மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 7Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 7 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on November 13, 2025, 10:45 AM</div><h1 style="font-weight: 500;text-align: center">அத்தியாயம் – 7</h1> <p><img class="aligncenter" src="https://monishanovels.com/wp-content/uploads/2025/11/kavi4.jpeg" alt="" width="400" height="400" /></p> <p style="font-weight: 400">கவிதாவும் ரஞ்சனும் அடுத்த நாள் காலை கிளம்பி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பங்களாவிற்குச் சென்றனர். அவர்கள் செல்வதற்கு முன்பாகவே கேமரா குழு அங்கே வந்திறங்கி இருந்தனர்.</p> <p style="font-weight: 400">கவிதா அவர்களுடன் அறிமுகம் செய்து கொள்ள, லொகேஷன் எல்லாம் பார்த்துட்டோம் நீங்களும் சாரும் ரெடியாகிட்டு வந்தீங்கனா, போட்டோஸ் எடுத்துடலாம்” என்றான் அவர்களுள் தலைமையாக இருந்த நபர்.</p> <p style="font-weight: 400">“யா ஸுர்” என்றவள் தன்னுடைய உடையலங்காரத்திற்கு உதவிக்கு ஆனந்தியை அழைத்து வந்திருந்தாள்.</p> <p style="font-weight: 400">‘உங்களுக்கு யாராச்சும் ஹெல்புக்கு வேணுமா’ என்று ரஞ்சனிடம் கேட்டதற்கு வேண்டாமென்று விட்டான்.</p> <p style="font-weight: 400">அவனுக்கு அந்த போட்டோ ஷுட்செய்வதிலேயே விருப்பமில்லை. வராமல் இருக்க என்னென்னவோ செய்து பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை. பிரகாஷ் அவனைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார்.</p> <p style="font-weight: 400">மாடியிலிருந்த வலது பக்க அறையை அவனுக்கு கொடுத்துவிட்டு, இடதுபக்க அறையில் கவிதாவும் ஆனந்தியும் நுழைந்தனர். தனக்குத் தரப்பட்ட அந்த கோட் சூட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனின் மனம் எங்கெங்கோ தாவியது.</p> <p style="font-weight: 400">“ராணி, இந்த டிரஸ பையனுக்கு போட்டுவிடு” என்று ராகவன் அந்த கோட் சூட்டை மனைவியிடம் தந்தார்.</p> <p style="font-weight: 400">“ரஞ்சு கண்ணா அப்பா உனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்காரு. பாரு சூப்பரா இருக்கு. வா வா போட்டுக்கோ”</p> <p style="font-weight: 400">“உஹும் எனக்கு இது பிடிக்கல. வேண்டாம். நான் பாட்டி வாங்கி தந்த டிரஸ் போட்டுக்கிறேனே. எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு”</p> <p style="font-weight: 400">“இதுவும் நல்லதான் இருக்கும். நீ போட்டு பாரேன்”</p> <p style="font-weight: 400">“ம்மா வேணாம் ம்மா. நான் பாட்டி வாங்கி தந்த ரெட் டிஷர்ட்டை போட்டுக்கிறேனே”</p> <p style="font-weight: 400">“கேக் வெட்டறதுக்கு அப்பா வாங்கினதைப் போட்டுக்கோ கண்ணா. அப்புறமா பாட்டி வாங்கி கொடுத்ததை போட்டுக்கலாம்” என்று ஜெயராணி பொறுமையாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்க, “உஹும் எனக்கு இது வேண்டாம்மா?” என்று ரஞ்சன் பிடிவாதமாகத் தள்ளிவிட்டான்.</p> <p style="font-weight: 400">அந்த சமயம் பார்த்து உள்ளே வந்த ராகவன், “என்ன, பிடிக்கல” என்று கரகரத்த குரலில் கேட்டான்.</p> <p style="font-weight: 400">“பிடிக்கலன்னு எல்லாம் சொல்லலங்க. இந்த டிரஸ் அப்புறமா போட்டுக்கிறேன். இப்போ பாட்டி வாங்கி தந்ததை போட்டுக்கிறனு சொல்றான்” என்று ரஞ்சனின் அம்மா ஜெயராணி பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.</p> <p style="font-weight: 400"> இருப்பினும் ராகவனுக்கு கோபமேறிவிட்டது. “என்ன? நான் வாங்கி தந்ததை போட மாட்டனாமா, போடா மாட்டனாமா” என்று வெறிபிடித்தவன் போலக் கத்தத் தொடங்கிவிட்டான்.</p> <p style="font-weight: 400">“இல்லங்க அவன் அப்படி சொல்லல” என்று ஜெயராணி சமாளித்துக் கொண்டிருக்கும் போதே ராகவன் பெல்ட்டை கழற்ற, “என்னங்க இருங்க. நான் சொல்றேன். அவன் போட்டுக்குவான்” என்று ஜெயராணி கணவனைத் தடுக்கப் பார்த்தாள்.</p> <p style="font-weight: 400">பயத்தில் ரஞ்சனோ கதவின் பின்புறம் சென்று ஒளிந்து கொண்டான். ராகவன் அவனைச் சீற்றமாக வெளியே இழுத்து பெல்ட்டை வீச, “அம்ம்ம்ம்ம்மா” என்று வலியில் துடிதுடித்து போனான்.</p> <p style="font-weight: 400">“இப்போ சொல்லு போட மாட்டேனு” என்று ராகவன் பெல்ட்டுடன் மிரட்ட, “போட்டுக்கிறேன் பா போட்டுக்கிறேன் பா” என்று அழுது கொண்டே கெஞ்சினான்.</p> <p style="font-weight: 400">“குட் பாய்” என்று விகாரமாகச் சிரித்தவன், “பார்த்தியா போட்டுக்கிறேன்னு சொல்லிட்டான். பிள்ளைக்கு இப்படி சொல்லணும்” என்று ராணியிடம் கர்வமாக உரைத்தார்.</p> <p style="font-weight: 400">மகனை இறுக அணைத்து கொண்டு ராணி அழுதாள். நடந்த விஷயத்தை எல்லாம் அறிந்த ரஞ்சனின் பாட்டியும் ராணியின் அம்மாவுமான சாரதா அதிர்ச்சியானார்.</p> <p style="font-weight: 400">“இத்தனை நாளா அவர் கோபத்த என்கிட்ட மட்டும்தான் காட்டுனாரு. இப்போ புள்ளகிட்டயும் காட்ட ஆரம்பிச்சிட்டாரும்மா” என்று ராணி வருத்தப்பட, “எல்லாம் என் தப்பு என் தப்பு” என்று தலையிலடித்து கொண்டு அழுதார் சாரதா.</p> <p style="font-weight: 400">அவனுடைய எட்டாவது வயது பிறந்த நாள் அது. அழுது கொண்டிருந்த அவனை அணைத்துக் கொண்டு அம்மாவும் பாட்டியும்,</p> <p style="font-weight: 400">“எல்லாம் சரியாயிடும் கண்ணா எல்லாம் சரியாகிடும் கண்ணா” என்று கூறியது இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.</p> <p style="font-weight: 400">பதினாறு வருடங்கள் ஓடிவிட்டன. எதுவுமே சரியாகவில்லை. நிலைமை இன்னும் மோசமானதுதான் மிச்சம்.</p> <p style="font-weight: 400">‘இப்படி அழுமூஞ்சியா எல்லார் முன்னாடியும் வந்து நிற்கக் கூடாது. புரிஞ்சதா... சிரி நல்லா சிரி... ஆ அப்படி’</p> <p style="font-weight: 400">அன்று பிறந்த நாள் விழாவில் அப்பா அவனைச் சிரிக்கச் சொன்னார். சிரிக்காவிட்டால் அடிப்பாரோ என்ற பயத்திலேயே சிரித்தான். சிரமப்பட்டு வலியுடன் சிரித்தான். </p> <p style="font-weight: 400">அதன்பிறகு அவன் வாழ்வில் எப்போது இயல்பாகச் சிரித்தான் என்று நினைவில்லை. காயங்களும் வடுக்களும் பதிந்து போன அளவுக்கு நல்ல நினைவுகள் எதுவும் ஆழமாக அவனுக்குப் பதிவாகவில்லை.</p> <p style="font-weight: 400">உறக்கத்தில் கூட அப்பாவின் கோபமும் அதட்டலையும் தாண்டி வேறு எதுவும் வந்ததில்லை. பல காலமாக அப்பாவின் கைப்பாவையாகவே இருந்துவிட்டதால் தனித்து எப்படி இயங்குவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. </p> <p style="font-weight: 400">அப்போது படபடவென்று ஒரு சத்தம். மிரட்சியுடன் கதவைப் பார்த்தான்.</p> <p style="font-weight: 400">“ரஞ்சன் ரெடியா?” என்று கேட்டாள் கவிதா. அவன் இன்னும் உடையைக் கூட மாற்றவில்லை.</p> <p style="font-weight: 400">பதற்றத்துடன் எழுந்து சட்டையைக் கழற்றிக் கொண்டே, “பைவ் மினிட்ஸ்” என்றான்.</p> <p style="font-weight: 400">“நானே டிரஸ் பண்ணிட்டேன். உனக்கு என்ன?”</p> <p style="font-weight: 400">“தோ வரேன்”</p> <p style="font-weight: 400">“சீக்கிரம் ரஞ்சன்” என்றவள் சொல்ல அவன் பரபரவென்று உடைகளை மாற்றிவிட்டு அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியில் முன்பு நின்றான். நன்றாகவே இல்லை. அவனுக்குப் பிடிக்கவே இல்லை. </p> <p style="font-weight: 400">சோளக்காட்டுப் பொம்மைக்குச் சட்டை மாட்டிவிட்டது போல இருந்தது. எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றனர். </p> <p style="font-weight: 400">“ரஞ்சன், எவ்வளவு நேரம். போட்டோகிராபர் வேற டென்ஷன் ஆகிறாரு. ரொம்ப வெயில் ஏறத்துக்கு முன்ன போட்டோஸ் எடுக்கணுமாம்?”</p> <p style="font-weight: 400">அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இப்படியே அவள் முன்பாக செல்வதற்குக் கூச்சமாக இருந்தது.</p> <p style="font-weight: 400">“ரஞ்சன்... என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா.. டிரஸ் எதுவும் பத்தலயா என்ன? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். முதல கதவை திற. கதவை திறன்னு சொன்னேன்” அப்படியே தந்தையின் அதிகாரத் தொனியைக் கேட்டது போல இருந்தது.</p> <p style="font-weight: 400">“இப்போ கதவை திறக்க போறியா இல்லையா?”</p> <p style="font-weight: 400">அடுத்த நொடியே கதவைத் திறந்துவிட்டவன், நிமிர்ந்து அவளைப் பார்க்கவே இல்லை. என்ன சொல்ல போகிறாளோ என்று பயந்து தலையைக் குனிந்தபடியே நின்றான்.</p> <p style="font-weight: 400">அவள், “குட்” என, அவன் ஆச்சரியத்துடன் நிமிர்ந்தான். சிவப்பு நிறச் சேலையில் அழகாய் அலங்கரித்தபடி இருந்தாள். ஒரு நொடி தன்னை மறந்து அவளை ரசித்தவன், பின்னர் மீண்டும் எப்படி அவள் அருகில் தான் நிற்க முடியும் என்று உள்ளத்தால் குறுகினான்.</p> <p style="font-weight: 400">“இந்த போட்டோ ஷுட் எல்லாம் கண்டிப்பா பண்ணணுமா?” என்று மிக மிக மெல்லிய குரலில் கேட்டான். </p> <p style="font-weight: 400">“என்ன?”</p> <p style="font-weight: 400">“இல்ல தாத்தாகிட்ட எனக்கு இதெல்லாம் வராதுனு சொன்னேன். அவர்தான் கேட்கல” </p> <p style="font-weight: 400">“இதெல்லானா... புரியல எதெல்லாம்?” அவள் கைகளைக் கட்டியபடி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.</p> <p style="font-weight: 400"> “இல்ல போட்டோவுக்கு போஸ் கொடுக்கறது எல்லாம் எனக்கு வராது.” என்று மெதுவாகச் சொன்னான்.</p> <p style="font-weight: 400">பேசிக் கொண்டிருந்தவன் விழிகள் அவள் கண்களைப் பார்க்கமுடியாமல் அலைபாய்ந்தபடி இருந்தன.</p> <p style="font-weight: 400"> “ரஞ்சன் லுக் அட் மை ஐஸ்... ரஞ்சன்” என்று அதட்டினாள்.</p> <p style="font-weight: 400">உடனடியாக அவள் முகத்தைப் பார்த்தான். அப்போதும் அவள் விழிகளை எதிர்கொள்ள அவனுக்குச் சிரமமாக இருந்தது.</p> <p style="font-weight: 400">“என் முகத்துல என் கண்ணு இங்கே இருக்கு. ஹியர்... லுக் ஹியர்னு சொன்னேன்” மீண்டும் மிரட்டினாள்.</p> <p style="font-weight: 400">அவன் அவள் கண்களைப் பார்த்தான். அழகான அதேநேரம் தீர்க்கமான விழிகள் அவை.</p> <p style="font-weight: 400">“யார்கிட்ட பேசினாலும் அவங்க கண்ணை பார்த்து பேசணும். புரிஞ்சுதா?”</p> <p style="font-weight: 400">“ம்ம்ம்”</p> <p style="font-weight: 400">“ஓகே இந்த போட்டோ விஷயத்துக்கு வருவோம். எனக்கும் இதுல எல்லாம் பெருசா விருப்பமில்லதான். இந்த எலைட் சமூகத்துக்காக இதெல்லாம் நம்ம செஞ்சுத்தான் ஆகணும்” என்று அழுத்தி சொன்னாள்.</p> <p style="font-weight: 400">“ஆனா நான்...” என்று அவன் நிறுத்திவிட “இன்னும் என்ன ஆனா” என்று கடுப்பாகக் கேட்டாள்.</p> <p style="font-weight: 400">“இல்ல, போட்டோஸ்ல எல்லாம் நான் நல்லாவே இருக்க மாட்டேன்”</p> <p style="font-weight: 400">அவள் ஏளனமாகச் சிரித்து, “யார் சொன்னா உனக்கு அப்படி?” என்றாள்.</p> <p style="font-weight: 400">“யாரும் சொல்லல, எனக்..கே தெரியும்”</p> <p style="font-weight: 400">“புல் ஷிட், நீ அழகா இல்லன்னு நீயே நினைசுக்கிட்டியாக்கும். அப்படி எல்லாம் கிடையாது. யூ லுக் குட்.”</p> <p style="font-weight: 400">அவன் ஆச்சரியத்துடன் நிமிர, “உண்மையாதான், யூ லுக் குட்” என்றாள். சட்டென்று உள்ளத்தில் ஒரு விதப் பரவச உணர்வு பரவியது. </p> <p style="font-weight: 400">“அப்படியா, ஆனா இந்த டிரஸ்...” என்று மீண்டும் அவன் குரலின் சுருதி இறங்கியது.</p> <p style="font-weight: 400">அவன் மனநிலையை ஒருவாறு புரிந்து கொண்டவள், “டிரஸ்ல எந்த பிரச்னையும் இல்ல ரஞ்சன். ஒவ்வொரு டிரஸ்க்கும் ஒரு எலிகன்ட் லுக் இருக்கும். என்னதான் நல்லா தச்ச டிரஸாவே இருந்தாலும் அதை நம்ம கேரி பண்ற விதத்துலதான் அது அழகா மாறும்.</p> <p style="font-weight: 400">நீ முதல நம்பிக்கையா பீல் பண்ணு. நான் ஸ்மார்டா இருக்கேன்னு நம்பு. கெத்தா நிமிர்ந்து நில்லு” என்றாள்.</p> <p style="font-weight: 400">அப்போதும் அவன் நம்பிக்கையன்றி அவளைப் பார்த்தான்.</p> <p style="font-weight: 400">“ஒரு நிமிஷம்” என்றவள் வெளியே சென்று சில ஒப்பனை பொருட்களை எடுத்து வந்தாள்.</p> <p style="font-weight: 400">“இப்படி வந்து உட்காரு” என்று அவனை அமர வைத்து முடியில் ஏதோ ஸ்ப்ரே போல செய்து களைத்துவிட்டாள். இலேசாக முகத்தில் சில ஒப்பனைகளைப் போட்டுவிட்டாள்.</p> <p style="font-weight: 400">அவளின் எந்தச் செய்கைகளுக்கும் எதிர்வினையாற்றாமல் அவன் அப்படியே சிலை போலக் கிடந்தான். </p> <p style="font-weight: 400">ஒப்பனைகளை முடித்து அவனை ஆழ்ந்து பார்த்தவள், “என்னவோ குறையுதே. ஆமா டை எங்கே?” என்றாள்.</p> <p style="font-weight: 400">“தெரியலயே. நான் பார்க்கல”</p> <p style="font-weight: 400">“இல்ல, டை இருந்துச்சே”</p> <p style="font-weight: 400">அந்த அறையை சுற்றி பார்த்தவள், “இதோ கீழே கிடக்கு” என்று அதனை எடுத்து அவன் கையில் தந்தாள்.</p> <p style="font-weight: 400">“இந்தா, டையை கட்டு”</p> <p style="font-weight: 400">அவன் திருதிருவென்று விழிக்கவும், “என்ன டை கூட கட்ட தெரியாதா உனக்கு?” என்று கேட்க, அவன் ‘இல்லை’ என்று தலையசைத்தான்.</p> <p style="font-weight: 400">“இந்த தடவ நான் கட்டிவிடுறேன். எப்படி கட்டுறேனு நல்லா பாத்துக்கோ. அடுத்த தடவ நானோ தாத்தாவோ கட்டிவிட மாட்டோம். சொல்லிட்டேன் ” என்று கறாராக சொன்னவள், அதனை அவன் கழுத்தைச் சுற்றிக் கட்டிவிட்டாள்.</p> <p style="font-weight: 400">அதனை பார்க்க முயன்றாலும் அவன் விழிகள் என்னவோ அவள் முகத்திலேயே சென்று நின்றது.</p> <p style="font-weight: 400">மை தீட்டிய விழிகளும் வளைந்த புருவங்களும் வட்டமான சிறிய பொட்டும் காதில் அசைந்தாடும் ஜிமிக்கியும் என்று மனம் அலைபாய்ந்தது. </p> <p style="font-weight: 400">சற்றுமுன்பு அவள் விழிகளை நேராக நோக்க தயங்கிய அவன் விழிகள், இப்போது அவளைத் தாண்டி வேறு எதையுமே பார்க்கவில்லை.</p> <p style="font-weight: 400">அவள் கட்டி முடிக்கும் வரை அவன் மனம் மொத்தமாக அவளிடம் தஞ்சம் புகுந்துவிட, “ஓகே கட்டியாச்ச, சரி வா” என்று சொல்லி அவனுள் பொங்கிய உணர்வுகளைக் களைத்தாள்.</p> <p style="font-weight: 400">அவன் எழுந்து கொள்ள, கண்ணாடி முன்பு வரச் சொல்லிக் கைகாட்டினாள். அப்போதும் அவன் தயக்கத்துடனே சென்றான். </p> <p style="font-weight: 400">“ப்ச், நிமிர்ந்து நேரா நில்லு. தலையை நேரா வை. கொஞ்சம் கெத்தா... இதை பாரு இப்படி” என்று எப்படி எல்லாம் நிற்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தாள்.</p> <p style="font-weight: 400">அப்போதும் அவள் சொல்லிக் கொடுத்தது போல அவனால் நிற்க முடியவில்லை.</p> <p style="font-weight: 400">“இத பாரு, என்னை பாரு ரஞ்சன்” என்று செய்து காட்டிய போதும் அவனால் முடியவில்லை.</p> <p style="font-weight: 400">“ப்ச் என் பொறுமையைச் சோதிக்காத, இப்படி நில்லேன் டா” என்று இறுதியாக நெருங்கி வந்து அவன் தோள்களைத் தொட்டு நேராக நிறுத்தினாள். தலையைத் தூக்கிவிட்டாள்.</p> <p style="font-weight: 400"> அவளின் அந்த தொடுகை... அந்த ஸ்பரிஸம் அவனை என்னவோ செய்தது.</p> <p style="font-weight: 400">அவள் தொடுகைக்கு ஏற்றார் போல அவன் உடலும் மனமும் இலகுவாக வளைந்து கொடுக்க தொடங்கியது.</p> <p style="font-weight: 400"> “யா தட்ஸ் இட். கொஞ்சமா சிரி... ரஞ்சன் ஸ்மைல். அப்படிதான்” என்றவள் அவனை அப்படியே கண்ணாடியின் புறம் திருப்பினாள்.</p> <p style="font-weight: 400">அந்த காட்சியை பார்த்தவன் வாயடைத்து நின்றுவிட்டான். அவன்தானா அது? நம்பவே முடியவில்லை. இது போல அவன் தன் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்ததே இல்லை.</p> <p style="font-weight: 400">அப்படியே பார்த்தாலும் கூனிக்குறுகிய அவன் உள்ளத்தின் வெளிப்பாடுதான் கண்ணாடியிலும் அவனுக்கு தெரியும். அதனாலேயே கண்ணாடி பார்க்கும் பழக்கத்தையே அவன் விட்டொழித்துவிட்டான்.</p> <p style="font-weight: 400">ஆனால் இன்று அவன் பார்ப்பது என்ன? இன்னும் ஆச்சரியமாக இருந்தது. நம்ப முடியவில்லை.</p> <p style="font-weight: 400">அருகே நின்ற கவிதா, “யூ லுக் குட் மேன்” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்தாள். வியப்புடன் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்தவன் விழிகளில் நெகிழ்ச்சியில் கண்ணீர் சுரந்தது. </p> <p style="font-weight: 400">கண்ணாடியில் தெரிந்தது அவன் பிம்பமாக இருக்கலாம். ஆனால் அது அவள் வடித்தது. அன்று அவளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒவ்வொரு படமும் அத்தனை அழகாக அமைந்தது. அந்த நொடி அழுகு என்பது வெறும் முகத்திலிருந்து வெளிப்படுவதில்லை என்று விளங்கியது. </p></blockquote><br> Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா