மோனிஷா நாவல்கள்
Anbin Vazhiyathu - Episode 11

Quote from monisha on October 22, 2024, 6:33 PM11
To love and to be loved is the greatest happiness
மதியழகியின் நெற்றியிலிருந்த இரத்தக் காயத்தை மருத்துவர் சோதித்துக் கொண்டிருக்க மஹா கண்களில் கண்ணீர் பளபளத்தது. மதியை விடவும் இவள்தான் அதிகமாகத் துடித்துடித்துப் போய்விட்டாள்.
நான் பைக்கில் அழைத்து வரும் போது அழுது தீர்த்துவிட்டாள். எனக்குமே மதிக்குட்டிக்கு அடிப்பட்டதைப் பார்த்த கணம் உள்ளமெல்லாம் படபடத்துவிட்டது. மருத்துவமனைக்கு வந்து சேர்த்த பின்புதான் என் படபடப்பும் கொஞ்சமாக அடங்கியது.
அங்கிருந்த செவிலியர் அடிப்பட்ட காயத்தைச் சுத்தம் செய்து மருந்து போடத் தொடங்கியதும் மதிக்குட்டி வலி தாங்காமல், “ப்பா வலிக்குது ப்பா” என்று என்னைப் பார்த்து அழுதாள்.
“ஒன்னும் இல்ல மதிக்குட்டி... சரியாயிடும்” என்று நான் சமாதானம் கூறிய போதும் அவள் தொடர்ந்து ‘ப்பா பா’ என்று வலியுடன் அழுது கொண்டே இருந்தாள். அவளின் அப்பா என்ற விளிப்பு என்னைக் குற்றவுணர்வில் ஆழ்த்தியது.
மண்டையில் யாரோ ஓங்கிச் சம்மட்டையால் அடித்தது போலிருந்தது.
என்னை அப்பா ஸ்தானத்தில் பார்க்கும் ஒரு குழந்தையைப் போய்...
உண்மையில் எனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. போயும் போயும் ஒரு சின்ன குழந்தையிடம் போய் என் கோபத்தைக் காட்டுவேனா நான்?
அதுவும் ‘அன்பப்பா’ என்று அவள் அபயமாக ஓடி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டவளைப் போய் தள்ளிவிட்டுக் காயப்படுத்தி... அப்படி என்ன கட்டுப்படுத்த முடியாத கோபம் எனக்கு...
இதெல்லாம் யோசிக்க யோசிக்க என் பால்ய பருவம் என் நினைவுக்கு வந்துவிட்டது. என் அப்பா என்னை முரட்டுத்தனமாக அடித்த போதெல்லாம் நான் உடலால் காயப்பட்டதை விட மனதால் அதிகம் காயப்பட்டேன்.
இன்று அதே வலியையும் வேதனையையும் நான் மதிக்குட்டிக்குத் தந்திருக்கிறேன். என்னை அப்பாவாகப் பார்க்கும் மகளுக்குத் தந்திருக்கிறேன்.
என் அப்பாவுக்குள் இருக்கும் கோபமும் வன்மமும் என் இரத்தத்திலும் இருக்கிறது. நானும் அதே மிருகத்தனத்தைதான் மதியிடம் காட்டியிருக்கிறேன்.
‘என் மீதே எனக்கு வெறுப்பும் கோபமும் வந்தது. நான் எல்லாம் ஒரு மனுஷனா சை!’ என்று நிந்தித்து கொண்டிருக்கும் போதே மருத்துவர் என் புறம் திரும்பி,
“ஒன்னும் பிரச்சனை இல்ல... சின்ன காயம்தான்... சீக்கிரம் ஆறிடும்... ஒரு ஆயின்மென்ட் எழுதி இருக்கேன்... மூணு நாளைக்குத் தொடர்ந்து போடுங்க... வலிக்கு மருந்தும் எழுதி இருக்கேன்... அது கொடுத்தா வலி கேட்கும்” என்று விவரமாகச் சொல்லியவர் மருந்து சீட்டை எழுதி என்னிடம் கொடுத்தார்.
நான் மதியழகியைத் தூக்கிக் கொள்ள செல்லவும், “நீங்க போய் மருந்து வாங்கிட்டு வாங்க... நான் குட்டிமாவைத் தூக்குக்கிறேன்” என்றாள் மஹா. என் மீது சரியான கோபத்தில் இருப்பாள் என்று தோன்றியது.
நான் அதன் பின் மருந்துகளை வாங்கிக் கொண்டு என் பைக்கை எடுக்க மஹா பின்னோடு அமர்ந்து கொண்டாள்.
வீடு வந்து சேரும் வரை அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எனக்கு அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இருந்தாலும் பேச்சை ஆரம்பிப்பதற்கு தயக்கமாக இருந்தது.
ஒரு வேளை நான் அன்பு இல்லையென்று அவள் கண்டுபிடித்திருப்பாளோ? என்று கூட கொஞ்சம் பயமாக இருந்தது. ஆதலால் அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
நாங்கள் வீடு வந்த சேர்ந்ததும் பைக்கை நிறுத்திவிட்டு கதவின் பூட்டைத் திறந்துவிட, அவள் விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டாள். நான் வரண்டாவிலிருந்த சாய்வு இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிச் சாய்ந்துவிட்டேன்.
‘ரொம்ப கில்டியா ஃபீல் பண்ற போல’ அன்புவின் குரல் கேட்டது. நான் கண்களைத் திறக்கவில்லை. எதையோ பேசிவிட்டுப் போகட்டும். நான் கேட்டும் கேட்காதது போலிருக்க,
‘என்னடா... அன்புவா இருப்பன்னு சவால் எல்லாம் விட்ட... இதான் நீ அன்புவா இருக்க இலட்சணமா?’ அவன் குத்திக்காட்டலை நான் பொருட்படுத்தவில்லை.
‘எந்த ஜென்மத்திலயும் உன்னால அன்புவா இருக்க முடியாது... அன்பா யார்க்கிட்டயும் பேசவும் பழகவும் முடியாது’
சுரீரென்று அந்த வார்த்தைகள் என் மனதைத் தைக்கவும் எழுந்து அமர்ந்த நான், “ஏன் முடியாது?” என்று கேட்க,
‘உன்னால முடியாது அறிவு... நீ ஒரு செல்பிஷ்... எமொஷனல் பெர்ஸன்... அடுத்தவங்க வலியைப் பத்தி யோசிக்கவும் மாட்ட... மத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பும் கொடுக்கமாட்ட... கிரி அங்கிள் உன்னைப் பத்திச் சொன்னது அத்தனையும் உண்மை.’
’அந்த உண்மையை உன்னால ஜீரணிக்க முடியல... அந்தக் கோபத்தைதான் நீ ஒரு சின்ன குழந்தைக்கிட்ட காட்டி இருக்க’ என்றவன் நிறுத்தாமல் பேசியதில் எனக்கு ஆத்திரம் பொங்கியது.
“போதும் நிறுத்துடா” என்று நான் சீற்றமாகக் கத்திவிடவும்,
‘கத்துனாலும் நான் சொன்னதுதான் உண்மை’ என்றவன் தொடர்ந்து என்னை வெறுப்பேற்ற,
”நீ எந்த உண்மையும் சொல்ல வேண்டாம்... போடா என்னை விட்டு... போஓஓஓஓ” என்று நான் என் காதுகளை மூடிக் கொண்டு சத்தமிட்டுக் கத்த,
“என்ன அன்பு? என்னாச்சு?” என்று பதறிக் கொண்டு என் முன்னே வந்து நின்றாள் மஹா.
நான் விழிகளைத் திறக்கவும் அவள் சுற்றும் முற்றும் பார்த்து, “யார்கிட்ட கத்திட்டு இருக்கீங்க அன்பு” என்று புரியாமல் கேட்டாள்.
அப்போதுதான் நான் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திவிட்டதை உணர்ந்தேன். இப்போது என்ன சொல்லி இவளைச் சமாளிப்பது என்று நான் விழிக்க அவள் மீண்டும், “யார் இருக்கா இங்க? யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க?” என்று அதே கேள்வியைக் கேட்டாள்.
எனக்குக் கடுப்பானது. “ம்ம்ம்ம் யார்கிட்டயும் இல்ல... என்கிட்டதான் கத்திட்டு இருக்கேன்” என, அவள் என்னைக் குழப்பமாகப் பார்த்தாள்.
“என்ன அப்படி பார்க்குற? நான் உன் கண்ணுக்குப் பைத்தியம் மாதிரி தெரியுறேனா?” என்று வினவ,
“பச் என்னாச்சு அன்பு உங்களுக்கு? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க?” என்று அவள் உண்மையான வருத்தத்துடன் என்னை நெருங்கி வர அவளை நேர்கொண்டு பார்க்க முடியாமல்,
“என் பிரச்சனையை உனக்குச் சொன்னாலும் புரியாது... நீ போ” என்று நான் என் கரம் கொண்டு முகத்தை மூடியபடி பின்னே சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
அவளிடம் பதில் சொல்லாமல் தப்பிக்க நான் அமைதியாக அப்படியே படுத்திருக்க, அப்போது என் கன்னங்களின் இருபுறமும் மிருதுவான கரங்கள் தழுவியது.
நான் பதறிக் கொண்டு விழிகளைத் திறக்க, “நீங்க சொல்லித்தான் நான் புரிஞ்சிக்கணுமா அன்பு” என்று கேட்டபடி என் முகத்திற்கு நேராகக் குனிந்திருந்தாள் மஹா.
அவளை நான் மௌனமாக ஏறிட, “எனக்கு நீங்க சொல்லலனாலும் உங்க வேதனையும் வலியும் புரியும்” என்றாள்.
அந்த நிலாமுகத்தையும் அவளின் மென்மையான தீண்டலிலும் நான் மெய் மறந்துவிட அவள் தொடர்ந்து என் விழிகளைப் பார்த்துப் பேசினாள்.
“நீங்க எவ்வளவு ஃபிரஸ்ட்ரேஷன்ல இருக்கீங்கன்னும் இராத்திரி எல்லாம் தூங்க முடியாம எவ்வளவு அவஸ்த்தைப்படுறீங்கனும் நான் இந்த ஒரு வாரமா பார்த்துட்டுதானே இருக்கேன்” என்றவள் சொல்ல,
‘இவளுக்குத் தெரியுமா?’ என்று எண்ணி நான் அதிர்ச்சியானேன்.
“எனக்கு எல்லாம் தெரியும் அன்பு... அதுவும் இல்லாம கிரி சார் உங்ககிட்ட அறிவைப் பத்தி ஏதேதோ சொல்லி உங்களை இன்னும் டென்ஷன் படுத்திட்டுப் போயிட்டாரு... அந்த டென்ஷன்லதான் நீங்க என்கிட்டயும் பாப்பாகிட்டயும் அப்படி கோபமாக நடந்துக்கிட்டீங்கன்னும் என்னால புரிஞ்சுக்க முடியாது” என்றவள் நான் மனதில் நினைத்ததை எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் அதோடு நிறுத்தாமல், “நீங்க குட்டிமாவுக்கு அடிப்பட்டத்தை நினைச்சு கில்டியா எல்லாம் ஃபீல் பண்ண வேண்டாம்... அது உங்களையே அறியாம நடந்த விஷயம் அன்பு... குட்டிமாவுக்குச் சீக்கிரம் சரியாயிடும்” என்றவள் எனக்கு ஆறுதல் கூற, என் மனம் நெகிழ்ந்தது.
என்னை யாரும் இந்தளவு புரிந்து கொண்டு பேசியதில்லை. ஆறுதல் உரைத்ததில்லை. பிரேமிக்குக் கூட நானாகச் சொல்லாமல் என் வேதனை அவளுக்குப் புரிந்ததில்லை.
துக்கம் தொண்டையை அடைக்க, “ஐம் சாரி மஹா” என்று சொன்ன நொடி, “நீங்க எதுவும் தெரிஞ்சு செய்யல அன்பு... சாரி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றவள் இன்னும் நெருக்கமாக என் முகத்தருகே நெருங்கி, “வேணா ஐ லவ் யூ மஹான்னு சொல்லுங்க” என்று மென்மையான குரலில் கேட்டாள்.
“சொல்லுங்க அன்பு... நமக்கு கல்யாணமான நாளிலிருந்து நீங்க ஐ லவ் யூன்னு சொல்லவே இல்ல... சொல்ற மாதிரி சூழ்நிலையும் அமைல... ஆனா இப்போ நீங்க ஐ லவ் யூ சொல்லி... எனக்குக் கேட்கணும் போல இருக்கு” என்று கேட்டு என் கண்களை ஏக்கமாகப் பார்த்தாள்.
அந்தக் குரலில் நான் கரைந்து போன அதேநேரம் அவளின் மூச்சு காற்றின் உஷ்ணத்தில் நான் தீயாகத் தகித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை.
அவள் மீண்டும், “சொல்ல மாட்டீங்களா அன்பு” என்று கேட்டு ஏக்கமாக என் விழிகளைப் பார்க்கவும் அவள் கேட்டதைச் சொல்லிவிட வேண்டுமென்ற தவிப்பு ஏற்பட்டது எனக்கு. ஆனால் நான் யாரிடமும் இதுவரை அப்படி சொன்னத்தில்லை. அந்த வார்த்தையின் மீது பெரிதாக மதிப்பெல்லாம் கூட எனக்கு இல்லை. ஏன் காதல் மீதே இல்லை. அதனை வெறும் உடல் சார்ந்த உணர்வாகத்தான் நான் பார்த்தேன்.
ஆனால் மஹா அந்த உணர்வை உள்ளார்ந்து ஆழமாக நேசிக்கிறாள். மதிக்கிறாள் என்று அவள் கண்களைப் பார்க்கும் போதே புரிந்தது.
அவள் எதிர்பார்க்கும் அந்த வார்த்தையை அதன் மதிப்புடனும் உணர்வுடனும் நவில வேண்டும். ஆனால் எப்படி சொல்வது? என் வார்த்தைகளில் அவள் எதிர்பார்க்கும் அந்தக் காதல் உணர்வு இருக்குமா?
“சரி நீங்க ஏதோ அப்செட்ல இருக்கீங்க போல... பரவாயில்ல” என்றவள் ஏமாற்றத்துடன் என் கன்னங்களில் இருந்த அவள் கரத்தைப் பிரித்தெடுப்பதற்குள் அவள் இரு கரங்களையும் என் இரு கரங்களால் அழுத்திக் கொண்டு, “ஐ லவ் யூ மஹா” என்றேன்.
அவள் முகம் மலர்ந்தது. மெல்லிய குரலில் அவளும் “ஐ லவ் யூ அன்பு” என்று விட்டு என்னை ஆழ்ந்து பார்த்தாள். அந்தப் பார்வைக்கான அர்த்தத்தை நான் கணிப்பதற்குள் அவள் தன் இதழ்களைக் கொண்டு என் இதழ்களை மூடிவிட்டாள்.
நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் முத்தத்திற்கு எதிர்வினையாற்றவும் இல்லை. என் இதழ்களுடன் உறவாடும் அவள் இதழ்களை உணர மட்டுமே செய்தேன்.
நான் முத்தங்களை பெற்றும் இருக்கிறேன். கொடுத்தும் கூட இருக்கிறேன். ஆனால் இது புது மாதிரியான முத்தம். காதல் முத்தம். காதல் முத்தம் மட்டுமில்லை. கன்னி முத்தமும் கூட. இதுவரை வேறு எந்த ஆணுக்கும் இது போன்று அவளாக முத்தமிட்டிருக்கவே மாட்டாள் என்று தோன்றியது.
மழலை மொழி போல அனுபவமற்ற அவள் முத்தமும் அந்த முத்தத்தின் வழியாக அவள் பேசும் காதல் மொழியும் அத்தனை இரசனையாய் இருந்தது. என்னை ஏதோ செய்தது. எனக்குள்ளாக அவளை ஆழமாக உணர்த்திச் சென்றவள் மெல்ல என்னை விட்டு விலகினாள்.
சட்டென்று கலைந்து போன அழகான கனவு போல என் இதழ்களை விட்டு அவள் இதழ்கள் பிரிந்துவிட்டன. வெட்கப் புன்னகையுடன் நிமிர்ந்து என்னைப் பார்த்து, “சரி... நீங்க சாப்பிட வாங்க” என்று விட்டு நகரவும் நான் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு, “ஐ லவ் யூ மஹா” என்றேன்.
இம்முறை நானாகச் சொன்னேன். அவளுக்காக அவள் வேண்டுமென்று சொன்னேன். அவள் மலர்ந்த புன்னகையுடன், “லவ் யூ அன்பு” என்று விட்டு என்னைக் கடந்துச் சென்றாள்.
என் மனம் எங்கோ சிறகில்லாமல் பறந்த உணர்வு. என் உலகம் சுழலவில்லை. சுழலும் உணர்வே எனக்கு இல்லை.
அவள் காதலுடன் தந்த முத்தம் மட்டும்தான் என் நினைவில் சுழன்றது. புதுவிதமான ஒரு போதையைத் தந்தது.
‘ரொம்ப மிதக்காதே... அவ ஐ லவ் யூ அன்புன்னு... த்தான் சொல்லிட்டுப் போனா’ என்ற அன்புவின் குரல் கேட்ட நொடி சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்த என் மனம் சட்டென்று சிறகொடிந்த பறவையாகத் தரைத்தட்டி வீழ்ந்தது.
11
To love and to be loved is the greatest happiness
மதியழகியின் நெற்றியிலிருந்த இரத்தக் காயத்தை மருத்துவர் சோதித்துக் கொண்டிருக்க மஹா கண்களில் கண்ணீர் பளபளத்தது. மதியை விடவும் இவள்தான் அதிகமாகத் துடித்துடித்துப் போய்விட்டாள்.
நான் பைக்கில் அழைத்து வரும் போது அழுது தீர்த்துவிட்டாள். எனக்குமே மதிக்குட்டிக்கு அடிப்பட்டதைப் பார்த்த கணம் உள்ளமெல்லாம் படபடத்துவிட்டது. மருத்துவமனைக்கு வந்து சேர்த்த பின்புதான் என் படபடப்பும் கொஞ்சமாக அடங்கியது.
அங்கிருந்த செவிலியர் அடிப்பட்ட காயத்தைச் சுத்தம் செய்து மருந்து போடத் தொடங்கியதும் மதிக்குட்டி வலி தாங்காமல், “ப்பா வலிக்குது ப்பா” என்று என்னைப் பார்த்து அழுதாள்.
“ஒன்னும் இல்ல மதிக்குட்டி... சரியாயிடும்” என்று நான் சமாதானம் கூறிய போதும் அவள் தொடர்ந்து ‘ப்பா பா’ என்று வலியுடன் அழுது கொண்டே இருந்தாள். அவளின் அப்பா என்ற விளிப்பு என்னைக் குற்றவுணர்வில் ஆழ்த்தியது.
மண்டையில் யாரோ ஓங்கிச் சம்மட்டையால் அடித்தது போலிருந்தது.
என்னை அப்பா ஸ்தானத்தில் பார்க்கும் ஒரு குழந்தையைப் போய்...
உண்மையில் எனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. போயும் போயும் ஒரு சின்ன குழந்தையிடம் போய் என் கோபத்தைக் காட்டுவேனா நான்?
அதுவும் ‘அன்பப்பா’ என்று அவள் அபயமாக ஓடி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டவளைப் போய் தள்ளிவிட்டுக் காயப்படுத்தி... அப்படி என்ன கட்டுப்படுத்த முடியாத கோபம் எனக்கு...
இதெல்லாம் யோசிக்க யோசிக்க என் பால்ய பருவம் என் நினைவுக்கு வந்துவிட்டது. என் அப்பா என்னை முரட்டுத்தனமாக அடித்த போதெல்லாம் நான் உடலால் காயப்பட்டதை விட மனதால் அதிகம் காயப்பட்டேன்.
இன்று அதே வலியையும் வேதனையையும் நான் மதிக்குட்டிக்குத் தந்திருக்கிறேன். என்னை அப்பாவாகப் பார்க்கும் மகளுக்குத் தந்திருக்கிறேன்.
என் அப்பாவுக்குள் இருக்கும் கோபமும் வன்மமும் என் இரத்தத்திலும் இருக்கிறது. நானும் அதே மிருகத்தனத்தைதான் மதியிடம் காட்டியிருக்கிறேன்.
‘என் மீதே எனக்கு வெறுப்பும் கோபமும் வந்தது. நான் எல்லாம் ஒரு மனுஷனா சை!’ என்று நிந்தித்து கொண்டிருக்கும் போதே மருத்துவர் என் புறம் திரும்பி,
“ஒன்னும் பிரச்சனை இல்ல... சின்ன காயம்தான்... சீக்கிரம் ஆறிடும்... ஒரு ஆயின்மென்ட் எழுதி இருக்கேன்... மூணு நாளைக்குத் தொடர்ந்து போடுங்க... வலிக்கு மருந்தும் எழுதி இருக்கேன்... அது கொடுத்தா வலி கேட்கும்” என்று விவரமாகச் சொல்லியவர் மருந்து சீட்டை எழுதி என்னிடம் கொடுத்தார்.
நான் மதியழகியைத் தூக்கிக் கொள்ள செல்லவும், “நீங்க போய் மருந்து வாங்கிட்டு வாங்க... நான் குட்டிமாவைத் தூக்குக்கிறேன்” என்றாள் மஹா. என் மீது சரியான கோபத்தில் இருப்பாள் என்று தோன்றியது.
நான் அதன் பின் மருந்துகளை வாங்கிக் கொண்டு என் பைக்கை எடுக்க மஹா பின்னோடு அமர்ந்து கொண்டாள்.
வீடு வந்து சேரும் வரை அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எனக்கு அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இருந்தாலும் பேச்சை ஆரம்பிப்பதற்கு தயக்கமாக இருந்தது.
ஒரு வேளை நான் அன்பு இல்லையென்று அவள் கண்டுபிடித்திருப்பாளோ? என்று கூட கொஞ்சம் பயமாக இருந்தது. ஆதலால் அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
நாங்கள் வீடு வந்த சேர்ந்ததும் பைக்கை நிறுத்திவிட்டு கதவின் பூட்டைத் திறந்துவிட, அவள் விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டாள். நான் வரண்டாவிலிருந்த சாய்வு இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிச் சாய்ந்துவிட்டேன்.
‘ரொம்ப கில்டியா ஃபீல் பண்ற போல’ அன்புவின் குரல் கேட்டது. நான் கண்களைத் திறக்கவில்லை. எதையோ பேசிவிட்டுப் போகட்டும். நான் கேட்டும் கேட்காதது போலிருக்க,
‘என்னடா... அன்புவா இருப்பன்னு சவால் எல்லாம் விட்ட... இதான் நீ அன்புவா இருக்க இலட்சணமா?’ அவன் குத்திக்காட்டலை நான் பொருட்படுத்தவில்லை.
‘எந்த ஜென்மத்திலயும் உன்னால அன்புவா இருக்க முடியாது... அன்பா யார்க்கிட்டயும் பேசவும் பழகவும் முடியாது’
சுரீரென்று அந்த வார்த்தைகள் என் மனதைத் தைக்கவும் எழுந்து அமர்ந்த நான், “ஏன் முடியாது?” என்று கேட்க,
‘உன்னால முடியாது அறிவு... நீ ஒரு செல்பிஷ்... எமொஷனல் பெர்ஸன்... அடுத்தவங்க வலியைப் பத்தி யோசிக்கவும் மாட்ட... மத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பும் கொடுக்கமாட்ட... கிரி அங்கிள் உன்னைப் பத்திச் சொன்னது அத்தனையும் உண்மை.’
’அந்த உண்மையை உன்னால ஜீரணிக்க முடியல... அந்தக் கோபத்தைதான் நீ ஒரு சின்ன குழந்தைக்கிட்ட காட்டி இருக்க’ என்றவன் நிறுத்தாமல் பேசியதில் எனக்கு ஆத்திரம் பொங்கியது.
“போதும் நிறுத்துடா” என்று நான் சீற்றமாகக் கத்திவிடவும்,
‘கத்துனாலும் நான் சொன்னதுதான் உண்மை’ என்றவன் தொடர்ந்து என்னை வெறுப்பேற்ற,
”நீ எந்த உண்மையும் சொல்ல வேண்டாம்... போடா என்னை விட்டு... போஓஓஓஓ” என்று நான் என் காதுகளை மூடிக் கொண்டு சத்தமிட்டுக் கத்த,
“என்ன அன்பு? என்னாச்சு?” என்று பதறிக் கொண்டு என் முன்னே வந்து நின்றாள் மஹா.
நான் விழிகளைத் திறக்கவும் அவள் சுற்றும் முற்றும் பார்த்து, “யார்கிட்ட கத்திட்டு இருக்கீங்க அன்பு” என்று புரியாமல் கேட்டாள்.
அப்போதுதான் நான் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திவிட்டதை உணர்ந்தேன். இப்போது என்ன சொல்லி இவளைச் சமாளிப்பது என்று நான் விழிக்க அவள் மீண்டும், “யார் இருக்கா இங்க? யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க?” என்று அதே கேள்வியைக் கேட்டாள்.
எனக்குக் கடுப்பானது. “ம்ம்ம்ம் யார்கிட்டயும் இல்ல... என்கிட்டதான் கத்திட்டு இருக்கேன்” என, அவள் என்னைக் குழப்பமாகப் பார்த்தாள்.
“என்ன அப்படி பார்க்குற? நான் உன் கண்ணுக்குப் பைத்தியம் மாதிரி தெரியுறேனா?” என்று வினவ,
“பச் என்னாச்சு அன்பு உங்களுக்கு? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க?” என்று அவள் உண்மையான வருத்தத்துடன் என்னை நெருங்கி வர அவளை நேர்கொண்டு பார்க்க முடியாமல்,
“என் பிரச்சனையை உனக்குச் சொன்னாலும் புரியாது... நீ போ” என்று நான் என் கரம் கொண்டு முகத்தை மூடியபடி பின்னே சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
அவளிடம் பதில் சொல்லாமல் தப்பிக்க நான் அமைதியாக அப்படியே படுத்திருக்க, அப்போது என் கன்னங்களின் இருபுறமும் மிருதுவான கரங்கள் தழுவியது.
நான் பதறிக் கொண்டு விழிகளைத் திறக்க, “நீங்க சொல்லித்தான் நான் புரிஞ்சிக்கணுமா அன்பு” என்று கேட்டபடி என் முகத்திற்கு நேராகக் குனிந்திருந்தாள் மஹா.
அவளை நான் மௌனமாக ஏறிட, “எனக்கு நீங்க சொல்லலனாலும் உங்க வேதனையும் வலியும் புரியும்” என்றாள்.
அந்த நிலாமுகத்தையும் அவளின் மென்மையான தீண்டலிலும் நான் மெய் மறந்துவிட அவள் தொடர்ந்து என் விழிகளைப் பார்த்துப் பேசினாள்.
“நீங்க எவ்வளவு ஃபிரஸ்ட்ரேஷன்ல இருக்கீங்கன்னும் இராத்திரி எல்லாம் தூங்க முடியாம எவ்வளவு அவஸ்த்தைப்படுறீங்கனும் நான் இந்த ஒரு வாரமா பார்த்துட்டுதானே இருக்கேன்” என்றவள் சொல்ல,
‘இவளுக்குத் தெரியுமா?’ என்று எண்ணி நான் அதிர்ச்சியானேன்.
“எனக்கு எல்லாம் தெரியும் அன்பு... அதுவும் இல்லாம கிரி சார் உங்ககிட்ட அறிவைப் பத்தி ஏதேதோ சொல்லி உங்களை இன்னும் டென்ஷன் படுத்திட்டுப் போயிட்டாரு... அந்த டென்ஷன்லதான் நீங்க என்கிட்டயும் பாப்பாகிட்டயும் அப்படி கோபமாக நடந்துக்கிட்டீங்கன்னும் என்னால புரிஞ்சுக்க முடியாது” என்றவள் நான் மனதில் நினைத்ததை எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் அதோடு நிறுத்தாமல், “நீங்க குட்டிமாவுக்கு அடிப்பட்டத்தை நினைச்சு கில்டியா எல்லாம் ஃபீல் பண்ண வேண்டாம்... அது உங்களையே அறியாம நடந்த விஷயம் அன்பு... குட்டிமாவுக்குச் சீக்கிரம் சரியாயிடும்” என்றவள் எனக்கு ஆறுதல் கூற, என் மனம் நெகிழ்ந்தது.
என்னை யாரும் இந்தளவு புரிந்து கொண்டு பேசியதில்லை. ஆறுதல் உரைத்ததில்லை. பிரேமிக்குக் கூட நானாகச் சொல்லாமல் என் வேதனை அவளுக்குப் புரிந்ததில்லை.
துக்கம் தொண்டையை அடைக்க, “ஐம் சாரி மஹா” என்று சொன்ன நொடி, “நீங்க எதுவும் தெரிஞ்சு செய்யல அன்பு... சாரி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றவள் இன்னும் நெருக்கமாக என் முகத்தருகே நெருங்கி, “வேணா ஐ லவ் யூ மஹான்னு சொல்லுங்க” என்று மென்மையான குரலில் கேட்டாள்.
“சொல்லுங்க அன்பு... நமக்கு கல்யாணமான நாளிலிருந்து நீங்க ஐ லவ் யூன்னு சொல்லவே இல்ல... சொல்ற மாதிரி சூழ்நிலையும் அமைல... ஆனா இப்போ நீங்க ஐ லவ் யூ சொல்லி... எனக்குக் கேட்கணும் போல இருக்கு” என்று கேட்டு என் கண்களை ஏக்கமாகப் பார்த்தாள்.
அந்தக் குரலில் நான் கரைந்து போன அதேநேரம் அவளின் மூச்சு காற்றின் உஷ்ணத்தில் நான் தீயாகத் தகித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை.
அவள் மீண்டும், “சொல்ல மாட்டீங்களா அன்பு” என்று கேட்டு ஏக்கமாக என் விழிகளைப் பார்க்கவும் அவள் கேட்டதைச் சொல்லிவிட வேண்டுமென்ற தவிப்பு ஏற்பட்டது எனக்கு. ஆனால் நான் யாரிடமும் இதுவரை அப்படி சொன்னத்தில்லை. அந்த வார்த்தையின் மீது பெரிதாக மதிப்பெல்லாம் கூட எனக்கு இல்லை. ஏன் காதல் மீதே இல்லை. அதனை வெறும் உடல் சார்ந்த உணர்வாகத்தான் நான் பார்த்தேன்.
ஆனால் மஹா அந்த உணர்வை உள்ளார்ந்து ஆழமாக நேசிக்கிறாள். மதிக்கிறாள் என்று அவள் கண்களைப் பார்க்கும் போதே புரிந்தது.
அவள் எதிர்பார்க்கும் அந்த வார்த்தையை அதன் மதிப்புடனும் உணர்வுடனும் நவில வேண்டும். ஆனால் எப்படி சொல்வது? என் வார்த்தைகளில் அவள் எதிர்பார்க்கும் அந்தக் காதல் உணர்வு இருக்குமா?
“சரி நீங்க ஏதோ அப்செட்ல இருக்கீங்க போல... பரவாயில்ல” என்றவள் ஏமாற்றத்துடன் என் கன்னங்களில் இருந்த அவள் கரத்தைப் பிரித்தெடுப்பதற்குள் அவள் இரு கரங்களையும் என் இரு கரங்களால் அழுத்திக் கொண்டு, “ஐ லவ் யூ மஹா” என்றேன்.
அவள் முகம் மலர்ந்தது. மெல்லிய குரலில் அவளும் “ஐ லவ் யூ அன்பு” என்று விட்டு என்னை ஆழ்ந்து பார்த்தாள். அந்தப் பார்வைக்கான அர்த்தத்தை நான் கணிப்பதற்குள் அவள் தன் இதழ்களைக் கொண்டு என் இதழ்களை மூடிவிட்டாள்.
நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் முத்தத்திற்கு எதிர்வினையாற்றவும் இல்லை. என் இதழ்களுடன் உறவாடும் அவள் இதழ்களை உணர மட்டுமே செய்தேன்.
நான் முத்தங்களை பெற்றும் இருக்கிறேன். கொடுத்தும் கூட இருக்கிறேன். ஆனால் இது புது மாதிரியான முத்தம். காதல் முத்தம். காதல் முத்தம் மட்டுமில்லை. கன்னி முத்தமும் கூட. இதுவரை வேறு எந்த ஆணுக்கும் இது போன்று அவளாக முத்தமிட்டிருக்கவே மாட்டாள் என்று தோன்றியது.
மழலை மொழி போல அனுபவமற்ற அவள் முத்தமும் அந்த முத்தத்தின் வழியாக அவள் பேசும் காதல் மொழியும் அத்தனை இரசனையாய் இருந்தது. என்னை ஏதோ செய்தது. எனக்குள்ளாக அவளை ஆழமாக உணர்த்திச் சென்றவள் மெல்ல என்னை விட்டு விலகினாள்.
சட்டென்று கலைந்து போன அழகான கனவு போல என் இதழ்களை விட்டு அவள் இதழ்கள் பிரிந்துவிட்டன. வெட்கப் புன்னகையுடன் நிமிர்ந்து என்னைப் பார்த்து, “சரி... நீங்க சாப்பிட வாங்க” என்று விட்டு நகரவும் நான் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு, “ஐ லவ் யூ மஹா” என்றேன்.
இம்முறை நானாகச் சொன்னேன். அவளுக்காக அவள் வேண்டுமென்று சொன்னேன். அவள் மலர்ந்த புன்னகையுடன், “லவ் யூ அன்பு” என்று விட்டு என்னைக் கடந்துச் சென்றாள்.
என் மனம் எங்கோ சிறகில்லாமல் பறந்த உணர்வு. என் உலகம் சுழலவில்லை. சுழலும் உணர்வே எனக்கு இல்லை.
அவள் காதலுடன் தந்த முத்தம் மட்டும்தான் என் நினைவில் சுழன்றது. புதுவிதமான ஒரு போதையைத் தந்தது.
‘ரொம்ப மிதக்காதே... அவ ஐ லவ் யூ அன்புன்னு... த்தான் சொல்லிட்டுப் போனா’ என்ற அன்புவின் குரல் கேட்ட நொடி சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்த என் மனம் சட்டென்று சிறகொடிந்த பறவையாகத் தரைத்தட்டி வீழ்ந்தது.
