மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 40

Quote from monisha on September 10, 2025, 11:56 AM40
இனிமையான தனிமை
சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன் மனோஜை கைது செய்வதில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மனோஜை காப்பாற்றினாலோ அல்லது தலைமறைவாய் வைத்திருந்தாலோ அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படலாம் என அமைதி காத்தார். ஆனால் அந்த மெளனத்தின் பின்னே பெரிய திட்டத்தையே வடிவமைத்துக் கொண்டிருந்தார் வித்யாதரன்.
மனோஜுக்கு ஆதரவாக சமுத்திரன் வாதாட முடிவெடுத்தான். அவன் அதற்காக ரொம்பவும் மும்முமரமாக குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். தன் மனைவி சுபாவை நேரடியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ள ரொம்பவும் ஆவலாய் இருந்தான். அவளைத் தோல்வியுற செய்து மீண்டும் வீட்டுக்குள் தன் காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தான்.
சுபாவிற்கு சமுத்திரனின் புத்திசாலித்தனம் நன்றாகத் தெரியும். அவனை அத்தனை சீக்கிரத்தில் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளவும் மாட்டான். சமுத்திரனை எதிர்த்து வாதாடப் போவது சுபாவுக்கு நிச்சியம் சவாலாய் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த சவாலை மீறிக் கொண்டு அவள் வெற்றி பெறுவாளா என்பது பெரும் புதிராய் இருந்தது.
போலிஸ் ஸ்டேஷனில் மனோஜ் உட்கார வைக்கப்படிருந்தான். அதுவும் ராஜ மரியாதையுடன். வேணு மகாதேவன் அசிஸ்டன்ட் கமிஷனராய் இருந்து கொண்டு அவனுக்கு பணியாளன் போல வேலை செய்து கொண்டிருக்க சிவாவுக்கு எரிச்சலாய் வந்தது.
வேணு மகாதேவன் சிவாவின் அருகில் வந்து, “உன்னோட போலீஸ்கார திமிரை மனோஜிடம் காண்பிக்காதே... நான் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று வெளியே புறப்பட்டார்.
மனோஜ் கால் மீது கால் போட்டுக் கொண்டு சிவாவை சொடுக்கு போட்டு தன் அருகில் அழைத்தான்.
சிவா தன் கம்பீரம் குறையாமல் அவன் அருகில் வந்து நின்றான்.
“கேத்ரீன் கேஸில் உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது... இந்தக் கேஸ் முடியும் போது உன் லைஃப்... வைஃப்... எதுவும் இல்லாம பண்ணிடுவேன் பாத்துக்கோ”
சிவா எதுவும் பேசாமல் பொறுமையாகவே நின்றிருந்தான்.
“எப்படி இருக்கா அந்த அரபியன் குதிரை?”என்றான்.
சிவா கொஞ்சம் யோசித்தபடி மனோஜை பார்க்க, “உன் ஃபிரண்டு விந்தியாவைத்தான் சொல்றேன்” என்று மனோஜ் சொல்லி முடிக்க… சிவாவிற்கு அவன் எண்ணம் புரியும் போது மனோஜின் கன்னத்தில் விழுந்த அடி அவன் தாடை சிவந்து வீங்கிப் போனது.
“என்ன மனோஜ்... இதுதான் போலிஸ் அடி வாங்கி இருக்கியா? என்ன கோபம் வருதா? என்ன செய்வ? என்ன செய்யணும்னு விருப்பப்பட்டாலும் இன்னைக்குள்ள செஞ்சிடு.
நாளைக்கு உன்னோட சாப்டர் க்ளோஸ்... உங்க அப்பா செஞ்ச பாவம்... நீ செஞ்ச பாவம் எல்லாமே உன் தலையிலதான் விடியப்போகுது” என்றான் சிவா.
“எங்க அப்பாவோட பவர் என்னன்னு தெரியுமா உனக்கு?”
“நல்லா தெரியும்... அந்தப் பவரும் பதவியையும் காப்பாத்திக்கவாச்சுசம் உங்க அப்பன் நிச்சயம் உன்னைக் காப்பாத்தமாட்டான்”
“இந்தக் கேஸில எனக்கெதிரா எந்த ஆதாரமும் இல்ல...”
“நீ நாலு வருஷத்துக்கு முன்னாடி விதைச்ச விதை உனக்கெதிரா வளர்ந்து நிக்குதே”
“என்ன சொல்ல வர்ற?”
“நீ கேத்ரீன் பார்ட்டிக்கு அழையா விருந்தாளியா போனல்ல... அங்க நீ செஞ்ச லீலைக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு “
“நீ பொய் சொல்ற... சும்மா என்னைப் பயப்படுத்திப் பாக்கிற... தேவையில்லாம பேசி என்னைக் குழப்பாதே... எதாவது இனி பேசணும்னா என் வக்கீல்கிட்ட பேசிக்கோ”
சிவா அவனைப் பார்த்துக் கள்ளத்தனமாய் சிரித்தான்.
“அந்த சமுத்திரனை தானே சொல்ற... அவனுக்கு அவன் சுயநலம்தான் பெரிசு. அவன் தான் தலைக்கு கத்தி வராதவரைக்கும்தான் உனக்காகப் பேசுவான்.
ரொம்ப யோசிக்காதே மனோஜ்... கேத்ரீனுக்கு நீ செஞ்ச பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு விசாரணை அறையை விட்டு வெளியேறினான்.
சிவா அடித்ததை விட அவன் சொன்ன வார்த்தைகள்தான் அவனை அதிகமாய்க் கலவரப்படுத்தின. வித்யாதரன் தன்னைக் காப்பாற்றுவாரா என்ற புரியாத குழப்பம் மனோஜ் மனதில் வளர்ந்தது. அதைதான் சிவாவும் விரும்பினான்.
விந்தியா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று எதிர்பாராத நினைவுகள் கனவுகளாய் தோன்றி அவள் உறக்கத்தைக் கலைத்தன. மனதிற்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.
தரையில் உறங்கி கொண்டிருந்த ஆதித்தியாவை காணாமல் அவனைத் தேடிக் கொண்டு போனவள் அவன் எங்கேயும் காணாமல் பதற்றம் அடைந்தாள். அந்த இரவு நேரத்தில் அவன் மாடிக்குப் போயிருக்கக் கூடுமா என்று யோசித்தபடி அந்த இருளில் படிக்கட்டு ஏறிப் போனாள்.
வானின் இருளை முடிந்தளவுக்கு விரட்டிக் கொண்டிருந்த நிலவின் வெளிச்சத்தில் நடுநிசியில் ஆதித்தியா சிகரெட்டும் கையுமாய் நின்று கொண்டிருந்தான்.
விந்தியாவைப் பார்த்தவுடன் சிகரெட்டை காலில் போட்டு மிதித்தான்.
“நீங்க இன்னும் இந்தக் கெட்ட பழக்கத்தை விடலயா?” என்று மிரட்டலாகக் கேட்டாள் விந்தியா.
“ஜஸ்ட் ஒன்...”
“இட்ஸ் நாட் குட் பாஃர் ஹெல்த்துனு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப இந்த சிகரெட்டை பிடிச்சு உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க?”
“டென்ஷனா இருந்துச்சு... நாளைக்குக் கோர்ட்டில என்ன நடக்குமோ... அந்த வித்யாதரனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்... யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்துட்டா... அதுவும் இல்லாம கேத்ரீனோட ஞாபகம் வந்தாளே நான் ரொம்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றேன்”
“இன்னிக்கு யோசிச்சி என்ன பன்றது... அன்னிக்கு அவங்க ப்ரபோஸ் பண்ணும் போதே யோசிச்சிருக்கலாம்”
“ஓகே சொல்லி இருக்கணும்னு நினைக்கிறியா?”
“ஒய் நாட்... அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும்… நமக்கு எப்பவும் உறுதுணையா இருக்கிற கணவன் வேணும்னு நினைச்சிருக்கா... நீங்க அப்படி இருப்பீங்கனு அவ யோசிச்சிருக்கா... இதில தப்பென்ன இருக்கு?”
“நான் சம்மதமே சொல்லி இருந்தாலும் எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப நாள் நீடிச்சிருக்காது”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“என்னை உண்மையிலேயே புரிஞ்சிக்கிட்டுருந்தா அப்படி ஒரு பழியை என் மேல போட்டிருக்க மாட்டா”
“அவளோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சு”
“என்ன பெரிய சூழ்நிலை... உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் மாசக்கணக்குதான்... ஆனா இந்தக் கொலைப்பழி என் மேல விழுந்த போதும் நீ என்னை ஒரு கேள்விகூடக் கேட்காம நம்பின இல்ல... அந்த லாயர் இஷ்டத்துக்குப் பேசின போது முகத்திலறைந்த மாதிரி நான் அப்படிப்பட்டவன் இல்லனு அழுத்தம் திருத்தமா சொன்னியே... ஆனா வருஷக்கணக்கா நான் அவ கூடப் பழகியிருந்தும் அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லையே”
அவனின் பதிலுக்கு அவள் என்ன பேசுவதென்றே புரியாமல் நின்றிருந்தாள்.
“நீ சொல்லனாலும் உனக்கு என் மேல இருக்கிற காதலும் நம்பிக்கையும் உன்னோட ஒவ்வொரு செயலிலும் தெரியுது... இந்த நைட்டில் என்னைத் தேடிட்டு வந்ததையும் சேர்த்து.
ஆனா உன் பிடிவாத குணத்தால ஒரு தடவை கூட நீ மனசவிட்டு எதுவும் சொன்னதில்லை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது விந்தியா... எனக்காக ஒரே தடவை உன் மனசில இருக்கிறதை சொல்லிடேன்”
“அப்புறம் பேசிக்கலாம் ஆதி... ஆல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு... நாளைக்கு காலையில கோர்ட்டுக்கு வேற போகணும்” என்று அவள் சமாளித்துவிட்டு திரும்பி போகப் பார்த்தவளை வழி மறித்து நின்று கொண்டான். அந்த இருளும் தனிமையும் அவளை மனம் திறந்து பேச வைக்கும் என்று எதிர்பார்த்தான்.
“கோபத்தை வெளிப்படுத்த தெரிஞ்ச அளவுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாதா உனக்கு?”
“வழி விடுங்க நான் போகணும்” என்று அடாவடியாக அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிடிவாதமாய் இறங்கி போகப் பார்த்தாள் விந்தியா.
“கணவன் மனைவிக்குள்ள இந்த பிடிவாதமெல்லாம் எதுக்கு?”
“ஆதித்தியா... எனக்குத் தலைவலிக்குது... வழி விடுங்க”
அதற்கு மேல் அவளை வழிமறிப்பதில் பயனில்லை என்றெண்ணி இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து வாயில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்தவள் அவன் வாயில் வைத்திருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே எரிந்தாள்.
“இப்பதானே சொன்னேன் ஸ்மோக் பண்ண வேண்டாம்னு”
“நான் சொல்றத ஏதாவது நீ காதில போட்டுக்கிறியா? நீ சொல்றத மட்டும் நான் கேட்கணுமா.? இப்போ நான் இந்த பேக்கெட் முழுசையும் காலி பண்ணிட்டுத்தான் வருவேன்... நீ போய் தூங்கு”
அவனை அப்படியே விட்டுவிட்டு போக அவளுக்கு மனம் வரவில்லை.
“ப்ளீஸ் ஆதி... அந்தப் பாக்கெட்டை என் கிட்ட கொடுத்துடுங்க… பிடிவாதம் பிடிக்காதீங்க…”
“நானா?”
“இல்ல நான்தான்... நான்தான் பிடிவாதம் பிடிக்கிறேன்... என் மனசில இருக்கிறத சொல்லாம பிடிவாதம் பிடிக்கிறேன்...
உங்களை விட்டு பிரிஞ்சி இருக்க முடியாதுனு எனக்குத் தெரியும்... ஆனா அதை நான் ஒத்துக்க மாட்டேன்...
நான் உங்களை மனசாரக் காதலிக்கிறேன்... இருந்தும் வாயை திறந்து சொல்லித் தொலைய மாட்டேன்...
நீங்க என் பக்கத்தில இருந்தா ஒயாம சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன்... ஆனா உங்களை விட்டு தள்ளி வந்துட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும்...
இந்த ஜென்மம் முழுக்க ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை உங்கக் கூட நான் வாழணும்... நான் எவ்வளவு கோபப்பட்டாலும் சண்டை போட்டாலும் அதை எல்லாம் தாண்டி என்னைக் காதலிக்க நீங்க என்னோட கடைசிவரை கூட இருக்கணும்...
என் மனசில இருக்கிறதை சொல்லிட்டேன்... போதுமா... அதை தூக்கி போடுங்க ஆதி” என்று சொல்லி அவன் கையில் இருந்த சிகரெட் பேக்கெட்டை வாங்கித் தூக்கி போட்டாள்.
கண்ணில் நீர் பெருக அவனை ஏறிட்டும் பார்க்காமல் வேக வேகமாய் படியிறங்கி போனாள்.
அந்த நிலவொளி நிரம்பிய இரவில் விந்தியா பேசிவிட்டு போனதெல்லாம் கனவோ என்று சந்தேகம் எழுந்தது ஆதித்தியாவிற்கு.
கீழே இறங்கி வந்தவன் அறைக்குள் விந்தியா படுக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவளின் கைககளைப் பிடித்துக்கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.
“இந்தக் காதல் போதும்... இந்த ஜென்மம் இல்ல இன்னும் நூறு ஜென்மத்திற்கு. எத்தனை தூரமானாலும் எத்தனை காலமானாலும் உன் கூடவே வருவேன் அள்ள அள்ள குறையாத இதே காதலோடு... லவ் யூ சோ மச் டியர்” என்று விந்தியாவின் கண்களைப் பார்த்தபடி சொன்ன ஆதித்தியா, தன் காதலைக் கொண்டு அவள் பிடிவாதத்தையும் இறுக்கத்தையும் உடைத்து சுக்குநூறாக்கினான்.
பிரிந்திருந்த அந்தக் காதல் பறவைகளை இனிமையான அந்த தனிமையில் விடுத்து இப்போதைக்கு நாம் விலகி செல்வோமாக.
விந்தியா ஆதித்தியாவின் வாழ்க்கை... போராட்டங்களைத் தாண்டி மரணிக்காத காதலோடு அவர்களின் இந்த காதல் அத்தியாயம் முடிவு பெறப் போவதில்லை.
40
இனிமையான தனிமை
சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன் மனோஜை கைது செய்வதில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மனோஜை காப்பாற்றினாலோ அல்லது தலைமறைவாய் வைத்திருந்தாலோ அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படலாம் என அமைதி காத்தார். ஆனால் அந்த மெளனத்தின் பின்னே பெரிய திட்டத்தையே வடிவமைத்துக் கொண்டிருந்தார் வித்யாதரன்.
மனோஜுக்கு ஆதரவாக சமுத்திரன் வாதாட முடிவெடுத்தான். அவன் அதற்காக ரொம்பவும் மும்முமரமாக குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். தன் மனைவி சுபாவை நேரடியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ள ரொம்பவும் ஆவலாய் இருந்தான். அவளைத் தோல்வியுற செய்து மீண்டும் வீட்டுக்குள் தன் காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தான்.
சுபாவிற்கு சமுத்திரனின் புத்திசாலித்தனம் நன்றாகத் தெரியும். அவனை அத்தனை சீக்கிரத்தில் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளவும் மாட்டான். சமுத்திரனை எதிர்த்து வாதாடப் போவது சுபாவுக்கு நிச்சியம் சவாலாய் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த சவாலை மீறிக் கொண்டு அவள் வெற்றி பெறுவாளா என்பது பெரும் புதிராய் இருந்தது.
போலிஸ் ஸ்டேஷனில் மனோஜ் உட்கார வைக்கப்படிருந்தான். அதுவும் ராஜ மரியாதையுடன். வேணு மகாதேவன் அசிஸ்டன்ட் கமிஷனராய் இருந்து கொண்டு அவனுக்கு பணியாளன் போல வேலை செய்து கொண்டிருக்க சிவாவுக்கு எரிச்சலாய் வந்தது.
வேணு மகாதேவன் சிவாவின் அருகில் வந்து, “உன்னோட போலீஸ்கார திமிரை மனோஜிடம் காண்பிக்காதே... நான் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று வெளியே புறப்பட்டார்.
மனோஜ் கால் மீது கால் போட்டுக் கொண்டு சிவாவை சொடுக்கு போட்டு தன் அருகில் அழைத்தான்.
சிவா தன் கம்பீரம் குறையாமல் அவன் அருகில் வந்து நின்றான்.
“கேத்ரீன் கேஸில் உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது... இந்தக் கேஸ் முடியும் போது உன் லைஃப்... வைஃப்... எதுவும் இல்லாம பண்ணிடுவேன் பாத்துக்கோ”
சிவா எதுவும் பேசாமல் பொறுமையாகவே நின்றிருந்தான்.
“எப்படி இருக்கா அந்த அரபியன் குதிரை?”என்றான்.
சிவா கொஞ்சம் யோசித்தபடி மனோஜை பார்க்க, “உன் ஃபிரண்டு விந்தியாவைத்தான் சொல்றேன்” என்று மனோஜ் சொல்லி முடிக்க… சிவாவிற்கு அவன் எண்ணம் புரியும் போது மனோஜின் கன்னத்தில் விழுந்த அடி அவன் தாடை சிவந்து வீங்கிப் போனது.
“என்ன மனோஜ்... இதுதான் போலிஸ் அடி வாங்கி இருக்கியா? என்ன கோபம் வருதா? என்ன செய்வ? என்ன செய்யணும்னு விருப்பப்பட்டாலும் இன்னைக்குள்ள செஞ்சிடு.
நாளைக்கு உன்னோட சாப்டர் க்ளோஸ்... உங்க அப்பா செஞ்ச பாவம்... நீ செஞ்ச பாவம் எல்லாமே உன் தலையிலதான் விடியப்போகுது” என்றான் சிவா.
“எங்க அப்பாவோட பவர் என்னன்னு தெரியுமா உனக்கு?”
“நல்லா தெரியும்... அந்தப் பவரும் பதவியையும் காப்பாத்திக்கவாச்சுசம் உங்க அப்பன் நிச்சயம் உன்னைக் காப்பாத்தமாட்டான்”
“இந்தக் கேஸில எனக்கெதிரா எந்த ஆதாரமும் இல்ல...”
“நீ நாலு வருஷத்துக்கு முன்னாடி விதைச்ச விதை உனக்கெதிரா வளர்ந்து நிக்குதே”
“என்ன சொல்ல வர்ற?”
“நீ கேத்ரீன் பார்ட்டிக்கு அழையா விருந்தாளியா போனல்ல... அங்க நீ செஞ்ச லீலைக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு “
“நீ பொய் சொல்ற... சும்மா என்னைப் பயப்படுத்திப் பாக்கிற... தேவையில்லாம பேசி என்னைக் குழப்பாதே... எதாவது இனி பேசணும்னா என் வக்கீல்கிட்ட பேசிக்கோ”
சிவா அவனைப் பார்த்துக் கள்ளத்தனமாய் சிரித்தான்.
“அந்த சமுத்திரனை தானே சொல்ற... அவனுக்கு அவன் சுயநலம்தான் பெரிசு. அவன் தான் தலைக்கு கத்தி வராதவரைக்கும்தான் உனக்காகப் பேசுவான்.
ரொம்ப யோசிக்காதே மனோஜ்... கேத்ரீனுக்கு நீ செஞ்ச பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு விசாரணை அறையை விட்டு வெளியேறினான்.
சிவா அடித்ததை விட அவன் சொன்ன வார்த்தைகள்தான் அவனை அதிகமாய்க் கலவரப்படுத்தின. வித்யாதரன் தன்னைக் காப்பாற்றுவாரா என்ற புரியாத குழப்பம் மனோஜ் மனதில் வளர்ந்தது. அதைதான் சிவாவும் விரும்பினான்.
விந்தியா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று எதிர்பாராத நினைவுகள் கனவுகளாய் தோன்றி அவள் உறக்கத்தைக் கலைத்தன. மனதிற்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.
தரையில் உறங்கி கொண்டிருந்த ஆதித்தியாவை காணாமல் அவனைத் தேடிக் கொண்டு போனவள் அவன் எங்கேயும் காணாமல் பதற்றம் அடைந்தாள். அந்த இரவு நேரத்தில் அவன் மாடிக்குப் போயிருக்கக் கூடுமா என்று யோசித்தபடி அந்த இருளில் படிக்கட்டு ஏறிப் போனாள்.
வானின் இருளை முடிந்தளவுக்கு விரட்டிக் கொண்டிருந்த நிலவின் வெளிச்சத்தில் நடுநிசியில் ஆதித்தியா சிகரெட்டும் கையுமாய் நின்று கொண்டிருந்தான்.
விந்தியாவைப் பார்த்தவுடன் சிகரெட்டை காலில் போட்டு மிதித்தான்.
“நீங்க இன்னும் இந்தக் கெட்ட பழக்கத்தை விடலயா?” என்று மிரட்டலாகக் கேட்டாள் விந்தியா.
“ஜஸ்ட் ஒன்...”
“இட்ஸ் நாட் குட் பாஃர் ஹெல்த்துனு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப இந்த சிகரெட்டை பிடிச்சு உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க?”
“டென்ஷனா இருந்துச்சு... நாளைக்குக் கோர்ட்டில என்ன நடக்குமோ... அந்த வித்யாதரனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்... யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்துட்டா... அதுவும் இல்லாம கேத்ரீனோட ஞாபகம் வந்தாளே நான் ரொம்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றேன்”
“இன்னிக்கு யோசிச்சி என்ன பன்றது... அன்னிக்கு அவங்க ப்ரபோஸ் பண்ணும் போதே யோசிச்சிருக்கலாம்”
“ஓகே சொல்லி இருக்கணும்னு நினைக்கிறியா?”
“ஒய் நாட்... அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும்… நமக்கு எப்பவும் உறுதுணையா இருக்கிற கணவன் வேணும்னு நினைச்சிருக்கா... நீங்க அப்படி இருப்பீங்கனு அவ யோசிச்சிருக்கா... இதில தப்பென்ன இருக்கு?”
“நான் சம்மதமே சொல்லி இருந்தாலும் எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப நாள் நீடிச்சிருக்காது”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“என்னை உண்மையிலேயே புரிஞ்சிக்கிட்டுருந்தா அப்படி ஒரு பழியை என் மேல போட்டிருக்க மாட்டா”
“அவளோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சு”
“என்ன பெரிய சூழ்நிலை... உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் மாசக்கணக்குதான்... ஆனா இந்தக் கொலைப்பழி என் மேல விழுந்த போதும் நீ என்னை ஒரு கேள்விகூடக் கேட்காம நம்பின இல்ல... அந்த லாயர் இஷ்டத்துக்குப் பேசின போது முகத்திலறைந்த மாதிரி நான் அப்படிப்பட்டவன் இல்லனு அழுத்தம் திருத்தமா சொன்னியே... ஆனா வருஷக்கணக்கா நான் அவ கூடப் பழகியிருந்தும் அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லையே”
அவனின் பதிலுக்கு அவள் என்ன பேசுவதென்றே புரியாமல் நின்றிருந்தாள்.
“நீ சொல்லனாலும் உனக்கு என் மேல இருக்கிற காதலும் நம்பிக்கையும் உன்னோட ஒவ்வொரு செயலிலும் தெரியுது... இந்த நைட்டில் என்னைத் தேடிட்டு வந்ததையும் சேர்த்து.
ஆனா உன் பிடிவாத குணத்தால ஒரு தடவை கூட நீ மனசவிட்டு எதுவும் சொன்னதில்லை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது விந்தியா... எனக்காக ஒரே தடவை உன் மனசில இருக்கிறதை சொல்லிடேன்”
“அப்புறம் பேசிக்கலாம் ஆதி... ஆல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு... நாளைக்கு காலையில கோர்ட்டுக்கு வேற போகணும்” என்று அவள் சமாளித்துவிட்டு திரும்பி போகப் பார்த்தவளை வழி மறித்து நின்று கொண்டான். அந்த இருளும் தனிமையும் அவளை மனம் திறந்து பேச வைக்கும் என்று எதிர்பார்த்தான்.
“கோபத்தை வெளிப்படுத்த தெரிஞ்ச அளவுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாதா உனக்கு?”
“வழி விடுங்க நான் போகணும்” என்று அடாவடியாக அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிடிவாதமாய் இறங்கி போகப் பார்த்தாள் விந்தியா.
“கணவன் மனைவிக்குள்ள இந்த பிடிவாதமெல்லாம் எதுக்கு?”
“ஆதித்தியா... எனக்குத் தலைவலிக்குது... வழி விடுங்க”
அதற்கு மேல் அவளை வழிமறிப்பதில் பயனில்லை என்றெண்ணி இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து வாயில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்தவள் அவன் வாயில் வைத்திருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே எரிந்தாள்.
“இப்பதானே சொன்னேன் ஸ்மோக் பண்ண வேண்டாம்னு”
“நான் சொல்றத ஏதாவது நீ காதில போட்டுக்கிறியா? நீ சொல்றத மட்டும் நான் கேட்கணுமா.? இப்போ நான் இந்த பேக்கெட் முழுசையும் காலி பண்ணிட்டுத்தான் வருவேன்... நீ போய் தூங்கு”
அவனை அப்படியே விட்டுவிட்டு போக அவளுக்கு மனம் வரவில்லை.
“ப்ளீஸ் ஆதி... அந்தப் பாக்கெட்டை என் கிட்ட கொடுத்துடுங்க… பிடிவாதம் பிடிக்காதீங்க…”
“நானா?”
“இல்ல நான்தான்... நான்தான் பிடிவாதம் பிடிக்கிறேன்... என் மனசில இருக்கிறத சொல்லாம பிடிவாதம் பிடிக்கிறேன்...
உங்களை விட்டு பிரிஞ்சி இருக்க முடியாதுனு எனக்குத் தெரியும்... ஆனா அதை நான் ஒத்துக்க மாட்டேன்...
நான் உங்களை மனசாரக் காதலிக்கிறேன்... இருந்தும் வாயை திறந்து சொல்லித் தொலைய மாட்டேன்...
நீங்க என் பக்கத்தில இருந்தா ஒயாம சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன்... ஆனா உங்களை விட்டு தள்ளி வந்துட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும்...
இந்த ஜென்மம் முழுக்க ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை உங்கக் கூட நான் வாழணும்... நான் எவ்வளவு கோபப்பட்டாலும் சண்டை போட்டாலும் அதை எல்லாம் தாண்டி என்னைக் காதலிக்க நீங்க என்னோட கடைசிவரை கூட இருக்கணும்...
என் மனசில இருக்கிறதை சொல்லிட்டேன்... போதுமா... அதை தூக்கி போடுங்க ஆதி” என்று சொல்லி அவன் கையில் இருந்த சிகரெட் பேக்கெட்டை வாங்கித் தூக்கி போட்டாள்.
கண்ணில் நீர் பெருக அவனை ஏறிட்டும் பார்க்காமல் வேக வேகமாய் படியிறங்கி போனாள்.
அந்த நிலவொளி நிரம்பிய இரவில் விந்தியா பேசிவிட்டு போனதெல்லாம் கனவோ என்று சந்தேகம் எழுந்தது ஆதித்தியாவிற்கு.
கீழே இறங்கி வந்தவன் அறைக்குள் விந்தியா படுக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவளின் கைககளைப் பிடித்துக்கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.
“இந்தக் காதல் போதும்... இந்த ஜென்மம் இல்ல இன்னும் நூறு ஜென்மத்திற்கு. எத்தனை தூரமானாலும் எத்தனை காலமானாலும் உன் கூடவே வருவேன் அள்ள அள்ள குறையாத இதே காதலோடு... லவ் யூ சோ மச் டியர்” என்று விந்தியாவின் கண்களைப் பார்த்தபடி சொன்ன ஆதித்தியா, தன் காதலைக் கொண்டு அவள் பிடிவாதத்தையும் இறுக்கத்தையும் உடைத்து சுக்குநூறாக்கினான்.
பிரிந்திருந்த அந்தக் காதல் பறவைகளை இனிமையான அந்த தனிமையில் விடுத்து இப்போதைக்கு நாம் விலகி செல்வோமாக.
விந்தியா ஆதித்தியாவின் வாழ்க்கை... போராட்டங்களைத் தாண்டி மரணிக்காத காதலோடு அவர்களின் இந்த காதல் அத்தியாயம் முடிவு பெறப் போவதில்லை.