You don't have javascript enabled
Monisha NovelsRomantic thriller

Iru thruvangal-36to40

36

ஊடலும் மோதலும்

விடிந்தவுடன் ஆதித்தியா விந்தியாவை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தயாராகிக் கொண்டிருந்தான். அவள் நிச்சியம் அத்தனை சுலபத்தில் மன்னிக்க மாட்டாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அவளைப் பார்க்க அவனுக்குக் கிடைத்த ஒரு காரணம்.

ஆதித்தியா தன் அறையில் இருந்து இறங்கி வந்தவன் சந்திரகாந்த் எப்போதும் போல் ஹாலில் இல்லாததினால் சண்முகத்திடம், டேட் எங்கே?என்று கேட்டான்.

அவரு இன்னும் எழுந்திருச்சே வரலய்யா?” என்றான் சண்முகம்.

இவ்வளவு நேரம் தூங்க மாட்டாரேஎன்று சொல்லிக் கொண்டே சந்திரகாந்த்தின் அறை கதவை திறந்தான்.

அவர் ரொம்பவும் ஆழமான உறக்கத்தில் இருந்தது போல் ஆதித்தியாவிற்குத் தோன்றியது. அவர் உறக்கத்தைக் கலைக்க வேண்டமென்று ஆதித்தியா எண்ணமிட்டு வெளியே செல்ல எண்ணியவன் மீண்டும் திரும்பி வந்து சந்திரகாந்தை எழுப்ப யத்தனித்தான்.

 தொட்டதும் ஆதித்தியா அதிர்ச்சியோடு சுவற்றோரமாய் விழுந்து விட்டான். சில்லென்று இருந்த அவர் உடல் அவனுக்கு எதிர்பாராத சந்தேகங்களை எழுப்ப அதை நம்ப முடியாமல் சந்திரகாந்தின் அருகில் சென்று டேட்… டேட்என்று உலுக்கினான். ஆனால் எந்த வித எதிர் விளைவுகளும் ஏற்படவில்லை. ஆதித்தியாவிற்குப் புரிந்து போனது. அங்கே உறங்குவது போலத் தெரிவது சந்திரகாந்தின் உயிரற்ற உடல் மட்டுமே.

ஆதித்தியா தன் தந்தையின் பாசத்திற்காக இளம் வயதிலிருந்து ஏங்கியவன். பெரும் பிரிவிற்குப் பிறகு புரிதலால் கிடைத்த அன்பு ஒரு நொடியில் தோன்றிய வானவில் போலக் கரைந்து போனதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிலையெனவே அமர்ந்திருந்தான்.

 மரணத்தின் வலி மரணிப்பவர்களை விட அதனை எதிர்கொள்பவர்களுக்கே பெரும் துயரை ஏற்படுத்தும் என்பதை ஆதித்தியா அவன் வாழ்வின் பேரிழப்பின் மூலம் உணர்ந்து கொண்டான்.

விந்தியாவிற்கு சந்திரகாந்தின் மரணம் அதிர்ச்சியையும் சொல்ல முடியாத பேரிழப்பையும் ஏற்படுத்தியது. கண்ணீரோடு கரைந்தவளை யாராலும் தேற்ற முடியவில்லை. சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதவளின் முன்பு சாக்ஷி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வந்து நின்றார்.

என்ன விந்தியா இது? உன் தைரியத்தைப் பார்த்து நான் எவ்வளவு வியந்திருக்கேன். நீயா இப்படி ஓரே நிமிஷத்தில் உடைந்து போயிருக்கிறது? நோ… நீ எப்பவும் போல் அதே மன உறுதியோட இருக்கணும்… அதுதான் உன் மாமனாரோடு விருப்பமும் கூட.

 உறக்கத்திலேயே மரணிக்கிற அதிர்ஷடம் அத்தனை சீக்கரத்தில் யாருக்கும் கிட்டாது… ஹி இஸ் ப்ளஸ்ட். நீ இப்படித் துவண்டு போகக் கூடாது.

ஆதித்தியாவை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு… அவனின் நிலைமை ரொம்பவும் கஷ்டமா இருக்கு… வேதனையைத் தேக்கி வைக்கக் கூடாது… அது நம்மையே மூழ்கடிச்சிடும்… டே கேர் ஆஃப் ஹிம்என்று சொல்லி விந்தியாவின் தலையைத் தடவி சமாதானம் செய்து விட்டு சென்றார்.

அப்பொழுதுதான் விந்தியா ஆதித்தியாவை கவனித்தாள் அவன் உலகமே மறந்த நிலையில் இருந்தான். அவன் கண்களில் அழுகைக்கு பதிலாய் ஏமாற்றத்தின் அதிர்ச்சியே நிறைந்திருந்தது. விந்தியா சுபாவை அழைத்து ஆதித்தியாவிடம் பேசச் சொன்னாள்.

அவள் அவனிடம் சொன்ன எந்த வார்த்தையும் காது கொடுத்த கேட்கவில்லை. சிவா ஆதியை நெருங்கி வந்து அவனுக்கு நிலைமையைப் புரிய வைத்தான். காலம் கடந்த ஞானத்தால் தன் தந்தையின் அன்பை புரிந்து கொள்ளாமல் போனோமோ என்று ஆதியை அழுத்தி கொண்டிருந்த துக்கம் பொங்கி கொண்டு கண்ணீராய் வெளியே வந்தது.

என்னதான் ஆதித்தியா மனதில் இருந்த வேதனை வெளிப்பட்ட போதும் அவன் தந்தையை இத்தனை நாளாய் நிராகரித்ததினால் ஏற்பட்ட குற்றவுணர்வு ஆறாத வடுவாய் அவன் வாழ்வின் இறுதி வரை தங்கி விடப் போகிறது.

சந்திரகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த எல்லோருமே நிலைகுலைந்து போயிருந்தனர். அதிலும் விந்தியா வழிந்த கண்ணீரை துடைத்தபடியே இருக்க ஆதித்தியா எத்தனை மணி நேரம் தன் அறையினுள் அடைந்து கிடந்தானோ?

இந்தத் துயரத்தைக் கடந்து சிவா புறப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான். மரணம் நிகழ்ந்த வீட்டில் சொல்லி விட்டுப் போகக்கூடாது என மாதவி சொல்ல, சண்முகம் அவர்களின் நிலைமையைச் சொல்லி ஆதித்தியாவை கீழே அழைத்து வந்தான்.

எல்லோருமே புறப்பட விந்தியா அவர்களோடு சேர்ந்து கொண்டாள். அவளின் செயல் எல்லோருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. இந்நிலையிலும் என்னை விட்டு பிரிந்து போக வேண்டுமா என்று விந்தியாவைப் பார்க்க அவள் அவன் பார்வையை நிராகரித்தாள்.

சிவா உடனே விந்தியாவிடம், இந்த நேரத்தில் நீதான் ஆதித்தியா கூட இருக்கணும் விந்து… அவரைத் தனியா விட்டு வருவது சரியல்லஎன்றான்.

நீ வேணும்னா இங்க இரு சிவா… நான் என்ன வேண்டாம்னா சொன்னேன்? எனக்கு இனிமே இங்கு இருப்பதற்கான பிடிப்பும் இல்லை… எந்த உறவும் இல்லைஎன்றாள்.

ஆதிக்கு விந்தியாவின் நிராகரிப்பு பழகிப் போனது. விந்தியாவிற்கு கல் நெஞ்சோ என்று நம் வாசகர்கள் யோசிக்கக் கூடும். விந்தியா வனிதாவின் காதலுக்காக சிவாவை நிராகரித்த போதே அவள் மனம் இறுகிய பாறையாகத்தானே இருந்தது. இன்று வரை அவளின் பிடிவாத குணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.

விந்தியாவிற்கு ஆதித்தியாவின் மீதான காதல் எத்தனை பெரியதோ அத்தனை பெரியதாக இருந்தது அவன் விருப்பத்தை அவள் மீது தினித்ததினால் ஏற்பட்ட கோபம்.

விந்தியா அவர்கள் யார் சொல்வதையும் கேட்காமல் வேகமாய் வெளியேறினாள். சிவா மாதவியின் காதில் ஏதோ சொல்ல, சில மணி நேரங்களில் ஆதித்தியாவையும் பிராயத்தனப்பட்டு சம்மதிக்க வைத்து கூடவே அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டை அடைந்தனர்.

விந்தியா அவர்கள் வரும் முன்னரே வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தாள்.

சற்றும் விந்தியா எதிர்பாராத விதமாய் ஆதித்தியாவும் அவர்களோடு வர அவளின் அழகிய கண்கள் அகல விரிந்தன. நந்தினி ஆதித்தியாவை விந்தியாவின் அறைப்பக்கம் அழைத்துச் செல்ல விந்தியா வேகமாய் வந்து வழிமறித்தாள்.

நில்லு நந்தினி… எங்க கூட்டிட்டு வந்திருக்க? இப்போ எங்க அழைச்சிட்டு போற?

வேறெங்க அண்ணி… உங்க ரூமுக்குத்தான்…என்று நந்தினி சொன்னதும் பதிலுக்கு ஏதோ சொல்ல இருந்த விந்தியாவை மாதவி இழுத்துக் கொண்டு போனாள்.

கை விடும்மா… எதுக்கு இங்க அவரைக் கூட்டிட்டு வந்தீங்க?

மாதவி பதிலுக்குக் கோபமாக, ஏன் கூட்டிட்டு வரக் கூடாது? நீ செலவு பண்ணி கட்டின வீடுங்கிற திமிரா… இல்ல இங்க நீ வைச்சதுதான் சட்டமா?என்றாள் மாதவி அதட்டலாக.

அய்யோ! அப்படி எல்லாம் இல்லம்மா

அப்புறம் வேறெப்படி?என்றாள் மாதவி.

அவருக்கும் எனக்கும் ஒத்துப்போகாது… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்க முடியாதுஎன்று விந்தியா சொல்ல மாதவி பதில் பேசாமல் பளீரென்று கன்னத்திலேயே அறைந்தாள்.

விந்தியா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, என்னவோ பண்ணுங்கஎன்று திரும்பியதும்,

 சிவா நின்று கொண்டு, இதெல்லாம் உனக்குப் பத்தாதுடி… அத்தை இன்னும் இரண்டு கொடுத்திருக்கணும்என்றான்.

போடா… எனக்குத் தெரியும்இதெல்லாம் உன் பிளான்தானே! உன்னை அப்புறம் பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவனைக் கடந்து வந்தாள்.

ஆதித்தியா தன் அறைக்குள் சென்றதை பற்றி யோசித்தபடி அவள் தன் அறையை எட்டிப் பார்த்தாள்.

சிந்து ஓடி வந்து ஆதியிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் அவன் பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிந்து அவனிடம், நான்தானே உங்க டார்லிங்… நீங்க என் கூட எங்க வீட்டில வந்து இருங்கஎன்றாள்.

விந்தியா மகிழ்ச்சியோடு ஆதியை பார்த்து, இது நல்ல ஐடியா…என்றாள்.

உடனே ஆதி சிந்துவின் முகத்தைப் பார்த்து, நீங்க என் குட்டி டார்லிங்… அவங்க என் பெரிய டார்லிங்என்றான்.

விந்தியா அவனை முறைத்தபடி பார்க்க அவன் முகத்தில் நகைப்பு மாறவில்லை.

சிந்துவின் முகம் சுருங்கிப் போக, உங்களுக்கு என்னைப் பிடிக்குமாஅவங்களைப் பிடிக்குமா?” என்று மழலையாகப் பேச அவன் சொன்ன விதத்திலேயே அவனிடம் கேள்வியாகத் தொடுத்தாள்.

இப்படிக் கேட்டாஎன்று ஆதி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு,  “சரி… உனக்குச் சாக்லேட் பிடிக்குமா… இல்ல ஐஸ்கீரீம் பிடிக்குமா?என்று கேட்க சிந்து யோசிக்காமல்

இரண்டுமேதான்என்று அவள் சொல்ல அவனும் அவளைப் போலே தலையாட்டியபடி,

எனக்கும் இரண்டுமேதான்என்றான் விந்தியாவைப் பார்த்தபடி!

அவன் பார்வையைத் தவிர்க்க விந்தியா அவன் பதிலை கவனிக்காமல் அங்கிருந்து சென்றாள்.

அந்த அறையும் படுக்கையும் சிறியதானாலும் இப்போதைக்கு அதுதான் அவனுக்குச் சொர்க்கம். விந்தியா தன்னோடு படுக்கையில் உறங்க மாட்டாள் என்று ஆதித்தியாவிற்குத் தெரிந்ததால் அவனே தரையில் படுத்துக் கொண்டான்.

அவன் தரையில் படுப்பது விந்தியாவிற்கு நெருடலாய் இருக்க, அந்தக் காரணத்திற்காக அவனிடம் இரவெல்லாம் சண்டை போட்டு கொண்டிருந்தாள். ஊடலும் மோதலுமாய் அவர்கள் காதல் நித்தம் நித்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மாதவியோ ஆதித்தியாவை மகனை விட ஒரு படி அதிகமாகவே கவனித்துக் கொண்டாள். தந்தையை இழந்தவனுக்கு அன்னையின் அன்பு கிடைத்தது போல் உணர்ந்தான். அவன் மனதை அழுத்திக்கொண்டிருந்த கவலை எல்லாம் காற்றைப் போல் லேசானது.

இதற்கிடையில் ஹோட்டல் ஆதித்தியாவின் நிர்வாகப் பொறுப்புகள் குவிந்திருப்பதாக மேனேஜர் ரமேஷ் நேரில் வந்து ஞாபகப்படுத்த, விந்தியா தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொண்டாள். இறுதியாக விந்தியாவின் பிடிவாதத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் நிர்வாகப் பொறுப்புகளை ஆதித்தியாவே ஏற்றுக் கொண்டான்.

இங்கே நிலைமை இப்படி இருக்க ஆதித்தியாவின் தந்தை இறந்த காரணத்தால் அவனால் ஆஜாராக முடியாது எனச் சுபா பெட்டீஷன் போட்டதால், அதை ஏற்றுக் கொண்ட நீதபதி கேஸை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

அவளுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சுபா வழக்கிற்கான குறிப்புகளை ரொம்பவும் தெளிவாக எடுத்துக் கொண்டாள். ஆனால் அது சமுத்திரனுக்குப் புரியாத வண்ணம் சுருக்கெழுத்துக்களாய் எழுதி வைத்திருந்தாள்.

அவளுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் குழந்தைகளின் சின்னச் சின்ன சேட்டைகளையும், சண்டைகளையும் காரணம் காட்டி அவளிடம் எரிந்து விழுந்தான். அவனின் கோபத்திற்கு அர்த்தம் புரிந்த போதும் சுபா மௌனமாகவே இருந்தாள்.

நாட்கள் கடந்து செல்ல அன்று காலை பத்து மணி…

நீதிமன்றத்தில் கேத்ரீனின் வழக்கிற்கான இரண்டாவது அமர்வு.

போனமுறை போல விந்தியா வராமல் தவிர்க்க முடியவில்லை. அவளையும் விசாரிக்க வேண்டி கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் வந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிருபர்கள் கேத்ரீன் கொலை வழக்கின் விசாரணை பற்றிய செய்தியை சேகரிக்க வந்தவர்களுக்கு அதுவரை தெரியாதுஇன்னும் சில மணி நேரங்களில் இந்தக் கேஸ் பெரும் சென்சேஷனல் ந்யூஸாக மாறப் போகிறது என்று..

37

துரோகம்

நீதிமன்ற வாசலில் சுபா விந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

கேத்ரீனின் வழக்கு விசாரணைக்கான அழைப்பு வர எல்லோருமே நீதிமன்றத்தின் உள்ளே சென்று அமர்ந்தனர்.

ஆதித்தியா குற்றாவளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருந்தான்.

சுபா அவள் எடுத்த குறிப்புகளை மேலே வைத்துக்கொள்ள பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதன் தம் வாதத்தை முதலில் எடுத்துரைத்தார்.

இந்த வழக்கில் கேத்ரீனை கொலை செய்ததிற்கான முக்கியமான சாட்சியே அந்தக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான வீடியோ ஆதாரம்தான்.

ஆதித்தியா அந்த இரவு சமயத்தில் தன் நிலை தவறியிருந்த கேத்ரீனை பின் தொடர வேண்டிய அவசியம் என்ன? அவளின் அறைக்குள் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

 இவை அனைத்தும் நல்ல எண்ணத்தில் செய்ததாக பெரும் ஹோட்டல் அதிபர் சந்திரகாந்தின் ஒரே மகன் ஆதித்தியா சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி என்ன நல்ல எண்ணம் உங்களுக்கு ஆதித்தியா?என்று ஆதியை பார்த்து வினவினார்.

கேத்ரீன் டிரிங்ஸ் சாப்பிட்டா அப்நார்மலா மாறிடுவாங்க… அவங்களால தன்னை மேனேஜ் பண்ண முடியாதுஎன்றான் ஆதித்தியா.

அப்போ கேத்ரீனை பற்றிய எல்லா விவரமும் உங்களுக்குத் தெளிவா தெரிஞ்சிருக்கு… அந்த சந்தர்பத்தைப் பயண்படுத்திதான் நீங்க கேத்ரீனை அடைய அறைக்குள் போயிருக்கீங்க

நோ… என் மனசில அந்த மாதிரி எண்ணம் துளிக்கூட இல்லைஎன்றான் ஆதி.

இது நம்பும்படி இல்லை என்று பத்மநாதன் சொல்ல,. உடனே நீதிபதி சுபாவை பார்த்து, “இதில் நீங்கள் சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்.

எஸ் யூர் ஆனர்… அந்த வீடியோ ஆதாரத்தை சரியா பார்க்காமலே மிஸ்டர் பத்மநாதன் உளறுகிறார். ஆதித்தியா அந்த அறைக்குள் சென்று மீண்டும் ஒரு சில விநாடிகளிலேயே பதட்டத்தோடு வெளியே வருகிறார்.

இத்தனை குறைவான நேரத்திலா ஆதித்தியா கேத்ரீனிடம் தவறாக நடந்து கொண்டிருப்பார்? அப்படியே நீங்கள் சொல்வதே உண்மை என்று வைத்து கொண்டாலும், மிதமிஞ்சிய போதையிலிருக்கும் பெண் ஒரு ஆணிடமிருந்து தன்னைக் காப்பாற்ற போராடி அவள் தவறி விழுந்துவிட்டதாக நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் உற்று கவனிக்க வேண்டும். கொலை செய்யவோ கற்பழிக்கவோ திட்டமிட்டு செல்வதானால், ஆதித்தியா அறைக்கதவை ஏன் மூடாமலே உள்ளே செல்ல வேண்டும்?

இதைக் கேட்ட பத்மநாதன் நீதிபதியை பார்த்து, எதிர்க்கட்சி வக்கீல் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தன் கட்சிக்காரரை காப்பாற்ற வேலைக்கு ஆகாத விஷயங்களைச் சொல்லி கொண்டிருக்கிறார்

நோ பத்மநாதன்… அவங்க சொன்னதிலும் பாயின்ட் இருக்கு. சரி… இனி நீங்க உங்க தரப்பு சாட்சிகளை அழைக்கலாம்என்று நீதிபதி பத்மநாதனை பார்த்து உரைத்தார்.

என்னுடைய முதல் சாட்சி ஆதித்தியாவின் நெருங்கிய நண்பனாய் இருந்த சமுத்திரன்

சமுத்திரன்… சமுத்திரன் என்று அழைத்ததும் அவன் கூண்டில் ஆதித்தியாவிற்கு எதிர்புறத்தில் நின்றான்.

பத்மநாதன் சமுத்திரனை நெருங்கி வந்து, நீங்கள்தான் சமுத்திரனா?” என்றார்.

ஆமாம்என்றான்.

நீங்களும் ஆதித்தியாவும் சுமார் எத்தனை வருடமாய் நண்பர்கள்

இருபது வருடம்

ஆதித்தியா கேரக்டர் எப்படி

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். பார்க்கிற பெண்கள் எல்லோரும் ஒரே சந்திப்பில் அவனின் வலையில் விழுந்துடுவாங்க

ஆதித்தியாவிற்கு கோபம் பொங்கி கொண்டு வர, எதிரே இருந்த சிவா கண் ஜாடையில் அமைதியாக இருக்கும்படி சொன்னான்.

கேத்ரீனை உங்களுக்குத் தெரியுமா?”

அவன் லிஸ்டில் நிறையப் பெண்கள்… இதில் கேத்ரீனோட எப்போ பழக்கம் என்று எனக்கு எப்படி தெரியும்?”

கேத்ரீன் இறந்த அன்னைக்கு நீங்க ஆதித்தியாவை பார்த்தீங்களா?”

ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் அங்கே நடந்த ஆக்ஸிடன்ட் பத்தி போன் பண்ணணாரு… நான் நேரில் போய்ப் பார்த்தேன்… ஆதித்தியா அங்கே இல்லை

எங்க போனார்னு உங்களுக்குத் தெரியுமா?”

தெரியாது… கிட்டதட்ட யாருக்குமே ஆதித்தியா அந்த ஆக்ஸிடென்ட் அப்புறம் எங்க போனான்னு தெரியாது… ஒரு வாரம் கழிச்சு திரும்பி வந்தான்… எங்க போனன்னு கேட்டா சரியான பதில் இல்லை

உடனே பத்மநாதன் நீதிபதியை பார்த்து,

நோட் திஸ் பாயின்ட் யூவர் ஆனர். ஆதித்தியா கேத்ரீனின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்து கேஸ் தனக்கு எதிரா திரும்பவில்லைனு தெரிஞ்சதும் வெளியே வந்திருக்காருஎன்றார்

மேலே தம் கேள்விகளைப் பத்மநாதன் சமுத்திரனிடம் தொடர்ந்தார்.

நீங்கதானே முதலில் ஆதித்தியா தரப்பில் ஆஜராவதாக இருந்தது. அப்புறம் ஏன் நீங்க விலகிட்டீங்க?

முதலில் ஆதித்தியா தப்பு செய்திருக்க மாட்டான்னு நம்பினேன். ஆனா ஆதித்தியா குற்றவாளினு எப்போ தெரிஞ்சுதோ நான் அநியாயத்திற்காக வாதாட விரும்பல

நண்பனா இருந்தாலும் நியாயத்தின் பக்கம்தான் நிப்பேன்னு சொல்றீங்க

ஆமாம்

தட்ஸ் ஆல் யூர் ஆனர்என்று பத்மநாதன் தம் இருக்கையில் அமர்ந்தார்.

நீதிபதி சுபாவிடம், “குறுக்கு விசாரணை செய்யப் போறீங்களா?” என்று கேட்க,

எஸ் யூர் ஆனர்” என்றவாரு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து சமுத்திரன் நின்றிருந்த கூண்டிற்கு அருகில் போய் நின்றாள். அவர்கள் பார்வைகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டன.

நீங்கள் நியாயத்திற்காக மட்டுமே வாதாடுபவர்… இல்லையா?என்று கேட்டாள் சுபா நக்கலாக.

ஆமாம்என்றான் அழுத்தமாக.

அவ்வளவு நியாயம் தெரிந்த நீங்க எதற்கு ஆதித்தியா மாதிரி ஒருவருடன் நட்பு பாராட்டினீங்க?என்று வினவினாள் சுபா.

அதுக்குக் காரணம் இருக்கு… நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். படிக்க ஆசை இருந்தும் வசதி இல்ல. என்னோட அப்பாவோட முதலாளி சந்திரகாந்த் அவர்கள்தான் என்னைப் படிக்க வைச்சு இன்னைக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தை தேடிக் கொடுத்தது. அந்த நன்றிக்கடனை மறக்காமதான் சந்திரகாந்த்தின் ஓரே மகன் ஆதித்தியாவோட நட்போடு இருந்தேன்

அந்த நன்றிக்கடனைத் திருப்பி செலுத்தும் விதமாய் ஆதித்தியா எதிரா சாட்சி சொல்றீங்க?

பத்மநாதன் எழுந்து நின்று கொண்டு, அப்ஜக்ஷன் யூர் ஆனர்… சாட்சியைக் கலைக்கும் விதமாக எதிர்க்கட்சி வக்கீல் கேள்வி கேட்பது சரியல்லஎன்றதும்,

 சுபா உடனே, இருபது வருட நட்பை, நன்றி உணர்ச்சியை இவ்வளவு சுலபமா தூக்கிப் போடும் போது இந்த மாதிரி கேள்வி நம் மனதில் எழத்தானே செய்யும்என்றாள்.

நீதிபதி, அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்என்று சொல்ல, பத்மநாதன் அமைதியாய் உட்கார, சுபா தேங்க்யூ யுவர் ஆனர்என்று சொல்லி விசாரணையை மேலே தொடர்ந்தாள்.

நீங்க பதில் சொல்லுங்க சமுத்திரன்என்று சுபா சொல்ல மனைவியின் முன்னே இப்படி நிற்பது அவமானமாய் இருந்தும் பல்லை கடித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு பதில் சொன்னான்.

நன்றி உணர்ச்சி நிறைய இருப்பதினால்தான் ஆதித்தியாவிற்கு எதிரா சாட்சி சொல்றேன். என்னோட காட்பாஃதர் சந்திரகாந்த் இப்படி ஒரு மகனை பெத்துட்டு ஒரு நாள் கூட சந்தோஷமா இல்லை.

போதாக் குறைக்கு இப்படி ஒரு தப்பை தன் மகன் செஞ்சிட்டானேனு கவலையிலேயே உயிரை விட்டுட்டார். இவன் யாருக்குமே உண்மையா இல்லை. ஆதித்தியா செஞ்ச தவறுக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கணும்என்று சமுத்திரன் இமோஷனலாகப் பேசி கண்களைத் துடைத்துக் கொண்டான்.

ஆதித்தியாவிற்கு இப்போதுதான் அவனின் சுயரூபமே புரிந்தது. அவன் துரோகத்தின் முழு உருவமாய் நின்றான். அவன் பேசியது வார்த்தைகள் இல்லை. ஆதித்தியா மீது வீசிய வாளாக இருந்து.

தந்தை இழந்த வேதனையிலிருந்து அவன் மீளாத போது சமுத்திரனின் துரோகம் இன்னும் பெரிய காயத்தை ஏற்படுத்தியது.

சுபாவுக்கு அவனின் நீலிக்கண்ணீர் புரிந்த போதும் ரொம்பவும் இயல்பாகவே அவனிடம் கேள்விகளைக் கேட்டாள்.

நீங்க கேத்ரீன் டெத் நடந்த போது எங்க இருந்தீங்க?

என் வீட்டில கிளைன்ட்டோட பேசிட்டிருந்தேன்

அவன் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை என்பது சுபாவுக்குத் தெரிந்தும் எதுவும் சொல்ல முடியாமல் அடுத்த கேள்வியைத் தொடர்ந்தாள்.

அப்போ மேனேஜர் ரமேஷ் சொல்லித்தான் உங்களுக்கு விஷயம் தெரியும் இல்லையா?

ஆமாம்

தெரிந்த அரைமணி நேரத்தில் ஹோட்டலில் இருந்தீங்க இல்லை?

இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சமுத்திரன் திணற அவன் பதிலை எதிர்பார்க்காமல்

நீங்க போகலாம் மிஸ்டர். சமுத்திரன்என்றாள்.

பத்மநாதன் விந்தியாவை அடுத்தச் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று சொல்ல

விந்தியா… விந்தியாஎன்று அழைக்க விந்தியா வந்து எதிரே நின்றாள்.

நீங்கதான் மிஸஸ். விந்தியா ஆதித்தியாவா?என்று பத்மநாதன் கேட்க விந்தியா எதிரே நின்றிருந்த ஆதியை பார்த்தாள். ஆதித்தியா முதல் நாள் இரவில் அவளிடம் சொன்ன வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது.

 அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் நீ விந்தியா ஆதித்தியா என்ற அடையாளத்தை மாற்ற முடியாதுஎன்று சொன்னதும் இருவரின் நினைவிலும் மின்னலடித்து மறைந்தது.

இந்த நொடி நேர ஞாபகங்களைக் கடந்து, ஆமாம் என்று பதில் உரைத்தாள் விந்தியா.

நீங்கதான் ஹோட்டல் ஆதித்தியாவை நிர்வாகம் பண்ணிட்டிருக்கீங்களா?”

பண்ணிட்டிருந்தேன்… இப்போ இல்லை…என்றாள்.

அப்படின்னா… இப்போ நிர்வாகம் யாரு கையில் இருக்கு?

என் கணவர் கிட்டஎன்று சொன்னதும் ஆதித்தியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

சரி… அது போகட்டும்… நீங்கதானே அந்தச் சீசிடிவி ரெக்கார்ட்டிங்கை பேக்கப் எடுத்து இன்ஸ்பெக்டர் சிவாவிடம் கொடுத்தது?

ஆமாம்

அது உங்க கணவருக்கு எதிரான ஆதாரம்னு தெரிஞ்சும் கொடுத்தீங்களா?

தெரியும்

கணவனே ஆனாலும் அவருடைய தப்புக்கான தண்டனை கிடைக்கணும்னு நினைக்கிறது ரொம்பப் பெரிய விஷயம்

நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க… என் கணவர் தப்பு செய்யலனு நான் நம்பினதினால் கொடுத்தேன்

புரியலயே மிஸஸ். விந்தியா

தப்பு செய்றவங்கதானே ஆதாரத்தை மறைக்கணும்… அந்த அவசியம் எங்களுக்கு இல்லை

கரெக்டான பாயின்ட்… இந்த ஆதாரம் பத்து மாதத்திற்கு முன்னாடி போலிஸ் கையில் கிடைச்சிருந்தா இந்த வழக்கில் தீர்ப்பே வந்திருக்கும்… ஆனா ஆதித்தியா ஆதாரத்தை போலீஸ்கிட்ட இருந்து புத்திசாலித்தனமா மறைச்சிருக்கார்…

ஆதித்தியா மறைக்கல

அப்போ வேற யார்?”

சமுத்திரன்

அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”

ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் சொன்னாரு

சரி… அது போகட்டும். உங்க கணவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததா?”

பல பெண்களோடு அவர் இயல்பா சிரிச்சு பேசி பழகுறதையும், இவர்கிட்ட எல்லாப் பெண்களும் இயல்பா பழகுறதையும் பலர் தப்பா புரிஞ்சிட்டிருக்காங்க

அப்படின்னா அவரு கரைப்படாத கணவன்னு சொல்றீங்கஎன்று கேலியான தொனியில் கேட்டார் பத்மநாதன்.

நோ டெளட்… ஆதித்தியா என்னுடைய இடத்தில் வேறு பெண்ணை வைச்சு பார்த்ததுமில்லை… இனி பார்க்கவும் மாட்டார்… ஹி இஸ் பெர்ஃக்ட் ஜென்டில்மேன்

ஆதித்தியா அப்படியே திகைத்து போய் நின்றான். யாருமே அவனை இத்தனை துள்ளியமாய் கணித்திருக்க முடியாது. தன்னைத் தானே அவன் கரைபடிந்தவனாய் காட்டிக் கொள்ளவதெல்லாம் அவன் தந்தையை வேதனைப்படுத்த அவன் மீதான அவளின் புரிதல் ஆதித்தியாவிற்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

அப்போ கேத்ரீனை உங்க கணவர் பலவந்தபடுத்தல?

நான் இவ்வளவு நேரம் சொன்னது உங்களுக்குப் புரியல… என் கணவர் எந்த காரணத்தைக் கொண்டும்… எந்தப் பெண்ணையும் விருப்பமில்லாமல் பலவந்தப்படுத்தும் ஈனத்தனமான காரியத்தை செய்யவே மாட்டார்என்று அவள் அழுத்தம் திருத்தமாச் சொல்ல ஆதித்தியாவிற்கு உள்ளூர குத்தியது.

கணவர் என்கிற காரணத்துக்காக நீங்க விட்டுக்கொடுக்காம பேசிறீங்கஎன்றார் பத்மநாதன்.

விந்தியா லேசாகச் சிரித்து விட்டு, நான் பொய் சொல்லித்தான் என் கணவரை காப்பாத்தணும்னா அந்த சீடி ஆதாரத்தை போலிஸ் கிட்ட கொடுக்காமலே இருந்திருப்பேனேஎன்று அவள் மடக்கி கேட்ட கேள்விக்குப் பத்மநாதனால் பதில் சொல்ல முடியவில்லை.

தட்ஸ் ஆல் யுர் ஆனர்என்று சொல்லி முடித்தார்.

38

முகம் தெரியாத நபர்

வக்கீல் பத்மநாதன் போலீஸ் தரப்பின் கடைசி சாட்சியாகக் கேத்ரீனின் நெருங்கிய தோழி மகிளாவை விசாரிக்க அனுமதி கேட்டார்.

மகிளா மகிளா மகிளாஎன்று அழைக்க,

மகிளா அவளின் அழைப்பை ஏற்று கூண்டில் வந்து நின்றாள். மகிளாவிற்குத் தமிழ் தெரியாத காரணத்தால் பத்மநாதன் நீதிபதியிடம் ஆங்கிலத்தில் விசாரிக்க அனுமதி பெற்றார்.

வாசகர்களே! என்னுடைய வசதிக்கும் தங்களுடைய புரிதலுக்கும் ஏற்ப விசாரணை தமிழிலியே நடப்பது போல் சித்தரத்துள்ளேன்.

பத்மநாதன் மகிளாவிடம் தம் கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.

நீங்கதானே மிஸஸ் மகிளா தேவ்?”

ஆமாம்

உங்களுடைய சொந்த ஊர்?

மும்பை

நீங்க எப்படி கோவாவிலேயே வளர்ந்த கேத்ரீனுக்கு நெருங்கிய தோழியா இருந்தீங்க?”

என்னோட பாட்டி தாத்தா கோவாவில் இருந்தாங்க… அவங்க கூடவே தங்கி படிச்சேன். நாங்க இரண்டு பேரும் ஓரே பள்ளியில் படிச்சோம்…

 கேத்ரீனோட அம்மா இறந்த பிறகு என்னோடுதான் அவ எல்லாக் கஷ்டங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துப்பாள். கல்லூரி படிப்புக்காகப் பேங்களூர் போன போது கூட அவ என் கிட்ட போன் பண்ணி நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிப்பாள்

அப்படின்னா கேத்ரீன் ஆதித்தியாவைப் பற்றியும் உங்கக்கிட்ட சொல்லி இருப்பாங்க இல்லையா?

நிறையச் சொல்லிருக்கா… ஆதித்தியா அவளுடைய நல்ல நண்பன்…

கேத்ரீன் வாழ்க்கையில் ஆதித்தியா வெறும் நண்பன் மட்டும்தானா?

முதலில் அப்படித்தான் நினைச்சிட்டிருந்தா… ஆனால் அவளின் அப்பாவின் இறப்பிற்கு பிறகு ஆதித்தியாவோட சப்போர்ட் அவளின் மனநிலையயை மாற்றியது. ஆதித்தியாவோட துணை வாழ்க்கை முழுக்க இருக்கணும்னு நினைச்சா

தனிமையில் இருந்த கேத்ரீனின் மனதை ஆதித்தியா தன் வசப்படுத்திக்கிட்டார் இல்லையா?

இந்த வார்த்தைகளுக்கு மகிளா என்ன பதில் பேசுவது என்று புரியாமல் நின்றிருந்தாள்.

சரி… கேத்ரீன் ஆதித்தியாவிடம் தன் காதலை சொன்னாங்களா?”

ஆதித்தியாவின் பிறந்த நாளுக்காக கேத்ரீன் தன்னுடைய வீட்டில் பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருந்தா… என்னையும் கூப்பிட்டு இருந்தாள்… ஆனால் நான் போக முடியாத சூழ்நிலை உருவாயிடுச்சு.

 அன்னைக்குத் தன் காதலை ஆதித்தியாக்கிட்ட சொல்லப் போவதாகச் சொன்னாள். கூடவே அவரை அவள் பாஃக்டரியோட பங்குதாரராய் மாற்றப் போவதாகவும் சொன்னாள். ஆனா என்ன நடந்தது ஏது நடந்ததுனு தெரியல… அவங்க இரண்டு பேரும் அன்றோடு பிரிஞ்சிட்டாங்க. நான் ஆதித்தியாவை பத்தி ஏதாவது கேட்டாலும் பதில் சொல்லாம எழுந்து போயிடுவா

உங்களுக்கு அவங்க இரண்டு பேருக்குள் என்ன பிரச்சனைனு தெரியாதா?”

இல்ல தெரியாது… கேத்ரீன் என்கிட்ட அதப்பத்தி பேச கூட விருப்பபடவில்லை

பத்மநாதன் உடனே நீதிபதியின் முன் திரும்பி, கேத்ரீன் தன் நெருங்கிய தோழியிடம் கூடச் சொல்ல முடியாதளவுக்கு அவள் மனதை பாதித்த சம்பவம் அது.

ஆதித்தியாவின் பிறந்த நாளன்று தன் காதலை கேத்ரீன் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதித்தியா அவள் தொழிலில் செய்த உதவிகளுக்காகப் பங்குதாரராகவும் மாற்றிப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறாள்என்று சொல்லி கேத்ரீனின் லாக்கரில் கிடைத்த பத்திரத்தை நீதிபதியிடம் ஒப்படைத்துவிட்டு மேலும் தன் வாதத்தைத் தொடர்ந்தார்.

ஆனால் ஆதித்தியா கேத்ரீனின் காதல், சொத்து இரண்டையும் நிராகரித்தது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். ஆதித்தியாவின் நிராகரிப்பை தாங்க முடியாமல் மதுபானம் அருந்தி தன் நிலைத்தவறி இருந்த கேத்ரீனை அக்கறையோடு அவள் அறைக்கு அழைத்துச் செல்வது போல் நடித்து தன்னுடைய காமப் பசிக்கு இறையாக்கி இருக்கிறார் ஆதித்தியா. அந்தச் சம்பவத்தைக் கேத்ரீனால் யாரிடம்தான் சொல்லமுடியும்என்று சொல்லி தன் வாதத்தை முடிக்கும் போது ஆதித்தியா அந்த வார்த்தைகளால் மனம் கலங்கிப் போனான்.

தான் கேத்ரீன் மீது காட்டிய அக்கறைக்கு எல்லோரின் முன்னிலையில் தப்பானவனாய் கூனி குருகி நிற்பது அவனுக்கு அவமானமாய் இருந்தது. அந்த அவமானத்தோடு வாழ்வதை விட மரணமே மேல் என்று ஆதித்தியாவிற்குத் தோன்றிற்று.

விந்தியாவிற்கோ ஆதித்தியா மீதான இந்த அவதூறான பழியைக் கேட்க முடியாமல் நீதிமன்றம் என்று பாராமல் எழுந்து செல்ல பார்த்தவளை திருமூர்த்தி வற்புறத்தி அமர வைத்தார்.

நீதிபதி சுபாவை பார்த்து, “மகிளாவிடம் குறுக்கு விசாரணை செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டார்.

 சுபா எழுந்து நின்று, இல்லை யுவர் ஆனர், ஆனால் பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதன் அவர்கள் சொன்ன கதைக்கான சில விளக்கங்களை நான் தெரிஞ்சிக்க விருப்பப்படுறேன். அதனால் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க அனுமதி வழங்கணும் யுவர் ஆனர்என்றதும்,

 நீதிமன்றத்தில் உள்ள அனைவருமே கொஞ்சம் அசந்து போய்ப் பார்த்துக்கொண்டிருக்க நீதிபதி, ப்ரொசீட்என்றார்.

பத்மநாதன் தன் கோர்ட்டை கழட்டி விட்டு கூண்டில் ஏறி நிற்க அங்கே பெரும் அமைதி நிலவியது.

கோவாவில் கேத்ரீன் வீட்டிற்கு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?”

இல்லை

கேத்ரீனிடம் முன்னே பின்னே பேசியதுண்டா?”

இல்லை

அப்படி இருக்க கேத்ரீனின் நெருங்கிய தோழிக்கு கூடத் தெரியாத ரகசியம் உங்களுக்கு எப்படி தெரிந்தது?

ஆதித்தியாதான் போலீஸ் விசாரணையின் போது சொன்னாரே

ஒ… ஆதித்தியாவே கேத்ரீன் போதையில் இருக்கும் போது தான் தவறாக நடந்து கொண்டதாக சொன்னாரா?”

தப்பு செய்றவங்க என்னிக்கு அவங்க தவறை ஒத்துக்கிட்டிருக்காங்க?

அது சரிதான் பத்மநாதன் சார்… ஆனால் விசராணையின் போது ஆதித்தியாவின் வாக்குமூலம் என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி

பத்மநாதன் கொஞ்சம் யோசிக்க சுபா நீதிபதியின் முன் திரும்பி, என் கட்சிக்காரர் விசாரணையின் போது சொன்னது என்னவென்றால் கேத்ரீன் தன் நிலைத்தடுமாறிக் கொண்டிருக்க அவளை அறையில் படுக்கவைத்து விட்டு திரும்பியிருக்கிறார்.

அந்த சமயத்தைப் பயண்படுத்திக் கொண்டு முகம் தெரியாத நபர் கேத்ரீனிடம் தவறாக நடந்து கொள்ள தனக்கு நிகழ்ந்ததை சரியாகத் தெரிந்து கொள்ளாத கேத்ரீன் ஆதித்தியாவின் மீது பழி போட அவர்களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டது. உண்மையிலேயே ஆதித்தியா தவறு செய்வதவராய் இருந்தால் யாருக்குமே தெரியாத விஷயத்தை போலீஸிடம் மூடி மறைத்திருக்கலாமே…என்றாள்.

பின்பு பத்மநாதன் புறம் திரும்பி, போதையிலிருந்த கேத்ரீன்தான் உணர்ச்சி வேகத்தில் ஆதித்தியா மீது பழி போட்டார் என்றால் … நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி ஒரு மோசமான பழியை என் கட்சிக்காரர் மீது சுமத்தினீர்கள்?” என்று கேள்விக்கு அவரிடம் சரியான பதில் இல்லை.

இதை கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி பத்மநாதனிடம், “எந்த வித ஆதாரமுமின்றி இப்படி ஒரு பழியைச் சுமத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

பின்னர் சுபாவிடம் இனி அவர்கள் தரப்பு சாட்சிகளை விசாரிக்க அனுமதி வழங்கினார்.

சுபா முதல் சாட்சியாக ஹோட்டல் ஆதித்தியாவில் மேனேஜராக வேலை செய்யும் ரமேஷை அழைத்தாள்.

ரமேஷ் ரமேஷ் ரமேஷ்என்ற அழைப்பை ஏற்று ரமேஷ் கூண்டில் ஏறி நிற்க சுபா தம்முடைய கேள்விகளைக் கேட்க தொடங்கினாள்.

நீங்கதான் ரமேஷா?”

ஆமாம்

நீங்க சுமார் எத்தனை வருடமாய் ஆதித்தியா ஹோட்டலில் மேனேஜரா இருக்கீங்க?”

ஐந்து வருஷமாய்

கேத்ரீன் அறையிலிருந்து தவறி விழுவதற்கு முன்பு அவங்க ஆதித்தியாவை பார்க்க வந்தது உண்மையா?”

ஆமாம் வந்தாங்க… நான்தான் அவங்களை ஆதித்தியா சாரை பார்க்க விடமா தடுத்தேன்

நீங்க எதுக்கு அவங்கள பார்க்க விடாம தடுக்கணும்?”

அவங்க நிதானத்தில் இல்லை… நிறைய குடிச்சிருந்தாங்க

அப்புறம் எப்போ ஆதித்தியாக்கிட்ட நீங்க கேத்ரீன் வந்ததைப் பத்தி சொன்னீங்க?

கேத்ரீன் கொடுத்த விசிட்டிங் கார்ட்டை அவங்க கிளம்பினதுமே கொடுத்துட்டேன்.

அப்புறம் என்ன நடந்துச்சு?

ஆதித்தியா சார் உடனே கேத்ரீனை பார்க்க அவங்க ரூம் நம்பரை விசாரிச்சிட்டு போனவர்தான்… அதுக்கப்புறம் 603 ரூம்ல இருந்து ஒரு லேடி தவறி விழுந்துட்டாத நீயூஸ் வந்துச்சு… நான் உடனே போலீஸ்க்கு தகவல் சொன்னேன்…

ஆதித்தியா சாரை கான்டாக்ட் பண்ணேன் அவர் எடுக்கல… சந்திரகாந்த் சாரும் ஊரில் இல்ல… அப்புறம் கடைசியா சமுத்திரன் சாரை கான்டாக்ட் பண்ணேன்… அவர்தான் உடனே உதவிக்கு வந்தார்

உடனே வர அவர் என்ன ஹோட்டல் ஆதித்தியாவிலா இருந்தார்?

எனக்குத் தெரியாது மேடம்

சரி… போலிஸ்தான் சீசிடிவியை செக் பண்ணனும்… நீங்க எதுக்கு அந்த ரெக்காட்டிங்க்ஸை எடுத்து எடிட் பண்ணீங்க?

அது நான் இல்ல மேடம்… சமுத்திரன் சார்

உடனே பத்மநாதன் எழுந்து நின்று நீதிபதியை பார்த்து, தன்னுடைய ஹோட்டலிலேயே வேலை செய்யும் ஒருவரை ஆதித்தியாவிற்கு சாதகமாக சாட்சி சொல்ல வைத்து நம்மை எல்லாம் முட்டாளாக்க பார்க்கிறார் எதிர்க்கட்சி வக்கீல்

நான் யாரையும் முட்டாளாக்க பார்க்கவில்லை. சிசிடிவி பதிவு இருக்கும் அறைக்குள் எல்லோருமே நுழைய முடியாது. பாதுகாப்பு கருதி அந்த அறைக்குள் போகவே சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

ஆதித்தியா அந்த நேரத்தில் அங்கே இல்லாத காரணத்தால், அப்போ மேனேஜர் உள்ளே சென்று மாற்றினாரா என்று கேட்டேன். அவர் இல்லை என்று மறுத்து மிஸ்டர். சமுத்திரனை கை காட்டினார்,,. அவ்வளவுதானேஎன்றாள் சுபா இயல்பாக

ஆதித்தியா இல்லாவிட்டால் என்ன? தானே இந்த மேனேஜரை கைக்குள் போட்டுக் கொண்டு அந்தப் பதிவுகளை மாற்ற சொல்லிருக்கலாமே?” என்றார் பத்மநாதன்

உங்கள் கற்பனை திறம் அபாரம். எல்லாக் குற்றங்களையும் நீங்கள் என் கட்சிக்காரர் மீது சுமத்துவதில் குறியாய் இருக்கிறீர்கள். சரி போகட்டும். இதில் உங்கள் யூகங்களே சரியாக இருந்துவிட்டு போகட்டும்என்று சொல்லிவிட்டு ரமேஷை பார்த்தாள்.

இவை எல்லாம் நீங்கள் நம்பக் கூடாத சிலரை நம்பியதால் உங்கள் மீது ஏற்பட்ட அவப்பெயர்…என்று கூறிவிட்டு தம் விசாரணையை முடித்துக் கொண்டாள்.

பத்மநாதன் ரமேஷை எந்தவித குறுக்கு விசாரணையும் செய்ய விருப்பபடவில்லை. சுபா அடுத்ததாகத் தன்னுடைய முக்கியமான சாட்சியாக ஆதித்தியா கேத்ரீன் படித்த கல்லூரியின் தலைமையாசிரியர் கீதா குணசேகரனை அழைத்தாள்.

கீதா குணசேகரன்… கீதா குணசேகரன் என்று அழைப்பை ஏற்று ஐம்பது வயது மதிக்கத்தக்க மரியாதை குரிய தோற்றத்தில் வந்து நின்றார் கீதா குணசேகரன்.

நீங்க தானே மிஸஸ். கீதா குணசேகரன்

ஆமாம்

உங்க எதிரே கூண்டில் நிற்பது யாரென்று தெரியுதா மேடம்?

மை ஸ்டூண்ட் ஆதித்தியா…என்று கீதா பதில் சொல்ல ஆதித்தியா முகத்தில் சந்தோஷத்திற்கு பதிலாய் வேதனையே படர்ந்திருந்தது.

கல்லூரியில் ஆதித்தியாவோட நடவடிக்கை எப்படி?

வெரி வெரி நாட்டி… எப்பவுமே கிளாஸை கவனிச்சதும் இல்ல… எங்களை நடத்த விட்டதும் இல்ல

அப்போ சரியா படிக்க மாட்டாரா?”

அதுதான் ஆச்சரியமே… ஹீ இஸ் அ ப்ரில்லியன்ட் ஸ்டூண்ட்

பெண்கள் விஷயத்தில ஆதித்தியா எப்படி?”

அவனைச் சுத்தி எப்பவுமே பெண்கள் பட்டாளமே இருக்கும்… ஆனா யாருமே அவன் அநாகரீகமா நடந்து கொண்டதா சின்னக் கம்பிளைன்ட் கூட வந்ததில்லை

கேத்ரீனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

எஸ்… ரொம்பவும் தைரியமான பெண்… படிப்பு ஸ்போர்ட்ஸ் எல்லாத்திலயும் நம்பர் ஒன்… கேத்ரீனும் ஆதித்தியாவும் வெரி குட் பிரண்ட்ஸ்

இப்போ நான் ஒரு போட்டோ காண்பிக்கப் போறேன்… அந்த போட்டோவில் இருக்கும் நபரை நீங்க அடையாளம் காண்பிக்கணும்

நிச்சயமா

எல்லோருமே பார்க்க முடியுமளவுக்கு ப்ரொஜக்டர் மூலமாக அந்த போட்டோ பெரிது பண்ணி காண்பிக்கப்பட்டது.

அந்த போட்டோவை பார்த்த ஆதித்தியாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது. அந்த போட்டோவை பற்றி அவன் யோசிக்க அன்று விந்தியா வந்து போனது நினைவுக்கு வந்தது.

கீதா குணசேகரனே அந்த போட்டோவில் உள்ள எல்லோரின் பெயரையும் வரிசையாகச் சொல்ல மனோஜ் என்று சொன்ன போது சுபா குறுக்கிட்டாள்.

இந்த மனோஜ் யாருனு சொல்ல முடியுமா?”

நல்ல ஸ்டூண்ட்ஸை எப்படி மறக்க முடியாதோ அப்படி இந்த மாதிரி சிலரையும் மறக்க முடியாது.

 மனோஜ் ரொம்பவும் மோசமான கேரக்டர்… படிப்பு சுத்தமா வராது… பல பெண்கள் அவனைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணியும் அன்று அவங்க அப்பாவோட பதவி அவனை எங்களால் எதுவும் செய்ய முடியாதபடி தடுத்திடுச்சு.

அந்த மனோஜ் ஒரு முறை கேத்ரீன் கிட்ட தப்பா நடந்துக்க அவள் அதை லேசில் விடவில்லை… அவங்க அப்பா அமரேஷோட பவரை யூஸ் பண்ணி காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்ண வைச்சுட்டா… அதுக்கப்புறம் நான் அவனைப் பார்க்கல

இந்தத் தகவல் இந்த வழக்கின் பெரிய திருப்புமுனை… மேடம்என்று கீதா குணசேகரனை பார்த்து சுபா சொல்லிவிட்டு நீதிபதியின் புறம் திரும்பி, தட்ஸ் ஆல் யுவர் ஆனர்என்றாள்.

கீதா குணசேகரனின் சாட்சியைக் கேட்ட பத்மநாதன் என்ன செய்வதென்றே புரியாமல் விழித்தார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. கீதாவை குறுக்கு விசாரணை செய்தால் மினிஸ்டர் வித்யாதரன் பெயர் அடிபட போய் ஏதேனும் வம்பாய் முடிந்துவிட போகிறது என அமைதியாகவே இருந்தார்.

சுபா மேலே என்ன சொல்ல போகிறாள் என பத்மநாதன் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்க, ஒரு சீடி ஆதாரத்தை நீதிபதியிடம் கொடுத்தாள்.

இப்போதைக்கு இந்த ஆதாரம் வெளியிடப்பட வேண்டாமென நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாள்.

39

அரங்கேற்றிய நாடகம்

நீதிபதியிடம் சுபா, இந்த சீடி ஆதாரத்தை தாங்கள் ரகசியமாகப் பார்க்க வேண்டும். இது பற்றி வெளியே தெரிந்தால் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும்என்றாள்.

இதைக் கேட்ட நீதிபதி கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு, இந்த ஆதாரத்தை ரகசியமாக வைத்திருப்பதில் பப்ளிக் பிராஸிக்யூட்டர் பத்மநாதனுக்கு ஆட்சபேணை இல்லாத பட்சத்தில் நீங்கள் சொல்வதற்கு அனுமதி அளிக்கிறேன்என்றார்.

அந்த ஆதாரம் வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும் என்று சொல்வதற்காக பத்மநாதன் எழுந்திருக்க

அருகில் காவல் உடையில் நின்றிருந்த சிவா மெலிதான குரலில், அந்த ஆதாரத்தை வெளியிட்டால் மினிஸ்டர் பெயரும் சேர்ந்து வெளியாகும், பரவாயில்லையா?என்று சொல்ல பத்மநாதன் கொஞ்சம் கதிகலங்கி போனார்.

தப்பித்தவறி மினிஸ்டர் வித்யாதரன் பெயர் வெளியிடப்பட்டால் தன்னுடைய நிலைமை என்னவாகுமோ என்று மிரண்டவர். எனக்கு ஆட்சேபணை இல்லைஎன்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.

சமுத்திரனுக்கு சுபா கொடுத்த சீடி ஆதாரம், பிறகு பத்மநாதனின் பதில், எல்லாமே பெரும் குழப்பமாய் இருந்தது.

சுபா கொடுத்த சீடியை நீதிபதி தனிப்பட்ட முறையில் லேப்டாப்பில் போட்டு பார்த்தார். அது பற்றிய விளக்கங்களையும் சுபா அதனோடு இணைத்திருக்க ஒருவாறு அந்த ஆதாரத்தின் நோக்கம் புரிந்தது.

அங்கே இருப்பவர்கள் எல்லோரும் குழப்பத்தோடு அமர்ந்திருக்க நீதிபதி சுபாவிடம் தம் வாதங்களை எடுத்துரைக்கச் சொன்னார்.

யுவர் ஒனர்… இந்த வழக்கில் காவல்துறை சேகரித்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கபட்ட விளக்கங்களும் காரணிகளும் ஒரு தலைபட்சமானது.

மிஸஸ். கீதா குணசேகரன் வாக்குமூலத்தின்படி கேத்ரீனுடன் கல்லூரியில் படித்த மனோஜுடன் பெரியளவில் விரோதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இது பற்றிக் காவல்துறை தம் விசாரணையில் எங்குமே குறிப்பிடவில்லை. இது எந்த விதத்தில் நேர்மையான விசாரணையாக இருக்க முடியும். இது பற்றிய சரியான விளக்கத்தைத் தெரிந்து கொள்ள இன்ஸ்பெக்டர் சிவாவிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என நீதிபதியிடம் அனுமதி கேட்டாள்.

ப்ரொசீட் என்று நீதிபதி அனுமதி வழங்க சிவா கூண்டில் ஏறி நின்றான்.

சுபாவின் அத்தனை செயலுக்கான சூட்சமங்களைக் கற்றுக் கொடுத்தவனே இப்போது அவள் முன் பதில் சொல்ல நின்று கொண்டிருக்கிறான். இதுவரை நடந்ததையும் சேர்த்து இப்பொழுது நடக்கப் போவதும் அவர்களின் நாடகத்தில் ஒன்றுதான்.

உங்கக்கிட்ட நான் கேட்கிற கேள்விக்கு வெளிப்படையா பதில் சொல்றீங்களா இன்ஸ்பெக்டர் சிவா?என்று கேட்டாள் சுபா.

நிச்சயமாகஎன்றான் சிவா.

மனோஜ் பத்தின எந்தவொரு விஷயத்தையும் நீங்க விசாரிக்கத் தவறிட்டீங்களா இல்ல தெரிஞ்சே விசாரிக்காம விட்டுட்டீங்களா?

ஆதித்தியா மேல இவ்வளவு ஸ்டராங்கான ஆதாரம் இருந்ததால் எங்க பார்வை வேறு பக்கம் திரும்பல

கடிவாளம் கட்டின குதிரையைப் போல ஆதித்தியாவை சுற்றியே உங்க விசாரணையை நடத்திருக்கீங்க… இல்லை?

இல்லை… கேத்ரீன் வழக்கோட எல்லா கேள்விக்கான பதிலும் ஆதித்தியாவை சுற்றியே இருந்தது

அதெல்லாம் சரி… ஆதித்தியா படிச்ச காலேஜ்ல நீங்க ஏன் விசாரிக்கல

வேணு மகாதேவன் சார் அவசியமில்லைனு சொன்னாரு

அப்படின்னா சரி… நீங்க போகலாம்என்று சுபா சொல்ல. சிவா சரியாக அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடகத்தின் மத்திய புள்ளியான வேணு மகாதேவனிடம் வந்து நின்றனர்.

சுபாவின் பார்வை புரிய நீதிபதியே அடுத்ததாக ஏ சி வேணு மகாதேவனை விசாரிக்க அனுமதி கொடுத்தார். வேணு மகாதேவன் கம்பீரமாய்க் கூண்டில் நிற்க, தான் தடுமாறிவிடக் கூடாது என்ற பயம் சுபாவின் முகத்தில் அதிகமாக தெரிந்தது.

மிஸ்டர் வேணு மகாதேவன்… உங்களுக்கு மனோஜ் யாருடைய மகன் என்பது தெரியுமா?”

ஆரம்பத்திலேயே இந்தக் கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் மனதில் உள்ளதை முகத்தில் காண்பிக்காமல் பதில் சொன்னார்.

மனோஜே யாருன்னு தெரியாத போது அவர் யாருடைய மகன்னு எனக்கெப்படி தெரியும்?

அதானே உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்போ மனோஜை கைது பண்ணுவதில் உங்களுக்கு எந்த வித ஆட்சபணையும் இல்லையே?

மனோஜை கைது பண்ணும் அளவுக்கு இந்த கேஸில் அவருக்கு எதிரான ஆதாரம் இல்லை

ஏன் இல்லை… மனோஜுக்கு கேத்ரீனை கொலை செய்ய மோட்டிவ் இருக்கு

என்றோ நடந்த சம்பத்தைக் கொலைக்கான காரணம்னு எப்படிச் சொல்ல முடியும்? கேத்ரீனை சந்தித்து தொந்தரவு கொடுத்திருந்தாலோ இல்லை கொலை செய்வேன்னு மிரட்டி இருந்தாலோ நீங்கள் சொல்வது சாத்தியம்

இதெல்லாம் மனோஜ் செய்யலனு உங்களுக்கு எப்படித் தெரியும்? மனோஜ் சொன்னாரா… இல்ல கேத்ரீன் சொன்னாங்களா?”

கொஞ்சம் நேரம் யோசித்த வேணு பிறகு தான் நினைத்ததை பதிலாகச் சொன்னார்

இந்தக் கேஸில் இரண்டு விஷயம்தான் சாத்தியம்… ஒன்று ஆதித்தியா கேத்ரீனை தள்ளி விட்டிருக்கணும் இல்லைனா ஆதித்தியா குற்றவாளி இல்லாத பட்சத்தில் கேத்ரீன் தானாக தவறி விழுந்திருக்கனும்… ஆதித்தியாவின் வாக்குமூலமும் அதுதான்

இன்னொரு விஷயமும் சாத்தியம் ஏசி சார்… அதுதான் கேத்ரீனின் தற்கொலை

சுபாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட எல்லோருமே குழம்பினர் நீதிபதி உட்பட…

அதிர்ச்சியில் இருந்து மீண்ட வேணு மகாதேவன் சுபாவை நோக்கி, கேத்ரீன் எதற்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டுமென்றால் மனோஜ் இங்கே வர வேண்டும்

பத்மநாதனுக்கு அதிர்ச்சி தாளவில்லை. எந்தத் திசையில் இந்த வழக்கு செல்ல கூடாதென்று நினைத்தார்களோ சுபா அதற்கு நேர்மாறாக காய்களை நகர்த்திக் கொண்டு சென்றாள்.

ஆதித்தியாவைக் காப்பாற்ற சுபா இந்த வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார்…என்று பத்மநாதன் சொல்ல சுபா அவரை நோக்கி

மனோஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?என்று அவள் கேட்க பத்மநாதன் வாயடைத்துப் போனார்.

நீதிபதி சில நிமிடங்கள் யோசித்த பின், இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை நாளை மறுநாள் நடைபெறும். அப்பொழுது காவல்துறை மனோஜை தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுகிறேன் என்று சொல்லி முடித்து விட்டு நீதிமன்றம் கலையலாம்என்றார்.

சுபா வெளியே வரும் பொழுது நிருபர்கள் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் சரமாரியான கேள்விக்குப் பதில் சொல்லாமல் தப்பித்து வந்தாள்.

அவள் வெளியே வந்ததும் விந்தியா அவளை ஆரத்தழுவி கொண்டு, ஓவர் நைட்டில் நீ பெரிய ஸ்டாராகிட்ட சுபாஎன்றாள்.

நீங்க வைச்ச நம்பிக்கைதான் எல்லாத்துக்குமே காரணம்என்றாள் சுபா.

ஆதித்தியா சுபாவை பார்த்து நெகிழ்ந்தபடி, கூடப் பிறந்தவங்க இல்லைனு நான் பலமுறை வருத்தப்பட்டிருக்கேன்… ஆனா நீ உண்மையில் கூடப்பிறந்த உறவுகளுக்கு எல்லாம் மேல்என்றான்.

நீங்க செஞ்ச உதவியை விட இதெல்லாம் பெரிய விஷயம் இல்லண்ணாஎன்று சுபா சொல்லிக் கொண்டிருக்க சிவா அவர்களை நெருங்கி வராமல் தூரத்தில் நின்றபடி வீட்டிற்குப் போகச் சொல்லி தலையசைத்தான்.

அங்கே அவர்களுக்கு ஏதோ ஆபத்து நிகழுமோ என்ற அச்ச உணர்வோடு அப்படி சொன்னான். விந்தியா ஆதித்தியாவோடு காரில் புறப்பட சுபா திருமூர்த்தியுடன் புறப்பட்டாள்.

காரில் பயணித்துக் கொண்டு வீடு வரும் வரை விந்தியாவும் ஆதித்தியாவும் மெளனமாகவே வந்து சேர்ந்தனர்.

காரிலிருந்து இறங்கி விந்தியா வீட்டிற்குள் நுழைய வீடே புகைமூட்டமாய்க் காட்சியளித்தது. இருமலுடன் உள்ளே வந்த விந்தியா என்னவென்று நந்தினியிடம் விசாரித்தாள். அவள் ஹோமம் பூஜை யாகம் புதிதாய் ஏதேதோ கதை சொல்ல விந்தியாவிற்கு எரிச்சல் ஏற்பட்டது.

இதெல்லாம் அம்மாவோட வேலையா?” என்று விந்தியா நந்தினியிடம் கேட்டாள்.

ஆமாம் அண்ணி… அண்ணனோட பிரச்சனை தீர்வதற்கு இதுதான் வழிஎன்று சொல்லி நந்தினி ஏதோ தீர்த்த தண்ணீரை தெளிக்க வர விந்தியா அவளைத் தடுத்தாள்.

எனக்கெதுக்கு? பின்னாடி வருகிறவருக்குதான் எல்லாப் பிரச்சனையும்… போய் அவர் தலையில் மொத்தமா கொட்டு. அப்பையாவது பிரச்சனை தீருதானு பாக்கலாம்என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்றாள்.

ஆதித்தியா பின்னோடு வர மாதவி தானாகவே வந்து பிரசாதம் கொடுத்துத் தீர்த்தம் தெளித்து விட்டு திருநீர் இட்டாள். அவனும் அமைதியாக மாதவியின் செயலுக்கு உடன்பட்டான்.

ஆதித்தியா அறைக்குள் நுழைய விந்தியா ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

என்ன பலமான யோசனை?என்று ஆதித்தியா விந்தியாவின் முகத்தைப் பார்த்து கேட்டான்.

இல்ல… நீங்க இவ்வளவு பவ்யமா நடிக்கிறீங்களே… அது யாரை ஏமாற்ற?என்று கேட்டாள்.

நான் நடிக்கிறேனா?”

எங்க அம்மாகிட்ட எதுக்கு இந்த நல்ல பிள்ளை வேஷம்?

ஆதித்தியா சிரித்தபடி அவள் முகத்தைப் பார்த்தான்.

நீ மட்டும் வேஷம் போடல

நானா?”

என்னைப் பிடிக்காத மாதிரி நடந்துக்குறது… வெறுக்கிற மாதிரி பேசுறது… இதெல்லாம் வேஷமில்லை?

இல்லை… பிடிக்கல… வெறுக்கிறேன் என்பதெல்லாம் அப்புறம்… எனக்கு உங்கள பார்க்க கூட விருப்பமில்லஎன்றாள்.

அவ்வளவு கோபம்? அப்புறம் ஏன் வார்த்தைக்கு வார்த்தை கோர்ட்டில என்னோட கணவர்னு அழுத்தமா சொன்ன? ஏன் ஆதித்தியான்னு சொல்லியிருக்கலாமே?

ஆமாம் சொன்னேன்… அதுதான் உண்மையில் நடிப்பு

சும்மா பொய் பேசாதே… உன் வார்த்தையில ஆரம்பிச்சி மனசு முழுக்க நான் இருக்கேன்… ஆனா நீ அதை மறைக்கிற

நான் எதையும் மறைக்கவும் இல்ல மறக்கவும் இல்ல

சரி விந்தியா… நான் உன் நம்பிக்கைய உடைச்சிட்டேன்… உன் பேச்சை கேட்கல… உன்னை வேதனை படுத்திட்டேன்… உன்னைப் பத்தி கவலைபடாம சுயநலமா நடந்துகிட்டேன்… அதுக்காக நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்…

பட் இத காரணமா சொல்லி என்னை விட்டு போணும்னு சொல்லாதே… நீ இல்லாம என் வாழ்க்கை கண்டிப்பா முழுமையடையாது… நான் செஞ்ச கடைசி… கடைசி தப்பு இதுதான்னு நினைச்சுக்கோ… என் மனசில இருந்து சொல்றேன்… என்னை மன்னிச்சிடுடி

தப்பு செஞ்சா மன்னிப்புக் கேட்கலாம்… நீங்க செஞ்சது தப்பா ஆதி… சொல்லுங்க… அது என்னைப் பொறுத்தவரைக்கும் கொலை. என் காதலையும் நம்பிக்கையையும் கொன்னுட்டு ஈஸியா மன்னிப்பு கேட்குறீங்க…

அன்னிக்கு நான் அழுத போது நீங்க அதைப் பெரிசாவே எடுத்துக்கல… என்னை நீங்க மனுஷியா பார்க்கல… ஒரு பொம்மை மாதிரி இல்ல பாத்தீங்க…

 போதும் ஆதித்தியா… இனிமே நீங்க என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கடப்படுத்தாதீங்க… ப்ளீஸ்… நான் உங்க வாழ்க்கையில வந்ததுக்காக நான் வேணும்னா மன்னிப்புக் கேட்கிறேன்… என்னை விட்டுடுங்க ஆதி

சரிடி விட்டுடறேன்… ஆனா என்னைப் பிரிஞ்சி வாழ உன்னால முடியும்னு நினைக்கிறியா?என்று அவள் கோபமாகப் பேசினாலும் அவன் இயல்பாகவே கேட்டான்.

என்னால முடியும்என்று சொல்லிக் கொண்டு ஆதித்தியாவை பார்த்தபடி அவனைக் கடந்து போக அவளின் காலில் ஏதோ தடுக்க விழ போனாள்.

ஆதித்தியா பாத்துஎன்று சொல்லி அவளை நெருங்கி போக, விந்தியா அவனின் தயவும் இல்லாமலே சுதாரித்துக் கொண்டாள்.

ஆதி ஸ்டே அவே… நான் விழல… என்னைத் தாங்கிப் பிடிக்கிற சீனெல்லாம் இங்க இல்ல…என்று சொல்லி விட்டு வெளியே போனாள் விந்தியா.

போன சில நொடிகளிலே அம்மாஎன்று அவளின் சத்தம் கேட்க ஆதித்தியா வெளியே வந்தான்.

விந்தியா தரையில் விழுந்து கிடந்தாள். தன்னையும் மீறிக்கொண்டு சிரிப்பு வர விந்தியாவிற்குக் கோபமாய் வந்தது.

ஏ நந்தினி… தீர்த்தம் தெளிக்கிறேன்னு தரையெல்லாம் தண்ணி கொட்டி வைச்சிருக்க

அவ தண்ணி கொட்டினா… உனக்குக் கண்ணு தெரியல… தரைய பாத்து நடக்கனும்என்றாள் மாதவி.

நந்தினி சாரி அண்ணி என்று சொல்லிக் கொண்டு அவளுக்குக் கை கொடுத்து தூக்க வர, ஆதித்தியா அவளை விலகச் சொல்லிட்டு தானே விந்தியாவைத் தூக்கிக் கொண்டான்.

நந்தினியும் மாதவியும் சிரிக்க விந்தியாவோ கத்தினாள்.

நான் நல்லாத்தான் இருக்கேன்என்று அவள் சொல்லுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறைக்குள் தூக்கி வந்து படுக்கவைத்தான்.

உன்னைத் தாங்கிப்பிடிக்கிற சீன் இல்லைனு சொன்ன… அது இருக்கா இல்லையானு நான் முடிவு பண்ணனும்என்றான் ஆதித்தியா கேலியாக.

நல்லா இருக்கிறவளை தூக்கிட்டு வந்துட்டு டயலாக் வேறஎன்று சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.

பொய் சொன்னா இப்படி எல்லாம் நடக்கும் விந்து

நான் பொய் சொன்னேனா?”

ஆமாம்

விந்தியா அவனிடம் விதாண்டாவாதம் செய்யத் தயாராக இல்லை. ஆனால் ஆதித்தியா அவன் சொல்ல நினைத்ததைச் சொன்னான்.

நீ பொய் சொல்லு… திட்டு… சண்டை போடு… கோபப்படு… என்ன வேணா பண்ணு. ஆனா இந்தப் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு போகும் போது என் கூடக் கிளம்பி வந்துரு… உனக்கு வேற ஆப்ஷனே இல்ல

அதிகாரம் பண்றீங்களா?”

அன்பா சொன்னா கேட்டுடுவியா?

அதற்கு மேல் விந்தியா எதுவும் பேச விருப்பபடவில்லை. அவர்களுக்கு இடையில் ஒரு விதமான மெளனம் நிலவியது. விந்தியாவின் கோபமும் இறுக்கமும் சூரிய ஒளி பட்ட பனிப் பாறைகள் போல கறைந்து கொண்டே வருவதை அவள் உணர ஆரம்பித்தாள்.

40

இனிமையான தனிமை

சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன் மனோஜை கைது செய்வதில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மனோஜை காப்பாற்றினாலோ அல்லது தலைமறைவாய் வைத்திருந்தாலோ அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படலாம் என அமைதி காத்தார். ஆனால் அந்த மெளனத்தின் பின்னே பெரிய திட்டத்தையே வடிவமைத்துக் கொண்டிருந்தார் வித்யாதரன்.

மனோஜுக்கு ஆதரவாக சமுத்திரன் வாதாட முடிவெடுத்தான். அவன் அதற்காக ரொம்பவும் மும்முமரமாக குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். தன் மனைவி சுபாவை நேரடியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ள ரொம்பவும் ஆவலாய் இருந்தான். அவளைத் தோல்வியுற செய்து மீண்டும் வீட்டுக்குள் தன் காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தான்.

சுபாவிற்கு சமுத்திரனின் புத்திசாலித்தனம் நன்றாகத் தெரியும். அவனை அத்தனை சீக்கிரத்தில் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளவும் மாட்டான். சமுத்திரனை எதிர்த்து வாதாடப் போவது சுபாவுக்கு நிச்சியம் சவாலாய் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த சவாலை மீறிக் கொண்டு அவள் வெற்றி பெறுவாளா என்பது பெரும் புதிராய் இருந்தது.

போலிஸ் ஸ்டேஷனில் மனோஜ் உட்கார வைக்கப்படிருந்தான். அதுவும் ராஜ மரியாதையுடன். வேணு மகாதேவன் அசிஸ்டன்ட் கமிஷனராய் இருந்து கொண்டு அவனுக்கு பணியாளன் போல வேலை செய்து கொண்டிருக்க சிவாவுக்கு எரிச்சலாய் வந்தது.

வேணு மகாதேவன் சிவாவின் அருகில் வந்து, உன்னோட போலீஸ்கார திமிரை மனோஜிடம் காண்பிக்காதே… நான் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்என்று வெளியே புறப்பட்டார்.

மனோஜ் கால் மீது கால் போட்டுக் கொண்டு சிவாவை சொடுக்கு போட்டு தன் அருகில் அழைத்தான்.

சிவா தன் கம்பீரம் குறையாமல் அவன் அருகில் வந்து நின்றான்.

கேத்ரீன் கேஸில் உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது… இந்தக் கேஸ் முடியும் போது உன் லைஃப்… வைஃப்… எதுவும் இல்லாம பண்ணிடுவேன் பாத்துக்கோ

சிவா எதுவும் பேசாமல் பொறுமையாகவே நின்றிருந்தான்.

எப்படி இருக்கா அந்த அரபியன் குதிரை?என்றான்.

சிவா கொஞ்சம் யோசித்தபடி மனோஜை பார்க்க, உன் பிரண்டு விந்தியாவைத்தான் சொல்றேன்என்று மனோஜ் சொல்லி முடிக்க சிவாவிற்கு அவன் எண்ணம் புரியும் போது மனோஜின் கன்னத்தில் விழுந்த அடி அவன் தாடை சிவந்து வீங்கிப் போனது.

என்ன மனோஜ்… இதுதான் போலிஸ் அடி வாங்கி இருக்கியா? என்ன கோபம் வருதா? என்ன செய்வ? என்ன செய்யணும்னு விருப்பப்பட்டாலும் இன்னைக்குள்ள செஞ்சிடு.

 நாளைக்கு உன்னோட சாப்டர் க்ளோஸ்… உங்க அப்பா செஞ்ச பாவம்… நீ செஞ்ச பாவம் எல்லாமே உன் தலையிலதான் விடியப்போகுதுஎன்றான் சிவா.

எங்க அப்பாவோட பவர் என்னன்னு தெரியுமா உனக்கு?

நல்லா தெரியும்… அந்தப் பவரும் பதவியையும் காப்பாத்திக்கவாச்சுசம் உங்க அப்பன் நிச்சயம் உன்னைக் காப்பாத்தமாட்டான்

இந்தக் கேஸில எனக்கெதிரா எந்த ஆதாரமும் இல்ல…

நீ நாலு வருஷத்துக்கு முன்னாடி விதைச்ச விதை உனக்கெதிரா வளர்ந்து நிக்குதே

என்ன சொல்ல வர்ற?

நீ கேத்ரீன் பார்ட்டிக்கு அழையா விருந்தாளியா போனல்ல… அங்க நீ செஞ்ச லீலைக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு

நீ பொய் சொல்ற… சும்மா என்னைப் பயப்படுத்திப் பாக்கிற… தேவையில்லாம பேசி என்னைக் குழப்பாதே… எதாவது இனி பேசணும்னா என் வக்கீல்கிட்ட பேசிக்கோ

சிவா அவனைப் பார்த்துக் கள்ளத்தனமாய் சிரித்தான்.

அந்த சமுத்திரனை தானே சொல்ற… அவனுக்கு அவன் சுயநலம்தான் பெரிசு. அவன் தான் தலைக்கு கத்தி வராதவரைக்கும்தான் உனக்காகப் பேசுவான்.

 ரொம்ப யோசிக்காதே மனோஜ்… கேத்ரீனுக்கு நீ செஞ்ச பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்என்று சொல்லிவிட்டு விசாரணை அறையை விட்டு வெளியேறினான்.

சிவா அடித்ததை விட அவன் சொன்ன வார்த்தைகள்தான் அவனை அதிகமாய்க் கலவரப்படுத்தின. வித்யாதரன் தன்னைக் காப்பாற்றுவாரா என்ற புரியாத குழப்பம் மனோஜ் மனதில் வளர்ந்தது. அதைதான் சிவாவும் விரும்பினான்.

விந்தியா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று எதிர்பாராத நினைவுகள் கனவுகளாய் தோன்றி அவள் உறக்கத்தைக் கலைத்தன. மனதிற்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.

தரையில் உறங்கி கொண்டிருந்த ஆதித்தியாவை காணாமல் அவனைத் தேடிக் கொண்டு போனவள் அவன் எங்கேயும் காணாமல் பதற்றம் அடைந்தாள். அந்த இரவு நேரத்தில் அவன் மாடிக்குப் போயிருக்கக் கூடுமா என்று யோசித்தபடி அந்த இருளில் படிக்கட்டு ஏறிப் போனாள்.

வானின் இருளை முடிந்தளவுக்கு விரட்டிக் கொண்டிருந்த நிலவின் வெளிச்சத்தில் நடுநிசியில் ஆதித்தியா சிகரெட்டும் கையுமாய் நின்று கொண்டிருந்தான்.

விந்தியாவைப் பார்த்தவுடன் சிகரெட்டை காலில் போட்டு மிதித்தான்.

நீங்க இன்னும் இந்தக் கெட்ட பழக்கத்தை விடலயா?என்று மிரட்டலாகக் கேட்டாள் விந்தியா.

ஜஸ்ட் ஒன்…

இட்ஸ் நாட் குட் பாஃர் ஹெல்த்துனு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப இந்த சிகரெட்டை பிடிச்சு உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க?

டென்ஷனா இருந்துச்சு… நாளைக்குக் கோர்ட்டில என்ன நடக்குமோ… அந்த வித்யாதரனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்… யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்துட்டா… அதுவும் இல்லாம கேத்ரீனோட ஞாபகம் வந்தாளே நான் ரொம்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்றேன்

இன்னிக்கு யோசிச்சி என்ன பன்றது… அன்னிக்கு அவங்க ப்ரபோஸ் பண்ணும் போதே யோசிச்சிருக்கலாம்

ஓகே சொல்லி இருக்கணும்னு நினைக்கிறியா?

ஒய் நாட்… அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும் நமக்கு எப்பவும் உறுதுணையா இருக்கிற கணவன் வேணும்னு நினைச்சிருக்கா… நீங்க அப்படி இருப்பீங்கனு அவ யோசிச்சிருக்கா… இதில தப்பென்ன இருக்கு?

நான் சம்மதமே சொல்லி இருந்தாலும் எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப நாள் நீடிச்சிருக்காது

ஏன் அப்படி சொல்றீங்க?

என்னை உண்மையிலேயே புரிஞ்சிக்கிட்டுருந்தா அப்படி ஒரு பழியை என் மேல போட்டிருக்க மாட்டா

அவளோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சு

என்ன பெரிய சூழ்நிலை… உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் மாசக்கணக்குதான்… ஆனா இந்தக் கொலைப்பழி என் மேல விழுந்த போதும் நீ என்னை ஒரு கேள்விகூடக் கேட்காம நம்பின இல்ல… அந்த லாயர் இஷ்டத்துக்குப் பேசின போது முகத்திலறைந்த மாதிரி நான் அப்படிப்பட்டவன் இல்லனு அழுத்தம் திருத்தமா சொன்னியே… ஆனா வருஷக்கணக்கா நான் அவ கூடப் பழகியிருந்தும் அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லையே

அவனின் பதிலுக்கு அவள் என்ன பேசுவதென்றே புரியாமல் நின்றிருந்தாள்.

நீ சொல்லனாலும் உனக்கு என் மேல இருக்கிற காதலும் நம்பிக்கையும் உன்னோட ஒவ்வொரு செயலிலும் தெரியுது… இந்த நைட்டில் என்னைத் தேடிட்டு வந்ததையும் சேர்த்து.

ஆனா உன் பிடிவாத குணத்தால ஒரு தடவை கூட நீ மனசவிட்டு எதுவும் சொன்னதில்லை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது விந்தியா… எனக்காக ஒரே தடவை உன் மனசில இருக்கிறதை சொல்லிடேன்

அப்புறம் பேசிக்கலாம் ஆதி… ஆல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு… நாளைக்கு காலையில கோர்ட்டுக்கு வேற போகணும்என்று அவள் சமாளித்துவிட்டு திரும்பி போகப் பார்த்தவளை வழி மறித்து நின்று கொண்டான். அந்த இருளும் தனிமையும் அவளை மனம் திறந்து பேச வைக்கும் என்று எதிர்பார்த்தான்.

கோபத்தை வெளிப்படுத்த தெரிஞ்ச அளவுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாதா உனக்கு?

வழி விடுங்க நான் போகணும்என்று அடாவடியாக அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிடிவாதமாய் இறங்கி போகப் பார்த்தாள் விந்தியா.

கணவன் மனைவிக்குள்ள இந்த பிடிவாதமெல்லாம் எதுக்கு?”

ஆதித்தியா… எனக்குத் தலைவலிக்குது… வழி விடுங்க

அதற்கு மேல் அவளை வழிமறிப்பதில் பயனில்லை என்றெண்ணி இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து வாயில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்தவள் அவன் வாயில் வைத்திருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே எரிந்தாள்.

இப்பதானே சொன்னேன் ஸ்மோக் பண்ண வேண்டாம்னு

நான் சொல்றத ஏதாவது நீ காதில போட்டுக்கிறியா? நீ சொல்றத மட்டும் நான் கேட்கணுமா.? இப்போ நான் இந்த பேக்கெட் முழுசையும் காலி பண்ணிட்டுத்தான் வருவேன்… நீ போய் தூங்கு

அவனை அப்படியே விட்டுவிட்டு போக அவளுக்கு மனம் வரவில்லை.

ப்ளீஸ் ஆதி… அந்தப் பாக்கெட்டை என் கிட்ட கொடுத்துடுங்க பிடிவாதம் பிடிக்காதீங்க

நானா?

இல்ல நான்தான்… நான்தான் பிடிவாதம் பிடிக்கிறேன்… என் மனசில இருக்கிறத சொல்லாம பிடிவாதம் பிடிக்கிறேன்…

உங்களை விட்டு பிரிஞ்சி இருக்க முடியாதுனு எனக்குத் தெரியும்… ஆனா அதை நான் ஒத்துக்க மாட்டேன்…

நான் உங்களை மனசாரக் காதலிக்கிறேன்… இருந்தும் வாயை திறந்து சொல்லித் தொலைய மாட்டேன்…

நீங்க என் பக்கத்தில இருந்தா ஒயாம சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன்… ஆனா உங்களை விட்டு தள்ளி வந்துட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும்…

இந்த ஜென்மம் முழுக்க ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை உங்கக் கூட நான் வாழணும்… நான் எவ்வளவு கோபப்பட்டாலும் சண்டை போட்டாலும் அதை எல்லாம் தாண்டி என்னைக் காதலிக்க நீங்க என்னோட கடைசிவரை கூட இருக்கணும்…

என் மனசில இருக்கிறதை சொல்லிட்டேன்… போதுமா… அதை தூக்கி போடுங்க ஆதிஎன்று சொல்லி அவன் கையில் இருந்த சிகரெட் பேக்கெட்டை வாங்கித் தூக்கி போட்டாள்.

கண்ணில் நீர் பெருக அவனை ஏறிட்டும் பார்க்காமல் வேக வேகமாய் படியிறங்கி போனாள்.

அந்த நிலவொளி நிரம்பிய இரவில் விந்தியா பேசிவிட்டு போனதெல்லாம் கனவோ என்று சந்தேகம் எழுந்தது ஆதித்தியாவிற்கு.

கீழே இறங்கி வந்தவன் அறைக்குள் விந்தியா படுக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவளின் கைககளைப் பிடித்துக்கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.

இந்தக் காதல் போதும்… இந்த ஜென்மம் இல்ல இன்னும் நூறு ஜென்மத்திற்கு. எத்தனை தூரமானாலும் எத்தனை காலமானாலும் உன் கூடவே வருவேன் அள்ள அள்ள குறையாத இதே காதலோடு… லவ் யூ சோ மச் டியர்என்று விந்தியாவின் கண்களைப் பார்த்தபடி சொன்ன ஆதித்தியா, தன் காதலைக் கொண்டு அவள் பிடிவாதத்தையும் இறுக்கத்தையும் உடைத்து சுக்குநூறாக்கினான்.

பிரிந்திருந்த அந்தக் காதல் பறவைகளை இனிமையான அந்த தனிமையில் விடுத்து இப்போதைக்கு நாம் விலகி செல்வோமாக. விந்தியா ஆதித்தியாவின் வாழ்க்கை… போராட்டங்களைத் தாண்டி மரணிக்காத காதலோடு அவர்களின் இந்த காதல் அத்தியாயம் முடிவு பெறப் போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content