மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru thruvagal - Episode 1Post ReplyPost Reply: Iru thruvagal - Episode 1 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on June 17, 2025, 6:23 PM</div><p><strong><span style="color: #ff0000">வாசகர்களுக்கு என் வணக்கங்கள்! இந்த நாவல்தான் என்னுடைய முதல் நாவல். நிறைய பிழைகள், என்னுடைய எழுத்தில் முதிர்ச்சியின்மை போன்றவை இருக்கலாம். தயவு கூர்ந்து பொருத்தருள்வீராக. தொடர்ந்து வாசித்து என்னையும் என் எழுத்தையும் ஊக்குவிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். - <span style="color: #000000">மோனிஷா</span></span><span style="color: #000000"> </span></strong></p> <h1 style="text-align: center">இரு துருவங்கள் </h1> <h1 style="text-align: center"><strong>1</strong></h1> <p><img class="aligncenter" src="https://monishanovels.com/wp-content/uploads/2025/06/room.jpeg" alt="" width="400" height="400" /></p> <p style="text-align: center"><strong>அறை எண். 603</strong></p> <p><strong>பதினைந்து மாடி உயர கட்டிடம்.</strong></p> <p><strong>வண்ண விளக்குகள் எங்கும் மின்னிக் கொண்டிருந்தன.</strong></p> <p><strong>சுற்றிலும் பசுமையான புல்வெளிகள் படர்ந்திருந்தன. வரிசையாக விலை உயர்ந்த வாகனங்களின் அணிவகுப்புகள். அந்தக் கட்டிடத்தின் உச்சத்தில் கோபுரம் போல் அமைக்கபட்டிருக்க, சென்னை மாநரகத்தில் அந்தக் கட்டிடம் நூற்றாண்டுகள் முன் வடிவமைக்கப்பட்ட அரண்மனை போல் காட்சியளித்தது.</strong></p> <p><strong>ஆனால் அது அரண்மனை அல்லவே! நட்சத்திர ஹோட்டல் ஆதித்யா!</strong></p> <p><strong>பளிச்சென்ற தங்க நிற விளக்குகளால் ஆங்கிலத்தின் முதல் எழுத்து ‘ஏ’ கீரிடம் போல் மேல்மட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது.</strong></p> <p><strong>அந்த நட்சத்திர ஹோட்டலின் ஆறாவது மாடியில் தங்கியிருந்த கேத்ரீன், தள்ளாடிக் கொண்டே தன் அறை எண். 603ல் சாவியை நுழைத்தாள்.</strong></p> <p><strong>அவளின் உடையும், வெண் தோலும் அவள் வேற்று நாட்டவள் போல் தோன்ற செய்தது. கதவை திறந்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தவுடன் திரைச்சீலைகள் அசையத் தொடங்கின.</strong></p> <p><strong>கேத்ரீன் நிலை தடுமாறும் அளவுக்கு மதுபானம் அருந்தியிருந்தாள். கண்கள் மங்கிய நிலையில் திரைச்சீலைகளை விலக்கிக் கொண்டு, அந்த அறையின் பால்கனி கதவை திறந்து வான்வெளியை ரசித்தபடி நின்று கொண்டிருந்தவளின் கால்கள் அந்த பளிங்குத் தரையில் வழுக்கின.</strong></p> <p><strong>என்ன நேர்ந்தது என்பதை உணரும் முன்னரே அவளின் உடல் தரையில் மோதி இரத்தம் சிதறியது.</strong></p> <p><strong>திடீரென எதிர்பாராமல் நிகழந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</strong></p> <p><strong>‘கேத்ரீன்... ’ என்று ஆவேசமாய் ஒரு குரல் கதறியது.</strong></p></blockquote><br> Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா