You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Maranthu ponathum ini marakamal irupadhum2

Quote

மஞ்சளின் மகத்துவம் பற்றி அறிந்திருப்பீர்கள் போன பதிவில் ,இனி மஞ்சள் சேர்த்து கொள்ள மறக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.

அடுத்து வேப்பிலையின் மகத்துவம் பற்றி அறிந்து கொள்வோம். வேப்பிலை ஆன்டி-பேக்டிரியல்,பூஞ்சைஎதிர்ப்பு... போன்ற. பண்புகள் கொண்டதால் இதை ஆயுர்வேதத்தில் மருத்துவத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.

மஞ்சள் போன்று இதுவும் கிருமி நாசனி என்பதால் தான் அக்காலத்தில் இதை பல்வேறு விதமாக பயன்படுத்தி வந்தனர். வீட்டு வாசலில் வேப்பிலை கட்டி வைப்பது..கோவிலில் வேப்பமரம் சுற்றி வருவது ,வேப்பிலை தண்ணீர் வீட்டில் தெளிப்பது போன்றவையை வழக்கமாக கொண்டனர்.

வேப்பிலைக்காரி என்ற பெயரில் அம்மனை வழிப்பட்டனர். வேப்பிலை மரத்தின் காற்று சுவாசிக்க அது நம் உடலுக்கு பல நன்மைகள் அளிக்கிறது. நம்மிடம் கிருமிகள் அண்டாது இருக்க பயன்படுகிறது. அதுமட்டுமின்றி அம்மை நோய்க்கு சிறந்த மேல்பூசு மருந்தாக பயன்படுகிறது. வேப்பிலை சருமத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாக கசப்பு தன்மை மிக்க எதுவும் உடலுக்கு அதிக நன்மை தருபவை.

வேப்பமரம் விதைகள் மூலம் வளர்க்கப்படும் . பறவைகள் பழங்கள் தின்று மீதம் போடும் எச்சத்திலிருந்து வளர்பவை ஆகும். பொதுவாக 70'செ.மீ மழை பொழியும் இடத்தில் வேப்பமரம் நன்றாக வளரும் . இது வறட்சியை தாண்டி நன்கு பசுமையாக வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியுள்ள மண்வளத்தில் வளரக்கூடியது.

மரம் வளர்ப்போம். மரத்தை காப்போம்.

Quote

சிறப்பு மஞ்சள் மற்றும் வேப்பிலை .. அருமை .. அன்றைய கிராமத்து வீட்டில் பயன்படுத்தி வந்தார்கள் காரணம் இல்லாமல் .. இன்று அறிவியல் தெரிந்து பயன்படுத்துகிறோம் ..

bhagyasivakumar has reacted to this post.
bhagyasivakumar
Quote

உண்மை

You cannot copy content