You don't have javascript enabled
Monisha NovelsRomance

VIRUS 143-3

வைரஸ் 143 அட்டாக்-3

சந்திரமௌலி அசாதாரணமாக அங்கே குழுமி நின்றவர்களையெல்லாம் தள்ளிக்கொண்டு, பின்னால் ஒரு தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த மேனகாவின் முன்னே போய் நிற்கவும், அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அனைவரும் ஸ்தம்பித்துப்போய் பார்த்திருந்தனர்.

அவரது பாதுகாவலர்கள் இருவர் அவருக்குப் பின்னால் வந்து நிற்க, அவருக்கும் தான் ஏன் இவ்வாறு நடந்துகொண்டோம் என்றே புரியவில்லை.

எது அவரை அப்படி இழுத்து கொண்டு வந்து நிறுத்தியதென்றும் புரியவில்லை.

சட்டென்று சுற்றுபுறம் உணர்ந்து, முன்னால் நின்றவளிடம் நாகரிகம் கருதி ஒரு, ‘சாரி’யை மொழிந்துவிட்டு அவர் திரும்ப எத்தனிக்க, “சார்! ஒரு நிமிஷம்” என்றாள் அவள் அவருக்கு மட்டுமே கேட்கும் குரலில்.

அவர் அவளை ஒரு வியப்பான பார்வை பார்க்க, “நீங்க இங்க எப்படி வந்தீங்க தெரியுமா?” என அவள் ஒரு தீவிர பாவத்துடன் கேட்க, அதில் ஒரு நொடி திடுக்கிட்டு தான் அவள் சொல்ல வருவதைக் கேட்கத் தயார் என்பதுபோல் அவர் அவளை ஒரு பார்வை பார்த்தார் அவர்.

“இதை படிங்க தெரியும்” என்றவாறு நான்காக மடித்த ஸ்டிக் நோட் தாள் ஒன்றை அவள் அவரிடம் நீட்ட, ஏனோ மறுக்கத்தோன்றாமல் அவர் அதை வாங்கிக்கொண்டார்.

நான்குபேர் மத்தியில் ஒரு நாடகம் அரங்கேறுவதை அவர் விரும்பவில்லை அவ்வளவே.

அதன் பின் அவர் அங்கிருந்து சென்றுவிட, அவர் செயலுக்கு காரணம் கேட்கும் நிலையில் அங்கே ஒருவர் கூட இல்லை.

அதனால், அனைவரும் அதை கண்டுகொள்ளாத பாவத்திலிருந்துவிட அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடம் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடச் சற்று அதிகமாகவே ஏமாற்றமாக இருந்தது மேனகாவுக்கு.

குறைந்த பட்சம் என்னவென்று அறிந்துகொள்ளவாவது அவர் முற்படுவார் என அவள் எண்ணியிருக்க அவளது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, சிறு ஓய்விற்காக அவருக்குச் சொந்தமான கடற்கரை விருந்தினர் மளிகை நோக்கிச் சென்றுவிட்டார் அவர்.

அத்தனை நேரம் மனதினோரம் ஒளிந்திருந்த மகனின் ஞாபகம் மீண்டும் தலையெடுக்க, மனமும் உடலும் களைத்த நிலையில் அறைக்குள் நுழைந்தவர் தான் அணிந்திருத்த கோட்டை கழற்றியவாறே, “அம்மா அகிலாண்டேஸ்வரி!

உன்னைத்தான் நம்பியிருக்கேன் தாயே!

என் மகனை என்கிட்டே கொண்டு வர ஒரு வழியை காட்டும்மா!” என வாய்விட்டு பிராத்தித்துக்கொண்டே, அதில் வைத்திருந்த அவரது கைப்பேசியை எடுக்கவும் அதனுடன் சேர்ந்து மேனகா கொடுத்த துண்டு சீட்டும் வெளியில் வந்து விழுந்தது.

அதைப் பற்றி அவர் சுத்தமாக மறந்துபோயிருக்க அனிச்சை செயலாக அதனை எடுத்துப் பிரித்தார் அவர்.

மிகவும் சிறிய எழுத்துக்களால் அவள் அதை எழுதியிருக்கக் கண்களுக்குக் கொஞ்சம் அதிக வேலை கொடுத்தே அதைப் படிக்கவேண்டியதாக இருந்தது அவருக்கு.

‘உலக பொருளாதாரத்தையே கைக்குள்ள வெச்சிருக்கும் பெரிய மனிதருக்கு என் வணக்கங்கள்.

அண்ட் சாரி!

நீங்க என்னைத் தேடித் தானா வரல. ஆனா நான் பண்ணச் சின்ன ட்ரிக் உங்களை எனக்கு முன்னால கொண்டுவந்து நிறுத்துச்சு.

சுலபமா யாரும் அணுகமுடியாத உங்களை இத்தனை செக்யூரிட்டியையும் தாண்டி ஒரு சின்ன பொண்ணு இப்படி செஞ்சிருக்காளே!

அது எப்படி அண்ட் ஏன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

ப்ளீஸ் எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் கொடுங்க!

இதுல உங்களை பாதிக்கற எந்த நோக்கமும் இல்ல.

நான் உங்க இன்ஸ்டிட்யூட்ல படிக்கற ஒரு சாதாரண ரிசர்ச் ஸ்டூடன்ட் அவ்வளவுதான்.

நீங்க என்னை நம்பலாம்!’

தெளிவாக தன் ஸ்டூடன்ட் ஐடென்டிட்டி நம்பரையும் குறிப்பிட்டிருந்தாள்.

அவளது செய்கை கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமான தோன்றினாலும் அவளது புத்திசாலித்தனம் அவரை கவரவே செய்தது.

உடனடியாக தன் பீ.ஏவை அழைத்து மேனகாவைப் பற்றிய விவரங்களைச் சொன்னவர், “ஐ வாண்ட் டு மீட் திஸ் கேர்ள் இம்மீடியட்லி!

அரேஞ் ஃபார் இட்”

அவள் கட்டளை பிறப்பித்த ஒன்றரை மணிநேரத்தில், அவரது விருந்தினர் மாளிகையில் இருக்கும் அவரது அலுவலக கூடத்தில் அவருக்கு முன்னால் வந்து நின்றிருந்தாள் மேனகா.

அவருக்கு அருகில் நின்றிருந்த அவரது பீ.ஏ மற்றும் அவரது பாதுகாவலர்களை அவர் ஒரு பார்வை பார்க்க, சற்று தூரத்தில் போய் நின்றுகொண்டனர் அவர்கள் மூவரும்.

சந்திரமௌலி மேனகாவை ஒரு பார்வை பார்க்க, “குட் ஈவினிங் சார்!

ப்ரௌட் டு மீட் யு சார்!

எங்க நீங்க என்னை மீட் பண்ண மாடீங்களோனு ரொம்ப பயந்துட்டேன் சார்” என்றாள் அவள் குதூகலத்துடன்.

“உனக்கு எவ்வளவு தைரியம் பொண்ணே!

நீ செஞ்சிருக்கற வேலைக்கு உன் கிட்ட சரியான காரணம் இல்லன்னா உன்னை ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்! ஜாக்கிரதை” அவர் கடுமையாகச் சொல்ல,

“இல்ல..ல… என் கிட்ட சரியான ரீசன் இருக்கு!”

என்றவள் தன் ஹாண்ட் பேக்கிலிருந்து சில கோப்புகளை எடுத்து அவருக்கு முன் வைத்துவிட்டு, “இது என்னோட ஆராய்ச்சி பத்தின டீடெயில்ஸ்!

ஒருத்தரோட ஜெனிட்டிகல் மெமரியை ஆக்டிவேட் பண்ணி அவங்க பேரண்ட்ஸோட உருவ அமைப்பு அண்ட் முக அமைப்பு எல்லாத்தையும் கண்டுபிடிக்க முடியும்.

இதை பத்தின ஐடியா எல்லாம் இதுல இருக்கு.

ஆனா இதை எக்சிகியூட் பண்ண எனக்கு உங்களோட சப்போர்ட் தேவை”

என அவள் சொல்ல வழக்கமாக மற்றவர் அவளைப் பார்க்கும் அதே, ‘லூசம்மா நீ’ பார்வையை அவளிடம் வீசியவர், “ஒருத்தர் அம்மா அப்பா முகத்தைப் பார்க்க இவ்வளவு பெரிய ஆராய்ச்சி தேவையா!

யூ ஆர் வேஸ்டிங் மை டைம்” என்றார் அவர் கடுமையாக!

“உங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு அது தேவை இல்ல!

ஆனா என்னை மாதிரி இருக்கறவங்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்” என அவள் சொல்ல, அவளை அவர் ஒரு புரியாத பார்வை பார்க்க,

“உங்களுக்கு உங்க பேரன்ட்ஸை தெரியும்!

ஆனா எனக்கு தெரியாது!

குழந்தை இல்லாத காரணத்தால என்னை ஒரு கபிள்ஸ் ஆர்பனேஜ்ல இருந்து தத்தெடுத்து வளர்த்தாங்க!

கொஞ்சநாள்ல அவங்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததால நான் அவங்களுக்கு ஒரு பர்டானா தெரிய ஆரம்பிச்சேன்.

கூட வெச்சுக்க விரும்பாம என்னை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க!

என்ன… கொஞ்சம் பணம் செலவு பண்ணி படிக்க வெக்கறாங்க!

ஆனா என்னோட ஆராய்ச்சிக்கு சப்போர்ட் பண்ற அளவுக்கு அவங்களுக்கு மனசு இல்ல!” என்றவள், “என்னை மாதிரி இந்த உலகத்துல எத்தனையோ பேர் இருக்காங்க!

ஒரு குழந்தையை பெத்துக்க தெரிஞ்சவங்களுக்கு அவங்கள வளர்க்கிற பொறுப்பும் இருக்கு இல்ல!

அந்த மாதிரி குழந்தைகளை அனாதையா விட்டுட்டு போனவங்களை கண்டுபிடிச்சு கேள்வி கேக்கணும்!

அதுக்குதான் இந்த ரிசர்ச்!”

அனுதாபம் தேடிக்கொள்ளும் நோக்கமில்லாமல் அவளது ஆராய்ச்சி பற்றிய தகல்களாக மட்டுமே அவள் சொல்லிக்கொண்டிருக்க, அவள் பேசுவதெல்லாம் அவரை பொருத்தமட்டும் வெறும் உளறல்களாகவே தோன்றியது.

ஆனாலும் அவள் தன்னை ஈர்த்து அவளை நோக்கி போகவைத்தது எப்படி என்பதை மட்டும் அறிந்துகொள்ளும் ஆவலில், “உன் ரிசர்ச் கதையெல்லாம் இருக்கட்டும்… நீ என்ன பண்ணி என்னை உன்னை தேடி வரவைச்ச!?

அதை சொல்லு முதல்ல” என அவர் குறியாகக் கேட்க,

“அது ஒரு சின்ன மேட்டர்!

அது இப்ப முக்கியமா என்ன?” என்றாள் அவள்.

“எனக்கு அதுதான் முக்கியம்! அதை சொல்லு! மேற்கொண்டு உனக்கு தேவையானதை செய்யலாமா வேணாமான்னு நான் டிசைட் பண்றேன்” என்றார் அவர்.

“அது… இந்த தேனீலாம் இருக்கில்ல” என்று அவள் ஆரம்பிக்கும்போதே கடுப்பானாவர்,

“ஏய்… எனக்கு வேற வேலவெட்டி இல்லனு நினைச்சியா! நான் என்ன கேட்டா நீ என்ன தேனீ அது இதுன்னு உளறிட்டு இருக்க” என்று கடுகடுத்தார்.

“அதைத்தான் சொல்ல வரேன்” என்றாள் அவள்.

‘இன்னைக்கு யார் முகத்துல முழிச்சோம்; அவனுக்கு இருக்கு’ என்ற எண்ணத்துடன், ‘சொல்லித்தொலை’ என்கிற ரீதியில் கடனே என அவளைக் கவனிக்க ஆரம்பித்தார் சந்துரு.

“இந்த தேனீலாம் இருக்கில்ல” என்று சொல்லிவிட்டு அவர் கவனிக்கிறாரா என அவள் பார்க்க, “சொல்லும்மாஆஆஆ” என்றார் அவர் கடுப்பாக.

“அந்த தேனியோட தலைல சின்னதா ரெண்டு ஏரியல் இருக்கும். அது அதுக்கு ஒரு ஜீ.பீ.எஸ் மாதிரி பயன்படும்.

அது தன்னோட தேன்கூட்டுல இருந்து கிளம்பி தேனைச் சேகரிக்க எவ்வளவு தூரம் போனாலும் அந்த ரூட் அதோட மூளைக்குள்ள ஒரு மேப் மாதிரி ஃபார்ம் ஆயிடும்.

அதை ஃபாலோ பண்ணி அது பத்திரமா தன் கூட்டுக்கு திரும்பிடும்”

அவள் சொல்லிக்கொண்டிருக்க, ‘கடவுளே காப்பது’ என்கிற பாவனையில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஈ.ஜீ.ஆர் அப்படின்னு தேனீக்களோட குட்டி மூளைக்குள்ள இருக்கிற ஒரு ஸ்பெசிபிக் ஜீன்தான் இதெல்லாத்துக்கும் காரணம்!

அதாவது தேனீக்கள் புது புது இடத்துல இருக்கற பூக்களை தேடி போறதுக்கும் தென் பத்திரமா கூட்டுக்கு திரும்ப வாரத்துக்கும் அதுதான் காரணம்”

அவள் விளக்கவும், ‘ஓ… இப்படி ஒண்ணு இருக்குமா என்ன?’ என்ற கேள்வி எழுந்தது அவருக்கு.

“அந்த காம்பினேஷனைத்தான் ஒரு கெமிக்கல் ஸ்ப்ரேவா மாத்தி உங்களுக்கு கொடுத்த பொக்கேல வெச்சேன்.

ரிமோட்டால அதை ஸ்ப்ரே பண்ணேன்!

அதோட வாசனை உங்க பிரெய்ன்ல இருக்கற செரோடோனின் அப்படிங்கற கெமிக்கலோட ரெண்டே செகண்ட்ல ரியாக்ட் ஆயிடுச்சு.

தென் அதோட அப்போசிட் சிக்னல் என் கிட்ட இருந்த ரிமோட்லயே செட்பண்ணி இருந்தேன்.

அதனால தேனி எப்படி பூவை தேடிப் போகுமோ; நீங்க அப்படி என்னைத் தேடி வந்தீங்க!

அவ்வளவுதான்” என்று முடித்தாள் அவள்.

அவரால் அவள் சொன்ன எதையும் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை.

ஆனால் நடந்ததை வைத்துப் பார்க்கும்பொழுது நம்பாமலும் இருக்க முடியவில்லை.

தலை சுற்றிப் போனது அவருக்கு.

“நேஹா! கால் மை டாக்டர்” என்றார் அவர் சத்தமாக.

அவருடைய பாதுகாப்புக் குழுவுடன் வந்திருந்த மருத்துவர் அடுத்த நிமிடம் அங்கே வர, அவரை பரிசோதித்து விட்டு, “சர்..க்கு பீப்பி ரெய்ஸ் ஆகியிருக்கு.

ஹி நீட் கம்ப்ளீட் ரெஸ்ட்” என்று சொல்ல, அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டாள் மேனகா.

உடனே அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட ஆழ்த்த உறக்கத்துக்குச் சென்றார் அவர்.
அந்த உரக்க நிலையிலும் கூட மகனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தவருக்கு திடீரென மேனகாவின் நினைவு வர ஒரு எண்ணம் துளிர்த்தது.


  • நேரம் இரவு எட்டைத் தாண்டி இருக்க, மேனகாவுக்காக அவளுடைய வீட்டில் காத்துக்கொண்டிருந்தாள் அவளுக்குத் தொல்லை கொடுக்கும் நாயகி.

அவள் வீட்டிற்குள் நுழையவும், “இன்னாம்மா நீயி; வர லேட் ஆவும்னு சொல்லியிருக்கக்கூடாது!

நான் வூட்டுக்கு போயாந்திருப்பேனில்ல” கடுப்படித்தாள் நாயகி.

“தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டமா!

நானே போன வேலை முடியலன்னு செம்ம காண்டுல இருக்கேன்!

நீ வேற தொல்லை பண்ணாத” அவள் பதிலுக்கு எகிற, மேனகாவின் முகத்தில் தெறித்த கவலையை உணர்ந்தவள், மேற்கொண்டு வம்பு வளர்க்க விரும்பாமல், “ஏன் கண்ணு இவ்ளோ டயடா இருக்க!

எதுனா பிரச்சனையா” என்றாள் நாயகி.

அவளிடம் எப்பொழுதாவதுதான் வெளிப்படும் இதுபோன்ற கரிசனம்.

“ஒண்ணா ரெண்டா!” அலுத்துக்கொண்டவள், “கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல நாயகி” என்றாள் மேனகா ஏமாற்றம் தோய்ந்த குரலில்.

“உட்டு தள்ளு கண்ணு! இன்னக்கி இல்லனா நாளைக்கி நடக்கப்போவுது!

சுருக்க குளிச்சிட்டு வா! ஒனக்கு புடிச்ச ஆப்பமும் பாயாவும் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்!

சூடா உள்ள தள்ளு.

நீதான் மூடு கெட்டுப்போனா நல்லா சாப்டு தூங்குவ இல்ல! வா வா” என நாயகி சொல்லவும், குளிக்கச் சென்றாள் மேனகா!

அவள் சொன்னது போல் நாயகியுடன் சேர்ந்து அவள் செய்து வைத்திருந்த உணவை ஒரு கட்டுக் கட்டிவிட்டு, பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் மேனகா.

பின் நாயகி வேலைகளை முடித்துவிட்டு அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என அங்கே வர, அதற்குள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள் அவள்.

தன்னுடைய சாவி மூலம் வீட்டைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பிப்போனாள் நாயகி.

  • அந்த இடம் மொத்தமும் ஒரு இதமான குளிர் பரவியிருக்க, பிரிக்க முடியாமல் தன் விழிகளைப் பிரித்தவளின் கண் முன் விரிந்திருந்த அந்த வனம் பசுமையைப் போர்த்திக்கொண்டு கொள்ளை அழகாக இருந்தது.

இதுதான் எனப் பிரித்தறிய முடியாத பல மலர்களின் வாசம் நாசியைத் துளைக்க, செவிகளை நனைத்தது எங்கோ துரத்தில் சலசலக்கும் ஒரு நீரோடையின் சலங்கை ஜதி.

சத்தம் வந்த திசையை நோக்கி அவள் செல்ல, அங்கே தவழ்ந்த அந்த ஓடையில் கால் நனைக்கும் ஆவல் அவளைத் தூண்டவும், தடை ஏதும் இல்லாமல் அதைச் செய்தவள் அந்த தண்ணீரின் குளுமையில் தன்னை தொலைக்க, ஒரு கட்டத்தில் நீரின் வேகத்தில் தாக்குப் பிடிக்க இயலாமல், விழுந்தே விடுவோம் என அச்சத்தில் கண்கள் மூடி பற்றுக்கோல் இல்லாமல் தள்ளாடியவளின் இடையை வளைத்து தாங்கிப்பிடித்த ஒரு வசீகரனின் வலியக் கரங்கள் தன் மார்போடு அவளை அணைக்க, உடல் மொத்தமும் நடுங்கிப்போனாள் அவள்.
மருட்ச்சியுடன் மெல்ல அவள் தன் மான் விழிகளை விரிக்க, அவளைக் களவு கொண்டுபோனது அவளைத் தாங்கி பிடித்திருந்தவனின் வசீகர முகம்.

அவளுக்குள் ஆழமாகப் புதைந்த அவனது விழிகள் சிந்திய காதலில் நாணம் கொண்டு பெண்ணவளின் கண்கள் மறுபடி மூடிக்கொள்ள அவளது இதழை இலக்காக்கி கொஞ்சம் எல்லை மீற எத்தனித்தன அவனது அழுத்தமான இதழ்கள்.

பதறிப்போய் எழுந்தமர்ந்தாள் மேனகா.

அருகில் அவளது கைப்பேசி வேறு அலறிக்கொண்டிருந்தது.

‘ச்ச… என்ன கருமம் பிடிச்ச கனவுடா! இந்த லட்சணத்துல அதுல புடவை வேற கட்டியிருக்கேன்’ என்று புலம்பிக்கொண்டே புதிய எண்ணிலிருந்து வந்த அந்த அழைப்பை ஏற்றாள் அவள்.

“ஹாய் மிஸ் மேனகா!

நான் நேஹா! சந்திரமௌலி சார் பி.ஏ” என்று குழைந்தது எதிர் முனை.

நேரத்தைப் பார்க்க, அதிகாலை மூன்று மணி.

‘ஊர் காவலன் ராதிகா கணக்கா இது என்ன இப்ப இந்த கொஞ்சு கொஞ்சுது’ என்ற எண்ணத்துடன், “சொல்லுங்க மேம்” என்றாள் அவள் வரவழைக்கப்பட்ட நிதானத்துடன்.

“சார் உங்களை அர்ஜண்டா பார்க்கணும்னு சொன்னாரு!

சீக்கிரம் ரெடி ஆயிருங்க!

இன்னும் ஃபிப்டீன் மினிட்ஸ்ல உங்களை பிக் அப் பண்ண கார் வந்துடும்”

ஒரே மூச்சில் சொல்லிவிட்டு இவளது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள் அவள்.

சந்திரமௌலியையும் அந்த நேஹாவையும் மனதிற்குள் திட்டிக்கொண்டே கிளம்பியவள், கதவைப் பூட்டிக்கொண்டு வெளியில் வர, அங்கே அவளுக்காகக் காத்திருந்தது அவர்கள் அனுப்பிய வாகனம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்தில் அவள் மறுபடியும் சந்திரமௌலியின் விருந்தினர் மாளிகையிலிருந்தாள்.

அங்கே வரவேற்பறையிலேயே அவளுக்காகக் காத்திருந்தார் அவர்.

அவரிடம் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் கூடிய சிறு படபடப்பு தெரிந்தது.

அவள் உள்ளே நுழைந்ததும் முன்புபோல் செய்யாமல் அவளை உட்காரச் சொன்னவர், அவளுக்குச் சாப்பிட எதாவது கொண்டுவருமாறு உத்தரவிட்டுவிட்டு, “நீ சொன்ன அந்த டெக்னிக் உண்மைதானா?” என்று கேட்டார் அவர் சுற்றி வளைக்காமல்.

அவரை தன்னிடம் கொண்டுவர அவள் பயன்படுத்திய முறையைத்தான் கேட்கிறார் என்பது புரிய, ‘ஆம்’ என்பதுபோல் தலை அசைத்தாள் அவள்.

“இந்த மெத்தட் யூஸ் பண்ணி யாரை வேணா நம்மகிட்ட வரவைக்க முடியுமா?”

அவர் ஆர்வமுடன் கேட்க, “ம்ம்… முடியும்!” என்றாள் அவள் உறுதியாக.

அப்படினா எனக்கு வேண்டிய ஒருத்தன் என்னை பார்க்காம அவாய்ட் பண்ணிட்டு இருக்கான்.

அவனை உன்னால என் கிட்ட கொண்டு வரமுடியுமா? அதுவும் உடனே!”

கேட்கும்போதே சிறு மகிழ்ச்சி தெரிந்தது அவரது குரலில்.

“ம்ம்..முடியும்” என்றாள் அவள் தயக்கமில்லாமல்.

அடுத்த நொடியே, “கைஸ்; சீக்கிரம் என்னோட ஹெலிகாப்டரை ரெடி பண்ணுங்க!

நான் அந்த சாமியார் நிர்மலானந்தாவோட ஆஸ்ரமத்துக்கு போகணும்!”

அவர் குதுகலத்துடன் அவரது ஆட்களிடம் பணித்துவிட்டு, “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த கெமிக்கல் ரெடி பண்ணி எடுத்துட்டு வா!

நாம உடனே கிளம்பனும்!” என்றார் அவர்.

‘என்ன இந்த பெருசு நம்மள இப்படி ஓட்டுது’ என்ற கேள்வியுடன் அவள் அவரை பார்க்க,

“என்ன பாக்கற! நீ மட்டும் இதை செஞ்சா; பதிலுக்கு நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு செஞ்சு கொடுக்கறேன்!

தட் இஸ் உன்னோட ரிசர்ச்சுக்கு நான் ஸ்பான்சர் பண்றேன்”

பேரத்தில் இறங்கினர் அவர்.

அவளுக்கும் அது சாதகமாகப் போக, “தென் ஓகே!” என்றாள் மேனகா கொஞ்சம் அதீத நம்பிக்கையுடன்.

அவள் சம்மதம் சொன்னதும் ஏதோ நினைவு வந்து திடுக்கிட்டவராக, “ஐயோ! அங்க லேடீசை அலவ் பண்ண மாட்டாங்களே” என்று சொல்லிவிட்டு அவர் அருகில் நின்ற நேஹாவை பார்க்க, அந்த நேரம் அவளுக்கு உதித்தது அந்த விபரீத யோசனை!

அதை நேஹா சொல்லவும், அதிர்ச்சியில் புரை ஏறியது மேனகாவுக்கு.

அவள் பருகிக்கொண்டிருந்த பானம் மூக்கில் ஏறி கண் கலங்கி நின்றாள் அவள்.

“கிரேட்! பிரில்லியண்ட்!” என சந்ரு நேஹாவை புகழ்ந்து தள்ள, “படுபாவி பய புள்ள! உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?’ என அவளை வசைபாடிக்கொண்டிருந்தாள் தன் ஆராய்ச்சிக்காகச் சந்திரமௌலியிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட மேனகா.

2 thoughts on “VIRUS 143-3

  • Ha ha baby semma epi
    Mouli sir plan workout aguma
    Epdium inda pilaya piyana mathi ta kutitu povaga
    Ha ha hero ethana irunda enna seivaga
    Janvi nadakapovadai tan soludo

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content