மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Iru ThruvangalIru Thruvangal - Episode 17Post ReplyPost Reply: Iru Thruvangal - Episode 17 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on July 15, 2025, 5:25 PM</div><h1 style="text-align: center"><strong>17</strong></h1> <p style="text-align: center"><strong>வேல் விழிகளோ!</strong></p> <p><img class="aligncenter" src="https://monishanovels.com/wp-content/uploads/2025/07/vinadhi.jpeg" alt="" width="400" height="400" /></p> <p><strong>ஆதித்தியா எதிர்பாராமல் விந்தியாவின் மீது விழுந்துவிட, தூங்கி கொண்டிருந்தவள் பயந்து போனாள். ஆதித்தியா கொஞ்சம் சுதாரித்து எழுந்து கொண்டான். விந்தியா சோபாவிலிருந்து போர்வையை விலக்கி எதிர்பாராத அந்த அதிர்ச்சியைச் சமாளித்து எழுந்தாள்.</strong></p> <p><strong>“அர் யூ மேட்?” என்று விந்தியா கேட்க ஆதித்தியா தன் செயலை நினைத்து தானே சிரித்துக் கொண்டான்.</strong></p> <p><strong>“ஐம் சாரி” என்று சொல்லிக் கொண்டே சிரித்தான்.</strong></p> <p><strong>விந்தியா கண் கொட்டாமல் அவன் சிரிப்பதையே பார்த்து கொண்டிருந்தாள். அவன் மீது அளவில்லாத எரிச்சல் ஏற்பட்டது.</strong></p> <p><strong>“என்ன டிரை பண்றீங்க ஆதி? திடீர்னு அலறீங்க... திடீர்னு மேல விழறீங்க... என்னை டிஸ்டர்ப் பண்றதுதான் உங்க மோட்டிவா?”</strong></p> <p><strong>“சத்தியமா இல்லை...” என்று விந்தியாவின் தலையில் கை வைத்தான் ஆதித்தியா. அவனின் கைகளைத் தட்டி விட்டாள்.</strong></p> <p><strong>“ஏதோ தப்பா இருக்கு...” என்று கேட்டுவிட்டு விந்தியா கூர்மையாகப் பார்த்தாள்.</strong></p> <p><strong>“நீ நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்தில் எல்லாம் விழல... கால் தடுக்கிடுச்சு”</strong></p> <p><strong>“அப்போ தப்பான எண்ணம் வேற இருக்கா?”</strong></p> <p><strong>“நானே வாயக் கொடுத்து சிக்குறேன். இதப் பாரு… என்னோட பொருள் ஒண்ண இருட்டில தேடிட்டிருந்தேன். கால் தடுக்கி உன் மேல விழுந்துட்டேன்... தட்ஸ் இட். வேணும்டே பண்ணியிருந்தா ... இப்படி உன்கிட்ட பேசிட்டா இருந்திருப்பேன்?”</strong></p> <p><strong>“ஹெலோ... எதை தேடுறுதுனாலும் லைட்ட போட்டு தேடுங்க... திரும்பியும் வேற ஏதாவது லூசு மாதிரி பண்ணாதீங்க” என்று சொல்லிக் கொண்டே தலையணையை எதிர்புறம் திருப்பி வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.</strong></p> <p><strong>“இனிமே தூக்கம் எப்படி வரும்?” என்று விந்தியா புலம்ப, ஆதித்தியா அறையை வெளிச்சமாக்கி விட்டு மீண்டும் தேட ஆரம்பித்தான்.</strong></p> <p><strong> “நீ என்னோட சிகரெட் பாக்கெட்டை பார்த்தியா?” என்று கேட்டதும் விந்தியா திருதிருவென்று விழித்து விட்டு, “நான் எடுக்கலை...” என்று சொல்லியபடி போர்வையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள்.</strong></p> <p><strong>விந்தியாவின் செயலைப் பார்த்துச் சந்தேகம் கொண்டவனாய், ‘எப்பவும் நான் வைக்கிற பொருள் இடம் மாறினதேயில்லை... இன்னைக்கு எப்படிக் காணோம்? இவள தவிர வேற யாரும் எடுத்திருக்க முடியாது’ என்று யோசித்துவிட்டு விந்தியாவின் போர்வையை முகத்திலிருந்து விலக்கினான்.</strong></p> <p><strong>“எங்கடி என் சிகரெட் பேக்கெட்?”</strong></p> <p><strong>விந்தியா சலித்துக் கொண்டு, “என்னதான் பிரச்சனை உங்களுக்கு? நான் எடுக்கலை”</strong></p> <p><strong>“நீதான் எடுத்திருக்க”</strong></p> <p><strong>“என்னைப் பார்த்தா சிகரெட் பிடிக்கிற மாதிரியா தெரியுது?”</strong></p> <p><strong>“அதெல்லாம் எனக்குத் தெரியாது... என் சிகரெட் பேக்கெட் எங்கே?”</strong></p> <p><strong>“நான் எடுக்கல”</strong></p> <p><strong>“நிச்சியமா நீதான் எடுத்திருக்க“</strong></p> <p><strong>“இல்லை ” என்று கத்தினாள்.</strong></p> <p><strong>“அப்போ நீ எடுக்கலை?”</strong></p> <p><strong>“அதைத்தானே திரும்பத் திரும்ப சொல்றேன்”</strong></p> <p><strong>“சரி... நான் ரொம்ப டென்ஷனா இருந்தா மட்டும்தான் சிகரெட் பிடிப்பேன்... இப்போ சிகரெட் இல்லை. இப்ப என் டென்ஷன் குறையணும்”</strong></p> <p><strong>“அதுக்கு...”</strong></p> <p><strong>அவன் எதுவும் பேசாமல் அவளை நெருங்கி வந்தான். அவளுக்குப் பதட்டம் அதிகமானது.</strong></p> <p><strong>“ஆதி... ஸ்டே அவே” என்றாள்.</strong></p> <p><strong>ஆனால் ஆதி அவளின் இதழ்களைப் பார்த்தபடியே நெருங்கி வந்தான். அவனின் நோக்கத்தை விந்தியா புரிந்து கொண்டாள். அவளின் கைகளால் அவனைத் தடுக்க முயற்சி செய்து அதுவும் பலனளிக்கவில்லை.</strong></p> <p><strong>அவளை மீறிக் கொண்டு அவனை நெருங்க அவனின் அருகாமை விந்தியாவிற்குப் படபடப்பு அளித்தது. அவளின் இதயத்துடிப்பு அவளின் காதுகளுக்கே ஒலித்தது.</strong></p> <p><strong>“திஸ் இஸ் நாட் பேஃர்” என்றாள் படபடப்போடு.</strong></p> <p><strong>“எவ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்... பேபி” என்று சொல்லிவிட்டு காதல் நிரம்பிய புன்னகையோடு அவளை நெருங்கினான்.</strong></p> <p><strong>விந்தியா தன் கைகளால் உதட்டை மூடிக் கொண்டாள்.</strong></p> <p><strong>“அந்த பேக்கெட் என் கண்ணில பட்டுச்சு. இது ஏன் இங்க இருக்குனு நான்தான் தூக்கிப்போட்டேன்...” என்றாள். இதைக் கேட்டதும் ஆதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.</strong></p> <p><strong>ஆதி அவளை தொடவில்லை இருந்தும் அவனின் மூச்சுக் காற்றை விந்தியாவால் உணர முடிந்தது. தன் இமைகளை விரித்து அவனைப் பார்த்தாள். அந்தக் கண்களை நேருக்கு நேர் அத்தனை அருகில் பார்த்தபின் கொஞ்சம் அவன் நிலை தடுமாற அவனே அவளை விட்டு விலகினான்.</strong></p> <p><strong>விந்தியா பெருமூச்சுவிட்டவளாய் படபடப்பு அடங்காமல் சோபாவில் சாய்ந்து கொண்டாள். எத்தனையோ ஆண்களின் முன்னிலையில் தலைவணங்காமல் இருந்தவள் முதன் முறையாக அவனின் அருகாமையில் பலவீனமாய் உணர்ந்தாள்.</strong></p> <p><strong>அவனிடம் பெண்களை வசீகரிக்கும் ஏதோ ஒரு ஆற்றல் இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.</strong></p> <p><strong>வேல் விழிகள் என்று சொல்வார்களே... அவை இதுதானா?</strong></p> <p><strong>நேராக அந்தக் கூர்மையான பார்வை ஈட்டியைப் போல் அவன் இதயத்தில் பாய்ந்தது. ஆதி நிலைகுலைந்தவனாய் பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் ஒரு பெண் தன்னைத் தடுமாறச் செய்துவிட்டதை உணர்ந்தான்.</strong></p> <p><strong>தான் விந்தியாவிடம் விட்ட சவாலில் தோற்று விடுவோம் என்று ஆதிக்கு தோன்றிற்று. அழகைத் தாண்டி அவளிடம் ஏதோ இருக்கிறது என்று சிந்தித்தவன், அவளிடம் தானே சரணடைந்து விடுவோமோ என்று பயப்படலானான்.</strong></p> <p><strong>“நோ இட்ஸ் இம்பாஸிபிள்” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.</strong></p> <p><strong>ஆதியிடம் யார் சொல்வது?</strong></p> <p><strong>“எவ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்”</strong></p> <p><strong>காதலிலும் போரிலும் யாராவது ஒருவருக்கு தோல்வி நிச்சியம்.</strong></p></blockquote><br> Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா