மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Solladi SivasakthiSolladi Sivasakthi - Episode 33Post ReplyPost Reply: Solladi Sivasakthi - Episode 33 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on February 5, 2025, 7:59 PM</div><h1 style="text-align: center"><strong>33</strong></h1> <h1 style="text-align: center"><strong>நீண்டதொரு பிரிவு</strong></h1> <p><img class="aligncenter" src="https://monishanovels.com/wp-content/uploads/2025/02/ss23.jpeg" alt="" width="400" height="400" /></p> <p><strong>சிவசக்தி அந்தச் சந்திப்பை எதிர்பார்க்காதவளாய் வியப்போடு,</strong></p> <p><strong>“எப்போ வந்தீங்க?!” என்று கேட்க,</strong></p> <p><strong>அவளைப் பின்புறம் அணைத்துக் கொண்டிருந்தவன், அவளின் முகத்தைப் பார்த்தபடி வந்து நின்றான். அவளின் தோள்களில் மாலையைப் போல் தன் கரங்களைக் கோர்த்தபடி,</strong></p> <p><strong>“நான் வந்து ரொம்ப நேரமாச்சு... ஜெயா ராமை பார்த்து விஷ் பண்ணேன்... ஜோதி சார்கிட்டயும் மற்ற டீச்சர்ஸ் கிட்டயும் பேசினேன்... அப்புறம் ஆனந்தியை பார்த்து இல்லத்தில இருக்கிறவங்கள பத்தி எல்லாம் விசாரிச்சேன்...</strong></p> <p><strong>எங்கடா என் தேவதையைக் காணோமேன்னு தேடினேன்... போஃன் பண்ணிப் பார்த்தேன்... மேடம் எடுக்கல... கடைசியா ஆனந்திதான் நீ இங்க இருக்கன்ன என்னைக் கூட்டிட்டு வந்தா... நீ என்னடான்னா அவ சொன்னதைக் காதில வாங்காம என்னைச் சீரியஸா திட்டிட்டு இருந்த...” என்று புன்னகை ததும்பிய முகத்தோடு உரைத்துக் கொண்டிருக்கச் சிவசக்தி அவனின் விவரிப்பையும் உடையையும் ஆச்சர்யமாய்ப் பார்த்தவண்ணம் இருந்தாள்.</strong></p> <p><strong>அவன் என்றும் இல்லாமல் வேட்டிச் சட்டையில் இருக்க அது அவனை இன்னும் கம்பீரமாகவும் மிடுக்காகவும் காட்டிக் கொண்டிருந்தது. அந்தத் தோற்றத்தில் அவனைக் கண்டு மெய்மறந்திருந்தவள் முன் சக்திசெல்வன் தன் கையை அசைத்து, “சக்தி” என்று அழைக்க அவள் மீண்டு வந்தாள்.</strong></p> <p><strong>“என்ன... சார் மாப்பிள்ளை மாறி டிரெஸ் பண்ணி இருக்கீங்க?!” என்று கேட்டாள்.</strong></p> <p><strong>“எப்பவுமே பாஃர்மலாவே டிரஸ் பண்ணி போறடிச்சிடுச்சு... அதான் கொஞ்சம் வித்தியாசமாய்... நல்லா இருக்கா சக்தி ?” என்று தன் காதலியின் பதிலுக்காக அவன் ஆவலாகக் காத்திருக்க,</strong></p> <p><strong>அவள் முகத்தைச் சுருக்கியபடி, “ம்ஹும்...” என்று தலையசைத்தாள்.</strong></p> <p><strong>“எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னாங்கடி... உனக்கு மட்டும் என்ன?” என்று புரியாமல் கேட்டான்.</strong></p> <p><strong>“இப்படி உங்களைப் பார்த்தா... பார்க்கிற பொண்ணுங்க மனசெல்லாம் சலனப்படாதா... வேண்டாம்... இனிமே நீங்க பாஃர்மல்லியே வாங்க... அது கொஞ்சம் பெட்டர்...” என்றாள்.</strong></p> <p><strong>அவன் அவள் பதிலை கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி,</strong></p> <p><strong>“இவ்வளவு பொஸஸ்ஸிவ்வாடி நீ... யாரும் என்னைப் பார்க்க கூடக் கூடாதா?” என்று கேட்டான்.</strong></p> <p><strong>“யாரும் பார்க்கவும் கூடாது... நீங்களும் யாரையும் பார்க்கவும் கூடாது... இந்தச் சக்திசெல்வன்... சிவசக்திக்கு மட்டும்தான்” என்றாள்.</strong></p> <p><strong>“அப்படின்னா சரி... நானும் மாப்பிள்ளை மாதிரி டிரஸ் பண்ணிருக்கேன்... நீயும் மணப்பெண் மாதிரிதான் இருக்க... இப்பவே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் குறும்பான புன்னகையோடு.</strong></p> <p><strong>“ஓ... எஸ்... பண்ணிக்கலாமே... நான் ரெடி” என்றாள்.</strong></p> <p><strong>இப்போது சக்திசெல்வன் அவளின் பதிலை கேட்டுப் பார்வையை அகலவிரித்து, “கேட்டதும் ஒகே சொல்லிட்ட?” என்றான்.</strong></p> <p><strong>“ஆமாம்... என் சைடில எந்தப் பிரச்சனையும் இல்ல... எல்லாருக்கும் ஒகே” என்றாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் மௌனமாய் அவள் தெளிவைக் கண்டு ஆச்சரியப்பட அவள் மீண்டும்,</strong></p> <p><strong>“என்னாச்சு மிஸ்டர். சக்தி ?... எப்படிச் சமாளிக்கிறதுன்னு யோசிக்கிறீங்க?... கரெக்டா... எனக்குத் தெரியாதா உங்களைப் பத்தி... உங்க அம்மா கன்வின்ஸாகாம என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கன்னு” என்று புன்னகையித்தாள்.</strong></p> <p><strong>“ஓ... அந்தத் தைரியமா... ஆனா நான் சொன்னது சொன்னதுதான்... இப்போ நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்” என்று இம்முறை கொஞ்சம் அழுத்தமாக உரைத்தான்.</strong></p> <p><strong>இப்போதும் சிவசக்தி அவன் பேச்சை நம்பாமல் முறைத்தபடி</strong></p> <p><strong>“என்ன பூச்சாண்டி காட்டிறீங்களா?” என்றாள்.</strong></p> <p><strong>“ஐம் சீரியஸ்” என்று சொல்லித் தன் கழுத்திலிருந்த தங்க செய்யின்னை எடுத்து அவள் கழுத்தில் மாட்டிவிட்டான்.</strong></p> <p><strong>“என்ன பண்றீங்க... இப்படிச் செய்யின் மாட்டிட்டா உங்க ஊர்ல கல்யாணமா?” என்று புருவத்தை உயர்த்தி வினவினாள்.</strong></p> <p><strong>“மனதை பரிமாறிப்பதும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுதான் கல்யாணம்னா... அது நமக்குள் எப்பவோ நடந்திடுச்சு சக்தி... இல்ல தங்கத்தால் தாலி கட்டினாதான் கல்யாணம்னா... இப்போ நான் போட்டதும் தாலி மாதிரிதான்... என்ன... தாலிக்குப் பதிலா எஸ் டாலர் இருக்கு... எஸ் பாஃர் சக்தி செல்வன்... இப்போ என்னை நான் உன்கிட்டகொடுத்திட்டேன்... தட்ஸ் இட்” என்று பெரிய விஷயத்தைச் செய்துவிட்டு வெகுசாதரணமாய்ப் பதிலளித்தான்.</strong></p> <p><strong>சக்தி அவன் சொன்னதைக் கேட்டுக் வியப்பு குறியோடு, “என்ன சக்தி நீங்க... இதென்னா விளையாட்டா?!” என்று சொல்லி அந்த டாலரை கைகளில் பிடித்துப் பார்த்தாள்.</strong></p> <p><strong>அவன் சொன்ன வார்த்தைகளின் ஆழம் புரிய அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது எனப் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருக்க,</strong></p> <p><strong>“விளையாட்டு இல்ல... வெரி சீரியஸ்... நான் கட்டின வாட்ச்சை கோபத்தில் கழட்டிக் கொடுத்த மாதிரி இதையும் கழட்டின... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சக்திசெல்வன் எச்சரிக்க,</strong></p> <p><strong>அந்தச் செயலின் மூலம் அவனின் காதலை உணர்ந்தவ, “நோ... கழட்ட மாட்டேன்” என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டுச் சிவசக்தி அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ்” என்றாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வனும் அவளை இறுக அணைத்துக் கொள்ள அந்த வெகுநாள் பிரிவை இருவரும் சமன்படுத்த அந்த நெருக்கத்தில் இருவரும் கரைந்துப் போயினர்.</strong></p> <p><strong>முதலில் சிவசக்தி மெல்ல அவனின் அணைப்பில் இருந்து மீண்டபடி அவனை நிமிர்ந்து நோக்கி,</strong></p> <p><strong>“நீங்க எப்போ என்ன பண்ணுவீங்கன்னே என்னால புரிஞ்சிக்கவே முடியல சக்தி... சரி வாங்க வெளியே போகலாம்... யாராவது ரூமுக்கு வந்திடப் போறாங்க” என்று சொல்லி விலகிச் சென்றவளின் கைகளைப் பிடித்துத் தடுத்தபடி “நான் கிளம்பனும் சக்தி” என்றான்.</strong></p> <p><strong>அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியோடு திரும்பி,</strong></p> <p><strong>“இப்பத்தானே வந்தீங்க... உடனே கிளம்பனுமா?” என்று கேட்டு முகம் வாடினாள்.</strong></p> <p><strong>அவன் அவள் முகத்தைத் தன் விரல்களால் மெல்ல வருடியபடி,</strong></p> <p><strong>“இப்ப உடனே ப்ஃளைட் பிடிச்சாதான்... டெல்லிக்கு போக முடியும்... கிளைன்ட் மீட்டிங் அட்டன்ட் பண்ண முடியும்” என்று அவன் தன் நிலைமையை எடுத்துரைக்க,</strong></p> <p><strong>“இப்படி வந்துட்டு உடனே போறதுக்கு வராமலே இருக்கலாம்...” என்று சிவசக்தி கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.</strong></p> <p><strong>மீண்டும் சக்திசெல்வன் அவள் முகத்தைத் தன் புறம் திருப்பி,</strong></p> <p><strong>“இப்படிச் சொன்னா நான் என்ன பண்றது சக்தி... வந்தாலும் தப்பு... வரலனாலும் தப்பா?” என்று தவிப்போடு கேட்க சிவசக்தி விழியோரத்தில் நின்றிருந்த அவள் கண்ணீரை துடைத்தபடி,</strong></p> <p><strong>“ஒகே ஒகே... ஐ அன்டர்ஸ்டான்ட்... நீங்க கிளம்புங்க” என்றாள்.</strong></p> <p><strong>“சும்மா கிளம்புங்கன்னு சொன்னா... கொடுக்க வேண்டியது கொடுக்கலியே” என்று அவன் அவளின் இதழ்களை நெருங்கியபடி கேட்க, அவள் அவன் முகவாயை பிடித்துத் திருப்பிக் கன்னத்தில் அவள் இதழ்களைப் பதித்தாள்.</strong></p> <p><strong>“கொடுத்தாச்சு... போலாமா?” என்று சிவசக்தி நகர்ந்துச் செல்ல,</strong></p> <p><strong>சக்திசெல்வன் ஏமாற்றத்தோடு, “திஸ் இஸ் சீட்டிங்... நான் இதை ஒத்துக்கமாட்டேன்” என்றான்.</strong></p> <p><strong>சிவசக்தி அவனைப் பார்த்து சிரித்தபடி, “நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிலானாலும் இப்போதைக்கு இவ்வளவுதான்” என்று சொல்லியபடி அறைக் கதவை திறந்து வெளியே சென்றாள்.</strong></p> <p><strong>“சக்தி... ப்ளீஸ்... டோன்ட் டூ திஸ் டூ மீ... இட்ஸ் நாட் பேஃர்” என்று சொல்லி அவன் கெஞ்சிக் கொண்டே பின்னோடு வர,</strong></p> <p><strong>சிவசக்தி அவனைக் கவனியாமல் நேராக மேடையில் நின்று கொண்டிருந்த ஜெயா ராம் அருகில் போய் நின்று கொண்டாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் சிவசக்தியை முறைத்தபடி ராமின் அருகில் வந்து கைக் குலுக்கிவிட்டு,</strong></p> <p><strong>“நான் போயிட்டு வர்றேன் ராம்... ஜெயாவோட வால்தனமும் துருதுருப்பும் எப்பவுமே மாறிடாம பாத்துக்கோங்க... அதுதான் அவளோட அடையாளமே” என்றான்.</strong></p> <p><strong>ராமும் முகத்தில் புன்னகையோடு, “ம்... பாத்துக்கிறேன்” என்று தலையாட்டினான்.</strong></p> <p><strong>ஜெயா அவனிடம், “இப்பதான் வந்தீங்க... அதுக்குள்ள கிளம்பனும்னு சொன்னா எப்படி?!” என்று வருத்தத்தோடு கேட்டாள்.</strong></p> <p><strong>“புரிஞ்சிக்கோ ஜெயா... வேலை இருக்கு” என்று சொல்ல ஜெயாவும் அவனின் நிலைமையைப் புரிந்தபடி,</strong></p> <p><strong>“ஒகே ப்ரோ... டேக் கேர்” என்று சொல்லி தலையாட்டினாள்.</strong></p> <p><strong>எல்லோரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு அவன் வாசலில் நின்ற தன் காரை நோக்கிச் செல்ல பின்னோடு வழியனுப்ப வந்த சிவசக்தியை கோபமாய்ப் பார்த்தான். அந்தப் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல்</strong></p> <p><strong>“சாரி சக்தி... கோபமா போகாதீங்க... ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.</strong></p> <p><strong>“நீ கூப்பிட்டதும் என் வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடி வந்தேன் இல்ல... அதுக்கு எனக்குத் தேவைதான்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டவனின் கைகளைப் பிடித்தபடி,</strong></p> <p><strong>“இதுக்கெல்லாமா கோச்சுப்பாங்க... விடுங்க சக்தி” என்றாள்.</strong></p> <p><strong>“நான் இதை விடமாட்டேன்... எல்லாத்துக்கும் மொத்தமா உன்கிட்ட இருந்து வட்டியும் முதலுமா வசூல் பன்றேனா இல்லையான்னு மட்டும் பாரு” என்றான்.</strong></p> <p><strong>“சரி பார்க்கிறேன்... இப்போ உங்க கோபத்தை விட்டுவிட்டு... கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்களேன்” என்று மீண்டும் அவள் கெஞ்ச,</strong></p> <p><strong>அவன் அவளின் பரிதாபமான முகப் பாவனையைப் பார்த்துக் கொஞ்சம் இறங்கி இயல்பாக மாறிப் புன்னகைச் செய்தபடி, “பை சக்தி... டே கேர்...” என்று சொல்லி கார் கதவை திறக்க சென்றவனிடம், “சக்தி ஒரு நிமிஷம்...” என்றாள்.</strong></p> <p><strong>அவன் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்க்க,</strong></p> <p><strong>“நீங்க உங்கம்மாகிட்ட நார்மலா பேசறீங்கதானே?” என்று வினவினாள்.</strong></p> <p><strong>அவன் சிறிது நேரம் யோசித்தபடி, “நான் நார்மலா பேசிறேன்... ஆனால் அவங்கதான் என் மேல கோபமா இருக்காங்க... சரியா பேசிறதில்லை” என்றான்.</strong></p> <p><strong>“கோபமா இருக்காங்கன்னு காரணம் சொல்லாம நீங்க அவங்ககிட்ட சமாதானமா பேசுங்க... அவங்க இடத்தில இருந்து பார்த்தால் அவங்க செய்றது நியாயம்தான்... அவங்க சொன்னதில எந்தத் தப்பும் இல்லை சக்தி” என்று சிவசக்தி சொல்ல அவன் அவளை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.</strong></p> <p><strong>“அவங்க பக்கம் தப்பு இல்லைன்னு எதை வைச்சு சொல்ற?!” என்று வினவினான்.</strong></p> <p><strong>“இத்தனை செல்வாக்குப் பணம் பதவிக்கு இடையிலும் உங்களை இவ்வளவு பொறுப்பா நல்லவரா வளர்த்திருக்காங்கன்னா... நிச்சயம் அவங்க தப்பு செய்யறவங்களா இருக்கவே முடியாது...</strong></p> <p><strong>அவங்க என்னை வேண்டாம்னு சொல்ல ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்குன்னு எனக்குத் தோணுது... நீங்க அதை முதல தெரிஞ்சிக்கிட்டு... அப்புறம் நம்ம காதலை பத்தி பொறுமையா எடுத்துச் சொல்லி புரிய வையுங்க” என்றாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் அவளின் பேச்சைக் கேட்டு நெகிழ்ச்சியோடு, “என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியல... எங்க அம்மாவை நம்ம கல்யாணத்துக்குக் கன்வின்ஸ் பண்ணிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது.</strong></p> <p><strong>ஆனா உங்க இரண்டு பேரோட உறவு எப்படி இருக்குமோன்னு பயந்துட்டு இருந்தேன்... ஆனா இப்போ அந்தப் பயம் இல்லை... நீ அம்மாவை புரிஞ்சிக்கிட்ட மாதிரி அம்மாவும் உன்னை நிச்சயம் புரிஞ்சிப்பாங்க... நீ புரிய வைச்சிடுவ… நான் இப்போ உண்மையிலேயே ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்... தேங்க்யூ சோ மச்...” என்று சக்திசெல்வன் சொல்லி சுற்றும் முற்றும் பார்த்து யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அவளைத் தன் புறம் இழுத்துக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விடுவித்தான்.</strong></p> <p><strong>சிவசக்தி நாணத்தோடு கன்னத்தைத் துடைத்தபடி,</strong></p> <p><strong>“என்ன சக்தி இது... கொஞ்சம் இடம் பொருள் தெரியாம” என்றாள்.</strong></p> <p><strong>அப்போது சக்திசெல்வனின் முகம் பிரகாசமாய் மின்ன, “என் கண்ணுக்கு எந்த இடமும் தெரியல... பொருளும் தெரியல... நீ மட்டும்தான் தெரிஞ்ச” என்று சொல்லி கண்ணடித்துச் சிரித்துவிட்டு, “ஒகே பை டியர்... டேக் கேர்” என்று உரைத்துவிட்டு அவன் காரில் ஏற சிவசக்தி புன்னகையோடு அவனை வழியனுப்பினாள்.</strong></p> <p><strong>அவர்களின் ஆழமான காதலை உணர்ந்து கொள்ள அந்தச் சில நிமிட சந்திப்பே போதுமானது. அதற்குப் பிறகான நீண்ட பிரிவினையும் கூட அவர்கள் காதலின் உறுதியைக் குலைத்துவிட முடியாது.</strong></p> <p><strong>சிவசக்திக்கு இம்முறை அவனின் பிரிவு வலியை விட இன்பமான அனுபவத்தையே ஏற்படுத்தி இருந்தது.</strong></p> <p><strong>அன்று ஜெயாவின் திருமண வைபவம் இனிதே முடிந்துவிட்ட நிலையில் சக்தியும், ஜெயாவின் தாய் தந்தையரும் அவளைக் கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர். ஜெயாவும் கண்ணீர் நிரம்பிய கண்களோடு புறப்பட்டுச் செல்ல ராம் அவளைச் சமாதானம் செய்தபடி அழைத்துச் சென்றான்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் டெல்லிக்குச் சென்ற பிறகு அவன் வேலையில் சிக்குண்டான். இதற்கிடையில் அவன் அம்மாவை சந்தித்துப் பேசிப் புரிய வைக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே இருந்தது. இருவரும் மாறி மாறி தம் வேலைகளில் மும்முரமாகி விட்டிருந்தனர்.</strong></p> <p><strong>அன்று சக்திசெல்வன் எப்படியாவது தன் அம்மாவிடம் பேசிவிட வேண்டும் என மீனாக்ஷியின் அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் மீனாக்ஷி வேலையில் ஆர்வமாய் இருப்பது போல் பாவனைச் செய்து கொண்டிருந்தார்.</strong></p> <p><strong>சக்தி தன் அம்மாவின் முன்னே வந்து நின்று, “மாம் உங்ககிட்ட பேசனும்” என்றான்.</strong></p> <p><strong>“நான் பிஸியா இருக்கேன் சக்தி... நாம அப்புறம் பேசுவோமே” என்றார்.</strong></p> <p><strong>“நான் இப்பவே பேசனும்... எனக்காக உங்க வேலையைக் கொஞ்ச நேரம் ஒதுக்கி வையுங்க” என்று அவன் தீர்க்கமாக உரைக்க,</strong></p> <p><strong>மீனாக்ஷி அவனை நிமிர்ந்து நோக்கிய போது அவன் பேசியே தீருவேன் என்று பிடிவாதமாய் நின்றிருந்ததைக் கவனித்தார்.</strong></p> <p><strong>இப்போது தன் வேலைகளை ஒதுக்கி விட்டு வேண்டா வெறுப்பாய்,</strong></p> <p><strong>“ம் சொல்லு” என்றார்.</strong></p> <p><strong>“சிவசக்தியை நான் காதலிக்கிறேன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும்... அவதான் எனக்கு மனைவியா வரனும்னு நான் ஆசைப்படறேன்... இதுதான் என் முடிவு... உங்க முடிவு என்ன?” என்று பளிச்சென்று கேட்டுவிட்டான்.</strong></p> <p><strong>“அதான் உன் முடிவை நீ தீர்க்கமா சொல்லிட்டியே... அதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?!” என்று மீனாக்ஷி சொல்லிவிட்டு அலட்சியமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.</strong></p> <p><strong>“என்னோட எல்லா டெசிஷனை நீங்க ஏத்துக்கிட்டு இருந்திருக்கீங்க... இப்ப மட்டும் என்ன மாம்?!”</strong></p> <p><strong>“இதுவரைக்கும் நீ என் மகனா இருந்த... ஆனா இப்போ?” என்று குழப்பமாக அவர் அவனை நோக்க,</strong></p> <p><strong>“இப்போ இல்ல... நான் எப்பவுமே உங்க மகன்தான்... அதுல எந்த மாற்றமும் இல்லை” என்றான்.</strong></p> <p><strong>“அப்படின்னா நான் சொல்ற விஷயத்தை மறுக்காம செய்யனும்... செய்வியா சக்தி?”</strong></p> <p><strong>“சிவசக்தியை விட்டுவிட்டு நான் வேறொரு பெண்ணைக் கல்யாணம் பன்றதை தவிர வேற எது சொன்னாலும் நான் கேட்கிறேன்” என்றான்.</strong></p> <p><strong>“அப்படின்னா கம்பிளீட்டா லாஸ்ல போயிட்டிருக்கிற துபாயில் ஒரு பெரிய ஹோட்டல் விற்பனைக்கு வந்திருக்கு... அந்த ஹோட்டலை யாருமே வாங்க தயாராயில்லை.</strong></p> <p><strong>ஆனா உங்கப்பா அதை வாங்க டிசைட் பண்ணிட்டிருக்கார்... நஷ்டத்தில போயிட்டிருக்கிற அந்த ஹோட்டலை நீ தனியா நிர்வகிச்சு... உன் திறமையால லாபகரமானதா மாத்தனும்... ரொம்பச் சேலஞ்சிங்கான டாஸ்க்... உன்னால முடியுமா?!” என்று கேட்டார்.</strong></p> <p><strong>முடியுமா என்று தன் அம்மா கேட்பது அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தன் மீதான நம்பிக்கை தன் அம்மாவுக்குக் குன்றிவிட்டதை அவன் அப்போது உணர்ந்து கொண்டான்.</strong></p> <p><strong>“நீங்க இப்படி என்கிட்ட கேட்டிருக்கக் கூடாது... நான் எந்த விஷயத்தையாவது செய்ய முடியாதுன்னு பின்வாங்கி இருக்கேனா?!” என்று கோபம் கலந்த தொனியில் உரைத்தான்.</strong></p> <p><strong>மீனாக்ஷி கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு,</strong></p> <p><strong>“தென் கோஹெட் சக்தி... நீ உன்னை நிரூபிக்கக் கிடைச்சிருக்கிற பெரிய வாய்ப்பு இது” என்றார்.</strong></p> <p><strong>சக்தி பேச வந்தது ஒன்று. ஆனால் அவன் அம்மா அவனை முற்றிலும் வேறு திசையில் திருப்பி அவன் பேச எண்ணியதை மாற்றி விட்டார். அவனுக்குத் தன் அம்மாவின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியக்கவே தோன்றியது.</strong></p> <p><strong>அவன் யோசித்தபடி நிற்க மீனாக்ஷி அவன் முகத்தைப் பார்த்து, “வேறு ஏதாவது விஷயம் சொல்லனுமா” என்று கேட்க,</strong></p> <p><strong>“சிவசக்தியை நான் கல்யாணம் பண்ணிக்கிறதை பத்தி உங்க முடிவை நீங்க சொல்லவே இல்லையே மாம்” என்று மீண்டும் கேட்டான்.</strong></p> <p><strong>“நான் சொன்ன விஷயத்தை நீ செய்... நீ சொன்ன விஷயத்தைப் பத்தி நான் யோசிக்கிறேன்” என்று இறுதியாக உரைத்துவிட்டு மீண்டும் தன் வேலையில் இறங்கினார்.</strong></p> <p><strong>அதற்கு மேல் சக்திசெல்வன் மீனாக்ஷியிடம் பேசாமல் புறப்பட்டான். அவன் அம்மாவின் திட்டம் அவனுக்குப் புரியாமல் இல்லை. தன்னையும் சிவசக்தியும் வெகு தொலைவு தள்ளி வைப்பதே அவரின் எண்ணம். ஆனால் இந்தப் பிரிவு அவர்களின் காதலை பலவீனமாய் மாற்றிவிடாது என்ற உறுதியாக நம்பினான்.</strong></p> <p><strong>சிவசக்தியிடமும் அவன் இது குறித்துச் சொல்ல அவளும் தைரியமாகச் சம்மதம் தெரிவித்துவிட்டாள். அவளுக்கு சக்தியின் மீது அசாத்தியமான நம்பிக்கை இருந்தது. இருப்பினும் அவள் அவனுக்குத் தைரிய வார்த்தைகள் சொன்னாலும் மனதளவில் பெரும் வேதனையை அடைந்திருந்தாள்.</strong></p> <p><strong>அவர்கள் வாழ்வில் இதுவரையில் வந்த இடைவெளி எல்லாம் ஒன்றுமில்லை என்றளவுக்கு அத்தனை பெரிய நீண்டப் பிரிவை அவர்கள் கடந்து வர நேரிட்டது.</strong></p> <p><strong>சிவசக்தியும் யூ. பி. எஸ். சி நேர்முகத் தேர்வை எதிர் கொண்டு வெற்றியும் கண்டுவிட்டாள். ஐ. ஏ. எஸ் தேர்வில் வெற்றி கண்டதில் பாராட்டுக்கள் அவளுக்கு ஏராளமாய்க் குவிந்தன.</strong></p> <p><strong>பிறகு சிவசக்தி இரண்டு வருட ஐ. ஏ. எஸ் பயிற்சிகளைக் கடந்து வர வேண்டி இருந்தது. இதற்கிடையில் ஒரே ஒரு முறை கூட அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவேயில்லை. அவர்கள் இருவருமே சந்திக்கும் தருணம் எப்போது என்பதற்கான விடை அவர்களுக்கே தெரியவில்லை.</strong></p> <p><strong>உண்மையிலேயே அவர்கள் காதலை மனதில் சுமந்தபடி பயணித்து வந்த பாதை முடிவற்றதாய் போய்க் கொண்டே இருக்க, சிவசக்திக்கு முசோரியில் பயிற்சி காலம் முடிந்து ராமநாதபுரத்தில் சப்-கலெக்டர் பதவியில் பணியாற்றும்படியாக அறிவுறுத்தப்பட்டது.</strong></p> <p><strong>இப்போது நம் முன்னிலையில் நிற்பது அவசர புத்தியோடும் அசட்டுத் தைரியத்தோடும் அதீத கோபம் கொண்டு பார்த்த சிவசக்தி இல்லை வாசகர்களே!</strong></p> <p><strong>இந்த இரண்டு வருடத்தில் அவள் கற்றுக் கொண்ட அனுபவமும், சந்தித்த பல்வேறு விதமான மனிதர்களுடனான பழக்கங்களும், காதலனின் பிரிவும் அவள் தோற்றத்தை முற்றிலுமாய் மாற்றி வேறுவிதமாய் நம் முன் தோன்றச் செய்தது.</strong></p> <p><strong>சிவசக்தி முகத்தில் வெளிப்பட்ட கம்பீரமான அழகு, பார்வையில் தெரிந்த தெளிவு, அவளின் உயரமான உருவத்திற்கு ஏற்ற நிமிர்ந்த நடை, ரசிப்பைத் தாண்டி மரியாதையாய் பார்க்க வைக்கும் உடை மாற்றம் என அவள் நம் பாரதி கண்ட புதுமை பெண்ணின் மொத்த இலக்கணமாகவே காட்சியளித்தாள்.</strong></p> <p><strong>சிவசக்தி பயிற்சி மையத்தில் இருந்து சென்னைக்குச் சென்ற பின் தன் வேலையில் சேர்வதற்கு எண்ணிக் கொண்டிருக்கையில் மீனாக்ஷியின் செகரெட்டிரியின் அழைப்பு வந்தது.</strong></p> <p><strong>மீனாக்ஷி சிவசக்தியை சந்திக்க விரும்புவதாகவும் அவளை டெல்லிக்கு வரும்படி கேட்க, சக்திக்கு மறுக்க மனம் வரவில்லை. அவள் சென்னைக்குச் செல்வதற்கு முன்பு அந்த அழைப்பை ஏற்று மீனாக்ஷியை பார்க்கச் சென்றாள்.</strong></p> <p><strong>மீண்டும் டெல்லி விமான நிலையத்தைச் சிவசக்தி வந்தடைந்தாள். ஒவ்வொரு முறையும் தான் அங்கே சக்திசெல்வனைச் சந்திக்க நேரிட்டதை எண்ணிக் கொண்டாள். இம்முறையும் அவ்வாறு பார்க்க முடியுமா என்று எண்ணியபடி தயங்கி நிற்க அவள் யோசனையைத் தடை செய்யும் விதமாய் ஒரு ஆடவன் அவளை நெருங்கி,</strong></p> <p><strong>“நீங்க மிஸ். சிவசக்தியா?” என்று விசாரித்தான்.</strong></p> <p><strong>“எஸ்” என்று சொல்ல அந்த ஆடவன், “மேடம் உங்களுக்காக வெயிட் பன்றாங்க” என்று அழைத்துச் சென்றான்.</strong></p> <p><strong>சிவசக்தியை ஒரு சிவப்பு நிற கார் அருகில் அந்த ஆடவன் அழைத்துச் சென்று உள்ளே ஏறச் சொன்னான். சக்தி கொஞ்சம் யோசனையோடு உள்ளே ஏற மீனாக்ஷி தனக்கே உரியக் கம்பீரத்தோடு அமர்ந்திருந்தாள்.</strong></p> <p><strong>அவர்கள் இருவருக்கும் இது அறிமுகச் சந்திப்பு இல்லையெனிலும் இதுதான் முதல் முறை அவர்கள் இருவரும் நேரெதிராய் பேசிக் கொள்ளப் போவது.</strong></p> <p><strong>37</strong></p> <p><strong>சிவசக்தியின் சவால்</strong></p> <p><strong>மீனாக்ஷி சிவசக்தியை அவளின் மனதை துளைப்பது போல உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவசக்தியோ சக்தியை சந்திக்க இயலுமா என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவர்களுக்கு இடையில் நிலவிய மௌனத்தை அப்போது மீனாக்ஷி கலைத்தார்.</strong></p> <p><strong>“சிவசக்தி ஐ. எ. ஏஸ்... முதல் முயற்சியிலேயே உன் இலட்சியத்தில் வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.</strong></p> <p><strong>சிவசக்தி அந்தப் பாராட்டினை எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியாமல், “தேங்க்யூ மேடம்” என்று சொல்லி மெலிதாய் புன்னகையித்தாள்.</strong></p> <p><strong>“உன் இலட்சியத்தில் போராடி நீ ஜெய்ச்சிருக்கலாம்... ஆனால் நீ உன் காதலில் வெற்றி பெறுவது கஷ்டம்தான்” என்றார் மீனாக்ஷி அலட்சியமாக.</strong></p> <p><strong>இத்தனை பெரிய காத்திருப்பைத் தாண்டி இப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவா தான் இங்கே வந்தோம் என்று எண்ணியபடி சிவசக்தி மீனாக்ஷியை பார்த்தாள்.</strong></p> <p><strong>மேலும் மீனாக்ஷி தொடர்ந்து, “நீ சக்தியை உண்மையா காதலிச்ச என்பதை நான் மறுக்கல... ஆனா யதார்த்தத்தைப் புரிஞ்சிகிட்டு நீ உன் காதலை மறப்பதுதான் உங்க இரண்டு பேருக்கும் நல்லது” என்றார்.</strong></p> <p><strong>“புரியல மேடம்... அது என்ன யதார்த்தம்?!” என்று சக்தி புரியாமல் கேட்டாள்.</strong></p> <p><strong>“நீங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணி ஒன்றா வாழ்வது என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்” என்று அழுத்தமாய் மீனாக்ஷி உரைக்க அவர் சொன்னது சக்தியின் மனதை இரண்டாய்ப் பிளப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது.</strong></p> <p><strong>எனினும் அவள் தன் மனதைரியத்தை விட்டுவிடாமல் இன்னும் அழுத்தமாக,</strong></p> <p><strong>“ஏன் நாங்க இரண்டு பேரும் ஒண்ணா வாழ முடியாது?” என்று கேள்வி எழுப்பினாள்.</strong></p> <p><strong>“எப்படி முடியும்... நீ ஐ. ஏ. எஸ் முடிச்சிருக்க... உனக்குப் போஸ்ட்டிங் எங்க போட்டிருக்காங்களோ அங்கதான் நீ வேலை செஞ்சாகனும்... அங்கயே இருந்தாங்கனும்... என் பையன் அவங்க அப்பாவோட பிஸ்னஸ்ஸை பாத்துக்கனும்... அவன் உலகம் பூரா சுத்துவான்... இந்தியாவில் இருக்கும் போது கூட அவன் உன் கூட நீ வேலை செய்ற இடத்தில வந்து இருக்க முடியாது... அவன் இருக்கிற இடத்தில உன்னாலையும் இருக்க முடியாது.</strong></p> <p><strong>இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்கப் போகுது... இந்த யதார்த்தம் உங்க திருமணத்திற்குப் பிறகான காதலை காணாமல் போக வைச்சிடும்... அதுக்கு நீங்க இப்பவே பிரிஞ்சிட்டா பெட்டர்… இல்லயா ?” என்று மீனாக்ஷி தெளிவாய் நிலைமையை விளக்கினார்.</strong></p> <p><strong>சிவசக்தியின் முகத்தில் இதைக் கேட்டுக் கலக்கம் உண்டாகும் என்று மீனாக்ஷி நினைத்தார். ஆனால் சிவசக்தி இயல்பாய் புன்னகைப் புரிந்து விட்டு,</strong></p> <p><strong>“நீங்க சொல்ற யதார்த்தை நானும் ஏத்துக்கிறேன்... அது மறுக்க முடியாத உண்மையும் கூட... நாங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறது கூடக் கொஞ்சம் சவாலான காரியம்தான்.</strong></p> <p><strong>என் காதலை காப்பாற்ற எந்தச் சவாலையும் சமாளிக்கிற மனதைரியம் எங்களுக்கு இருக்கு மேடம்... இந்தக் காரணங்களுக்காக எல்லாம் பயந்து எங்க காதலை நாங்க விட்டுக் கொடுக்கவே முடியாது...” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தாள்.</strong></p> <p><strong>“இன்னைக்கு விட்டு கொடுக்கலன்னா நாளைக்கு அந்தக் காதல் இல்லாமலே போயிடலாம்... இப்போ பிரிஞ்சிட்டா அது வெறும் காதல் தோல்வி... திருமணத்திற்குப் பிறகு பிரிவு ஏற்பட்டா உங்க வாழ்க்கையே தோல்வி... எது பெட்டர் ஆப்ஷன்னு நீயே யோசிச்சு பாரு” என்றார் மீனாக்ஷி.</strong></p> <p><strong>சிவசக்தி மீண்டும் புன்னகைப் புரிந்துவிட்டு,</strong></p> <p><strong>“எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலன்னு யார் சொன்னது?!” என்று கேட்க மீனாக்ஷி அப்படியே அதிர்ந்து போய்</strong></p> <p><strong>“நீ என்ன சொல்ற?” என்று சிவசக்தியை கேட்டாள்.</strong></p> <p><strong>“எப்போ நான் சக்தியோட காதலை புரிஞ்சிக்கிட்டு மனதளவில் காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே நான் சக்தியை என்னோட கணவராதான் பார்க்கிறேன்... இனிமே நடக்கப் போகிற திருமணம் ஊருக்கு எங்க உறவை அறிவிக்கிற சடங்கு மட்டும்தான் “ என்று பதில் உரைத்தாள்.</strong></p> <p><strong>இதைக் கேட்ட மீனாக்ஷியின் உறுதி தளர்ந்தது. ஒருவரை ஒருவர் சந்திக்காமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சிவசக்தியின் காதலும் அவளின் உறுதியும் மீனாக்ஷியை நெகிழச் செய்தது.</strong></p> <p><strong>“சக்தியும் நீயும் கடைசியா எப்போ போஃன்ல பேசிக்கிட்டீங்க” என்று மீனாக்ஷி வினவ,</strong></p> <p><strong>“கடைசியா ஆறு மாசம் இருக்கும்... டிரெய்னிங் ரொம்பச் சீரியஸா போயிட்டிருந்தது... அவரும் ரொம்பப் பிஸியா இருந்ததால்... பேசிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிக்கிட்டோம்” என்றாள்.</strong></p> <p><strong>“நீ இப்போ சக்தியை மீட் பண்ணும் போது அவன் வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருந்தா நீ என்ன பண்ணுவ?!” என்று மீனாக்ஷி சொல்லிவிட்டு வேறுவிதமான உணர்ச்சிகளைச் சிவசக்தியிடம் எதிர்பார்த்தாள்.</strong></p> <p><strong>ஆனால் அவள் முகத்தில் சிறு சலனமும் கூடத் தென்படவில்லை. அவள் புன்னகையோடு,</strong></p> <p><strong>“சக்தி வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுவாருங்கிற பேச்சுக்கே இடமில்லை... அப்படி ஒண்ணு சாத்தியமே இல்லை” என்று தீர்க்கமாய் உரைத்தாள்.</strong></p> <p><strong>“சாத்தியம் இல்லைங்கிறது அப்புறம்... அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்ன பண்ணுவ?”</strong></p> <p><strong>“அப்படி ஒரு சூழ்நிலை வராதுன்னு போது அந்தக் கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லனும்... நீங்க இல்லை... சக்தியே நேரடியா வந்து நான் வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொன்னா கூட நான் நம்பமாட்டேன்... அதுவும் நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்” என்று சக்தி சொல்ல மீனாக்ஷி தன் மகன் மீதான அவளின் ஆழமான நம்பிக்கையைக் கண்டு வியந்து மௌனமாகி விட,</strong></p> <p><strong>அந்தச் சமயத்தில் சிவசக்தியை நோக்கி வேறொரு குரல்,</strong></p> <p><strong>“நானே சொன்னாலும் நம்பமாட்டியா சக்தி?” என்றது.</strong></p> <p><strong>அந்தக் குரல் சக்திசெல்வனுடையது என்று அறிந்து கொண்ட மறுகணம் காரின் முன்புறத்தில் அமர்ந்து அவன் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். ஆச்சரியப்படுத்துவதிலும் அதிர்ச்சி தருவதிலும் அவனுக்கு நிகர் அவனே.</strong></p> <p><strong>எத்தனை நாளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இத்தனை நேரம் உறுதியோடு மீனாக்ஷியின் கேள்விக்கெல்லாம் பதில் உரைத்துக் கொண்டிருந்த சிவசக்தியின் விழிகளின் வழியே ஆனந்தத்தினால் வெளிப்படும் அந்த நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.</strong></p> <p><strong>அவளின் அமைதியும் வெளிப்படும் அழுகையும் சக்திசெல்வனையும் கலங்கடிக்க, “சக்தி... என்னாச்சு?” என்று பதறினான்.</strong></p> <p><strong>இன்னும் மீனாக்ஷியால் அவர்களின் உண்மையான காதலை புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன? மீனாக்ஷி சிவசக்தியின் நிலையைப் புரிந்து கொண்டவாறு அவள் தோள்களை ஆறுதலாய் தடவி,</strong></p> <p><strong>“சிவசக்தி ரிலாக்ஸ்... என் மகனுக்கு உன்னை விடப் பொருத்தமான வேறு ஒரு பெண்ணை என்னால் நிச்சயம் கொண்டு வரவே முடியாது... அவனின் காதலை நீ உதாசீனப்படுத்திறியோன்னு நான் உன் மேல கோபப்பட்டேன்...</strong></p> <p><strong>ஆனா நீ பேசினதைக் கேட்ட பிறகு எனக்கு நல்லா புரியுது... நீயும் சக்தியை எந்தளவுக்குக் காதலிக்கிறன்னு... அதுவுமில்லாம அவன் மேல நீ வைச்சிருக்கிற நம்பிக்கையைப் பார்க்கும் போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஐ ஹேவ் நோ வார்ட்ஸ் டூ ஸே... நீதான் சிவசக்தி என் மருமகள்... நான் முடிவே பண்ணிட்டேன்...” என்று சொல்லிவிட்டு மீனாக்ஷி தன் மகனின் புறம் திரும்பி,</strong></p> <p><strong>“உன் டெசிஷன்தான் கரெக்ட் சக்தி... நான்தான் சிவசக்தியை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... இப்போ நீ ஹேப்பிதானே” என்று மீனாக்ஷி கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சக்திசெல்வன் காரை நிறுத்தினான்.</strong></p> <p><strong>மீனாக்ஷியின் வார்த்தைகளைக் கேட்டு சிவசக்தி இப்போது முகத்தைத் துடைத்துக் கொண்டு தெளிவுப்பெற்றிருந்தாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன், “தேங்க்யூ மாம்... தேங்க்யூ சோ மச்... ஐம் வெரி ஹேப்பி” என்று ஆனந்தத்தின் மிகுதியால் வார்த்தை வராமல் அவன் தத்தளிக்க,</strong></p> <p><strong>சிவசக்தி கொஞ்சம் குழப்பத்தோடு நடந்த நாடகமெல்லாம் என்னவென்று புரியாமல் இருவரையும் நோக்க மீனாக்ஷி நடந்தவற்றை அவளிடம் விவரித்தாள்.</strong></p> <p><strong>“சக்தி துபாயில் இருந்து வந்த பிறகு உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதமா இருந்தான்... என்னாலயும் என் முடிவை விட்டுக் கொடுக்க முடியல... கடைசியா அவன் என்கிட்ட... நீங்க சிவசக்திக்கிட்ட ஒருதடவை பேசுங்க… அப்படி உங்களுக்குப் பிடிக்கலங்கிற பட்சத்தில் நீங்க பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்” என்று மீனாக்ஷி உரைக்கச் சிவசக்தி விவரிக்க முடியாத கோபத்தோடு அவனை முறைத்தாள்.</strong></p> <p><strong>அவள் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல்</strong></p> <p><strong>“என்ன மாம் நீங்க இப்படிப் போட்டு கொடுத்திட்டீங்க?” என்று மீனாக்ஷியிடம் கேட்க,</strong></p> <p><strong>அவள் சிரித்தபடி, “நீ சொன்னதைத்தான் சொன்னேன் சக்தி... இதுல என் தப்பு என்ன?” என்று உரைத்த மறுகணம் “மாம்” என்று சக்திசெல்வன் முகத்தைச் சுருக்கினான்.</strong></p> <p><strong>“சரி சிவசக்தி... நான் கோவிலுக்குப் போறேன்... நீங்க இரண்டு பேரும் பேசிட்டுச் சீக்கிரம் வந்து சேருங்க...” என்று காரை விட்டு மீனாக்ஷி உத்தர சுவாமிமலை கோவிலை நோக்கி நடந்து சென்றாள்.</strong></p> <p><strong>அப்போதுதான் சிவசக்தி கார் நின்றிருப்பது கோவில் வாசலில் என்பதைக் கவனித்தாள். சக்திசெல்வன் தன் இருக்கையில் இருந்து இறங்கி சிவசக்தியின் அருகில் வந்து அமர அவள் கோபத்தோடு முறைத்துக் கொண்டிருந்தாள்.</strong></p> <p><strong>“இப்போ எதுக்குடி முறைக்கிற... என் மேல உனக்கு இருக்கிற அதே நம்பிக்கை எனக்கு உன் மேல இருக்காதா என்ன? அதனாலதான் அவங்களை உன்கிட்ட பேச வைக்க அப்படிச் சும்மா சொன்னேன்” என்றான்.</strong></p> <p><strong>“வேறு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சும்மா கூடச் சொல்வாங்களா... உங்க அம்மா என்கிட்ட பேசிட்டு பிடிக்கலன்னு சொல்லி இருந்தா?”</strong></p> <p><strong>“அதெப்படி சொல்லுவாங்க... நீ எங்கம்மாவை நிச்சயம் கன்வின்ஸ் பண்ணிடுவேன்னு எனக்கு நிறைய நம்பிக்கை இருந்துச்சு... அப்படிச் சொன்னாதான் அவங்களை உன்கிட்ட பேச வைக்க முடியும்னு தோணுச்சு... நான் நினைச்ச மாதிரியே நீதான் அவங்க மருமகன்னு சொல்ல வைச்சிட்டியே சக்தி... யூ ஆர் கிரேட்.</strong></p> <p><strong>ஆனா என்ன... நீ அம்மாகிட்ட பேசும் போது நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னதும் பயந்துட்டேன்... எங்க செய்யினை எடுத்து காண்பிச்சிருவியோன்னு... அப்புறம் மாம் எனக்குத் தெரியாம இது எப்போன்னு கேட்டு டென்ஷனாயிருப்பாங்க” என்றுசொல்லி சிரித்தான்.</strong></p> <p><strong>சிவசக்தி மெல்லிய புன்னகையோடு, “அதெப்படி காட்டுவேன்? எனக்கு அந்தளவுக்குக் கூட அறிவில்லையா என்ன?!” என்றாள்.</strong></p> <p><strong>“அட்லாஸ்ட் இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு நாம நினைச்சது நடந்திடுச்சு... அதுவும் என்னாலயே கன்வின்ஸ் பண்ண முடியாத எங்க மாமை நீ கன்வின்ஸ் பண்ணிட்ட சக்தி” என்று சொல்லியபடி பெருமிதத்தோடு அவள் முகத்தை அவன் புறம் திருப்பித் தன் கரங்களால் தழுவ, அவனின் தொடுகை வெகுநாளின் தவிப்பையும் ஏக்கத்தையும் போக்க விழிகளை மூடி அவள் அவனின் தீண்டலை ரசித்தாள்.</strong></p> <p><strong>எத்தனை நீண்டதொரு பிரிவிற்குப் பின் இருவரும் நேரெதிரே சந்தித்துக் கொள்ள, அவளின் அழகோடு கூடிய கம்பீரம் அவன் மனதை வெகுவாய்ச் சலனப்படுத்தியது.</strong></p> <p><strong>அவளின் மௌனத்தையும் மூடியிருந்த விழிகளையும் சிவசக்தியின் சம்மதமாகக் கருதி அவனின் வெகுநாளான காதல் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளின் இதழை தன் இதழ்களோடு பிணைத்துக் கொண்டான்.</strong></p> <p><strong>வறட்சியால் தவித்த பூமியை வானவன் தன் மழைக்கரத்தால் நனைத்து உயிர்ப்பிப்பது போல அவனின் பிரிவால் வறட்சியுற்றிருந்த அவளின் உதடுகளை நனைத்து அவன் அப்போது உயிர்ப்பிக்க அவளுமே சிறிது நேரம் அவனின் முத்தத்தில் மெய்மறந்து போனாள்.</strong></p> <p><strong>சட்டென்று தன்னிலைக்குத் திரும்பியவள் அவனை விலக்கிவிட்டு,</strong></p> <p><strong>“இடியட்... இது கோவில் வாசல்” என்றாள்.</strong></p> <p><strong>“இவ்வளவு நேரம் கழிச்சுதான் தெரிஞ்சிதா மேடம்... இது கோவில் வாசல்னு” என்று சொல்லி சிரித்தான்.</strong></p> <p><strong>சிவசக்தி தன் முகத்தைக் கார் முன்னே கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொள்ள சக்திசெல்வன், “இப்போ என்ன பண்ணிட்டேன்னு... இவ்வளவு சீன்?” என்றான்.</strong></p> <p><strong>“கார்ல போய்... அதுவும் கோவில் முன்னாடி... உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்த்தையே இல்லயா?” என்று அவனை மீண்டும் கடிந்து கொண்டாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் சிரித்தபடி, “இது முருகன் கோவில்... துரத்தித் துரத்தி வள்ளியை காதலிச்சுத் திருமணம் பண்ண காதல் கடவுள்... என் காதலுக்கும் அவரே முன்னோடி... அவருக்கு என் உணர்வுகள் நல்லா புரியும்... தப்பா ஒண்ணும் நினைச்சிக்க மாட்டாரு” என்றான்.</strong></p> <p><strong>“எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைச்சிருக்கீங்க... நல்லா” என்று சிவசக்தி உரைக்க அவன் அவள் கோபத்தோடு கூடிய அழகை அமைதியாய் ரசித்துக் கொண்டிருந்தான்.</strong></p> <p><strong>அவள் மேலும், “காதலுக்கு மட்டும் முன்னோடியா முருகன் இருக்கட்டும்... மத்தபடி இராமனை பின்பற்றுங்க... போதும்” என்றாள்.</strong></p> <p><strong>சக்திசெல்வன் அவளின் கைகளைப் பிடித்தபடி “என் சிவசக்தியை தவிர வேறொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடேன்... ப்ராமிஸ்” என்று கம்பராமாயணத்தில் இராமனின் சபதத்தை சக்திசெல்வன் தனக்கு ஏற்றவாறு மாற்றிச் சொல்ல சிவசக்தி புன்னகையோடு, “தேங்க்யூ” என்று சொல்லி அவன் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள்.</strong></p> <p><strong>“இப்போ இது கோவில் வாசல் இல்லையா சக்தி ?” என்று சிவசக்தியை நோக்கி சக்திசெல்வன் கேட்க, “ஆமாம் இல்ல” என்று சொல்லியபடி அவள் எழுந்து கொண்டு, “வாங்க கோவிலுக்குப் போகலாம்” என்றாள்.</strong></p> <p><strong>இருவரும் காரை விட்டு இறங்கி கோவிலை நோக்கி நடந்தனர்.</strong></p> <p><strong>சக்திசெல்வனும் சிவசக்தியிடம் கோவில் படிகெட்டுகளை ஏறியபடி,</strong></p> <p><strong>“இந்தக் கோவிலில்தானே என்னை நீ முதலில் பார்த்தல்ல?!” என்று வினவினான்.</strong></p> <p><strong>“ம்... ஞாபகம் இருக்கு... நீங்க காரிலிருந்து இறங்கி விறுவிறுன்னு கோவில் படிகெட்டு ஏறிப் போனீங்களே” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ நினைவு வந்தவளாய்,</strong></p> <p><strong>“அது சரி... அன்னைக்கு ப்ஃளைட் டிக்கெட் எப்படி உங்க கைக்கு வந்துச்சு” என்றாள்.</strong></p> <p><strong>“எப்படியோ... இப்ப அத பத்தி என்ன?!” என்று சக்தி சொல்ல சிவசக்தி அப்படியே அசையாமல் நின்ற இடத்திலேயே நின்று அவனை முறைத்தாள்.</strong></p> <p><strong>“சரி வாடி... சொல்றேன்” என்று சக்திசெல்வன் அவள் கோபத்தை உணர்ந்தவனாய் அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.</strong></p> <p><strong>“இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று சிவசக்தி அழுத்தமாய்க் கேட்க,</strong></p> <p><strong>“நான் பேஸஞ்சர் லிஸ்ட்டை செக் பண்ணேன்... அப்போதான் நீ டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சது... உடனே கீதாவை கான்டெக்ட் பண்ணேன்”</strong></p> <p><strong>அவன் முழுவதுமாய்ச் சொல்லி முடிக்கும் முன்னரே சிவசக்தி என்ன நடந்திருக்கும் எனக் கணித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தவளாய்,“அப்போ கீதாவா?” என்றாள்.</strong></p> <p><strong>“இப்போ எதுக்கு ஷாக்காகிற... நான்தான் அவளைக் கம்பெல் பண்ணி எடுத்துக் கொடுக்கச் சொன்னேன்... அவளும் எவ்வளவோ உன்னைக் கோவில்லையே என்னை மீட் பண்ண வைக்கக் கம்பிரமைஸ் பண்ணா... நீ தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சா... அவ என்ன பண்ணுவா பாவம்” என்றான்.</strong></p> <p><strong>“அவளை!” என்று சொல்லி போஃனை கைகளில் எடுத்து கீதாவுக்கு டயல் செய்ய சக்தி அவள் கையில் இருந்த மொபைலை பறித்துக் கொண்டான்.</strong></p> <p><strong>“இந்த அவசர புத்திதானே வேணாங்கிறது” என்றான் சிவசக்தியை மிரட்டியபடி.</strong></p> <p><strong>அவள் வேகமாய் முன்னேறிச் சென்று, “என்னை ஏமாத்திறதே உங்களுக்கு வேலையா போச்சு” என்றாள்.</strong></p> <p><strong>படிகெட்டுகளை ஏறி அவளை முந்தியடித்து நின்ற சக்திசெல்வன் சிரித்தபடி, “ஏமாத்திறவங்களை விட ஏமாறவங்க மேலதான் தப்பு மிஸ். சக்தி” என்றான்.</strong></p> <p><strong>“ஓ... அப்போ என் மேலதான் தப்பா?”</strong></p> <p><strong>“புரிஞ்சா சரி” என்றான்.</strong></p> <p><strong>சிவசக்தி கையைக் கட்டி நின்றபடி, “நீங்க ஏமாத்தி என்னை டென்ஷன் பண்ண மாதிரி நானும் உங்களை ஏமாத்தி டென்ஷனாக்கல... என் பேர் சிவசக்தி இல்ல” என்றாள்.</strong></p> <p><strong>“அது உன்னால முடியாது... அதுவுமில்லாம இந்தப் பேரை விட வேற பேர் உனக்குப் பொருத்தமாவும் இருக்காது டியர்” என்றான் ஏளனமான புன்னகையோடு.</strong></p> <p><strong>“முயற்சி செய்யாம நான் தோல்வியை ஒத்துக்கவே மாட்டேன்”</strong></p> <p><strong>“ட்ரை பண்ணு சக்தி... பட் யூ கான்ட்” என்று விரல்களை அசைத்தான்.</strong></p> <p><strong>“ஐ கேன்... இட்ஸ் அச் சேலஞ்ச்” என்றாள்.</strong></p> <p><strong>“இந்தச் சக்திசெல்வனுக்கே சவாலா?” என்று திமிரான தோரணையில் அவன் அவளைப் பார்க்க,</strong></p> <p><strong>அவளும் துளியளவும் விட்டுக் கொடுக்காமல் அதே தொனியில்,</strong></p> <p><strong>“சவால்தான்... இந்தத் தடவை ஏமாறப் போறது நீங்கதான் மிஸ்டர். சக்திசெல்வன்” என்றாள்.</strong></p> <p><strong>இப்படியே இருவரும் பேசியபடி படிகெட்டு ஏறிக் கோவில் பிரகாரத்தில் நுழைய உள்ளே மீனாக்ஷி நின்றிருந்தாள். இருவரும் தங்கள் விவாதத்தை வேறுவழியின்றி நிறுத்திவிட்டு அமைதியாயினர்.</strong></p> <p><strong>எப்போதும் இவர்கள் காதலுக்கு இடையில் ஒரு போட்டி நிலவியபடியே இருந்தது.</strong></p> <p><strong>அவனை அவள் ஏமாற்றுவது கொஞ்சம் கடினம்தான் எனினும் சிவசக்திக்கு அத்தகைய புத்திக்கூர்மையும் தைரியமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.</strong></p> <p><strong>அந்த அழகிய காதல் ஜோடிகள் அவர்கள் காதல் பயணத்தை முடித்துக் கொண்டு திருமணப் பந்தத்தில் இணைவதற்கான ஏற்பாடுகளை மீனாக்ஷி தாமதமின்றி விரைவாய்ச் செய்யத் தொடங்கினாள். எல்லோருமே எதிர்பார்த்திருந்த அந்த அழகிய தருணம் பெரும் போராட்டம் பிரிவுகளைக் கடந்து வந்தடைந்தது.</strong></p></blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா