You don't have javascript enabled
Narmada novelsRomance

Madhu’s Maran-11

அத்தியாயம்-11

இரவின் இனிமையில் மழையின் குளுமையில் மாறனின் கைவளை கதகதப்பில் மது உறங்கி கொண்டிருக்க, மாறன் உறக்கம் கலைந்து பார்த்தவன் அவளின் நித்தரை கலைக்காது சென்று குளியல் போட்டவன், இரவுணவை தயாரிக்கலானான்.

நீண்ட நேரம் கழித்தே உறக்கத்திலிருந்து விழித்த மது, மாறனை காணாது முகப்பறை சென்று பார்க்க, அங்கே மாறன் தயாரித்த உணவுடன் அவளுக்காக காத்திருந்து அமர்ந்திருந்தான்.

“சமைச்சிட்டீங்களாப்பா??” என்று ஆச்சரியமாய் அவள் கேட்க,

எழுந்து அவளருகே சென்றவன், அவள் முதுகில் கை வைத்து தள்ளி, “போங்க மேடம்.  போய் ஃபிரஷ் ஆகிட்டு வாங்க. சாப்பிடுவோம்.  ரொம்ப பசிக்குது” என்றவன் கூறியதும்,

சட்டென திரும்பியவள் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாய் கோர்த்து அவனை தன்னருகே இழுத்தவள் ஆழ்ந்த முத்தமொன்றை அவன் கன்னத்தில் பதித்து, “என் செல்ல கண்ணப்பா” என்று கொஞ்சி அவன் தாடி நிறைந்த தாடையை கடித்திருந்தாள்.

“ஹா ஹா ஹா” என அவன் சிரிக்க,  புருவத்தை உயர்த்தி வலிக்கலயா என்பது போல் அவள் கேட்க,

“வலிக்கிற மாதிரி கடிக்கிறது எப்படினு நான் ஒரு சாம்பிள் காமிக்கவா??” என்றவன் கூறிய நொடி,

“அய்யோ வேண்டாம்” என இவள் ஓட எத்தனிக்க,

அவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன், அவள் முகத்தருகே குனிய

அவள் பின்னாலேயே வளைந்துக் கொண்டு செல்ல,

“ஒரே ஒரு கடி மதுக்குட்டி”  என்று இவன் குனிய அவள் வளைய அந்த கடி அவளின் வயிற்றை பதம் பார்த்திருந்தது.

ஆஆஆ வென அலறியவள் அவனை அடிக்க துரத்த,  அவளுக்கு போக்கு காட்டி ஓடியவன் மூச்சு வாங்க சோபாவில் அமர,

அவன் மடியில் அவனை பார்த்தவாறு அமர்ந்த மது, “எனக்கு தொப்பை அதிகமாயிட்டுலப்பா??” என்று கவலையாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

அவன் சிரிப்பாய் அவள் முகத்தையே பார்க்க, “என்னப்பா சிரிக்கிறீங்க?? நான் எப்படி இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கும்ல… இதே மாதிரி எப்பவும் பாசமா அன்பா இருப்பீங்க தானே!!  நான் ஏற்கனவே ஷாட்டா தானே இருக்கேன்.  இப்பவே லைட்டா குண்டு தான்.  இன்னும் நாள் ஆக ஆக கூட கொஞ்சம் வெயிட் போட்டாலும் நல்லாயிருக்காது.  நான் என்னால முடிஞ்ச வரை வெயிட் ஏறாம பார்த்துப்பேன். ஆனா அதையும் தாண்டி ஹார்மோன்ஸ் பிராப்ளம் அது இதுனு என் கட்டுபாட்டை மீறி போச்சுனாலும் என்னை வெறுத்துட மாட்டீங்கல”  என்று கூறியவளின் குரல் வெறுப்பு என்ற வார்த்தையில் கரகரத்து ஒலிக்க,

மடியில் அமர்ந்திருந்தவள் அவன் மார்பில் சாய்ந்து இவற்றை கூறிக் கொண்டிருக்க, அவளை தன் இரு கரங்களுக்குள் வைத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன்,

வேறெதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே நீதானே

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே நீ

உயிரே வா

மேலும் கீழும் ஆடும் உந்தன்

மாய கண்ணாலே

மாறு வேடம் போடுது என்

நாட்கள் தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய்

தேயும் முன்னாலே

ஆளும் வரை வாழ்ந்திடலாம்

காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய்

உடைந்து போனாலும்

அதன் ஒரு துகளில்

உன்னை கரை சேர்ப்பேன்

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே நீதானே

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே நீ

உயிரே வா

நீ நீங்கிடும் நேரம்

காற்றும் பெரும் பாரம்

உன் கைத்தொடும் நேரம்

தீ மீதிலும் ஈரம்

நீ நடக்கும் பொழுது

நிழல் தரையில் படாது

உன் நிழலை எனது உடல்

நழுவ விடாது

பேரழகின் மேலே ஒரு

துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும்

வாட கூடாது

உன்னை பார்த்திருப்பேன்

விழிகள் மூடாது

உன்னை தாண்டி எதுவும்

தெரிய கூடாது

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே நீதானே

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே நீ

உயிரே வா

தன்னவளை மனதில் நினைத்து அவளுக்காக மனமுருகி ஆழ்ந்த குரலில் மாறன் பாடி முடித்திருக்க,  அவன் காதலில் அவள் கண்ணில் நீர் பெருக,

அவள் கண்களை துடைத்தவன், போய் முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம் என்று அவன் சொல்ல,

அவனை விட்டு இறங்க மாட்டேனென அடம் பிடித்தவள், “பாட்டுலாம் நல்லா தான் இருக்கு…  ஆனா நான் கேட்ட கேள்விக்குலாம் நீங்க வாய் திறந்து பதில் சொல்லுங்க”  என்று அவன் சட்டையை பிடித்து அவள் உலுக்க,

“எப்ப தான்டா மதுக்குட்டி உனக்கு இந்த இன்செக்யூர்டு ஃபீல் போகும்” என்றவன்,

அவள் கன்னத்தை பற்றி, “இந்த மது மாறனோட உயிர். மாறன் மதுவோட சொத்து.  இரண்டு பேராலயும் இன்னொருத்தரை விட்டு வாழ முடியாது. என் மது பொண்ணு எப்படி இருந்தாலும் பிடிக்கும்.  அவளை மட்டும் தான் இந்த மாறனுக்கு பிடிக்கும்” என்றுரைத்து அவள் நெற்றியை முட்டினான்.

“லவ் யூ கண்ணப்பா” என்று அவன் கன்னத்தை கடித்திருந்தாள்.

“ராட்சசி” என்று அவன் கூற,

“ஹான்” என இவள் முறைக்க,

“என் செல்ல ராட்சசிடா நீ” என்று கூறி அவளை முகம் கழுவ அனுப்பினான்.

இருவரும் ஒன்றாய் அமர்ந்து உணவை பரிமாறி உண்டுக் கொண்டிருந்த நேரம் மதுவின் அலைபேசி அலறியது.

யாரென்று எடுத்து பார்த்தவள், “அத்தை கூப்பிடிருக்காங்க… நீங்க அவங்ககிட்ட பேசலயா இன்னிக்கு” எனக் கேட்டுக் கொண்டே அலைபேசியை இயக்கி காதில் வைத்தவளின் முகம் நேரம் செல்ல செல்ல சுருங்கி போவதை கண்டவன்,

“அம்மா என்ன சொல்றாங்க?” என்று செய்கை செய்ய,

“இந்தாங்க உங்க கிட்ட பேசனுமாம்” என்று அவனிடம் கொடுத்து விட்டு அவள் அமர,

“என்னம்மா!! சாப்பிட்டீங்களா??” – மாறன்.

அங்கு கேட்ட கேள்விக்கு,

“ஹ்ம்ம் சாப்பிட்டே இருக்கோம்மா”  என்றவன் கூற,

மீண்டும் அப்பக்கம் வந்த கேள்விக்கு,

“இல்ல இல்லம்மா… மது தான் சமைச்சா”  என்றிவன் கூறிய நொடி,

மதுவிற்கு சாப்பிட்ட உணவு புரையேற, அவளுக்கு நீர் அளித்து தலையை தட்டிக் கொடுத்துக் கொண்டே பேசியவன், “ஹ்ம்ம் இந்த தடவை இங்க கொஞ்சம் வேலை அதிகம்மா… அதான் இங்கேயே இருக்க வேண்டியதாகிட்டு.  அடுத்த வாரம் வந்துடுவோம்”

“என்னது மதுவ மட்டும் அனுப்பி வைக்க வா”

“இல்லம்மா…  இப்ப அவ இருக்கனால தானே மூனு வேளையும் வீட்டுல சாப்பிடுறேன்.  அவளை அனுப்பிட்டா எப்படி” என்று இவன் கூற,

“எப்படியோ எங்களையும் கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும் வெற்றி.  பொண்டாட்டி பின்னாடியே சுத்திட்டு இருக்காத.  பொண்டாட்டியும் தேவை தான். அதுக்காக அப்பா அம்மா இல்லைனு ஆயிடாது.” என்று அந்த பக்கம் அவனின் அன்னை கூற,

“என்னம்மா இன்னிக்கு ஒரு நாள் ஃபோன் செய்யாம விட்டுட்டேன்.  அதுக்கு என்னனமோ பேசுறீங்க. எனக்கே பிள்ளை பிறந்தாலும் நான் எப்பவும் உங்களுக்கு பிள்ளை தான்மா” என்று வெற்றி அவனின் தாயை சமாதானம் செய்து கொண்டிருக்க,

தான் சாப்பிட்டு முடித்து, வெற்றி மீதம் வைத்திருந்த உணவை அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் மது.  அதை வாயில் வாங்கிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் மாறன்.

அலைபேசியை பேசிவிட்டு வைத்தவன், “அம்மா உன் கிட்ட என்ன சொன்னாங்க?? ஏன் உன் மூஞ்சு அப்படி போச்சு” என்று கேட்டான்.

சென்னை வெயிலின் தாக்கம் மதுவின் மனதிலும் வெம்மையாய் பரவியிருந்தது மாறனின் பிரிவினால்.

சென்னையில் தங்களது வீட்டில் மாமியாருடன் சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தாள் மது.

“என்னம்மா மாறன் நேத்து ஃபோன் செஞ்சானா இல்லையா??” என்றார் அவளின் அத்தை.

ஏதோ ஓர் வெறுமை துக்கம் தொண்டையை அடைக்க, “இல்லை அத்தை” என்றாள் அமைதியான குரலில்.

எப்பொழுதும் கலகலவென குரலில் சந்தோஷத்தை மட்டுமே வெளிபடுத்தும் தனது மருமகள், இன்று பெரும் மனச் சோர்வுடன் பிரிவின் துயரத்தில் நின்றிருந்தக் காட்சி அவரின் மனதை பிசைய,

“சாரி மதும்மா!! அன்னிக்கு உங்களை பிரிக்கிறதுக்காக அப்படி நான் சொல்லலை. ஆனா அதுவே இப்படி உண்மையாகும்னு நான் நினைக்கலை” என்று வருத்தக் குரலில் கூற,

“இதுல என்ன அத்தை. நீங்க எங்க நல்லதுக்கு தானே சொன்னீங்க. எனக்கும் புரிஞ்சது.  அவருக்கூடவே நான் எல்லா நாளும் சுத்திட்டு இருக்க முடியுமா… எங்களுக்குனு குழந்தைனு வரும் போது குழந்தையும் சேர்த்து தூக்கிட்டா அவர் கூட போக முடியும்.  இப்பவே இதெல்லாம் பழகிக்கிறது நல்லது தான் அத்தை” என்றவள்,

அன்று அவள் அத்தை கூறியதை மாறனிடம் சொன்னதை நினைவு கூர்ந்தாள்.

அன்றிரவு மாறன் கைபேசியை வைத்த நொடி, “அம்மா என்ன சொன்னாங்க??” என்று கேட்க,

நம்ம தூங்கும் போது சொல்றேன் என்றவள் சமையலறை சுத்தம் செய்து வந்தவள், “சூப்பரா இருந்துச்சு சமைச்சது எல்லாமே!!” என அவனின் இடையை கட்டிக்கொண்டு வயிற்றில் சாய்ந்துக் கொண்டாள்.

கட்டிலில் அவளருகில் அவன் அமர்ந்திருக்க அவன் மடியில் தலை சாய்த்தவள், “அத்தை உங்களை விட்டுட்டு என்னை மட்டும் வர சொன்னாங்க.  அதுக்கு தான் நீங்க பதில் சொல்லிட்டீங்களே… சோ மீ ஹேப்பி” என அவன் கன்னம் பற்றி கொஞ்சியவள்,

“ஆனா அத்தை சொல்றது கரெக்ட் தான்.  நான் ரொம்ப விளையாட்டுதனமா தான் இருக்கேன்.  உங்களை பத்தி நினைக்கிறேனே தவிற அவங்களை அங்க என்ன செய்வாங்கனுலாம் நினைக்கிறதே இல்லை. நமக்கு குழந்தை பிறந்துச்சுனா இப்படியா என்னால உங்க பின்னாடி சுத்திட்டு இருக்க முடியும். இப்பவே உங்கள பிரிஞ்சு இருக்க பழகிக்க சொன்னாங்க”  என்றவள் சொன்னதும்,

“நானே சொல்லனும்னு நினைச்சேன்” என்று மாறன் ஏதோ சொல்ல  வர,

“என்ன நினைச்சீங்க??  என்னை பிரிஞ்சி இருக்க நினைச்சீங்களா??” என்று அவன் மடியிலிருந்து எழுந்து அமர்நதவள்,

“அதை அத்தை சொன்னா கேட்டுப்பேன்.  நீங்க சொன்னா சண்டை தான் போடுவேன் ஆமா” என்று ஆவேசமாய் அவள் கூற,

சிரிப்பாய் சிரித்து சுவாரஸ்யமாய் அவளை பார்த்தவன், “அது ஏன் நான் சொன்னா சண்டைக்கு வருவ??” என்று கேட்க,

“நீங்க எப்படி என்னைய பிரிஞ்சிருக்கனும்னு நினைக்கலாம்.  அப்படிலாம் விடமுடியாது. அப்படி நினைச்சா கடிச்சி வச்சிடுவேன்” அவனின் கன்னத்தை கடித்துவிட்டு அவள் முகத்தை திருப்பி வைத்துக் கொள்ள,

அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டவன்,

“மதுக்குட்டி, நான் சொல்றதை முழுசா கேட்காமலே கோவப்பட்டீனா, நான் என்ன செய்ய??”

“மும்பைக்கு வேலை விஷயமா நாலு நாள் போக வேண்டியது இருக்கு.  அதுவும் இரண்டு நாள்ல போகனும்.  உன்னை கூட்டிட்டு போகவும் முடியாது. எப்படியும் நீ தனியா இருக்கிற சூழ்நிலை வருதே மதுப்பொண்ணுனு தான் சொல்ல வந்தேன்”  என்றான் மாறன்.

“நாலு நாளா தனியா இருக்கனுமா” என முகத்தை சோகமாய் வைத்து அவன் முகம் நோக்கி கேட்டவள்,

“சரி எப்படியும் எல்லாத்தையும் பழகிக்கனும்ல… நான் இருக்கிறேன் நீங்க போய்ட்டு வாங்க”  என்றாள்.

அவள் கன்னம் பிடித்து ஆட்டியவன், “தட்ஸ் மை கேர்ள்” என்றான்.

அதன் பிறகு மாறன் ஏதேதோ பேச அவள் அவன் மடியிலேயே உறங்கி போனாள்.

உறங்கும் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், “என் செல்ல மதுக்குட்டி” என அவள் நெற்றியில் முத்தமிட்டு,

“நீ எப்படி இருந்தாலும் உன்னை மட்டும் தான் பிடிக்கும்.  டே பை டே  அப்படியே என் மனசை உன் பக்கம் இழுத்துட்டே போறியே மதுக்குட்டி. என் காதல் பார்வைக்கு எப்பவும் நீ அழகு தான்… நீ கிழவியானாலும் இப்படியே நான் லவ் பண்ணுவேன் குட்டி பொண்ணு”  என மனதில் தோன்றியதை வாய்க்கு வந்ததை தூங்கும் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான் மாறன்.

அன்றைய நினைவிலிருந்து வெளி வந்தவள்,

“நான் ஆபிஸ் கிளம்பிறேன்.  நீங்களும் மாமாவும் வேளா வேளைக்கு சாப்பிடுங்க”  என்று சோர்வான குரலில் உரைத்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக தனது அறைக்கு சென்றவள் கட்டிலில் அமர,

அறை எங்கிலும் அவனின் நினைவே அவளை ஆட்கொண்டிருக்க,

“முதல் நேர பிரிவுல… அதான் ரொம்ப மனசு வலிக்குது போல.  போக போக சரியாயிடும். பாப்பாலாம் பிறந்தா சரியாகிடும்” என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள்,

“ஆனாலும் வெற்றிப்பா… இரண்டு நாள் முழுக்க என் கூட பேசாம உங்களால இருக்க முடிஞ்சிட்டுல” என்று எண்ணும் போதே அவளின் கண்களில் நீர் கசிய,

“புத்திக்கு புரியுது…. நீங்க பேச முடியாத சூழ்நிலைல இருக்கீங்கனு. ஆனா மனசுக்கு புரியலையே வெற்றிப்பா” என்று மனதிற்குள் பேசியவள், தானாய் தன்னை தேற்றி நிலைபடுத்திக் கொண்டு கிளம்பலானாள்.

அரை மணி நேரமாகியும் வெளிவராதிருந்தவளை நோக்கி, “மதும்மா இன்னுமா கிளம்புற. ஆபிஸ் பஸ் வர நேரமாகிட்டு பாரு” என்று அவளின் அத்தை சத்தமாய் அழைக்க,

அவசரமாய் கிளம்பி அலுவலகம் சென்றாள்.

அங்கு அவளின் தோழி அவளின் நிலை கண்டு, “என்ன வெற்றி கூட சண்டையா?? அதிசயமா இருக்கு” என்று கேட்க,

“ம்ப்ச் வேலை விஷயமா மும்பை போய்ருக்காரு.  இரண்டு நாளா நெட்வர்க் பிராப்ளம் அவர்கிட்ட பேச முடியலை” என்று அவள் உரைக்க,

“அடப்பாவி!!  இதுக்கா சோகமா இருக்க… வெளிநாட்டுக்கு புருஷனை அனுப்பிட்டு பிரிஞ்சி இருக்குறவங்கலாம் இருங்காங்கப்பா நாட்டுல”  என்று அவளின் தோழி உரைக்க,

“ஹம்ம் அவங்கலாம் எப்படி இருக்காங்களோ…  என்னால அப்படி இருக்க முடியல. அதுவும் இரண்டு நாளா பேச கூட முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சோகமாய் பதிலுரைத்தவள்,

மேற்கொண்டு ஏதும் எவரிடமும் பேசாது தன் வேலையை பார்க்கலானாள்.

மதுவின் மனம் மாறனை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தது.

வேலை எதிலும் லயிக்காமல் அதன் போக்கில் மாறனுடனான நாட்களில் அவளின் மனம் பயணித்துக் கொண்டிருக்க,

சட்டென்று அடித்த கைபேசி ஒலி, அவன் தானோ என்று அவளின் மனதை திடுமென உற்சாகம் கொள்ள செய்ய,  எடுத்து பார்த்தவள் அவனில்லை என்றதும் சோர்வாய் கீழே வைத்தாள்.

“அவருக்கு என் மேல அன்பே இல்லை. பக்கத்துல இருக்கும் போது தான் என் தங்கம் என் உரிமை மாதிரி என் மதுக்குட்டி என் உயிர்னு பேசுறது.  இப்ப பாரு என் நினைப்பே இல்லாம”  என நினைக்கும் போதே அவள் மனம் வெதும்பி கண்ணில் நீர் வர,

“நினைப்பு இருந்தா சிக்னல் இருக்க ஃபோன் வாங்கியாவது எனக்கு கால் செஞ்சிருப்பாருல”  என்று அவளின் மனம் தானே ஏதேதோ எண்ணங்களில் சுழன்றடித்து கொண்டு மேலும் துக்கத்தை அவளுக்கு கூட்ட, தலை வின்னென்று தெறிக்கும் வலி எடுக்க,

அலுவலகத்தில் விடுப்பு தெரிவித்து பேருந்தில் ஏறி ஜன்னலோரமாய் கம்பியில் தலை சாய்த்து அமர்ந்தவள்,

“அவரை நினைக்கிறதை விட்டுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு.  அவரே உன்னை நினைக்காம சந்தோஷமா சுத்திட்டு இருக்கும் போது உனக்கென்ன??”  என்று தனக்கு தானே பேசிக் கொண்டு தன்னை நிலைபடுத்திக் கொள்ள அவள் முயற்சி செய்ய,

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி

என்று அப்பேருந்தில் அவளின் நிலையை குறிக்கும் பாடல் ஒலிக்க,

“நம்ம எதை நினைக்க கூடாதுனு நினைக்கிறோமோ அப்ப தான் அதை நினைவுபடுத்துற மாதிரி எதாவது நமக்குனு வரும் போல”  என மனதில் கடுப்பாய் எண்ணிக் கொண்டவள்,

“டேய் மாறாஆஆஆ…. என்னை என்னடா பண்ண…. போடா உன் பேச்சு கா…  நீ வந்தாலும் பேசமாட்டேன் போ” என மனதிற்குள் அவனுடன் சண்டையிட்டவள், வீட்டையடைந்து தலை வலியில் உறங்கியும் போனாள்.

காலை நான்கு மணியளவில் எழுந்தவள், கைபேசியை பார்க்க அதில் 10 மிஸ்டு கால்கள் வெவ்வேறு எண்ணிலிருந்து வந்திருந்தது.

அதை பார்த்ததும் மாறன் தான் அழைத்திருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டவள்,

“அய்யோ இவ்ளோ நேரமா தூங்கிட்டோம். அவர் தான் கூப்பிட்டிருப்பாரு போல… இந்த நம்பருக்கு திரும்ப பண்ணலாமா?? அவருக்கு சிக்னல் வந்திருக்குமா… கிளம்பியிருந்தா சிக்னல் கிடைச்சிருக்குமே” என பலவிதமாய் யோசித்தவள்,

தன்னை ரிஃபெரஷ் செய்து கொள்ள கழிவறை நோக்கி சென்ற சமயம்,

“ஹை மதுபொண்ணு” எனக் கூறி உள்ளிருந்து வெளிப்பட்டான் மாறன்.

கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு விரித்தவள் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

அவளருகில் அவன் வர,  அவனிடையை கட்டிக் கொண்டு அவள் அழ,  அவள் தலையை கோதி முதுகை நீவி ஆறுதல் படுத்தினான்.

“வெரி சாரிடா.  இப்படி சிக்னல் பிராப்ளம் வரும்னுலாம் நான் நினைக்கலைடா. சிக்னல் வந்தப்ப ஃபோன் சார்ஜ் இல்ல.”

அவள் இன்னமுமே தேம்பி தேம்பி அழ,

“அதான் வந்துட்டேன்லடா மதுக்குட்டி” என அவன் கூறவும்,

இப்பொழுது அழுவது நிறுத்தி அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள்.

அவள் கையை தடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டவன், “உன் கை தான்டா வலிக்கும்” என்றான்.

“ஆமா ரொம்ப தான் அக்கறை” என்று அவள் வாய்க்குள்  முனக,

“அக்கறை இருந்தனால தான், வேலை முடிஞ்சதும் ரெஸ்ட் கூட எடுக்காம உன்ன பார்க்க வந்திருக்கேன்” என்றான்.

“போங்க… ரிஃபெரஷ் ஆகிட்டு வரேன்” என அவள் கூற,

கலைந்த தலையும் அங்குமிங்குமாய் நழுவிய கூந்தலை அவள் அள்ளி முடிந்திருந்த கொண்டையும், தூங்கு மூஞ்சு கண்ணும், தூக்கத்தினால் உப்பியிருந்த முகமாய் அவளை பார்த்தவன்,

“நீ எப்படி இருந்தாலும் எனக்கு அழகு தான்டி செல்லம்” என கன்னத்தில் முத்தமிட்டவன்,

“போய்ட்டு வா…  மீதி கதை சொல்றேன்” என்றான்.

அவள் வெளி வந்ததும் அவளுக்கு டீ அளித்தவன் பேச தொடங்க, “அய்யோ நான் வெளியவே போகலை. நீங்க போய் டீ எடுத்து வந்திருக்கீங்க… அத்தை என்னை பத்தி எதுவும் கேட்கலையா??” என்றவள் கேட்க,

“இன்னுமா தூங்குறா?? நேத்தே தலைவலினு வந்தா…  அப்ப தூங்கினவ தான்… அவ்ளோ அசதி போலனு சொல்லி டீ போட்டு கொடுத்தாங்க”

“வந்ததுலருந்து உன் அத்தை மாமா உன் புராணம் தான் பாடுறாங்க.  அப்படி என்னம்மா பண்ண நீ??” என தாடையில் கை வைத்து ஆச்சரியம் போல்  அவன் கேட்க,

“என்ன சொன்னாங்க??”  என்பது போல் இவள் பார்க்க,

அவள் பார்வையில் சிரித்தவன்,

“அப்பா அம்மாவ திட்டிருப்பாங்க போல,

நீ அப்ப சொன்னது இப்ப உண்மையாகிட்டு பாரு. பொண்ணு மூஞ்சே சரியில்ல.  அவ ஆபிஸ்லயே அவளுக்கு வர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்து வேலை பார்க்க சொல்றாங்க.  அவ எங்க போனாலும், அவங்களே கேட்டுக்கல, நம்ம இரண்டு பேரையும் பார்த்துக்க சமைச்சு தர கூட ஆளு இருக்காங்க…  அப்புறம் எதுக்கு வாணிய அவன் கூட எங்கேயும் போக வேண்டாம்னு சொன்ன? இப்டிலாம் அப்பா அம்மாகிட்ட சொன்னாங்க போல,  அம்மாக்கு கில்டி ஃபீல் ஆகிட்டு போல.  அதான் இதெல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. 

“எங்கனாலும் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போப்பா. நான் ஒன்னும் சொல்லல. எங்களை மறக்காம இருந்தா போதும்னு” திரும்ப அம்மா ஆரம்பிச்சாங்க,

பேசி சமாதானம் செஞ்சிட்டு வந்தேன் என்றவன் மும்பையில் நிகழ்ந்தவற்றை அவளுக்கு உரைத்துவிட்டு,

“இன்னிக்கு ஈவ்னிங் ஒரு சப்ரைஸ் இருக்கு உனக்கு.  இப்ப வெளில வேலை இருக்கு,  போய்டு வரேன்.  நீ கிளம்பி ரெடியா இரு. ஈவ்னிங் வந்து கூட்டிட்டு போறேன்” என்றான் மாறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content