத்தில் சுருங்கி பின் மீண்டும் தெளிவுப்பெற்று, “எஸ்... சிவசக்தி சி19” என்று கண்டுகொண்டு புன்னகைத்தாள்.</strong></p> <p><strong>இங்கே சிவசக்தியோடு நம் பயணமும் தொடரப் போகிறது. அவளுக்கான இருக்கையைக் கண்டுபிடித்து அமர அங்கே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி ஒரு சிறுமி அமர்ந்திருந்தாள்.</strong></p> <p><strong>சிவசக்தியை பார்த்து சிரிக்கலாமா என் அந்தச் சிறுமி யோசித்துக் கொண்டிருக்க, சிவசக்தி தன்னுடைய பையைக் காலுக்குக் கீழே தள்ளி விட்டு, “ஹொலோ” என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கைநீட்டினாள்.</strong></p> <p><strong>அந்தச் சிறுமியும் தெளிவு பெற்று லேசாகச் சிரித்துக் கை குலுக்கினாள்.</strong></p> <p><strong>“உன் பெயர் என்ன?” என்று சிவசக்தி கேட்க,</strong></p> <p><strong>“ஐம் வர்ஷினி” என்றாள் கொஞ்சும் குரலில்.</strong></p> <p><strong>“வாவ்... வெரி நைஸ் நேம்... உங்க கூட வந்தவங்க எங்கே வர்ஷு?”</strong></p> <p><strong>வர்ஷினி எதிர்புறத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தபடி மும்முரமாய்க் கைப்பேசியில் அளவளாவி கொண்டிருந்த பெண்ணைக் கை காண்பித்து, “மை மாம்” என்றாள்.</strong></p> <p><strong>சிவசக்தி அந்தப் பெண்ணை கவனத்துவிட்டு தலையசைக்க உடனே வர்ஷினி, “வாட்ஸ் யுவர் நேம்?” என்று கேட்டாள்.</strong></p> <p><strong>“சிவசக்தி” என்று அழுத்தமாய் அவள் சொல்ல, அந்தச் சிறுமியின் முகம் சுருங்கிப் போனது.</strong></p> <p><strong>சிவசக்தி உடனே புருவத்தை உயர்த்தி,</strong></p> <p><strong>“என்னாச்சு வர்ஷு?” என்றாள்.</strong></p> <p><strong>வர்ஷினி முகத்தைச் சுருக்கி சக்தியை பார்த்து,</strong></p> <p><strong>“ஓல்ட் நேம் மாறி இருக்கே?” என்றாள்.</strong></p> <p><strong>“எங்கம்மாவுக்கு இந்தப் பெயர்தான் பிடிச்சுது வர்ஷு... என்ன பன்றது?!” என்றாள் சிவசக்தி.</strong></p> <p><strong>“ஏன்?” என்று அந்தச் சிறுமி கேள்வி எழுப்ப, சிவசக்தி புன்னகையோடு,</strong></p> <p><strong>“எங்க அம்மாவுக்குப் பாரதியார் கவிதைகள்னா ரொம்பப் பிடிக்கும் வர்ஷு... இந்தப் பெயர் அம்மாவுக்குப் பிடிச்ச பாடலில் வருது... அதான்” என்றாள்.</strong></p> <p><strong>“அதென்ன பாட்டு... பாடுங்க” என்று வர்ஷினி அழகாய் தலையைச் சாய்த்துக் கேட்க,</strong></p> <p><strong>“இங்க எப்படி வர்ஷு... அப்புறமா” என்று சக்தி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தயங்கினாள்.</strong></p> <p><strong>“ம்ஹும்... சிங் நவ்”என்று வர்ஷினி அதிகார தொனியில் கேட்க, அவளின் வார்த்தைகளுக்கு இப்போது சக்திக்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல்,</strong></p> <p><strong>“சரி கிட்ட வா” என்று சொல்லி அந்தச் சிறுமியை அருகில் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு மெதுவாகக் காதோடு பாடத் தொடங்கினாள்.</strong></p> <p><strong>‘நல்லதோர் வீணை செய்து</strong></p> <p><strong>அதை நலம் கெட</strong></p> <p><strong>புழுதியில் எரிவதுண்டோ...</strong></p> <p><strong>சொல்லடி சிவசக்தி...</strong></p> <p><strong>என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாள்’</strong></p> <p><strong>என்று அவள் ரம்மியமான குரலில் பாட அந்த இரயிலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த சலசலப்புகளையும் கடந்து அவளின் மிருதுவான குரல் அங்கே இருப்பவர்களை மெல்ல வருடிச் சென்றது.</strong></p> <p><strong>வர்ஷினி தம் கைகளைத் தட்ட, அவளின் தாய் கண்பார்வையினாலே மிரட்டினாள்.</strong></p> <p><strong>இந்த வித்தியாசமான தோழிகள் பிறகு வெகு சுவார்ஸ்யமாய்ப் பேசிக் கொண்டிருக்க, இரயில் புறப்படத் தயாரான சத்தம் ஒலித்தது.</strong></p> <p><strong>அதே சமயத்தில் சிவசக்தியின் கைப்பேசியும் ரீங்காரமிட அவள் அதனை எடுத்துப் பேசியபடி எழுந்து கதவுப்புறத்திற்குச் சென்று,</strong></p> <p><strong>“சொல்லுங்க அண்ணி” என்றாள்.</strong></p> <p><strong>“எப்ப டீ வருவ?” என்று எதிர்புறத்தில் கேள்வி எழுந்தது.</strong></p> <p><strong>“காலையில ஆறுமணிக்கெல்லாம் வந்துருவேன்”</strong></p> <p><strong>“ஸ்டேஷனுக்குத் தம்பியை அனுப்பிறேன்” என்றாள் சிவசக்தியின் அண்ணி.</strong></p> <p><strong>“வேண்டாம் அண்ணி... நானே வந்துருவேன்” என்றாள் சக்தி</strong></p> <p><strong>“தனியா எப்படிச் சக்தி வருவ?”</strong></p> <p><strong>“வந்துருவேன் அண்ணி... ஒகே... ஒகே டிரெயின் கிளம்பப் போகுது... நான் அப்புறம் பேசிறேன் “என்று சொல்லி, சக்தி அழைப்பைத் துண்டித்தாள்.</strong></p> <p><strong>சத்தமாய் ஒலி எழுப்பி இரயில் சென்டிரலிலிருந்து மெல்ல நகர, சிலர் வேகமாய் உள்ளே ஏறினர். சிவசக்தி ஆடிக் கொண்டு சென்ற அந்த இரயில் பெட்டியில் நிலைத்தடுமாறாமல் தன் இருக்கைக்கு வந்துஅமர்ந்தாள். வர்ஷினியின் தாய் நிறுத்தாமல் இன்னும் போஃன் பேசிக் கொண்டிருந்தாள்.</strong></p> <p><strong>வர்ஷினியின் எதிரே சென்று சிவசக்தி அமர அந்தச் சிறுதி இதழில் புன்னகையோடு,</strong></p> <p><strong>“திஸ் இஸ் பாஃர் யூ” என்று அழகிய சிவப்பு நிற ரோஜா பூங்கொத்தை நீட்டினாள்.</strong></p> <p><strong>அந்த ரோஜாவைக் கையில் வாங்கத் தயங்கியபடி சிவசக்தி,</strong></p> <p><strong>“யார் கொடுத்தா வர்ஷு?!” என்று புருவம் சுருங்கக் கேட்க,</strong></p> <p><strong>“ஜன்னல் வழியா ஒரு அங்கிள் இதை உங்ககிட்ட கொடுக்கச் சொல்லிட்டு போயிட்டாரு” என்றாள்.</strong></p> <p><strong>சிவசக்தி ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க இரயில் நடைமேடையைக் கடந்து தம் வேகத்தை அதிகரித்தது. மீண்டும் வர்ஷினி அந்தப் பூங்கொத்தை நீட்ட, சிவசக்தி சலிப்போடு பெற்று அதில் எழுதியிருந்ததைப் படித்தாள்.</strong></p> <p><strong>“ஹேப்பி அன் சேஃப் ஜர்னி” என்றிருந்ததைப் பார்த்ததும் அத்தனை நேரம் கலகலப்போடு பேசிக் கொண்டிருந்தவள் மௌனமானாள்.</strong></p> <p><strong>ஏற்கனவே சிவசக்திக்கு அந்தப் பூக்களும் அந்த எழுத்துக்களும் பழகியனவே. அவள் கால் மீது கால் போட்டபடி தீவிரமான யோசனையில் ஆழ்ந்தாள்.</strong></p> <p><strong>என்னைப் பின்தொடர்கிற அந்த நபர் ஏன் என் கண்ணு முன்னாடி வரமாட்டிறான்... அவனோட பிரச்சனை என்ன... எதுக்கு இந்தக் கண்ணாமூச்சி... என்னைப் பிடிச்சிருக்குன்னா ஏன் என்கிட்ட நேரடியா வந்து சொல்ல கூடாது?</strong></p> <p><strong>‘யாருடா நீ? எங்க இருக்கு? உன் பெயர்தான் என்ன? இப்படி எதுவுமே தெரியாம... சே... இட்ஸ் இரிட்டேட்டிங்... அவன் என்னைக்காச்சும் என் முன்னாடி வராமலா போயிடுவான்... அப்போ பாத்துக்கிறேன்...’ என்று கோபத்தோடு அவள் தன் மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டிருந்தாள்.</strong></p> <p><strong>சிறிது நேரத்தில் எல்லோரும் தங்கள் இருக்கையைப் படுக்கையாய் மாற்றி உறங்கிப் போகச் சிவசக்தி அந்த ரோஜாப்பூக்களைத் தூக்கி எறிய மனமின்றி அவற்றைப் பார்த்தபடியே அவள் விழித்துக் கொண்டிருந்தாள்.</strong></p> <p><strong>அந்தச் சமயத்தில் வர்ஷினியின் தாய் உறக்கத்திலிருந்து விழித்து வேகமாய் அந்தப் பெட்டியின் கழிவறையை நோக்கி விரைந்தாள்.</strong></p> <p><strong>வெகு நேரமாய் அந்தப் பெண் திரும்பி வராமல் போக வர்ஷினி திடீரென விழித்து, “மாம்” என்று அழைத்தபடி கண்களைக் கசக்கித் தேட ஆரம்பித்தாள்.</strong></p> <p><strong>“ரெஸ்ட் ரூம் போயிருக்காங்கமா... வந்திருவாங்க” என்றாள் சக்தி.</strong></p> <p><strong>“நானும் போறேன்” என்று சொல்லி வர்ஷினி தன் படுக்கையிலிருந்து இறங்கி தடுமாறிக் கொண்டே நடந்து சென்றாள்.</strong></p> <p><strong>அந்தச் சிறுமி தன் தாயை தேடி அவ்வாறு தனியாய் போவதை எண்ணி சிவசக்திக்கு கவலை உண்டாக அவளும் எழுந்து பின்னோடு சென்றாள்.</strong></p> <p><strong>அங்கே வர்ஷினியின் தாய் கோபமாய்ப் போஃனில் பேசிக் கொண்டிருக்க அதனைக் கவனித்த வர்ஷினி தன் அம்மாவின் புடவையை இழுத்தபடி,</strong></p> <p><strong>“டேட் கிட்ட சண்டேபோடாதிங்க மாம்... நாம நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்று அழுதாள்.</strong></p> <p><strong>அவள் தாயோ வர்ஷினியின் அழுகையைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாய் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்தச் சிறுமி மனவருத்தத்தோடு ஒருபுறத்தில் திறந்தபடி இருந்த கதவை நோக்கி,</strong></p> <p><strong>“போங்க நான் போறேன்...” என்று ஓடும் இரயிலில் இருந்து இறங்க யத்தனித்தாள்.</strong></p> <p><strong>அதனைக் கவனித்த சிவசக்தி அதிர்ச்சியோடு,</strong></p> <p><strong>“வர்ஷு... நில்லுமா” என்று அழைத்தபடி கதவருகில் சென்று அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டு ஆட்டம் கண்டு கொண்டிருந்த அந்த இரயிலில் சிவசக்தி தன்னுடைய உயரமான காலணியால் தடுமாறி வெளியே வீழ்ந்தாள்.</strong></p> <p><strong>வர்ஷினியின் தாய் அப்பொழுதுதான் நிலைமையை இன்னதென்று உணர்ந்தவளாய்,</strong></p> <p><strong>“அய்யோ விழுந்துட்டாங்க! !” என்று உரக்கச் சத்தமிட்டு அந்த இரயில் பெட்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரையும் விழிக்கச் செய்தாள்.</strong></p> <p><strong>நன்றாகவே தொடங்கிய சிவசக்தியின் பயணம் இப்படி ஒரு எதிர்பாராத விபத்தில் சென்று முடிந்தது.</strong></p> <p><span style="color: #ff0000"><strong>தொடரும்...</strong></span></p></blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா