மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Solladi SivasakthiSolladi Sivasakthi - Episode 30Post ReplyPost Reply: Solladi Sivasakthi - Episode 30 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on January 29, 2025, 5:01 PM</div><h1 style="text-align: center"><strong>30</strong></h1> <h1 style="text-align: center"><strong>பிரம்மாஸ்திரம்</strong><img class="aligncenter" src="https://monishanovels.com/wp-content/uploads/2025/01/ss19.jpeg" alt="" width="400" height="400" /></h1> <p><strong>சிவசக்தி அங்கே சக்திசெல்வன் வந்து நின்றதைக் கவனிக்காமல் விஜயிற்கு எப்படிப் புரிய வைப்பது எனத் தலையில் கைவைத்தபடி நின்றிருந்தாள்.</strong></p> <p><strong>விஜய் அவளின் நிலையைப் புரிந்து கொள்ளாமல்,</strong></p> <p><strong>“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா சக்தி?” என்று கேள்வி எழுப்பினான்.</strong></p> <p><strong>சிவசக்தி உணர்ச்சி வேகத்தில்,</strong></p> <p><strong>“நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன் விஜய்... அவரைத் தவிர வேறு யாரையும் என்னால அந்த இடத்தில் வைச்சு பார்க்கவே முடியாது...” என்று சொல்லிவிட்டு திரும்பும் போது அவளைப் பார்த்தபடி நின்றிருந்த சக்திசெல்வனை அவளும் கவனித்தாள்.</strong></p> <p><strong>இவர்கள் இருவரின் பார்வையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள அந்த ஆழமான காதலை இருவருமே புரிந்து கொள்ளும் தருணமாய் அது அமைந்தது.</strong></p> <p><strong>அவள் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை எனினும் அவள் தன்னைத்தான் குறிப்பிடுகிறாள் என்று சக்திசெல்வன் புரிந்தபடி கர்வப் புன்னகையோடு நின்றிருந்தான்.</strong></p> <p><strong>ஆனால் இன்னமும் சக்திசெல்வனை கவனிக்காத விஜய் ஏமாற்றத்தோடு,</strong></p> <p><strong>“நீ இதுவரைக்கும் ஒரு தடவை கூடச் சொல்லவே இல்லையே... யாரது?” என்று சந்தேகமாய்க் கேட்டான்.</strong></p> <p><strong>இவன் இன்னும் புரிந்து கொள்ளாமல் கேள்வி எழுப்புகிறானே என்று அவள் எரிச்சலடைய, இப்போது அவனிடம் எங்கனம் பதிலளிப்பது எனத் தயங்கி நின்றாள்.</strong></p> <p><strong>“அது வேற யாருமில்லை... நான்தான் விஜய்” என்று சக்திசெல்வன் பதிலளிக்க அப்போதுதான் விஜயின் பார்வை அவன் புறம் திரும்பியது.</strong></p> <p><strong>விஜய் அதிர்ச்சியில் கொஞ்சம் தடுமாறச் சக்திசெல்வனின் முகத்தில் புன்னகை அந்த இருளாகியிருக்கும் சூழலிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது.</strong></p> <p><strong>அவன் தன் மீது கோபத்தைச் சுமந்து கொண்டிருந்தாள் நிச்சயம் இந்தப் பதில் அவனிடமிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று அவள் எண்ணி நெகிழ்ந்தாள். இருவரும் பேசிக் கொள்ளாமலே அவர்களின் எண்ணங்கள் பரிமாறப்பட்டுவிட்டன.</strong></p> <p><strong>இப்போது இவர்கள் தங்கள் வெகு நாட்களின் பிரிவிற்குப் பிறகான அந்தக் காதல் தருணத்தை அனுபவிக்கவிடாமல் விஜய் இடையூறாக நின்றபடி சக்திசெல்வனை நோக்கி சந்தேகத்தோடும் தடுமாற்றத்தோடும்,</strong></p> <p><strong>“சார் நீங்க... ஹோட்டல் எஸ். எஸ்ல மீட் பண்ணோமே?” என்று கேட்டான்.</strong></p> <p><strong>இப்போது சக்திசெல்வன் எரிச்சலோடு,</strong></p> <p><strong>'இப்பதான் இதை இவன் ஞாபகப்படுத்தனுமா... கேள்வி மேல கேள்வி கேட்கப் போறாளே' என்று மனதில் அவன் எண்ணிக் கொண்ட அதே நேரத்தில் விஜயும் தன் தவறை உணர்ந்தவனாய் உதட்டைக் கடித்தபடி சிவசக்தியை நோக்கினான்.</strong></p> <p><strong>சிவசக்தி விஜயின் கேள்வியையும் அவர்கள் இருவரின் முகப்பாவனையையும் கவனித்தாள்.</strong></p> <p><strong>ஏற்கனவே அன்று நடந்த விஷயத்தில் அவளுக்குள் இருந்த சந்தேகம் வலுக்கத் தொடங்க விஜய் விழித்தபடி, “நான் கிளம்பறேன் சக்தி” என்று புறப்பட நினைத்தான்.</strong></p> <p><strong>சிவசக்தியின் பார்வை இருவரையும் கூர்மையாக நோக்கியபடி,</strong></p> <p><strong>“விஜய் வெயிட்” என்றாள்.</strong></p> <p><strong>சில நிமிடங்களுக்கு முன் அவன் போனால் போதும் என்று நினைத்தவள் இப்போது போகவிடாமல் தடுத்தாள்.</strong></p> <p><strong>இப்போது நடக்கப் போவதை தடுக்க இயலாது என்று எண்ணிக் கொண்ட சக்திசெல்வன் மீண்டும் அவளின் கோபத்தை எதிர்கொள்வதா எனச் சலிப்புற்றான்.</strong></p> <p><strong>விஜய் பதில்பேசாமல் அமைதியோடு நிற்க,</strong></p> <p><strong>சிவசக்தி அவனை நோக்கி, “ஹோட்டல் எஸ். எஸ்ல இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகமாயிட்டீங்களா?” என்று வினவினாள்.</strong></p> <p><strong>விஜய் பதட்டமாய் சக்திசெல்வனை நோக்கினான். அப்படிப்பட்ட சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாய் சக்திசெல்வன்,</strong></p> <p><strong>“விஜயை ஒரு தடவை ஹோட்டலில் பார்த்திருக்கேன்... அப்படி அறிமுகம்” என்றான்.</strong></p> <p><strong>“ஆமாம் சக்தி” என்று விஜயும் அவன் பதிலை ஆமோதித்தான்.</strong></p> <p><strong>விஜயிடம் தான் கேட்ட கேள்விக்கு இவன் ஏன் சமாளிக்கிறான் என்ற எண்ணம் சிவசக்தியின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.</strong></p> <p><strong>சிவசக்தி இப்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவளாய்,</strong></p> <p><strong>“நட்பு, காதல் இந்த இரண்டு உறவிலயும் உண்மையா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்... அதுக்கப்புறம் உங்க இஷ்டம்” என்ற அவள் உரைக்க அந்த வார்த்தை இருவரையுமே தாக்கியது.</strong></p> <p><strong>இனிமே அந்த விஷயத்தைச் சிவசக்தியிடம் மறைப்பது சரியில்லை என்று எண்ணிய சக்திசெல்வன் அன்று நடந்தவற்றிற்கு முக்கியக் காரணமான விஜய்தான் அந்தச் சம்பவத்தை விவரிப்பது சரியாக இருக்கும் என விஜயின் புறம் தன் பார்வையை வீசினான்.</strong></p> <p><strong>அவன் பார்வையைப் புரிந்த விஜயும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சிவசக்தியை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தயங்கித் தயங்கி,</strong></p> <p><strong>“சக்தி... நான்... அன்னைக்கு... உன் மேல இருந்த கோபத்தில…” என்று தடுமாறி பேச்சற்று நின்றவனைக் கூர்மையாய் பார்த்து,</strong></p> <p><strong>சிவசக்தி பொறுமையிழந்தவளாய் “விஜய்... ஸ்பீக்... நான் என்ன நடந்ததுன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டே ஆகனும்” என்று அழுத்தம் கொடுத்தாள்.</strong></p> <p><strong>அவள் பார்வையில் அன்று நடந்ததைத் தெரிந்து கொண்டே தீர வேண்டும் எனும் ஆர்வம் புலப்பட விஜய் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,</strong></p> <p><strong>“நான் பெரிய தப்புச் செஞ்சிட்டேன் சக்தி உனக்கு... அது... நீ குடிச்ச கூல்டிரிங்ஸ்ல டிரிங்ஸை கலந்துட்டேன்... அந்த நிலையில் உன்னைக் கீதா வீட்டில கொண்டு போய் விட்டு,</strong></p> <p><strong>எல்லோர் முன்னிலையிலும் நீ அவமானப்படனும்னு நினைச்சேன்... நல்ல வேளையா... அப்போ சார் உன்னை அந்த நிலையில் பார்த்துட்டு... உன்னை என் கூட அனுப்ப மாட்டேன்னு அங்கேயே ரூம்ல ஸ்டே பண்ண வைக்க ஏற்பாடுப் பன்னாரு” என்று சொல்லி முடிக்க,</strong></p> <p><strong>இதைக் கேட்ட சிவசக்தி அதிர்ந்துப் போய் நின்றாள். ஒருபக்கம் விஜய் செய்த துரோகம் கோபமாய்த் தெறிக்க மறுப்பக்கம் தான் பிரச்சனையில் இருக்கும் போதெல்லாம் சக்திசெல்வன்தான் தன்னைக் காப்பாற்றுகிறான் என்ற எண்ணம் அவள் மனதில் நன்றியுணர்ச்சியோடு சேர்த்து குற்றவுணர்ச்சியையும் ஆட்கொண்டது.</strong></p> <p><strong>விஜய் மேலும் நிறுத்தாமல், “சாரி சக்தி... அப்போ எனக்கு உன் மேல இருந்த கோபத்துல... ஆனா இப்போ சத்தியமா என் தப்பை நான் உணர்ந்திட்டேன் “ என்றான்.</strong></p> <p><strong>சிவசக்தி உக்கிரமான பார்வையை விஜய் மீது வீசி,</strong></p> <p><strong>“நான் அன்னைக்கே உன்கிட்ட நாம வேற யாரையாச்சும் மீட் பண்ணோமான்னு கேட்டேன் இல்ல... நீ ஏன் அப்பவே இவரைப் பார்த்த விஷயத்தைப் பத்தி சொல்லல?!” என்று அழுத்தமாய்க் கேட்டாள்.</strong></p> <p><strong>இப்போது சக்திசெல்வன் அவளை நோக்கியபடி,</strong></p> <p><strong>“நான்தான் என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்” என்றான்.</strong></p> <p><strong>சிவசக்தி வேதனையோடு, `1 “இரண்டு பேருமா சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டீங்க” என்று சக்திசெல்வனை நோக்கி உரைத்து விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தாள்.</strong></p> <p><strong>“ப்ளீஸ் சக்தி... என்னை மன்னிச்சிடு” என்று விஜய் கேட்க அவனின் மன்னிப்பு சிவசக்தயின் செவிக்கு எட்டவில்லை. மாறாய் கோபமே அதிகரித்தது.</strong></p> <p><strong>சக்திசெல்வன் அவளின் கோபத்தைப் புரிந்தபடி அவளை நோக்கி,</strong></p> <p><strong>“எல்லோருமே சூழ்நிலை காரணமா தப்பு செய்வாங்க... அந்தத் தப்பை உணர்ந்து அவங்க திருத்திக்கனும்னு நினைக்கும் போது... நம்மகிட்ட மனசார மன்னிப்பு கேட்கும் போதும் நாம நிச்சயம் மன்னிக்கனும்... அதுவுமில்லாம நமக்கு அவங்க செஞ்ச கெடுதலைப் பத்தி மட்டுமே யோசிக்காம... அவங்க செஞ்ச நல்லதையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கனும் சக்தி” என்றான்.</strong></p> <p><strong>இவை எல்லாவற்றையும் அவன் விஜயிற்காகதான் உரைத்தானா என்று சிவசக்தி சக்திசெல்வனைச் சந்தேகமாய்ப் பார்த்தாள்.</strong></p> <p><strong>சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவள் பின்னர் விஜயினை நிமிர்ந்து நோக்கியபடி,</strong></p> <p><strong>“சரி... போகட்டும் விடு விஜய்... நீ எனக்கு ஒரு நல்ல நண்பனாய் நிறைய உதவி செஞ்சிருக்க... ஸோ அன்னைக்கு நடந்த அந்த மேட்டரை மன்னிக்கிறதை விட நாம மறந்திடலாம்... லீவ் இட்” என்றாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் அவள் தான் சொன்னதைக் கேட்டு விவாதம் செய்யாமல் உடனே ஏற்றுக் கொண்டாலே என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். ஆம் அவனின் வார்த்தையைத் தட்ட விருப்பமில்லாமலே சக்தி விஜயை அப்போதைக்கு மன்னித்தாள்.</strong></p> <p><strong>விஜய் அவளின் காதலை எதிர்நோக்கி வந்து இப்போது அவர்களின் நட்பாவது காப்பாற்றப்பட்டதே என நிம்மதி அடைந்தவனாய் சக்தியிடம் நன்றி உரைத்துவிட்டு அவர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் அவளிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்தபடி புன்னகையோடு சிவசக்தியை நோக்கி,</strong></p> <p><strong>“அப்போ எனக்கும் மன்னிப்பு கிடைக்கும்தானே?!” என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்க,</strong></p> <p><strong>சிவசக்தி அவன் இப்போதும் தான் செய்த தவறை மறந்து விட்டுத் தன்னிடம் மன்னிப்பு கோருகிறானே என வியப்பாய் நோக்கியபடி,</strong></p> <p><strong>“நீங்க மன்னிப்பு கேட்கிறளவுக்கு எந்தத் தப்பும் செய்யல சக்தி... உங்க அம்மாவை நீங்க கன்வின்ஸ் பண்ணனும் நினைச்சுதானே... அப்படி எல்லாம் செஞ்சீங்க... பரவாயில்ல... அதுல தப்பு எதுவும் இல்ல... ஆனா அன்னைக்கு என் மனசில இருக்கிறதை சொல்லவிடாம என்னை வேதனைப்படுத்தி அப்படி ஒரு விளையாட்டை நீங்க விளையாடிருக்க வேண்டாம்.</strong></p> <p><strong>என்கிட்ட முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்?... அதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு... என்ன... உங்க பக்கம் இருக்கிற நியாயம் எனக்குப் புரிந்தாலும் அந்த நேரத்தில எனக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் வலியையும் வார்த்தையால் சொல்லவே முடியாது... ஐம் டோட்டலி டிப்பிரஸ்ட்... அந்த டிப்ரஷ்னலதான் ஏர்போர்ட்ல நீங்க சொல்ல வந்ததைக் கூடக் கேட்காம நான் ரொம்ப ஹார்ஷா பிகேவ் பண்ணிட்டேன்” என்றாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் அவளுக்கு இந்தளவுக்கு விஷயமெல்லாம் எப்படித் தெரிந்திருக்கும் என்று யோசித்தவன் பின்னர்த் தன் தந்தை தெரியப்படுத்திருக்கக் கூடும் என எண்ணித் தெளிவு பெற்றான்.</strong></p> <p><strong>பின்னர் அவன் சிவசக்தியிடம், “நான் உனக்குத் தெரியப்படுத்த முயற்சி செஞ்சேன்... அதை நீ பார்க்கல... அது என்னோட துரதிஷ்டம்” என்றான்.</strong></p> <p><strong>சிவசக்தி குழப்பத்தோடு, “அப்படியா?” என்று கேள்வி எழுப்ப அவன் தான் தங்கியிருந்த அறைக்கதவு பூட்டப்படாததைக் கவனித்து அதனுள் நுழைந்தான்.</strong></p> <p><strong>சிவசக்தியும் அவன் பின்னோடு சென்றாள்.</strong></p> <p><strong>“நான் போனபிறகு இந்த ரூமுக்கு நீ வந்தியா சக்தி?” என்று அவன் வினவ,</strong></p> <p><strong>“உங்களோட ஞாபகங்கள் இங்க இருக்கே... அதனால அடிக்கடிக்கு வருவேன்” என்றாள்.</strong></p> <p><strong>“நான் பலநேரங்களில் உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சதை லெட்டரா அனுப்புவேன் மறந்திட்டியா?!” என்று கேட்டான்.</strong></p> <p><strong>சிவசக்தி யோசித்தபடி, “ம்... ஆனா இந்த ரூம்ல நீங்க யூஸ் பண்ண மேக்ஸ் புக் தவிர இங்கே எதுவுமே இல்லையே...” என்று உரைத்துவிட்ட மறுகணம் அந்தப் புத்தகத்தை வேகமாய்ப் புரட்டினாள். உள்ளே இருந்த கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.</strong></p> <p><strong>அவள் அந்தக் கடிதத்தை ஆர்வமாய்ப் பிரிக்க அது சக்திசெல்வன் அவளுக்காக எழுதி வைத்திருந்த கடிதம் என்பதை உணர்ந்து அவள் விழிகள் குற்றவுணர்ச்சியோடு சக்திசெல்வனை நோக்கியது. அவன் படி என்பது போல் மௌன பாஷையில் தெரிவிக்க, சிவசக்தி அதைத் தவிப்போடு படிக்கலானாள்.</strong></p> <p><strong>“மை டியர் சக்தி,</strong></p> <p><strong>முதல நான் உன்கிட்ட தேவையில்லாம கோபப்பட்டதுக்கு என்னை மன்னிச்சிடு... நான் ஏன் அப்படிச் செஞ்சன்னு அதற்கான காரணத்தை என்னால உனக்கு இப்போதைக்குத் தெளிவா சொல்லிப் புரிய வைக்க முடியாது.</strong></p> <p><strong>என் மேலயும் என் காதல் மேலயும் உனக்கு நம்பிக்கை இருந்தா, எனக்காக ஒரே ஒரு வருஷம் நாம இரண்டு பேரும் பார்க்காம பேசிக்காம இருப்போம். ஏன் எதுக்குன்னு கேட்காதே?</strong></p> <p><strong>அதுக்கான காரணத்தை இந்தப் பிரிவுக்குப் பிறகு வரப்போற நம்மோட அடுத்தச் சந்திப்பில் நிச்சயம் சொல்றேன். இப்போ நீ சொல்லாம விட்டதை அடுத்த மீட்டிங்ல கண்டிப்பா என்கிட்ட சொல்லனும்.</strong></p> <p><strong>அந்த நாளுக்காக நான் காத்திட்டிருக்கேன். இந்த நேரத்தில என்னைப் பத்தி நீ கவலைப்படாம உன்னோட இலட்சியத்தை நோக்கிப் போகனும். புரிஞ்சிதா.</strong></p> <p><strong>ஆல் தி பெஸ்ட்.</strong></p> <p><strong>ஐ டெரிப்பளி மிஸ் யூ</strong></p> <p><strong>-சக்திசெல்வன்”</strong></p> <p><strong>என்று எழுதியிருந்ததைப் படித்துக் கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தது. அந்தப் பிரம்மாஸ்திரம் அவளின் கோபத்தை முறியடித்து அவர்களின் காதல் போரை முற்றுப் பெறச் செய்தது.</strong></p></blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா