You don't have javascript enabled
Monisha NovelsRomantic thriller

Iru thruvangal-31to35

31

கரைந்து போன காதல்

விந்தியா மாட்டிக்கொண்ட பதட்டத்தில் சிறு பிள்ளைத்தனமான முகத்தோடு அவன் முன்னே வந்து நின்றாள். வெகு நாட்கள் வறட்சிக்கு பிறகு பொழிந்த மழைத்துளி, மண்வாசத்தை வீசி புத்துணர்வை உண்டாக்குவது போல இருந்ததுஆதித்தியாவிற்கு விந்தியாவைப் பார்த்த அந்த நொடி…

ஒவ்வொரு முறையும் அவளின் பார்வையின் முன்னே தோற்றுப் போகிறோமோ என்று ஆதி எண்ணமிட்டுக் கொண்டான். இம்முறை ஆதித்தியா தன் உணர்ச்சிகள் நிரம்பிய மனதை விடுத்து மூளையால் இயங்க வேண்டுமென்று நினைத்தான்.

விந்தியாவிற்கு அவன் முன்னிலையில் குற்றவாளியாய் நிற்பது அவமானமாய் தோன்றியது. அவன் முகத்தை நேரெதிரே பார்க்க தயங்கியவளை, கண்கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆதித்தியா.

அவளின் தயக்கத்தைப் பார்த்து ஆதியே பேசத் தொடங்கினான்.

பெட்டி படுக்கையோட அம்மா வீட்டுக்கு போன… மேடம் இப்ப எதுக்கு வந்தீங்க? நீ இந்த அறைக்குள்ளே ஒளிஞ்சிட்டு இருக்கிறதை கூடவா கண்டுபிடிக்க மாட்டேன்? உன் வாசனையும்… உன் மெலிதான கொலுசு சத்தம். இதை எல்லாம் தாண்டி அந்த ஷ் டிரெ...

 சண்முகம் நான் இல்லாத போது என் ரூமுக்குள்ளேயே வர மாட்டான்… அப்போ வேறு யாருனு யோசிச்சா உன்னோட முகம்தான் என் கண் முன்னாடி வந்ததுஎன்றான், அவள் மீதான பார்வையைக் கண நேரம் கூட அகற்றாமல்.

தேவையில்லாதது எல்லாம் பேசாதீங்க… நான் மறந்துட்டு போன பொருளை எடுத்துட்டு போக வந்தேன். வெளியிலிருந்து நீங்க கோபமாய் வருவதைப் பார்த்த பிறகு உங்க கண் முன்னாடி வந்தா என்ன நடக்குமோனு பயந்து ஒளிஞ்சுக்கிட்டேன்என்றாள்.

ஆதித்தியா லேசாகச் சிரித்துவிட்டு, நீ பயந்துட்ட… அதுவும் என்னைப் பாத்து… நான் இதை நம்பணும்

நீங்க நம்புங்க நம்பாம போங்க… நான் எடுக்க வேண்டியதை எடுத்துட்டேன்… கிளம்புறேன்என்று விந்தியா அறையின் வாசலை நெருங்க ஆதித்தியா சந்தேகம் கொண்டவனாய் அவளை வழிமறித்தான்.

ஏதோ தப்பா இருக்கே… எப்பவும் அலட்சியமா இல்ல கோபமா பார்க்கிற கண்ணில ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே

போதும் ஆதி… நிறுத்துங்க... திருட்டுத்தனமும் இல்ல ஒரு மண்ணும் இல்லஎன்று சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல முயற்சிக்க ஆதியின் நீண்ட கரங்கள் வழிவிடவில்லை.

வாட்ஸ் யுவர் பிராப்ளம் ஆதி?என்று கொஞ்சம் விந்தியா அதட்டலாய் கேட்க,

ஆதி ரொம்பவும் இயல்பாய், “திஸ் இஸ் மை பிராப்ளம்என்று சொல்லி,

 ஹேன்ட் பேக்கை அவன் எதிர்பாராமல் இழுத்து பிரித்துப் பார்க்க விந்தியா பதறிக் கொண்டு அவன் கையிலிருந்து பிடுங்கினாள். இந்தச் செயல் ஆதித்தியாவிற்கு மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.

மேனர்ஸ் தெரியாதா? என்னோட அனுமதி இல்லாம என் ஹேன்ட் பேக்கை எப்படி நீங்க திறக்கலாம்?என விந்தியா பொறிந்து தள்ளினாள்.

நீ என்னோட ரூமுக்குள்ள என்னோட அனுமதி இல்லாம வந்தது மேனர்ஸா?”

ஸ்டாப் இட் ஆதி… நான் என் திங்க்ஸைத்தான் எடுக்க வந்தேன்

சரி… அந்த பொருளை காட்டிட்டு போஎன்று சொல்ல விந்தியாவிற்குப் பதட்டம் அதிகரித்தது.

என்னை நீங்க நம்பமாட்டீங்களா?” என்று விந்தியா கேள்வியால் மடக்க,

நோ… உன்னை மட்டும் நம்பமாட்டேன்டி… அமுக்கமாய் கேத்ரீன் விஷயம் தெரிஞ்சதை மறைச்சு போலீஸ் அரெஸ்ட் பண்ற வரைக்கும் அமைதியா இருந்தியேஎன்று சொல்லியபடியே பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான்.

விந்தியா அவனிடமிருந்து தப்பிக்க போனை எடுத்து டயல் செய்தாள். ஆதித்தியா அவள் போனை பிடுங்க அதில் சிவா என்ற பெயரை பார்த்ததும் கோபம் கொண்டவனாய் தூக்கி வீசி எறிந்தான்.

ஹெலோ மிஸ்டர்… என்ன உரிமையில என்னோட போனை தூக்கி அடிச்சீங்க?

நான் உன் புருஷன்… உன்னை கேள்வி கேட்டா பதில் சொல்லு… அதை விட்டுட்டு எவனுக்கோ போன் போட்டா… டென்ஷன் ஆகாதா? அதான் தூக்கி அடிச்சேன்என்றதும் விந்தியாவிற்கு உள்ளுக்குள் அவனின் செயலால் மனதிற்குள் பயம் உண்டானது.

 அவளுடைய தைரியம் கரைந்து கொண்டே வர தப்பிக்கும் வழியை மட்டுமே அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆதித்தியாவிற்கு அவளின் பதட்டம் குழப்பமாயிருந்தது. அந்த பேக்கில் என்ன இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க, மீண்டும் அவன் அந்த பேக்கை இழுத்த போது விந்தியாவின் பிடியும் அத்தனை லேசில் இல்லை.

என்ன… அந்த சிவா உன்கிட்ட ஏதாவது ஆதாரத்தைத் தேடி அனுப்பினானா? மொத்தத்தில் என்னை உள்ள தள்ள இரண்டு பேரும் குறியா இருக்கீங்க

ஆதித்தியா சொன்னது அப்பட்மான உண்மை. ஆனால் இந்த ஆதாரம் அவனைக் காப்பாற்றுவதற்கு என்று சொன்னால் நம்புவானா?

இப்படி அவள் சிந்தித்துக் கொண்டிருக்க அவள் அசந்த நேரம் பார்த்து பேக்கை உருவிக்கொள்ள, விந்தியா விட்டுகொடுக்காமல் அந்த பேக் இருவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு தவித்தது.

இந்தப் போராட்டத்துக்கு இடையில் ஆதித்தியாவின் கையிலிருந்த சிகரெட் துண்டு விந்தியாவின் கைகளில் பட்டு விட,அம்மா…என்று அவள் கைகளை உதற

 ஆதித்தியா அவன் கையில் சிக்கி கொண்ட பேக்கை ஒரு பொருட்டாய் மதிக்காமல் தூக்கி வீசி விட்டு சிகரெட் துண்டை காலில் போட்டு மிதித்தான்.

சாரி… சாரி… சாரி… தெரியாம நடந்து போச்சுஎன்று அவள் கையில் சூடுபட்ட இடத்தைத் தடவியவன்,

வெய்ட்… ஐஸ்… எடுத்துட்டு வர்றேன்என்று சொல்லி தன் அறையினுள் இருந்த சின்னக் குளிர்சாதனப்பெட்டியை நாடிப் போனான்.

இதுதான் சமயம் என விந்தியா பேக்கை சத்தமின்றி எடுத்துக் கொண்டு கதவை நெருங்க, ஆதித்தியாவின் கண்கள் அவளைப் பார்த்த நொடியில் அவன் மூளையும் கை, கால்களும் அதிவேகமாய்ச் செயல்பட்டன.

சுவற்றில் மாட்டியிருந்த சாவியை எடுத்துக் கொண்டு பின்புறமாய் விந்தியாவை அணைத்து இழுத்தபடி பிடித்துக்கொண்டு மறு கையினால் கதவை அடைத்து பூட்டினான்.

அவனின் ஒரு கையை விலக்கி விடவே விந்தியாவிற்குக் கடினமாயிருந்தது. உண்மையிலேயே பார்க்கும் போது தெரியாத அவனின் கம்பீரம் அவன் பிடிக்குள் சிக்குண்ட போது மிரட்டியது.

பூட்டிய கணத்தில் அவன் கையின் இறுக்கம் விலக அத்தனை நேர தவிப்பினால் ஏற்பட்ட கோபம் அவள் அவன் மீது கை ஓங்கி கொண்டு அடிக்கப் போனாள். ஆதித்தியா அவளின் செயலை எதிர்பார்த்தவன் போல் நிற்க ஓங்கிய கைக்கு அடிக்க மனமில்லாமல் இறங்கிப் போனது.

ஏன் நிறுத்திட்ட… அடிடீ என் கலியுக கண்ணகிஎன்றான்.

விந்தியா அவனிடம் போராட சக்தியில்லாமல் தரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக் கொள்ள அவளின் இயலாமை அவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. ஆனால் அவளைப் போகட்டும் என்று அனுப்பவும் மனசு வரவில்லை. எத்தனை முறை அவனை வேதனையுற பார்த்திருப்பாள்.

இம்முறை அனுபவிக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டே மீண்டும் ஐஸ்ஸை எடுத்துக் கொண்டு வந்து அவளருகில் தரையிலேயே உட்கார்ந்தான்.

அவன் மீதுள்ள கோபத்தில் வேண்டாமென தள்ள ஆதித்தியா கோபமாய் பார்த்த பார்வையில் அவனிடம் காயம்பட்ட கையினைக் காண்பித்தாள்.

உன்னைப் பார்த்ததுமே நீ திரும்பியும் என்னை பார்க்கத்தான் வந்திருக்கியோனு நினைச்சேன்… ஆனா என்னை ஏமாத்திறதுல உனக்கு அப்படி ஒரு சந்தோஷம் இல்ல?

ஆதித்தியா அவளைப் பார்த்துக் கொண்டே காயத்தின் மீது ஐஸ் தடவ அது கரைந்து கொண்டே போனது. ஆனால் விந்தியாவின் மனம் துளி கூடக் கரையவில்லை.

என்னைப் போக விடுவீங்களா, மாட்டீங்களா ஆதி?என்று கண்களில் நிரம்பிய கோபத்தோடு அவனைப் பார்த்தாள்.

சரி போஎன்று எழுந்து நின்று கொண்டு சாவியை நீட்ட அதை வாங்க அவள் எழுந்திருக்கும் போது மீண்டும் சாவியை மறைத்தான்.

ஆதித்தியா… யூ ஆர் சீட்டிங் மீ

நீ கூடத்தான் ஏமாத்திட்டு ஓட பாத்த

ஓகே பைன்… இந்த பேக்கில என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்? இந்தாங்க செக் பண்ணிக்கோங்க… இல்ல நீங்களே கூட வைச்சுக்கோங்க… என்னை வெளிய விடுங்க ஆதிபேக்கை நீட்டினாள்.

ஆதித்தியா கலகலவென சிரித்து விட்டு அந்த பேக்கை விசிறி சோபாவின் மீது எறிந்தான்.

அந்தப் பேக்குக்காகவா உன்கிட்ட இவ்வளவு நேரம் போராடிட்டிருக்கேன்?

தென் வாட் எல்ஸ்… என்கிட்ட வேற எதுவும் இல்ல

நீ இருக்கியே மை டார்லிங்

அப்படினா?

நீதான்டி வேணும்… நீ மட்டும்தான் வேணும்… ஒவ்வொரு முறை நீ எனக்கு ஏற்படுத்தின காயங்களுக்கு மருந்தா வேணும்

சந்தர்ப்பத்தை சாதகமா பயன்படுத்திக்கப் பார்க்கிறீங்களா? உங்க கண்ணியத்தை தான் நான் அதிகமா நேசிக்கிறேன்… அதைக் கலங்கப்படுத்தாதீங்க

நான் கண்ணியமானவனா? அப்படினு யார் சொன்னது? நான் ஒரு பொறுக்கி… ஒழுக்கம் இல்லாதவன்… கேத்ரீனை அடைய ஆசைப்பட்டு மாடியிலிருந்து விழ காரணமானவன்… காமப் பிசாசு… இன்னும் எத்தனையோ… இப்படித்தான் ஊரே சொல்லுது

அப்படி நான் சொல்லலியே… அதை எல்லாம் நான் நம்பவும் மாட்டேன்… எத்தனை ஆயிரம் பேர் பொய் சொன்னாலும், அதைத் தாண்டி ஒரு நாள் உண்மை தெரிய வரும் ஆதி

எப்போ… இந்த அவமானத்திற்கு எல்லாம் பிறகா?

ஜஸ்ட் லீவ் இட்… யார் நம்பினாலும் நம்பாட்டியும் நான் உங்கள நம்பிறேன் ஆதித்தியா

அதனாலதான் உன்னை நான் ரொம்ப நேசிக்கிறேன்… இந்த உறவு எனக்கு நிலைக்கணும்… டில் மை டெத். அதனால நீ எனக்கு வேணும்

நான் உங்கள நம்பினதுக்கு, இது எனக்கு நீங்க கொடுக்கிற தண்டனையா?

நம்புற… ஆனா புரிஞ்சிக்கவே மாட்டற… சின்னதாய் நடக்கிற சண்டைக்குக் கூட என்னை விட்டு நீ விலகி போயிடுறியா? என்னை நீ நேசிச்சதை விடக் காயப்படுத்தினதுதான்டி அதிகம்

ஒத்துக்கிறேன்… உங்களுக்கு வலிக்குமேனு யோசிக்காம நான் உங்கள ரொம்பக் காயப்படுத்திருக்கேன்… நான் இனிமே புரிஞ்சு நடந்துக்கிறேன்… கொஞ்ச நாள் பொறுமையா இருங்க ஆதி. இந்தப் பிரச்சனை எல்லாம் முடியட்டுமே

எனக்கு இந்தப் பிரச்சனை முடியும்னு தோணல விந்தியா.  நாளைக்கு மரணமே ஆனாலும் இந்த மொமன்ட் நான் உன்னோட வாழணும்…

இந்தப் பிரச்சனை முடியாதுன்னு யார் சொன்னது? ஐம் தேர் வித் யூ.  நான் இருக்கும் போது உங்களுக்கு எதுவும் வரவிடமாட்டேன்… என்னை நீங்க நம்புங்க ஆதி பிளீஸ்

நான் உன்னை நம்பபுறேன்டி… அதே நம்பிக்கையை நீ என் மேல வைக்கமாட்டியா?

இதற்கு மேல் அவனிடம் என்ன சொல்வது? எப்படிப் புரிய வைப்பது?

உன் திமிரும் கர்வமும் உன்னை இறங்கி வர விட மாட்டேங்குது… இல்ல?என்றான் மெளனமாய் இருக்கும் விந்தியாவைப் பார்த்து.

நான் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ஜடம் மாதிரி வாழ்ந்திட்டிருந்தேன். எனக்கு திரும்பியும் உணர்வுகளைக் கொடுத்ததே நீங்கதான். அதை நீங்களே பறிக்கப் பார்க்கிறீங்களே! வானத்தில் திடீர்னு ஏற்படுற வானவில் மாதிரி தோணணும் ஆதி… புயலுக்கும் மழைக்கும் இடையில் இன்ஸ்ன்ட் வொர்க் அவுட்… புரிஞ்சுக்கோங்க

நீ என்னைப் புரிஞ்சிக்கோ. மறுபடியும் மறுபடியும் உன்னைக் கெஞ்சிக்கிட்டு உன் திமிருக்கு முன்னாடி என்னால தலைவணங்கி போக முடியாது. ஆம்பளன்ற அந்த ஈகோவை நீ சீண்டி பார்க்கிற… இதான் பைஃனல்என்று சொல்லிவிட்டு ஒரு பூமாலை தாங்குவது போல் தூக்கி கொண்டான்.

 அவன் படுக்கையின் மீது அவளைப் படுக்க வைக்கும் போது விந்தியாவின் கண்களில் நீர் வழிந்தது.

என்கிட்ட நீங்க சம்மதம் கேட்கல… உங்க விருப்பத்தை என் மேல திணிக்கிறீங்க

ஆமாம்… எனக்கு வேற வழி தெரியல. இப்ப கூட என்னைத் தடுக்கவும் உதறித் தள்ளவும் உன்னால முடியும்… உனக்கு அந்த கட்ஸூம் திமிரும் இருக்கு. ஆனா என்னை நீ தடுக்கல… இந்த லவ் போதும்… எவ்ரித்திங் வில் வொர்க் அவுட்

அதற்கு மேல் அவர்களுக்கு இடையில் எந்த வித வாக்குவாதமும் நடக்கவில்லை. அதற்கான வாய்ப்பை ஆதித்தியா விந்தியாவிற்கு தரவும் இல்லை.

கடந்து போகும் ஒவ்வொரு கணமும் அவள் காதல் கரைந்து கொண்டே போனது. அவள் பார்த்து பார்த்து ரசித்த அவனின் கண்ணியம் கலங்கப்பட்டது. அவள் இத்தனை காலமாய் தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் ரே நாளில் மடையை உடைத்து பெருக்கெடுத்த வெள்ளமாய் வற்றிப் போனது.

 உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் மீதான உரிமை என அவன் நினைத்தது… அந்த அழகான உறவையே சிதைக்கப் போகிறது.

வானிலிருந்து வீழ்ந்த மழைத்துளி சேற்றில் கலப்பது போல ஆதித்தியா விந்தியாவின் மனதில் தரம் தாழ்ந்து போனான்.

32

விந்தையானவள்

தன் அறையின் படுக்கை மீது அப்படியே சிலை போலவே அமர்ந்திருந்தாள். கருமை அடர்ந்திருந்த விழிகள் பார்ப்பவர்களையும் கூடச் சோகத்தில் ஆழ்த்தும் அளவிற்கு வேதனை நிரம்பியிருந்தது. வீட்டில் உள்ள எல்லோருக்குமே அவளின் வருத்தம் புரிந்தாலும், அதற்கான காரணம் தெரிந்திருக்கவில்லை.

அனைவரும் மாறி மாறி சொன்ன சமாதனங்கள் அவள் காதுக்கு எட்டியதே தவிர மூளைக்கு எட்டவில்லை. தான் அவன் முன்னே, ஒவ்வொரு முறையும் பலவீனமாய் மாறிவிடுவது ஏன் என்று எண்ணிய போதே, அவளுக்கு அவள் மீதே வெறுப்பும் கோபமும் உண்டானது.

ஆதித்தியா தான் செய்த செயலுக்கு இனி எந்த ஒரு நியாயம் கற்பித்தாலும் அதெல்லாம் அவள் முன்னே எடுபட வாய்ப்பில்லை. இனி வரும் ஆதியுடனான அத்தியாயங்கள் கசந்து போனதாகவே இருக்கப் போகின்றன.

இந்நிலையில் விந்தியாவைப் பார்க்க சிவா வீட்டிற்கு வர,

அக்கா ரொம்ப அப்செட்டா இருக்கா மாமா… என்னன்னு எதுவும் சொல்ல மாட்டிறா...என்று வருண் கூறினான்.

எந்த நிலையில் இருக்கிறாளோ என்று குழப்பத்தோடு அவளின் அறைக்கதவை தட்டிவிட்டு திறந்தவன், உள்ளே எங்குமே அவளைக் காணாமல் விழித்தான். விந்தியா தன்னை இந்தக் கவலையில் இருந்து மீட்டுக்கொள்ள எண்ணி முகத்தை அலம்பி விட்டு துடைத்துக் கொண்டே குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.

சிவா விந்தியா…என்று அழைத்ததும் அவனைப் பார்த்த விந்தியாவிற்கு மீண்டும் மறக்க நினைத்த விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.

எல்லாவற்றிக்கும் இவன்தான் காரணம் என்று எண்ணி கோபம் கொண்டவளாய் வாயில் வந்த வார்த்தைகளால் திட்டி கையில் கிடைத்த பொருட்களை அவன் மீது எறிந்தாள்.

நிறுத்துடீ… உன் தம்பி நீ அப்செட்டா இருக்கனு சொன்னான்… பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொல்லவே இல்லையேஎன்று சொல்லிக் கொண்டே அவள் எறிந்த பொருட்களின் தாக்குதலில் இருந்து லாவகமாகத் தப்பித்துக் கொண்டான்.

ஆமான்டா பைத்தியம்தான்என்று சொல்லி பெரிய பொம்மையை எடுத்து தூக்கி வீச அவன் தலைக்குக் குறியாக வந்ததைச் சிவா ஒரு நொடியில் கையில் பிடித்துக் கொண்டான்.

என்னடி இது? இந்தக் கணம் கணக்குது? கொலை முயற்சினு சொல்லி உள்ள தூக்கி போட்ருவேன்… ஜாக்கிரதைஎன்று சிவா மிரட்ட, பெருமூச்சு விட்டு தன் அறையின் படுக்கையில் அமர்ந்தாள்.

நான் ரெடி… முதல்ல உள்ள தூக்கி போடுஎன்றாள்.

என்னாச்சு?” என்றான் அவள் அருகில் போய் நின்று கொண்டு

என்கிட்ட பேசாதே… நானும் உன் கூடப் பேசமாட்டேன்…என்றாள்.

சரி பேசலன்னா பரவாயில்ல… போட்டோவை எடுத்துக் கொடு… கிளம்பறேன்என்றான்.

அவன் அவனுக்கு அவன் அவனோட வேலைதான் முக்கியம்…என்று விந்தியா வாய்க்குள் முனக,

சிவா உடனே யார திட்ற?”

ம்… என்னத்தான்என்று சொல்லிக் கொண்டே அறையைச் சுற்றி சுற்றி எதையோ தேடினாள்.

என்னடி தேடற? என்கிட்ட சொன்னா நானும் தேடுவேன் இல்ல

மை ஹேன்ட் பேக்என்றாள்.

பொறுப்பே இல்லடி உனக்குஎன்று சொல்லிக் கொண்டே அறை முழுக்கத் தேடினான்.

மறந்துட்டு வந்துட்டியா விந்துஎன்று சிவா கேட்க,

அதற்கு வாய்ப்பே இல்லைஎன்றாள்.

அவளுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. அவள் மனம் நொந்து கிளம்பும் போது ஆதித்தியா அவள் ஹேன்ட் பேக்கை கையில் கொடுத்து,

இதுதானே உனக்கு வேணும்என்று சொல்லி கையில் திணித்தான்.

அத்தனை வேதனையிலும் வலியிலும் அந்த பேக்கை எடுத்து வந்தது அவளுக்கு நன்றாய் நினைவிருந்தது.

சிவா இதுவா?” என்று ஒரு பேக்கை எடுத்துக் காட்டினான்.

ஆமாம்என்று சொல்லி அந்த பேக்கினுள் வைத்த போட்டோவை பார்க்க கூட விருப்மின்றிச் சிவாவிடம் கொடுத்தாள்.

சிவா சில கணங்கள் அந்த போட்டோவை உற்று பார்த்து விட்டு

இதுதான் ஆதித்தியாவா ஆளே அடையாளம் தெரியலஎன்று போட்டோவை அவள் முன் நீட்டினான்.

எனக்குத் தெரியாது… நீயே தேடிக்கோஎன்று அந்த போட்டோவை தன் முன்னிருந்து அகற்ற, அந்த போட்டோவில் இருந்த ஒருவனின் முகம் வேறொரு சம்பவத்தை நினைவுப்படுத்தியது.

சிவாவிடம் அந்த போட்டோவை வாங்கி உற்று பார்த்தவள்

சிவாவிடம் அந்த முகத்தைக் காண்பித்து, இவன் யாருன்னு உனக்குத் தெரியுமா சிவா?என்றாள்.

தெரியலியே… ஏன் கேக்கு?என்றான் விந்தியாவை நோக்கி.

எனக்கு யாருன்னு தெரியாது. பட் இந்த ராஸ்கல்… நான் ஆதியோட பார்ட்டிக்குப் போன போது என்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தான். எனக்கு என்ன தோணுதுன்னா இவன் அந்த மினிஸ்டர் பையனா இருப்பானோ? பிகாஸ் இவனோட ஆட்டீட்யூட், திமிரெல்லாம் பார்த்தா சேன்ஸ் இருக்குஎன்றாள்.

நான் விசாரிச்சுப் பாக்குறேன்என்றான். திடீரென சிவாவிற்கு அவனைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

எதுக்குச் சிவா சிரிச்சே… ?”

தப்பா நடந்துக்கப் பார்த்தான்னு சொன்னியே… அதான் சிங்கத்தோட வாயில தலையை விட்ட அவன் நிலைமையை நினைச்சேன்… சிரிச்சேன்

போடாஎன்று அவனிடம் கோபித்துக் கொண்டாள்.

சிவா போட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட நினைத்தவன் மீண்டும் விந்தியாவைப் பார்த்தபடி திரும்பினான்.

நீ இரண்டு நாளைக்கு வந்து வனிதாவோட இருஎன்றான்.

எதுக்கு?” என்று விந்தியா கேட்டாள்

நான் இந்தக் கேஸ் விஷயமா கோவா போறேன்… எனக்கு உடம்பு சரியில்லனு பொய் சொல்லி டிபார்ட்மன்டுக்கு தெரியாம போயிட்டு வரப் போறேன். முக்கியமா வேணு மகாதேவனுக்கு தெரியவே கூடாது. சோ என்னைத் தேடி யார் வந்தாலும் நீதான் சமாளிக்கணும்என்றான்.

ஏன் உன் பொண்டாட்டிக்கு பொய் சொல்லவே வராதா?”

உன் அளவுக்கு வராது… நீதான் சமாளிக்க முடியும்… சீக்கிரம் வந்து சேருஎன்று அதிகாரமாய் சொல்லிவிட்டு புறப்பட்டான்.

தனக்கு எல்லோரையும் சமாளிக்கத் தெரிந்திருந்தால் நேற்று ஏன் தன்னால் ஆதித்தியாவை சமாளிக்க முடியாமல் போனது. முடிந்த வரை விந்தியா இயல்பாய் இருக்க முயற்சி செய்தாள்.

அவள் கண்களில் மட்டும் ஒரு விதமான சோகம் படிந்திருந்தது. வலியோடும் வேதனையோடும் வாழ கற்றுக் கொண்ட பின்னும் இந்தக் கவலை மட்டும் அவளை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டு சரியாக இயங்க விடாமல் செய்தது.

விந்தியா வனிதா வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க வருண் தன்னுடைய போனிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூறினான்.

மறுமுனையில் சண்முகம் சந்திரகாந்த்தின் உடல் நிலை சரியில்லை என்றும் சாக்ஷி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினான். விந்தியா பதறிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

சண்முகம் தனியாகக் கலங்கியபடி நின்று கொண்டிருந்தார்.

என்னாச்சு அண்ணா… நீங்க மட்டும்தான் இருக்கீங்களா?”

இன்னைக்குக் காலையில் சின்ன ஐயாவுக்கும் பெரிய ஐயாவுக்கும் பயங்கர வாக்குவாதம்… அதைப் பற்றியே யோசிச்சு யோசிச்சு… பெரிய ஐயாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சுஎன்றார் சண்முகம்.

ஆதித்தியாவிற்கு வெறி பிடித்து விட்டதா என்ன?’ என்று எண்ணிக்கொண்டே சீஃப் டாக்டர் அறைக்குச் சென்றாள்.

அவளைப் பார்த்தவுடனே சாக்ஷி மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு அவளை நன்றாக அடையாளம் தெரிந்தது.

வாங்க ஸ்ட்ராங்க் லேடி…என்றார். ஏற்கனவே மாதவி இருந்த மருத்துவமனை என்பதால் டாக்டர் ரொம்பவும் பழக்கப்பட்டவராய் இருந்தார்.

டாக்டர்!… மாமாவுக்கு என்ன பிராப்ளம்என்றாள்.

அவர் மெலிதான புன்னகையோடு

வயசாகிட்டாலே இதெல்லாம் சகஜம்தான்… ஆனா என்ன… மனசில தெம்பு இருந்தால் இதெல்லாம் பெரிய நோயே இல்லை என்றார்.

அப்போ குணமாயிடுவாரு இல்ல?

என் சைடுலருந்து செய்ய வேண்டியதை முழுமையா செய்றேன்… அட் தி சேம் டைம் ஒரு மருமகளாய் உன் கடமையையும் சரியா செஞ்சாத்தான் சந்திரகாந்த்தை குணமாக்க முடியும்என்றார்.

விந்தியா புரிந்தும் புரியாமல் தலையாட்டிவிட்டு மீண்டும் சந்திரகாந்த்தின் அறைக்கு வந்தாள்.

அந்த அறைக்குள் சுபா, சமுத்திரன், திருமூர்த்தி மூவரும் நின்றிருந்தனார்.

சுபா அவளைப் பார்த்த மறு கணமே, ஆதித்தியா அண்ணனை கூட்டிட்டு வந்திருக்கலாமே அண்ணிஎன்றாள்.

இந்தக் கேள்விக்கு விந்தியாவிடம் பதில் எதுவும் இல்லை. அவள் மெளனமாய் இருந்ததைப் பார்த்து சுபா மேலும் தொடர்ந்தாள்.

அங்கிள் … ஆதி அண்ணன் வரலியானு கேட்டுட்டே இருக்காரு அண்ணி என்றாள். விந்தியா சந்திரகாந்த்தின் சோர்வடர்ந்த முகத்தைப் பார்த்தாள்.

கண்ணில் நீர் நிரம்பியது. லேசான மயக்க நிலையில் இருந்தவரின் கையைப் பிடிக்க, அவர் எழுந்தவுடன் விந்தியாவின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டு,

ஆதியை பார்க்கணும் விந்தியா… அவங்கிட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்என்று வேதனையோடு உரைத்தார்.

நீங்க ஏன் மாமா மன்னிப்பு கேட்கணும்? அதுக்கெல்லாம் அவசியமில்ல…என்றாள்.

ஆதியோட பிரச்சனைக்கு நான்தான் காரணம்… நான் அவனைக் கவனிக்காம விட்டதுனாலதான்

உங்க அருமை பிள்ளை இப்படி எல்லாம் சொன்னாராக்கும்… உங்களுக்கு மகனா இருக்கவே அவருக்குத் தகுதி இல்லஎன்றாள்.

எப்படி வேணா இருக்கட்டும். எனக்கு ஏதாவது ஆவதற்கு முன்னாடி நான் ஆதியை பார்க்கணும்… எல்லாப் பிரச்சனையும் மறந்து அவன் என்னை அப்பானு கூப்பிடணும்… எனக்காக இந்த உதவியைச் செய்றியாம்மா?” என்று சந்திரகாந்த் உணர்ச்சி வசப்பட்டுப் பேச… விந்தியா விரும்பாத ஒன்றை சந்திரகாந்த் வரமாய்க் கேட்கிறார்.

வார்த்தைகளின்றி தலையை மட்டும் அசைத்து விட்டு அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் சுபாவும் திருமூர்த்தியும் அவளிடம் சொல்லிவிட்டு முன்னே போக, சமுத்திரன் மட்டும் அவளின் எதிரே நின்றபடி அந்தத் தவிப்பையும் சோகத்தையும் உள்ளூர ரசித்தான்.

ச்சோ… ச்சோ… பாவமாய் இருக்கு உன்னைப் பார்த்தா… உன் மாமானாரோட கடைசி ஆசையை உன்னால நிறைவேற்றவே முடியாதே…

 ஆதியை நீ நல்லாவே கைக்குள்ள போட்டு வைச்சிருக்கலாம்… நீ எது சொன்னாலும் செய்யலாம்… ஆனா இந்த விஷயத்தில் மட்டும் ஆதி இறங்கி வரவே மாட்டான். ரொம்பக் கஷ்டம்… உன்னால இது மட்டும் முடியவே முடியாதுஎன்றான்.

துவண்டுக்கிடந்த விந்தியா நிமிர்ந்து பார்த்தாள்.

கெட்ட எண்ணத்தோட அப்பாவையும் பிள்ளையையும் இத்தனை காலமாய்ப் பிரிச்சு வைச்சிருக்க உன்னால முடியும்னா நல்ல எண்ணத்தோட அவங்களைச் சேர்த்து வைக்க என்னால முடியாதா?

நானா பிரிச்சு வைச்சேன்?

வேறு யாரு… நீதான்… உன் சுயநலத்துக்காக இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருக்கியே… வெட்கமா இல்லை உனக்கு?

வேண்டாம் விந்தியா

என்ன சமுத்திரன்… உண்மை கசக்குதோ? இன்னமும் சொல்றேன் கேளு… ஹோட்டல் ஆதித்தியாதான் உன்னோட மோட்டிவ். மாமாக்கிட்ட நீ நல்ல பேர் வாங்கிட்டு… ஆதியை தப்பானவன் மாதிரி காட்டின… அப்படியே வாரிசாயிடலாம்னு கனவு கண்ட… உன்னோட பேட் லக்… நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தேன்…

என்மேல இருந்த நம்பிக்கையால ஹோட்டல் பொறுப்பை மாமா என்கிட்ட கொடுத்ததை உன்னால தாங்கிக்க முடியல… என்னை விரட்ட நீ என்னல்லாம் பிளான் போட்ட… சோ சேட்… நான்தான் உன்னைப் பாத்து பாவப்படனும்… நீ நினைச்சது எதுவும் நடக்கல

சமுத்திரனுக்கு அதிர்ச்சி தாங்க முடியயவில்லை. தன் மனைவி கூட யூகிக்க முடியாத தன் எண்ணத்தை எப்படி தெரிந்து கொண்டிருப்பாள் என்று புரியாமல் நின்றான்.

இன்னமும் சொல்றேன் கேட்டுட்டு போ சமுத்திரன். ஆதி இங்க வருவார் தன்னோட அப்பாகிட்ட பேசுவார்… உன்னால என்ன கிழிக்க முடியுமோ கிழிச்சுக்கோ…

அடுத்தவங்க பிச்சை போட்டு வளர்ந்த உனக்கே இவ்வளவு திமிருன்னா… சுயமா வளர்ந்த எனக்கு எவ்வளவு இருக்கும்? இனிமேயாவது என்கிட்ட உன் வாய் சவடாலை காட்டாதேஎன்று சொல்லிவிட்டு சந்திரகாந்த் இருந்த அறைக்குள் சென்றாள்.

விந்தியா ஏற்கனவே கோபத்தோடு இருந்த நிலையில் சமுத்திரன் அவளிடம் வகையாக வந்து சிக்கி கொண்டான்.

33

உணர்வுகளற்ற விழிகள்…

விந்தியா ஆதித்தியாவை பார்க்க பெரும் தயக்கத்தோடு அந்த வீட்டின் வாசலை அடைந்தாள். போனமுறை அவளுக்கு இருந்த படபடப்பு இம்முறை இல்லை. ஆனால் மனதில் ஒரு விதமான கோபம் ஆழமாய் அழுத்தி கொண்டிருக்க, ஆதித்தியாவை பார்க்க போகும் தருணம் அவளுக்கு எரிச்சலை தோற்றுவித்திருந்தது.

இருந்தும் அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டு சந்திரகாந்த்திற்காக நடந்து வந்தவளின் எதிரே பைக்கில் சீறிக் கொண்டு ஆதித்தியா வந்தான்.

விந்தியா கேட்டை தாண்டி உள்ளே வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஆதித்தியா, கட்டுபடுத்த முடியாத வேகத்திலும் சடாரென நொடி பொழுதில் அவள் எதிரே கொண்டு வந்து பைக்கை நிறுத்தினான்.

என்ன விந்தியா… அப்பப்போ ஷாக் கொடுத்து முன்னாடி வந்து நிக்கிற. டைம் நல்லா இருக்கு… வந்த ஸ்பீடுக்கு மோதியிருந்தால்…

மோதினா என்ன… எனக்கு அடிபட்டிருக்கும். என்னை நீங்க காயப்படுத்துறதும் நான் காயப்படுவதும் புதுசா நடக்குதா என்ன?” என்றாள்.

ஆதித்தியா பைக்கில் இருந்து இறங்கி வந்தான்.

என் கூட சண்டைப் போட வந்திருக்கியா? அதைத் தவிர வேறெதுவும் தெரியாதா உனக்கு?

ப்ளீஸ் ஆதி… உங்க கூட சண்டை போடற தெம்பெல்லாம் இப்போதைக்கு எனக்கில்லை.உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…… பேசலாமா?”

ஷுவர்… வா உள்ளே போய்ப் பேசுவோம்

இல்ல இங்க கார்ட்னில் நின்னு பேசுவோமே

ஓகேஎன்று சொல்லி விட்டு தோட்டத்தில் பசுமையான புற்களின் மீது இருக்கை போல் அமைக்கப்பட்ட கல் மேடையின் மீது கால் மீது கால் போட்டுச் செளகர்யமாக அமர்ந்து கொண்டான். விந்தியாவையும் உட்கார அருகில் அழைத்தான். ஆனால் அவளோ அவன் எதிரே நின்று கொண்டு எங்கேயோ பார்த்தபடி தான் நினைத்ததைப் பேசத் தொடங்கினாள்.

அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியல… நீங்க வந்து பார்க்கணும்னு விருப்பப்டுறாரு…

யாரோட அப்பாவுக்கு?என்று கேட்டான்.

ஏன் நடிக்கிறீங்க? உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லனு உங்களுக்குத் தெரியாது? அவர வந்து பாக்காம இப்படி ஊரை சுத்திட்டிருக்கீங்க… மனுஷனா நீங்க?

மிருகம்தான்… இப்ப என்ன பண்ண போற? உன் மாமனா நீ பாத்துக்கோ… அதை விட்டுட்டு என்னை ஏன் தொல்லை பண்ற. எனக்கு நிறைய வேலை இருக்குஎன்று சொல்லி எழுந்து கொண்டவன் அவளைக் கவனிக்காமல் பைக்கை நோக்கி நடந்தான்.

அவனைத் தடுப்பதற்காக அவன் பின்னோடு அழைத்துக் கொண்டே ஓடி வந்தாள்.

ஆதி… நில்லுங்க… நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க… ஆதித்தியா!

அவள் கத்திய போதும் அவன் அவளைத் திரும்பி கூடப் பார்க்கவில்லை. பைக்கின் சாவியை எடுத்து வண்டியில் போட்டதும் விந்தியா கத்தினாள்.

நில்லுங்க ஆதி… உயிரோட இருக்கிற வரைக்கும் அந்த மநுஷனோட அருமை தெரியாது… ஆனா மொத்தமா போயிட்டா நீங்க என்னதான் அய்யோ அம்மான்னு கதறினாலும் வராது

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றான்.

நீங்க போட்டிருக்கிற டிரஸ்… பைக்கு… இந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை… உங்க பேருக்கு முன்னாடி இருக்கிற இன்ஷியலிருந்து கடைசியில இருக்கிற பட்டம் வரைக்கும் எல்லாம் உங்க அப்பா கொடுத்தது… அதையெல்லாம் வேண்டாம்னு தூக்கிப்போட வேண்டியதுதானே

ஆதித்தியா அவளைத் திரும்பி பார்த்தான்.

அப்பான்னா… இத செஞ்சிட்டா போதுமா? எங்க அம்மா இறந்த போது தனிமை மட்டும்தான் என் கூட இருந்தது... இவரு இல்ல. எனக்கு உடம்பு சரியில்லாத போது, வேலை செய்றவங்கதான் கூட இருந்தாங்க இவரு இல்ல… என் வெற்றிக்காகப் பாராட்டுறதுக்கு… தோல்வி வந்தா தேற்றுவதற்கு… இவரு இல்ல விந்தியா.

கொஞ்சோண்டு அந்த மனுஷன் மேல அக்கறை இருக்கிற காரணத்தாலதான் இங்க இருக்கேன்… அதுவும் வேண்டாம்னு சொல்லு… தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கேன்

பைக்கின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டான்.

அம்மாவும்… அப்பாவும் வேற வேற ஆதி. அப்பாக்களுக்கு பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாது. அந்த உறவே அப்படிப்பட்டதுதான்.

 அப்பா இல்லாததின் வலி என்னன்னு என்னை விட வேற யாராலயும் சொல்லவே முடியாது. அப்பான்னா பீஸ் கட்டுவாரு… துணிமணி வாங்கித் தருவாரு… எப்பையாவது வெளிய கூட்டிட்டு போவாரு… ரொம்பக் குறைவா பேசுவாரு… ஆனா நிறைய திட்டுவாரு… இவ்வளவுதான் எனக்குத் தெரியும்…

ஆனா திடீர்னு ஒரு நாள் அந்த அப்பா என்கிற உறவே இல்லாத போன போதுதான் தெரிஞ்சுது… அவரு வெறும் அப்பா இல்ல எங்க வீட்டோட அஸ்திவாரம். கனவுகளைத் தொலைச்சிட்டு பணத்தின் பின்னாடி ஓடும் போதுதான் தெரிஞ்சது… இழந்தது அப்பாவை மட்டும் இல்ல சகலத்தையும்.

 ஆனா அந்தத் தலையெழுத்து உங்களுக்கு இல்ல… மாமா இன்னும் உங்க பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைச்சிருக்காரு… அந்த நன்றிக்காவது ஒரே ஒரு தடவை போய் பாருங்க… அப்பானு கூப்பிடுங்க…

அப்புறம் அவர் இல்லாம போயிட்டா நீங்க என்ன கூப்பிட்டாலும் அது வேஸ்ட்டுதான்… எந்த தனிமை உங்கள வாட்டுச்சோ அதே தனிமையை மாமாவும் அனுபவிச்சு இருக்காரே… ஒரு துணையைத் தேடிக்கணும்னு நினைச்சா உங்க நிலைமை என்னவாயிருக்கும்?

 இதுக்கப்புறமும் உங்களோட பிடிவாதம்தான் முக்கியம்னு நினைச்சீங்கன்னா… பரவாயில்ல… அட்லீஸ்ட் அவரு முன்னாடி பொய்யா நடிங்க… பாசம் இருக்கிற மாதிரி பேசுங்க… நீங்க விட்டுக்கொடுத்து போறதினால ஏதாச்சும் நன்மை ஏற்படும்னா நீங்க அதைச் செய்யலாமே…

உங்க அப்பா உங்களுக்கு ஏற்படுத்தினதா நீங்க சொல்ற வலியை விட நூறு மடங்கு அவமானத்தையும் வலியையும் நீங்க எனக்குத் தந்திருக்கீங்க… இருந்தும் திரும்பவும் என் விதி… நான் அந்த அவமானத்தைப் பொறுத்துக்கிட்டு உங்க முன்னாடி பேசிட்டிருக்கேனா… மாமா குணமாகணும் என்கிற ஒரே காரணத்தினாலதான்…

எல்லா உறவுகளையும் உங்க சுயநலனுக்காக கொன்னு புதைச்சிட்டு நீங்க சந்தோஷமா இருக்க முடியாது ஆதி. பிளீஸ் யோசிச்சு முடிவெடுங்கஎன்று அவனிடம் கண்ணீரோடு கை கூப்பிக் கேட்டுக்கொண்டாள்.

ஆதித்தியா விந்தியாவின் அழுகையினால் மொத்தமாய்க் கரைந்து போனான்.

விந்தியா கடைசியாய் ,இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. உங்க டைமை வீணடிச்சிருந்தா… ஐம் சோ சாரிஎன்று சொல்லிவிட்டு ஆதித்தியாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கண்ணீர் நிரம்பிய கண்களோடு அங்கிருந்து வெளியேறினாள்.

விந்தியாவின் கோபத்தையும் வெறுப்பையும் பார்த்த ஆதித்தியாஅவளின் இன்னோரு பக்கம் வலியும் வேதனையும் கலந்தது என்பதை முதல் முறையாய் இப்போதுதான் உணர்ந்து கொண்டான்.

எப்போதுமே அழகாய் அவள் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் அந்த விழிகள், அவனை ஏறிட்டும் பார்க்காமல் உணர்வுகளற்று கிடந்ததைப் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டான்... அவன் அன்று அவளுக்கு இழைத்தது பெரும் அநீதி என்று.

இங்கே விந்தியா ஆதியுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சிவா கோவாவை சென்றடைந்தான். இம்முறை அவனின் எண்ணமெல்லாம் எம். வி. டி லிக்கர் பாக்டரியை பற்றியதுதான். அந்த நிறுவனத்தின் எம். டி அவினாஷின் பி. ஏ ஷபானாவை சந்திக்க முடிவு செய்தான்.

பெரும் முயற்சிக்குப் பின் அவள் சிவாவை சந்திக்க சம்மதித்தாள். அதுவும் ஆராவாரித்துக் கொண்டிருக்கும் அரபிக் கடலின் நடுவில்…

ஒரு பெரிய போட்டில் இருவரும் அமர்ந்திருக்க அவளின் பத்து வயது மகன் ஆஷிக் கடலுக்கு நடுவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எகிறி குதிக்கும் டால்ஃபின்ஸை பார்த்தபடி சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.

நான் உங்களை ரொம்பவும் தொந்தரவு செய்திட்டேனோ?” என்று சிவா கேட்டான்.

ரொம்ப… ரொம்பஎன்றாள் ஷபானா தன்னுடைய விருப்பமின்மையை.

நீங்க சென்னையா ஷபானா?

அதென்ன தமிழ் நாடுன்னாலே சென்னைதானா? வேற ஊரெல்லாம் உங்க கண்ணுக்கே தெரியாதா? நான் திருநெல்வேலி… என் கணவர் இங்க இருந்ததினால நான் இங்கே வந்துட்டேன். இப்போ ஹி இஸ் நோ மோர். இருந்தாலும் என்னோட வேலை… குழந்தையோட படிப்புக்காக இங்கயே செட்டிலாயிட்டேன்

நீங்க முதலில் கேத்ரீன் ஆபிஸிலதானே வேலை பார்த்தீங்க… திடீர்னு ஏன் எம். வி. டில ஜாயின் பண்ணீங்க?

கேத்ரீனோட டெத்துக்குப் பிறகு அங்க மேனேஜ்மென்ட்… சரியில்ல

அது மட்டும்தான் ரீஸனா?”

இல்லதான்… ஆனா காரணத்தை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லணுமா?”

கேத்ரீனோட இருந்த போது நீங்க ஆதித்தியாவை பார்த்திருக்கீங்களா?”

எனக்கு ஆதித்தியாவை நல்லா தெரியும்… ஆனா அவங்களுக்கு இடையில திடீர்னு டெர்ம்ஸ் சரியில்லாம போயிடுச்சு

அதற்கான காரணம் உங்களுக்கு தெரியாதா?”

தெரியாது

நீங்களும் கேத்ரீனோட ஹோட்டல் ஆதித்தியாவில் வங்து தங்கி இருந்தீங்க இல்ல?

ஆமாம்… ஆனா மீட்டிங் முடிஞ்சதும் மேடம் என்னைக் கிளம்பச் சொல்லிட்டாங்க… அவங்க அடுத்த நாள் வருவதா சொன்னாங்க… ஆனா பேட் லக் அந்த அக்ஸிடென்ட்

அது ஆக்ஸிடென்டா?”என்று கேட்டான் சிவா.

ஹௌ டு ஐ நோ?… நான்தான் அங்க இல்லியே

மினிஸ்டர் வித்யாதரனை உங்களுக்குத் தெரியுமா?

எம். வி. டி லிக்கர் பாஃக்டரியோட உண்மையான ஓனர்… ஆனா இதை நீங்க எந்தக் கோர்ட்டில் சொன்னாலும் எடுபடாது

அந்த மினிஸ்டரோட மகனைத் தெரியுமா உங்களுக்கு?

அந்த பொறுக்கி பெயர் மனோஜ்… அடிக்கடி கோவாவிற்கு வருவதும், குடிப்பதும், கேம்ப்ளிங் ஆடுறதும் அவனோட வழக்கம்

அவன் அவளிடம் ஒரு போட்டோவை காண்பிக்க ஷாபானா அவளை அடையாளம் காண்பித்தாள். விந்தியாவின் யூகம் சரியாக இருந்தது. இவர்களின் பேச்சுத் தடைபடும் விதமாய்ப் பெரிய சத்தம் ஒலித்தது.

அவர்கள் என்னவென்று யோசிப்பதற்குள் ஷபானாவின் மகன் ஆஷிக் தண்ணீரில் விழ அவள், ஆஷிக்… ஆஷிக்எனக் கதறினாள்.

சிவா கொஞ்சமும் யோசிக்காமல் அடுத்தக் கணமே கடலில் குதித்தான்.

ஆஷிக்கை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த பின் சிவா அந்த ஈர துணியில் அமர்ந்திருக்க, ஷாபானா தன் மகனை எண்ணி கதறினாள்.

சிறிது நேரத்தில் ஆஷிக் ரொம்பவும் இயல்பாக மருத்துவமனையின் படுக்கை மீது அமர்ந்து கொண்டு தான் விழுந்த கதையை ஹிந்தியில் ஷபானாவிடம் சொல்லி கொண்டிருந்தான்.

சிவா எதுவும் புரியாதவனாய் அவன் எப்படி விழுந்தான் என ஷபானாவிடம் கேட்டான்.

அவனா விழலயாம்… அங்க இருந்த கயிறு தடுக்கி விட்டிருச்சாம்என அவனின் பாணியிலேயே சிவாவிடம் சொன்னாள்.

சட்டென்று சிவாவிற்கு ஆஷிக்கின் பதில் வேறு ஒரு கேள்விக்கான பதிலாய் தோன்றியது.

இப்படி அவன் சிந்தித்துக் கொண்டிருக்க ஷபானா நெகிழ்ச்சியோடு நன்றி கூறினாள். கேத்ரீன் கேஸில் அவளால் முடிந்த உதவிகளை எப்பேர்பட்ட ஆபத்து வந்தாலும் செய்வதாக உறுதியளித்தாள்.

34

விந்தியா ஸ்தம்பித்தாள்

விந்தியா ஆதித்தியாவிடம் பேசிவிட்டு வந்த பிறகும் அவன் புரிந்து கொண்டு வருவானோ என்று அவளுக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.

அதே நேரத்தில் மருத்துவமனையில் சந்திரகாந்தை அவளே உடன் தங்கி கவனித்துக் கொண்டிருந்தாள். நர்ஸ் வந்து சில ரிப்போர்ட்ஸை வாங்க விந்தியாவை அழைத்துச் செல்ல ஆதித்தியா சந்திரகாந்த்தின் அறை தேடி வந்து சேர்ந்தான்.

உறங்கி கொண்டிருந்த சந்திரகாந்தை எழுப்ப மனமின்றி அவன் அந்த அறையின் ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தான். சந்திரகாந்த் விழி மூடியபடி ஆதித்தியா என்ற பெயரை முணுமுணுத்துக் கொண்டிருக்க மெலிதாய் அவரின் அழைப்பு அவன் காதுகளில் விழுந்தது. அவரை ஆசுவாசப்படுத்த தன் கைககளால் சந்திரகாந்தின் கரத்தை பிடித்துக் கொண்டான். எத்தனை பெரிய பிரிவாயினும் தன் மகனின் தொடுகையைப் புரிந்து கொண்டவராய் கண்கள் திறந்து பார்த்தார்.

கனவுக்கும் நினைவுக்கும் இடையில் ஆதித்தியாவின் முகம் அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்த, ஆதித்தியா தான்  அந்நாள் வரை விரும்பாத அந்த வார்த்தையை மனதில் பொங்கிய பாசத்தோடு உச்சரித்தான்.

ஐம் வெரி சாரி டேட்… நான் உங்களைப் புரிஞ்சிக்காமலேயே இத்தனை காலமாய் இருந்துட்டேன்

இளம் வயதில் ஆதித்தியா அழைத்த தோரணையும் உச்சரிப்பும் அதே அன்புடன் வெளிப்பட்டது. இத்தனை காலமாய் சந்திரகாந்தை அழுத்தி கொண்டிருந்த பாரம் அந்த ஒற்றை வார்த்தையில் கரைந்து போனது.

விந்தியா ரிப்போர்ட்டினை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைய கதவினை திறந்தாள். சந்திரகாந்தும் ஆதித்தியாவும் கண்கள் கலங்கியபடி தாங்கள் தேக்கி வைத்திருந்த அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது.

அவர்களுக்கு இடையில் செல்ல விரும்பாமல் விந்தியா, ஃபிளாஸ்க்குடன் எதிரே வந்த சண்முகத்திடம் ரிப்போர்டுகளை ஆதித்தியாவிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு தன் கடமை முடிந்ததென புறப்பட்டாள்.

சரியாக நேரெதிரே சமுத்திரன் கடந்து போக இருவருமே பார்த்தபடி செல்ல, விந்தியா அவனை ஏளனமாய்ப் பார்த்து சிரித்தாள். அந்தப் பார்வையின் அர்த்தம் சந்திரகாந்தின் அறைக்குள் நுழையும் வரை சமுத்திரனுக்கு புரியவில்லை. ஆதித்தியா சந்திரகாந்தை நிமிர்த்தி சாய்வாக அமர வைத்தான்.

சமுத்திரன் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து அதிர்ச்சியுற்றாலும் அதை காட்டிக் கொள்ளாமல் சந்திரகாந்திடம் சந்தோஷக் களிப்பாய் இருப்பது போல் நாடகம் நடத்திக் கொண்டிருந்தான்.

ஆனால்ஆதித்தியாவிற்கு சமுத்திரனை பார்ப்பதில் துளி கூட விருப்பமில்லை என அவனின் முகபாவனையில் தென்பட்டது. அந்தச் சமயத்தில் சண்முகம் ரிப்போர்ட்ஸை ஆதித்தியாவிடம் விந்தியா கொடுக்கச் சொன்னதாக நீட்டினான்.

 உடனே ஆதித்தியா விந்தியாவைத் தேடிக் கொண்டு மருத்துவமனை வாசல் வரை சென்றான். அவள் போன திசை தெரியாமல் அவனின் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்க, அவனின் இதயம் அவளின் ஒரு சந்திப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவனின் தோளில் பட்ட கை அவனைத் திரும்பி பார்க்க வைத்தது.

பின்புறம் சமுத்திரன் நின்றிருந்தான். ஆதித்தியாவிற்கு அவன் மீது கோபம் குறையவில்லை என்பது அவன் பார்வையிலேயே தெரிந்தது.

என்ன ஆதித்தியா… இன்னும் ஒரு வாரத்தில் கேத்ரீனோட கேஸ் ஹியரிங்க் வருது… ஞாபகம் இருக்கா?” என்றான்.

மறக்கல…

நான்தான் உனக்காக ஆஜராகணும்

சிறிதும் யோசிக்காமல் ஆதித்தியா, அவசியமில்லைஎன்றான்.

சமுத்திரன் கொஞ்சம் சத்தமாகச் சிரித்து விட்டு, அப்படின்னா விந்தியா உனக்காக

அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ஆதித்தியா கோபக் கனலோடு அவனைப் பார்த்து

டோன்ட எவர்…என்று விந்தியாவின் பெயரை சொன்னதுக்கு விரல்களை ஆட்டி மிரட்டினான்.

அப்புறம் உன் இஷ்டம்… கடவுள்தான் உன்னைக் காப்பத்தணும்என்று சொல்லிவிட்டு சமுத்திரன் சென்றான்.

ஆதித்தியா சமுத்திரனை இளக்காரமாய் பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

விந்தியா வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து சிவா கோவாவிலிருந்து அவளுக்குப் போன் செய்தான்.

எங்க இருக்க விந்து?என்று கேட்டான் சிவா.

வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்என்றாள்.

அந்த வேணு மகாதேவன் வீட்டுக்கு போயிட்டு இருக்காராம்

எதுக்கு… அவனுக்கு வேறு வேலையில்லையா?

அதெல்லாம் பேச நேரமில்ல விந்து… வனிதா உளறிட்டானா… போச்சு எல்லாமே வீணா போயிடும்… ஏதாவது ஐடியா பண்ணுடீ

என்னடா சிவா நீ… நான் என்ன ஐடியா குடோனா வைச்சிருக்கேன்?

அதெல்லாம் எனக்குத் தெரியாது… டூ சம்திங்என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

விந்தியா என்ன செய்வதென்று குழம்பினாள். உடனே வனிதாவுக்குத் தொடர்பு கொண்டு, சில விஷயங்களைச் சொல்லி அதன்படி நடந்து கொள்ள சொன்னாள். ஆனால் மனதில் ஒருவிதமான பயம் குடிகொண்டிருந்தது.

வீட்டை அடைந்ததும் வனிதா தலையைச் சாய்த்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளே போன மறு கணமே என்னாச்சு?என்றாள் விந்தியா.

பயந்துட்டேன் அக்கா… பட் நீ சொன்ன விஷயம் வொர்க் அவுட் ஆச்சு… அந்த மனிஷன் வாசலோடவே போயிட்டார்.

நான் யாரு?” என்று விந்தியா சுடிதாரின் காலரை தூக்கி விட அவளின் பின்மண்டையிலேயே அடி விழுந்தது.

பின்னாடி இருந்த சரோஜாவை பார்த்து, அத்தை!என்றாள்.

யாருடி இந்த வேலை எல்லாம் பார்த்தது?என்றாள் சரோஜா.

விந்தியாவும் வனிதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

சிவாவுக்கு அம்மை போட்டிருச்சுனு சொன்னா அந்த ஆபிஸர் உள்ளே வர மாட்டார். வெளியவே வேப்பிலையைப் பார்த்து வாசலோடு போயிடுவாருன்னு…இழுத்தாள் விந்தியா.

அடிப் பாவீங்களா… தெய்வ குத்தமாயிடும்டி

விந்தியா விழுந்து விழுந்து சிரித்து விட்டு

நல்லதுக்காகச் சொல்ற பொய்யினால் எதுவும் ஆகாதுஎன்றாள்.

கலி காலம்என்று சொல்லிவிட்டு சரோஜா உள்ளே சென்றாள்.

விந்தியாவின் சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்த வனிதா, அக்கா… நீ எல்லாமேஆதி மாமாவுக்காகத் தானே செய்யுஎன்று கேட்டாள்.

அத்தனை நேரம் பளீரெனச் சிரித்துக் கொண்டிருந்த அவள் முகம் இருள் அடர்ந்து போனது. வனிதாவை கூர்மையாய் பார்த்து விட்டு விந்தியா மாடி ஏறி தனிமையைத் தேடி சென்றாள்.

ஆதித்தியாவின் கவனிப்பில் சந்திரகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆதித்தியாவின் கேஸ் கோர்ட்டுக்கு வரும் அதே நாளில் சந்திரகாந்திற்கு டிஸ்சார்ஜ். தானும் கோர்ட்டுக்கு வருவேன் என்று அடம் பிடித்தவரை சண்முகத்துடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஆதித்தியா மட்டும் கோர்ட்டுக்கு வந்தான்.

அங்கே சிவாவும் வேணுவும் கேஸைப் பற்றி மும்முமராகப் பேசிக் கொண்டிருந்தனர். சிவா கோவாவிற்குப் போனதோ வந்ததோ வேணுவுக்குத் தெரியாத போதும் சிவாவிற்கு அம்மை போட்டதாக சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. சிவாவின் முகத்தில் எந்தவித அடையாளமும் இல்லாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆதித்தியா கோர்ட்டில் தனியாகவே நின்று கொண்டிருந்தான். அவனுக்காக வாதாட ஒரு வக்கீலை கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை.

அந்தச் சமயத்தில்தான் சுபா வக்கீல் உடையில் ஆதித்தியாவை நோக்கி நடந்து வந்தாள்.

ஆதித்தியா அவளை அப்படிப் பார்த்ததே இல்லை. சுபா ஆதித்தியாவை நெருங்கி வந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாக,

என்ன சுபா இதெல்லாம்… ஒண்ணும் புரியலியே

நீங்கதான் என் வீட்டுக்காரர உங்க கேஸில் ஆஜாராக கூடாதுன்னீங்களே

அதுக்காக சமுத்திரன் உன்னை அனுப்பினானா?

நீங்க வேறண்ணா… இந்தக் கருப்பு கோட்டை போட்டதிலிருந்து பேன்ஸி டிரஸ் காம்படிஷன் போறியானு கிண்டல் பண்ணிட்டிருக்காரு

அப்புறம்… நீயாகவே எனக்காக வந்தியா?

அண்ணிதான் இந்தக் கேஸில் ஆஜாராகச் சொல்லி வற்புறுத்தினாங்க… நான் உனக்கு சப்போர்ட்டா இருக்கேன்… நீ வாதாடுன்னாங்கஎன்றாள்.

விந்தியாவா!என்று கேட்ட ஆதித்தியா அவள் கோர்ட்டுக்கு வந்து இருப்பாளா என அவன் மனம் தேடி அலைந்தது. ஆனால் அவன் தேடல் வீண்தான். விந்தியா அங்கு இல்லை.

அவனின் தேடலை உணர்ந்தபடி சுபா அவனிடம், அண்ணி வரலண்ணா… நாம உள்ளே போவோமா? நமக்குக் கொஞ்சம் பார்மாலிட்டீஸ் இருக்குஎன்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.

சிவா வேணுவிடமிருந்து விலகி வந்து விந்தியாவை தொடர்பு கொண்டான்.

நீ வரலியா?என்றான்.

இல்ல சிவா

ஏன்?”

நான் வருவதைப் பத்தி இப்போ என்ன… சுபா கோர்ட்டுக்கு வந்துவிட்டாளா?என்றாள்.

வந்துட்டாங்க… பட் சுபாவை நினைச்சா பயமா இருக்கு… வேற எக்ஸ்பீரியன்ஸ்ட் லாயரா பாத்திருக்கலாமே

புரியாம பேசுற சிவா நீ… வேற எந்த லாயரை வைத்தாலும் அவன் அந்த மினிஸ்டருக்கு விலை போகமாட்டான்னு என்ன நிச்சயம்? அப்புறம் எல்லாமே வேஸ்ட்டா போயிடும்… மோரோவர் எந்த சூழ்நிலையிலும் சுபா ஆதியை விட்டு கொடுக்க மாட்டாள்என்றாள்.

வெரி கிளவர்… சரி நான் உள்ளே போறேன்… அப்புறமா கேஸ் விசாராணை முடிந்ததும் போன் செய்றேன்என்று சொல்லிவிட்டு கோர்ட்டிற்குள் சென்றான்.

கேத்ரீன் கேஸின் முதல் அமர்வு என்பதால் இரு பக்கமும் தங்கள் தங்கள் வாதங்களை விளக்கினர். அதிலும் சுபா ஆரம்பத்தில் திணறினாலும் ஆதித்தியா குற்றம் செய்ததாகச் சொல்லப்படும் ஆதாரம் வெறும் யூகமே என்று வாதாடினாள்.

 கடைசியில் ஆதித்தியாவின் நிபந்தனை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நீதிபதி அடுத்த அமர்வில் விசாரிக்க வேண்டிய சாட்சிகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கேஸை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்தார்.

விசாரணை முடிந்து வெளியே வரும் பொழுது ஆதித்தியா சுபாவினை வாய் ஒயாமல் பாராட்டினான்.

சுபா கேத்ரீனோட இறப்புக்கு நியாயம் கிடைத்த பிறகே முழுமையான வெற்றி என்றாள். அவளின் முதிர்ச்சி அவனுக்கு ஆச்சிரயமாக இருந்தது.

சிவா அண்ணன்தான் ன்னுடைய நேர்த்தியான வாதத்திற்கு காரணம்என்றாள் சுபா.

ஆதித்தியாவிற்கு சுபா சொன்னது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சிவாவை தான் எதிரியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவன் தனக்காக இத்தனை பெரிய உதவியைச் செய்து கொண்டிருக்கிறானா என்பதை ஆதித்தியாவால் நம்பவே முடியவில்லை.

தான் இன்று வரையில் நண்பன் யார் எதிரி யார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்பதை மட்டும் ஒருவாறு உணர்ந்து கொண்டான்.

விந்தியா ஆதித்தியாவின் சந்திப்பை தவிர்க்க கோர்ட்டுக்கு போகவில்லை என்றாலும், அவள் மனம் முழுக்க அந்த நினைப்பிலேயே தவித்துக் கொண்டிருந்தது.

விந்தியாவின் போன் ஒலிக்கச் சிவாவாக இருக்கும் என்றெண்ணி போனை எடுத்தாள்.

மறுபுறத்தில் வேறு யாருடைய குரலோ ஒலித்தது.

என்ன அரபிக் குதிரை… எப்படி இருக்க?என்று கேட்டது அந்தக் குரல்.

விந்தியா ஒன்றும் புரியாமல், யார் நீங்க… உங்களுக்கு யாரு வேணும்?

நீதான்டி வேணும்

விந்தியாவிற்கு கோபம் தலைக்கேற, யாருடா நீ… மரியாதை இல்லாம பேசிட்டிருக்க…

யாருன்னு சொன்னா… ஞாபகம் வருமா? நீ அடிச்ச அடியை நான் மறக்கலடி… அதுக்குப் பதிலடி கொடுக்க வேணாம்?

விந்தியாவிற்கு இப்போது புரிந்தது. அது அந்த மினிஸ்டர் மகன் மனோஜ்.

கோழை மாதிரி போன்ல பேசிட்டிருக்க… நேர்ல வாடா ராஸ்கல்என்றாள் விந்தியா.

மறுபுறத்தில் கலகலவென சிரிப்புச் சத்தம் கேட்டது.

நிச்சயம் உன்னைத் தேடி வருவேன்… ஆனா நீ கதறி கதறி அழுவதைப் பார்க்க வருவேன். யாரு செத்தா நீ ரொம்ப அழுவ… உன் நண்பன் சிவாவா… இல்லன்னா உன் ஆசை புருஷன் ஆதித்தியாவா?” இப்படி மனோஜ் கேட்டதுமே விந்தியா கலக்கமுற்றாள்.

விந்தியாவிற்கு பேச வார்த்தைகளே வரவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

என்ன அமைதியாகிட்ட… வலிக்குதா? உன் நண்பன் இல்லைன்னா உன் கணவன்… இவங்கள்ள யாருக்கு என்னவாகுமோனு கதறுடி…என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் மனோஜ்.

விந்தியாவிற்கு அந்த நொடி உலகமே சுழலாமல் நின்று போனது. அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

35

நீதானே என் உயிர்

விந்தியா அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றாள். இருவேறு உறவுகளில் எதை இழப்பாள். மனதில் புரியாத கற்பனைகள் அவளை வேதனைப்படுத்தின. இப்படி அலைப்பாய்ந்து கொண்டிருந்த மனதின் நினைவுகளைக் கடிவாளம் போட்டு நிறுத்தி விட்டு வருணை அழைத்தாள்.

அவள் கையிலிருந்த போனில் சிவாவிற்கு முயற்சி செய்தாள். அதே நேரத்தில் இறங்கி வந்த வருணிடம் ஆதித்தியாவிற்கு போன் செய்யச் சொன்னாள்.

சிவாவிற்கு இணைப்பு கிடைத்த போதும் அவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை. ஆதித்தியாவின் போன் அணைப்பில் இருந்ததாக வருண் சொல்ல விந்தியாவிற்கு பதட்டம் அதிகரித்தது.

அவளின் பதட்டத்துக்கான காரணத்தை வருண் கேட்டுக் கொண்டிருக்க, அவன் சொல்வதைக் காதில் கூட வாங்காமல் விந்தியா சுபாவுக்கு போன் செய்தாள்.

சொல்லுங்கண்ணி

சுபா நீ எங்க இருக்க?”

கோர்ட்டிலிருந்து கிளம்பி வீட்டுக்குப் போய்டிருக்கேன்

ஆதி உன் கூட இருக்காரா?”

இல்ல அண்ணி… அவரு தனியா கிளம்பிட்டாரு

ஒ… சிவா… பத்தி தெரியுமா?”

அவரு கமிஷனர் ஆபிஸ் போணும்னு சொல்லிட்டிருந்தாரு

சரி… சரி ஓகேஎன்று சொல்லி வேகமாக அழைப்பினை துண்டித்தாள்.

கமிஷனர் ஆபிஸுக்கு போன் பண்ணு வருண்என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வருணின் போன் ஒலித்தது.

விந்தியா போனை அவனிடமிருந்து பறித்து, ஹெலோஎன்றாள்.

மறு புறத்தில் அவள் தான் எதிர்பார்த்த குரல் ஒலிக்கிறதா என கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் குரல் எதுவும் கேட்காமல் மெளனமாகவே இருந்தது.

ஆதித்தியாவிற்கு விந்தியாவின் குரல் தெரியாமல் போகுமா என்ன? திடீரென்று அவள் குரல் கேட்டதும் வார்த்தைகள் வராமல் அமைதியானான்.

விந்தியாவின் தவிப்பு அதிகரிக்க, ஹெலோ சிவா… பேசுடாஎன்றதும் ஆதித்தியா போனை அருகில் நின்றிருந்த சிவாவிடம் கொடுத்தான்.

சொல்லு விந்தியா

சிவா உனக்கு ஒண்ணும் இல்லயே?

விந்தியாவின் குரலில் இருந்த பதட்டம் அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பது புரிய ஒரே வரியில், வீ ஆர் ஆல் ரைட்என்றான்.

ஆதித்தியாவையும் சேர்த்து சொல்றியா?

ஆமாம் விந்து… நான் வீட்டுலதான் இருக்கேன்… நீ கிளம்பி வா. நேரில் பேசிக்கலாம்என்றான்.

அவனின் வார்த்தைகளைக் கேட்ட பின்புதான் விந்தியா நிம்மதி பெருமூச்சே விட்டாள்.

விந்தியா சிவாவின் வீட்டை அடைந்தாள். என்னதான் விந்தியாவிற்கு நிம்மதி ஏற்பட்ட போதும், நேரில் நடந்ததைத் தெரிந்து கொண்ட பின்புதான் அவளுக்கு முழுமையான தெளிவு ஏற்படும்.

விந்தியா உள்ளே நுழைந்ததும் சற்றும் எதிர்பாராமல் ஆதித்தியா ஹாலிலே அமர்ந்து கொண்டு காபி குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

விந்தியாவை ஆதித்தியா பார்த்த பார்வையில் ஏக்கத்தோடு நிரம்பிய காதல் மொத்தமும் அவனின் கண்களில் வெளிப்பட்டது. அவள் அவனைக் கண்ட தருணத்தில் இதயத்தில் ஏற்பட்ட காதல் ஊற்றை மறைத்தபடி கடந்து வந்தாள். அந்த நேரத்தில் அவள் முன்னே வந்து நின்ற சிவாவை பார்த்தவுடன் அவளுக்குக் கண்ணீர் பொங்கியது.

என்னாச்சு விந்து… ஏன்டி அழற?

அவளுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. உயிர் போய் உயிர் வந்தது போல் இருந்தது அவளுக்கு. கண்ணீரோடு அவனின் தோள் மீது சாய்ந்து கொண்டவளை தட்டி சமாதானப் படுத்தினான்.

ஏய் நாங்க நல்லாதனே இருக்கோம்

அவள் சிவாவின் மீது சாய்ந்து கொண்டு அழுவதை வனிதா, வருண், சரோஜா, தனசேகரன் எல்லொருமே பார்த்து புரியாமல் நின்றனர். அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான நட்பு எல்லோருக்கும் புரிந்த போதும் ஆதித்தியா அங்கே அமர்ந்திருப்பது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியது.

ஆனால் ஆதித்தியா முகத்தில் சலனமோ பொறாமையோ இல்லை. அந்த அழகான நட்பை அவன் நன்றாகவே புரிந்து கொண்டான்.

ஒரு பெண்ணிற்கு அன்பான கணவன், பண்பான காதலன் அமைவது அத்தனை கடினமல்ல. ஆனால் அவளைச் சக உயிராய் பாவித்து, வெறும் தூய்மையான அன்பை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு, துவண்டு போகும் போது தோள் கொடுக்கும் தோழன் அமைவது அபூர்வமானது என்பதை ஆதித்தியா அன்று உணர்ந்து கொண்டான்.

விந்தியா கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைக்க, உனக்கெப்படி தெரிஞ்சுது… எங்க இரண்டு பேருக்கும் ஆபத்துனு?

அப்படின்னா உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுச்சா?” என்றாள்.

அது தெரிஞ்சதுனால தானே நீ பதட்டமாய் இருக்க

அப்பொழுதுதான் விந்தியா மனோஜ் சொன்னவற்றை விளக்கமாக உரைத்தாள்.

பாத்தியா ஆதி… நம்ம இரண்டு பேரையும் போட்டுத்தள்ள மனோஜ்தான் ஏற்பாடு பண்ணிருக்கான்

ஆதித்தியா எழுந்து நின்று கொண்டு, அதான் அவன் நினைச்சது நடக்கலயேஎன்றான்.

அவர்கள் இருவரும் இயல்பாகப் பேசிக் கொண்டது விந்தியாவிற்குக் குழப்பமாய் இருந்தது. அவர்கள் கார சாரமாய் மனோஜை பற்றிப் பேசிக் கொண்டிருக்க விந்தியா பார்க்காத அதிசயத்தைப் பார்ப்பது போல அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் ஆதித்தியா புறப்படுவதாகச் சொன்னதும் அவர்கள் இருவரும் கட்டியணைத்து கொண்டனர். விந்தியாவின் கரு விழிகள் அசையவே இல்லை. ஆதித்தியா சிவாவை கட்டிக் கொண்டே விந்தியாவை அவன் நோக்கிய போதுதான் அவள் மீண்டும் சுயநினைவு பெற்றாள்.

ஆதித்தியா சிவாவிடம் சொல்லிவிட்டு விந்தியாவைக் கடந்து சென்றவன் மீண்டும் அவளை நோக்கி திரும்பி வந்தான். அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு விந்தியா தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

பாத்து பத்திரமா இரு… ஏன்னா நீதான் என்னுடைய உயிர்என்று சொன்ன மறுகணமே ஆதித்தியா வாசலை அடைந்தான். மின்னலைப் போலக் காரில் மறைந்து போனான்.

அங்கே இருந்த எல்லோர் முன்னிலையிலும் அவன் அப்படிச் சொன்னதும் விந்தியாவிற்கு வெட்கத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் சொல்ல முடியாத உணர்வு முகத்தில் தென்பட்டது.

சிவா அவள் அருகில் வந்து, ஹீ இஸ் மேட்லி லவ்விங் யூஎன்றான்.

விந்தியா அந்த எண்ணங்களைத் தவிர்த்தபடி, அத விடு சிவா… என்ன நடந்ததுனு முதல்ல சொல்லு” என்றாள்.

என் வாழ்கையில நான் பார்க்காத ஹாரிபிள் அக்ஸிடன்ட்…

அக்ஸிடென்டா?”

நான் கமிஷனர் ஆபிஸ் போயிட்டு இருந்த போது ஆதி திடீர்னு என் பைக்கை ஓவர்டேக் பண்ணி நிறுத்தினான்… ஏதோ பிரச்சனை பண்ண போறான்னு நினைச்சேன்…

ஆனா என் முன்னாடி வந்து சாரி… நான் உங்களைச் சரியா புரிஞ்சிக்கலனு சொன்னதுமே… எனக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு… அப்புறம் ஆதித்தியாக்கிட்ட பேச பேச எனக்கும் ஆதி மேலே இருந்த கோபம் மனவருத்தம் எல்லாம் சுத்தமா காணாமா போச்சு…

எப்படியோ இரண்டு பேரும் பேசிட்டிருந்துட்டு கிளம்பினோம்… அந்தப் பெரிய ரோட்டில ரொம்ப நிறைய வண்டிங்க கூட வரல. ஆதித்தியாதான் முதல்ல காரை ஸ்டார்ட் பண்ணான்… நானும் பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது ஒரு போன் வந்துச்சுப் பேசிட்டிருந்தேன்.

 அந்த நேரத்தில் ஆதி சைட் மிரர்ரில் ஸ்பீடா வந்த பெரிய கண்டய்னர் பார்த்திருக்கான்… ஏதோ மனசுக்குத் தப்பா பட்டிருக்கு… ஆதித்தியா நினைச்சிருந்தா அவன் தன்னை மட்டுமே காப்பாத்திட்டு இருக்கலாம். பட் ஆன் தி ஸ்பாட் இறங்கி ஓடி வந்து என்னையும் பைக்கில இருந்து கீழே தள்ளி… ஜஸ்ட் ஒன் செகண்டில் நடந்து போச்சு.

அந்தக் கண்டய்னர் வந்த ஸ்பீடுக்கு என் பைக்கை அடிச்சி தூக்கிடுச்சு… ஆதித்தியாவோட காரையும் மோதி கம்பிளீட் டேமேஜ்… இரண்டு பேரும் மயிரிழையில் உயிர் தப்பினோம்

விந்தியாவிற்கு சிவா சொல்வதெல்லாம் படக் கதை போலத் தோன்றிற்று. அப்படியே திகலாய் அமர்ந்திருந்த விந்தியாவின் தோளை சிவா தட்டினான்.

என்ன விந்து பயந்திட்டியா?”

பின்ன… ஏதாவது தப்பா நடந்திருந்தா?”

நடந்திருக்கலாம் பட் நடக்கலியே… ஆனா இந்த ரணகளத்திலும் நீ ஆதித்தியாக்கிட்ட பேசல. என்னதான் இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாதுடி. ஆதித்தியாவுக்கு ஏதாவது நடந்திருந்தா அப்பவும் இப்படிதான் இருப்பியா விந்து?

நிறுத்து சிவா… அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது

நடந்தா?என்றான் சிவா.

நடக்காதுஎன்றாள் விந்தியா.

உடனே வருண் முன்னாடி வந்து, அப்படி எல்லாம் நடக்காது மாமா… ஏன்னா ஆதி மாமாவோட உயிர்தான் இங்க இருக்கே

விந்தியா அவர்கள் பேசுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோபித்துக் கொண்டு எழுந்து சென்றாள்.

மாளிகை போல ஒரு வீட்டில் சதிகார கூட்டம் நடைப்பெற்று கொண்டிருந்து. சமுத்திரன், வேணு மகாதேவன், வி. டி என்கிற வித்தியாதரன், மனோஜ்.

நம் கதையின் பெரும்புள்ளி என்பதால் ரொம்பவும் தாமதமாகவே வித்தியாதரனை பார்க்கிறோம். ஆஜானுபாகுவான உடல், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கறுப்பு கலந்த வெள்ளை முடி, பார்பவர்களை மிரட்டும் தோரணை, நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து கொண்டு மக்களோடு சேர்த்து கடவுளையும் ஏமாற்றுகின்ற வேஷம்.

இப்படியாக ஒரு பெரிய சோபாவில் நடுநாயகமாய் உட்கார்ந்திருக்க இரு பக்கங்களில் வேணுவும் சமுத்திரனும் அமர்ந்திருந்தனர். மனோஜ் மட்டும் இப்படியும் அப்படியுமாய் நடந்து கொண்டிருக்க முதலில் வித்யாதரனின் கர்ஜனை மிகுந்த குரல் அவன் மீது பாய்ந்தது.

முட்டாள்… போலீஸ்காரனை கொல்றது என்ன விளையாட்டு காரியமா? அது நமக்கு நாம வைச்சிருக்கிற கொல்லி

போதும் நிறுத்துங்க… அந்த ஆதித்தியா சிவா இரண்டு பேரில ஒருத்தனாவது செத்திருந்தா அந்த விந்தியாவைக் கதிகலங்க வைச்சிருப்பேன்என்றான் மனோஜ்.

போயும் போயும் ஒரு பொம்பளைக்காக…என்று வித்யாதரன் சொல்ல சமுத்திரன் பதில் சொன்னான்.

ஒருத்தியா? அவ ஒரு ஒன் உமன் ஆர்மி… இந்த கேஸில நமக்கு எதிரா பெரிய பிளான் போட்டிருக்காஎன்றான் சமுத்திரன்.

அதுக்கு உங்க மனைவியும் உடந்தையா?என்று வேணு கேட்க,

அவளால எல்லாம் நம்ம ஒண்ணும் பண்ண முடியாதுஎன்றான் சமுத்திரன்.

வித்தியாதரன் இவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு,

இப்போ என்னோட ஒரே கவலை இந்த கேஸ் மட்டும்தான்… அதை முதலில் முடிக்கணும்… என் பக்கம் பார்வை திரும்பாம ந்த கேத்ரீன் கேஸ் முடியணும். அப்புறம் மனோஜ் நீ செய்யுறது ஏதாவது என்னோட அரசியல் சமாராஜ்யத்துக்கு பிரச்சனையா இருந்துச்சு… மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்

அந்த மிரட்டல் சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து மிரட்டியது.

இவர்களின் சதிகார கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், ஆதித்தியா சோபாவில் படுத்துக்கொண்டு எதைப் பற்றியுமே கவலை இல்லாமல் விந்தியாவைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். இருளில் சிகரெட் பாக்கெட்டை தேடி அவள் மீது தான் விழுந்ததும், அவள் தன்னைக் கடிந்து கொண்டதை பற்றி எண்ணி தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

 இந்தச் சத்தம் சந்திரகாந்த்திற்குக் கேட்க அவர் உள்ளே வந்து ஆதி என்று அழைத்தார்.

டேட்என்று சோபாவிலிருந்து எழுந்து கொண்டான்.

நீ ரொம்ப நல்ல மூடுல இருக்க போல

ஆதித்தியா லேசாகப் புன்னகை புரிந்தான்.

அப்படின்னா சரி… நான் கேட்க வேண்டியதை கேட்டுறேன். ஏன் இன்னமும் நீயும் விந்தியாவும் பிரிஞ்சி இருக்கீங்க

அத நீங்க உங்க மருமகள் கிட்டதான் கேட்கணும்

அப்போ இந்தப் பிரச்சனையில உன்னோட பங்குனு எதுவும் இல்லையா ஆதி?

ஆதித்தியா மெளனமாக நின்றான்.

நீ தப்புச் செஞ்சிருந்தா கொஞ்சமும் யோசிக்காம அவ கிட்ட போய் மன்னிப்பு கேள்… அப்பதான் இந்தப் பிரச்சனை சால்வ் ஆகும்… புரியும்னு நினைக்கிறேன்என்று சொல்லி அவன் தோள்களைத் தட்டி விட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அப்போழுதுதான் ஆதிக்கு தோன்றியது. இன்றளவில் தான் அவளிடம் மன்னிப்பே கேட்கவில்லை…

ஆதித்தியா நாளை நடக்கப் போகும் விபரீதத்தைப் பற்றி யோசிக்காமல் ஏதேதோ நினைவுகளில் இருந்தான்.

பாவம்! ! !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content